Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்
மாங்காடு திருத்தலம் சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லிக்கும்
குன்றத்தூருக்கும் இடையில் உள்ளது.
காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்று
அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு
காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும்.
இத்தலத்தைச் சுற்றிலும் வடவத்தீஸ்வரன் கோயில், அறுபத்து
மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த
திருவேற்காடும், கீர்த்தனைகள் பல பாடி புகழ் பெற்ற
சுந்தரரேசுவரின் கோயில் உள்ள கோவூரும், சேக்கிழார்
அவதரித்த குன்றத்தூரும் வேறு பல தலங்களும் மாங்காட்டைச்
சுற்றி அமைந்துள்ளன.
இத்தலத்திற்கு ஆம்ராரண்யம், சூதவனம், மாலை என்ற
திருப்பெயர்களும் உண்டு. இங்கு கோயில் கொண்டு அருள்
வழங்கும் அன்னையின் பெயர். ஆதி காமாட்சியென்றும்
தபசு காமாட்சி என்ற பெயரும் பெற்று விளங்குகிறாள்.
இத்தலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழைமை
வாய்ந்த தலமாகும். காஞ்சியில் திருத்தலம் தோன்றுவதற்கு
முன்பாகவே இத்தலம் தோன்றி விட்டது.
இத்திருக்கோயிலில் அர்த்த மேரு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த அர்த்தமேரு, ஸ்ரீ சக்கர எந்திரம் சந்தனம், அகில், பச்சைக்
கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடா மஞ்சீ,
கச்சோலம் போன்ற எட்டு வகையான வாசனைப் பொருள்களால்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அர்த்தமேருவிலேயே அன்னை வாசம் செய்கின்றாள்.
இத்தலத்தில் தான் பார்க்கவ முனிவரும், மார்க்கண்டேய
முனிவரும் கடுந்தவம் புரிந்து பேறு பெற்றனர். ஒருசமயம்
திருக்கயிலையில் பரமேஸ்வரனும், பார்வதியும் கண்ணாமூச்சி
விளையாட ஆவலுற்றனர்.
அச்சமயத்தில் இறைவனை சூரிய, சந்திரரின் திருநயனங்கள்
என்று கூறுகிறார்களே, அவற்றை மூடினால் என்னவாகும்
என்றெண்ணிய உமாதேவி இறைவன் திருநயனங்களை தம்
திருக்கரங்களால் மூடினார்.
கண்களை பொத்திய மாத்திரத்தில் உலகமே இருள் சூழ்ந்தது.
உயிர்கள் அனைத்தும் சுவாசிக்க முடியாமல் திணறின.
அது கண்ட இறைவன் வெகுண்டெழுந்து, உமாதேவியாரை
நோக்கி “பூவுலகில் அவதரித்து ஏகாம்பரம் என்றழைக்கப்படும்
ஒற்றை மரத்தடியின் கீழ் கடுந்தவம் புரிந்து எம்மை வந்து
அடைவாயாக என்று உத்தரவிட்டார்.
இறைவனது உத்தரவினை ஏற்றுக் கொண்ட அன்னை உமாதேவி
இம்மாங்காடுத் தலம் வந்தடைந்து ஐந்தணல் வளர்த்து,
பஞ்சாட்சரனை நினைந்து கடுந்தவம் புரிந்தாள்; அதன் பின்னர்
கச்சியம்பதி சென்றடைந்து கம்பநதிக் கரையில் சிவ பூசை புரிந்து,
தவத்தை மேம்படசெய்து முடித்து மீண்டும் இறைவனை
வந்தடைந்தாள் என்பது வரலாறு.
நன்றி:வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பார்வதீஸ்வரர் திருக்கோயில்- திருத்தெளிச்சேரி
» திருக்கோயில் வழிபாடு
» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
» ’திருக்கோயில்’ புதிய செயலி அறிமுகம்
» திருக்கோயில் வழிபாடு
» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
» ’திருக்கோயில்’ புதிய செயலி அறிமுகம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|