சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Khan11

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:32

1] இறைமறை வசனங்கள் - நபிமொழிச் சான்றுகள்

[சான்று 1:1] இறைவசனம்

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ...

"(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக) வெளியே தெரிபவற்றைத்தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும், தமது முக்காடுகளை(நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும் ..." (அல்குர்ஆன் 24:31)

இந்த இறைவசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள கும்ரு ( خُمْرُ ) எனும் அரபுச்சொல், கிமார் ( خِماَرٌ ) எனும் சொல்லின் பன்மையாகும். அதற்கு, தலையை மறைக்கும் துணி (ஸ்கர்ஃப்/மஃப்ளர்) என்பது பொருளாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:33

சான்று [1:2] ஹதீஸ் :

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبو داود

"மாதவிடாய் (வரத்தகுந்த, பருமடைந்த) பெண்ணின் தொழுகையை, முக்காடு(கிமார்) இன்றித் தொழுதால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - அபூதாவூது(5460).

கிமார் எனும் சொல்லை, முகத்தை மறைக்கும் திரை(ஹிஜாப்) எனச் சிலர் தவறாகப் பொருள் கொள்கின்றனர். அவ்வாறு பொருள் கொண்டால் மேற்காணும் ஹதீஸுக்கு, "பெண்கள் தொழும்போது முகத்தை மூடிக் கொள்ளவேண்டும்" எனும் மிகத் தவறான முடிவு பெறப்படும்.

மேற்காணும் (24:31) இறைவசனத்தின் மூலம் பருவமடைந்த பெண்கள், இல்லத்தைவிட்டு வெளியே சென்று அந்நிய ஆண்களிடையே தோன்றும்போது தங்கள் உடல் முழுதும் மறைக்கும் இயல்பான மேலாடை, கீழாடையோடு, தலையையும் மார்பையும் கூடுதலாக மூடிக் கொண்டிருக்க வேண்டும் எனும் கட்டளை பெறப்படுகின்றது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை இவ்வசனத்தில் இல்லை.

மேலும், நபித்தோழர்கள்/தோழியர் தாங்களாக ஒரு செயலைச் செய்வதற்கும் இறைவசனத்தை/நபிமொழியைச் செயற்படுத்துவதற்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது.

மேற்காணும் (24:31)இறைவசனம் அருளப்பெற்றவுடன் நபித்தோழியர் அதைச் செயற்படுத்திய விதத்தைப் பார்ப்போம்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:33

சான்று [1:2] ஹதீஸ் :

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبو داود

"மாதவிடாய் (வரத்தகுந்த, பருமடைந்த) பெண்ணின் தொழுகையை, முக்காடு(கிமார்) இன்றித் தொழுதால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - அபூதாவூது(5460).

கிமார் எனும் சொல்லை, முகத்தை மறைக்கும் திரை(ஹிஜாப்) எனச் சிலர் தவறாகப் பொருள் கொள்கின்றனர். அவ்வாறு பொருள் கொண்டால் மேற்காணும் ஹதீஸுக்கு, "பெண்கள் தொழும்போது முகத்தை மூடிக் கொள்ளவேண்டும்" எனும் மிகத் தவறான முடிவு பெறப்படும்.

மேற்காணும் (24:31) இறைவசனத்தின் மூலம் பருவமடைந்த பெண்கள், இல்லத்தைவிட்டு வெளியே சென்று அந்நிய ஆண்களிடையே தோன்றும்போது தங்கள் உடல் முழுதும் மறைக்கும் இயல்பான மேலாடை, கீழாடையோடு, தலையையும் மார்பையும் கூடுதலாக மூடிக் கொண்டிருக்க வேண்டும் எனும் கட்டளை பெறப்படுகின்றது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை இவ்வசனத்தில் இல்லை.

மேலும், நபித்தோழர்கள்/தோழியர் தாங்களாக ஒரு செயலைச் செய்வதற்கும் இறைவசனத்தை/நபிமொழியைச் செயற்படுத்துவதற்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது.

மேற்காணும் (24:31)இறைவசனம் அருளப்பெற்றவுடன் நபித்தோழியர் அதைச் செயற்படுத்திய விதத்தைப் பார்ப்போம்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:34

சான்று [1:4] இறைவசனம் :

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ

"நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள்தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகாமலிருப்பதற்கும் இஃது ஏற்றதாகும் ..." (அல்குர்ஆன் 33:59).

திரை(ஹிஜாப்) பற்றிய பேசுபொருளில் மேற்காணும் இறைவசனம் குறிப்பிடத் தக்கதாகும். இந்த வசனத்தில் "முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு" கட்டளை இருக்கிறதே அன்றி, முகத்தை மூடிக் கொள்ளுமாறு கட்டளை இல்லை.

பெண்கள்தம் தலையில் போடப்படும் முக்காடு, அரைகுறையாக இல்லாமல் தலையை மறைத்து முழுமையாகவும் அதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவும் இருக்க வேண்டும் என்பதை, முக்காட்டைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று இந்த இறைவசனம் கூறுகிறது. வேறு சொற்களால் கூறவேண்டுமெனில், முக்காட்டைத் தாழ்த்திக் கொள்வது முகத்துக்கான திரை(ஹிஜாப்) என்று இந்த இறைவசனம் விளக்கம் கூறுகிறது.

மேலும், "பெண்கள் அறியப்படவேண்டும்" என்றும் அவ்வாறு அறியப்படுவதால் "அவர்கள் தொல்லைக்கு உள்ளாக மாட்டர்கள்" என்றும் அறுதியிடும் இந்த வசனம், முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் இன்றைய சமகாலச் சங்கடங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும் அவர்களுக்கு வழிவகைகளைச் சொல்லித் தருகிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:35

சான்று [1:5] இறைவசனம் :

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ...

"(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறும் கூறுவீராக! ..." (அல்குர்ஆன் 24:30) 'திரை(ஹிஜாப்) என்பது முகத்தை மூடிக்கொள்வது' எனப் பொருள் கொண்டால், மேற்காணும் (24:30) இறைவசனம் பொருளற்றுப் போய்விடும். முழுக்க மறைத்த முகத்தை, ஆண்கள்தம் பார்வையை உயர்த்திப் பார்ப்பதும், பார்வையைத் தாழ்த்திப் பார்க்கமலிருப்பதும் சமமே.

முகம் திறந்திருக்கும் அந்நியப் பெண்களை, உற்று உற்றுப் பார்க்காமல் இயல்பாகப் பார்க்கும் பார்வைக்கு ஆண்களுக்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:35

சான்று [1:6] ஹதீஸ் :

يا علي لا تتبع النظرة النظرة، فإنما لك الأولى، وليس لك الأخرى

"அலீயே! (அந்நியப் பெண்களை) உற்று உற்றுப் பார்க்காதீர். உமக்கு (இயல்பான) முதல் (வகை) பார்வை அனுமதிக்கப் பட்டது; பிற (வகை) பார்வைக்கு அனுமதியில்லை" என்று (தம் மருமகனார்) அலீ (ரலி) அவர்களுக்குப் பெருமானார் (ஸல்) அறிவுரை கூறினார்கள். - அஹ்மது(5/353), திர்மிதீ(2777), அபூதாவூது(2149).

ஆண்களை ஈர்க்கும் அழகை/வசீகரத்தை, அல்லாஹ் பெண்களின் முகத்தில் வைத்திருக்கிறான். அதைத் தன் வேதத்திலும் எடுத்துக் காட்டி உணர்த்துகிறான்:


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:35

சான்று [1:7] இறைவசனம் :

لَا يَحِلُّ لَكَ النِّسَاء مِن بَعْدُ وَلَا أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ ...

"(நபியே!) பிற பெண்களின் அழகு உம்மை எத்துணை ஈர்த்தாலும் உம் மனைவியர்க்குப் பகரமாக அவர்களை மாற்றிக் கொள்வதற்கு உமக்கு அனுமதி இல்லை ..." (அல்குர்ஆன் 33:52).

இந்த வசனத்தில் "பெண்களின் அழகு, ஆண்களை ஈர்க்கும்" என்று படைப்பாளனான அல்லாஹ் திட்டவட்டமாகக் கூறுகிறான். ஒரு பெண், பேரழகியாகவே இருந்தாலும் அவள் தன் முகத்தை மறைத்துக் கொண்டால் எவரையும் ஈர்க்க முடியாது. முழுக்க மறைத்துக் கொண்டால் அழகியும் விகாரியும் குமரியும் கிழவியும் ஒன்றுபோல்தான்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:36

சான்று [1:8] ஹதீஸ் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), வழியில் செல்லும் ஒரு பெண்ணை (ஒருபோது) பார்த்தார்கள். உடனே, தம் துணைவியான ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்று தம் தேவையை நிறைவு செய்தார்கள். பின்னர் தம் தோழர்களிடம் வந்து, "(கவர்ச்சி காட்டும்) ஒரு பெண் முன்னோக்கி வரும்போதும் கடந்து செல்லும்போதும் ஷைத்தானின் கோலத்தில் வந்து செல்கிறாள் ... உங்களில் ஒருவர் (அந்நியப்) பெண்ணொருத்தியை (வழியில்) பார்த்து, அவளால் ஈர்க்கப்பட்டால், அவர் உடனே தம் துணைவியிடம் சென்று (தம் தேவையை) நிறைவு செய்து கொள்ளட்டும் ..." என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) - முஸ்லிம்(1403).

இதே ஹதீஸ் முஸ்னது அஹ்மதில்

من طريق حرب بن أبي العالية عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري : أن رسول الله صلى الله عليه وسلم رأى امرأة فأعجبته

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டார்கள்" என்று கூடுதல் தகவலோடு (3/310) பதிவாகியுள்ளது. ஆனால், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டார்கள் என்பது மறுக்கத் தக்கதாகும். ஏனெனில் அது, அறிவிப்பாளர் ஹர்பு பின் அபில் ஆலியாவின் இடைச்செருகல். 'நான் ஈர்க்கப்பட்டேன்' என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லாமல் அறிவிப்பாளர் ஹர்புக்குத் தெரிந்தது எப்படி?" என்ற தர்க்கரீதியான வினாவை இமாம் நவவீ (ரஹ்) முன்வைக்கிறார்கள் (அல்மஜ்மூஉ).

இருப்பினும், வழியில் சென்ற ஒரு கவர்ச்சியான பெண்ணை நபி (ஸல்) கண்டார்கள் என்பதில் இருகருத்தில்லை. மதீனாவின் ஆட்சித் தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அந்தப் பெண்ணைப் பார்த்து, "முகத்தை மூடிக் கொண்டு போ" என்று அதட்டவில்லை; அறிவுறுத்தவில்லை என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

மேலும், பெருமானார் (ஸல்) தம் இளைய தோழர்களுக்குக் கூறினார்கள்:


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:36

சான்று [1:9] ஹதீஸ் :

وفي الصحيحين وغيرهما عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء قال في القاموس : والباءة والباء النكاح . وفي لفظ " عليكم بالباء " وذكر الحديث .

"இளைஞர்களே! உங்களில் திருமணச் செலவுகளுக்குச் சக்தி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், திருமணம் செய்வது பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். திருமணம் செய்து கொள்ளச் சக்தி பெறாதவர் நோன்பிருந்து கொள்ளட்டும். அது இச்சையைக் கட்டுப்படுத்தும்" அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) - புகாரீ 1905.

பிறிதொருமுறை கூறினார்கள்:

சான்று [1:10] ஹதீஸ் :

" الصِّيَامُ جُنَّةٌ ..."

"நோன்பு என்பது கேடயமாகும் ..." அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) - புகாரீ 1894.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:37

[2] நம்பிக்கையாளர்களின் அன்னையர்களது நடைமுறை

இனி, அல்லாஹ்வின் தூதரின் மனைவியர் தொடர்பான ஹிஜாபைப் பற்றிய ஹதீஸ்களைப் பார்ப்போம். அதற்கு முன்னர், அஹ்ஸாப் (33) அத்தியாயத்தின் மூன்று இறைவசனங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ...

"இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள்தம் உயிரைவிட (நம்) நபி மேலானவர். அவரின் துணைவியர் அவர்களுக்கு அன்னையர் ..." (அல்குர்ஆன் 33:6).

... وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَن تَنكِحُوا أَزْوَاجَهُ مِن بَعْدِهِ أَبَدًا ...

"(இறைநம்பிக்கையாளர்களே!) ... அவர்களிடம் நீங்கள் (எதையேனும்) கேட்பதாயின் திரைக்கு இப்பாலிருந்தே கேளுங்கள். அது, உங்களுடையை உள்ளங்களையும் அவர்களது உள்ளங்களையும் மிகத்தூய்மையாக்கி வைக்க ஏற்றதாகும். அல்லாஹ்வின் தூதரை நீங்கள் சங்கடத்துக்குள்ளாக்குவது உங்களுக்குத் தகுமானதன்று. அவரின் மனைவியரை அவருக்குப் பின்னர் ஒருக்காலும் நீங்கள் மணமுடித்தலாகாது ... (அல்குர்ஆன் 33:53).

يَا نِسَاء النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاء إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ

"நபியின் மனைவியரே! நீங்கள் (சாதாரண குடும்பத்துப்) பிற பெண்களைப் போன்றோர் அல்லர் (தூதரின் மனைவியர் என்ற தனிச்சிறப்புத் தகுதி பெற்றோர்). எனவே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்வோராயின், (அந்நியருடன் பேசும்) பேச்சில் குழைவு காட்டாதீர்! ..." (அல்குர்ஆன் 33:32).


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:39

அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ‏سودة بنت زمعة ரலி)

சான்று [2:1] ஹதீஸ் :

حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْجُبْ نِسَاءَكَ قَالَتْ فَلَمْ يَفْعَلْ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجْنَ لَيْلًا إِلَى لَيْلٍ قِبَلَ الْمَنَاصِعِ فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ وَكَانَتْ امْرَأَةً طَوِيلَةً فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ فِي الْمَجْلِسِ فَقَالَ عَرَفْتُكِ يَا سَوْدَةُ حِرْصًا عَلَى أَنْ يُنْزَلَ الْحِجَابُ قَالَتْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ الْحِجَابِ

உமர் இப்னு கத்தாப் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், 'தங்கள் துணைவியரை ஹிஜாப் அணியச் சொல்லுங்கள்(அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு)' என்று கூறி வந்தார்கள். ஆனால், நபி (ஸல்) (அவ்வாறு) செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் துணைவியரான நாங்கள் ஒவ்வோர் இரவிலும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள திறந்த வெளியான) 'அல்மனாஸிஉ' எனுமிடத்திற்குச் செல்வது வழக்கம்.

(ஒருபோது நபியவர்களின் துணைவியார்) ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ‏سودة بنت زمعة ரலி) (அங்குச் செல்ல) வெளியேறினார். அவர் உயரமான பெண்ணாயிருந்தார். அப்போது ஓர் அவையில் அமர்ந்திருந்த உமர் (ரலி), ஸவ்தாவை இனங்கண்டு கொண்டு, "ஸவ்தாவே! தங்களை அடையாளம் கண்டுகொண்டோம்" என்று கூறினார்கள். ஹிஜாப் சட்டம் அருளப்பெற வேண்டுமென்ற ஆர்வத்தில் அவ்வாறு கூறினார்கள். அல்லாஹ் ஹிஜாப் பற்றிய (33:53) வசனத்தை(ப் பிறகு) அருளினான். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ 6240.

மேற்காணும் ஹதீஸில் உமர் (ரலி), அன்னையருக்கான ஹிஜாபைப் பற்றிப் பலமுறை வலியுறுத்தியும் அண்ணல் நபி (ஸல்) அதைப் பொருட்படுத்தவில்லை என்று விளங்குகிறது.

பிறிதொரு ஹதீஸ் மூலம் அல்லாஹ், தன் தூதரின் கருத்தையே உறுதிப்படுத்துகிறான்:


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:39

சான்று [2:2] ஹதீஸ் :

ஹிஜாப் சட்டம் அருளப்பெற்ற பின்னர், ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ‏سودة بنت زمعة ரலி) ஒருபோது, தம் தேவைக்காக வேண்டி, வெளியே சென்றார். அவர், (உயரமான) கனத்த உடல்வாகுடைய பெண்மணியாக இருந்தார். அவரை அறிந்தவர்களுக்கு அவர் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவரை அப்போது, உமர் இப்னு கத்தாப் (ரலி) பார்த்துவிட்டு, "ஸவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!" என்று குறை கூறினார்கள்.

ஸவ்தா (ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார். இறைத்தூதர் (ஸல்) அப்போது என் வீட்டில் இரவு உணவு உண்டுகொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத்துண்டு ஒன்று இருந்தபோது ஸவ்தா (ரலி) என் வீட்டினுள் வந்து, "இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) என்னிடம் இன்னின்னவாறெல்லாம் கூறினார்" என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். வஹீ்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டபோது எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ 4795.

இப்போதும் தம் மனைவியை, "முகத்தை மூடிக் கொண்டு வெளியே செல்"லுமாறு அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கட்டளை வரவில்லை.

ஆனால், ஒரு சிறுவன் விஷயத்தில் "ஹிஜாபைப் பேணிக் கொள்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அன்ஹாவுக்குக் காரணத்தோடு கட்டளையிட்டார்கள்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:40

சான்று [2:3] ஹதீஸ் :

ஓர் அடிமைப்பெண் இருவேறு காலகட்டங்களில் இரு ஆண்களின் ஆளுகையின்கீழ் இருந்திருக்கிறார். அவ்விருவருள் ஒருவர் உத்பா இப்னு அபீவக்காஸ். இவர், புகழ்பெற்ற நபித்தோழர் ஸஅத் இப்னு அபீவக்காஸின் அண்ணனாவார். இரண்டாமவர் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களின் தந்தையான ஸம்ஆ ( ‏ زمعة) என்பவர்.

"ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனொருவன் மக்காவில் வளர்கிறான். அவன் எனக்குப் பிறந்தவன். எனவே, நீ மக்காவுக்குச் சென்றால் அவனைக் கைப்பற்றிக் கொண்டு வந்துவிடு" என்று உத்பா இபுனு அபீவக்காஸ், தம் தம்பியான ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்.

அவ்வாறே மக்கத்து வெற்றியின்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அந்தப் பையனைக் கைப்பற்றிக்கொள்ள முனைந்தபோது, "இவன், என் தந்தையின் ஆளுகையில் அந்த அடிமைப்பெண் இருந்தபோது பிறந்த என் தம்பியாவான்" என்று ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) எதிர்ப்புத் தெரிவித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்குக் கொண்டுவரப்பட்டது.

அந்தப் பையனின் முகத்தில் உத்பாவின் சாயல் நிரம்பி இருப்பதை நபி (ஸல்) கண்டார்கள். இருப்பினும், 'ஓர் அடிமைப்பெண் எந்த ஆணுடைய ஆளுகையின்கீழ் இருக்கும்போது குழந்தை பெற்றெடுக்கிறாளோ அந்த ஆணுக்கே அக்குழந்தை உரியது' என்ற நியதியின்படி, "அப்தே! இவன் உனக்கு உரியவன்தான்" எனத் தீர்ப்பளித்தார்கள்.

பின்னர் தம் மனைவியிடம், "ஸம்ஆவின் மகள் ஸவ்தாவே! இந்தப் பையனிடம் நீ ஹிஜாபைப் பேணிக்கொள்" என்று கூறினார்கள். அதிலிருந்து அன்னை ஸவ்தா (ரலி) அந்தப் பையனைப் பார்த்ததேயில்லை. - புகாரீ 2218, 2421, 2533, 2745, 4303, 6749, 6765, 6817, 7182.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:40

இந்த ஹதீஸில் நாம் கவனிக்கத் தக்க நான்கு அம்சங்கள் உள்ளன:

மேற்காணும் தீர்ப்பின்போது அந்தப் பையன் ஹிஜாப் பேணக்கூடிய தேவையில்லாத ஒரு சிறுவன் ( غلام ).

தீர்ப்பின்படி, அச்சிறுவன் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களின் தம்பி்.

"இவனிடம் ஹிஜாபைப் பேணிக்கொள் ஸம்ஆவின் மகளே!" என்று உறவையும் சுட்டி நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியான ஸவ்தா (ரலி) அவர்களுக்குக் கட்டளை இடுகிறார்கள்.

அந்தக் கட்டளைக்குப் பின்னர் - அச்சிறுவன் வளர்ந்து பெரியவனான பிறகும் - அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் அவனைக் கடைசிவரையிலும் பார்க்கவேயில்லை.

وَأَمَّا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ ) فَأَمَرَهَا بِهِ نَدْبًا وَاحْتِيَاطًا ، لِأَنَّهُ فِي ظَاهِرِ الشَّرْعِ أَخُوهَا لِأَنَّهُ أُلْحِقَ بِأَبِيهَا ، لَكِنْ لَمَّا رَأَى الشَّبَهَ الْبَيِّنَ بِعُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ خَشِيَ أَنْ يَكُونَ مِنْ مَائِهِ فَيَكُونَ أَجْنَبِيًّا مِنْهَا فَأَمَرَهَا بِالِاحْتِجَابِ مِنْهُ احْتِيَاطًا (صحيح مسلم بشرح النووي - كِتَاب الرِّضَاعِ - الولد للفراش وللعاهر الحجر).

"இவை அத்தனையும் அச்சிறுவன் உத்பாவின் மகனாக இருக்கக்கூடிய வாய்ப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தாம்" என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) விளக்குகின்றார்கள் (அல்மஜ்மூஉ). அன்னை ஸவ்தா (ரலி) அவர்களோடு தொடர்புடைய ஹிஜாபின் நிலை இதுதான்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:43

அன்னை ஸஃபிய்யா (ரலி)

சான்று [2:4] ஹதீஸ் :

கைபர் போரின்போது அடிமைப் படுத்தப்பட்ட அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை நபி (ஸல்) விடுதலை செய்து மணமுடித்துக் கொண்டபோது, "ஸஃபிய்யா (ரலி), அண்ணலாரின் பிற மனைவியரைப் போன்ற ஒரு மனைவியா? அன்றி, அடிமைப் பெண்ணா?" என்பது பற்றி நபித்தோழர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.

இறுதியாக, "ஸஃபிய்யாவுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப்(திரை) இட்டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவர். இல்லையெனில் அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்'' என்று முடிவுக்கு வந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகன(மான ஒட்டக)த்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) - புகாரீ 4213.

மேற்காணும் ஹதீஸ், வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் சிவிகையைச் சுற்றிக் கட்டப்படும் திரையைப் பற்றி பேசுகிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:43

சான்று [2:5] ஹதீஸ் :

"அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காக இருக்கையமைத்து இடம்கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு நபி (ஸல்) இழுத்து (மூடி)விட்டார்கள்" என்று புகாரீ ஹதீஸ் 5085 விளக்குகிறது. அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு பயணித்ததாக ஹதீஸ்களில் குறிப்பேதும் இல்லை.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:44

சான்று [2:6] ஹதீஸ் :

நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் தம்முடனிருந்த ஸஃபிய்யா (ரலி) அவர்களைத் தம் (ஒட்டக) வாகனத்தில், பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது நபியவர்களின் ஒட்டகம் இடறி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே வீழ்த்தப்பட்டனர்.

உடனே அபூதல்ஹா (ரலி) தம் ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?' என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணை(ஸஃபிய்யாவை)க் கவனி!' என்று கூறினார்கள்.

அபூதல்ஹா (ரலி) அவர்தம் துணியைத் தம் முகத்தில் போட்டு(மூடி)க் கொண்டு அன்னை ஸஃபிய்யா (ரலி) இருந்த திசையை நோக்கி நடந்து சென்று, அவர்களின் மீது அத்துணியைப் போட்டார். அன்னை ஸஃபிய்யா (ரலி) எழுந்துகொண்டார்கள். பிறகு நபி (ஸல்), அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகிய இருவருக்காகவும் அவர்களின் சிவிகையை அபூதல்ஹா (ரலி) கட்டி(ச்சீராக்கி)னார். - அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) - புகாரீ 5968.

மேற்காணும் ஹதீஸிலும் அன்னை ஸஃபிய்யா (ரலி) முகத்தை மூடிக் கொண்டு பயணித்ததாகக் குறிப்பேதுமில்லை. அந்தச் சூழலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதும் சொல்லாமலேயே, அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக நபித்தோழர் அபூதல்ஹா (ரலி) தம் முகத்தில் துணியைப் போட்டுக் கொண்டு போனார்கள் என்பது இறைவசனம் 33:53 கூறும் சரியான ஹிஜாபை, மிகச் சரியாக நினைவு படுத்துகிறது. இங்கும் பெண்களுக்கான முகத்திரை பற்றிப் பேசப்படவில்லை.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:46

சான்று [2:7] ஹதீஸ் :

இந்த நிகழ்வின்போது உதவிக்கு விரைந்தோடி வந்த அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர் உம் அன்னைதாம்" என்று அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை உரிமையோடு சுட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதும் அப்போது அனஸ் (ரலி) பதின்ம வயதுச் சிறுவர் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

அன்னை ஆயிஷா (ரலி)

இறைமறையின் 24ஆவது (அந்நூர்) அத்தியாயத்தின் வசனங்களுள் 11-16 வசனங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறுகளை முறியடிக்க அல்லாஹ்வால் அருளப்பெற்றவையாகும். "நான் தூயவள் என்பதை அல்லாஹ், தன் தூதரின் கனவில் கொண்டுவருவான் என்று எதிர்பார்த்தேனேயன்றி எனக்காகத் தன் வேதத்தில் இடம்கொடுத்து என்னைக் குற்றமற்றவள் என்று அல்லாஹ் நிரூபிப்பான் என்று நான் சற்றும் எதிர்பாக்கவேயில்லை" என்று அன்னை நன்றிநெகிழ்வுடன் கூறினார் என்றாலும் இடைப்பட்ட காலத்தில் அவர் அனுபவித்த மனவேதனைகளை எழுத்தில் வடிக்கவியலாது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:46

சான்று [2:8] ஹதீஸ் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது என முடிவு செய்ய) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

அவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்.

இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் (அப்பயணத்தின்போது திரையிடப்பட்ட) என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன்; அதில் நான் அமர்ந்திருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கப்படுவேன்.

நபி (ஸல்) அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் தேவையை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை முடித்துக்கொண்டபின் படைமுகாமை நோக்கித் திரும்பி வந்தேன்.

அப்போது என் கழுத்தை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) 'ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டது(தெரியவந்தது). எனவே, நான் (ஒதுங்கிய இடத்திற்குத் திரும்பிச் சென்று) என்னுடைய மாலையைத் தேடலானேன். அதைத் துழாவித் தேடிக்கொண்டிருந்தது, (நான் விரைந்து திரும்பிச் சென்று படையினருடன் சேர்ந்துவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று, நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார்கள்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:47

அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்குமளவுக்கு அவர்களுக்குச் சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியவர்கள், அது கனமில்லாமல் இருந்ததை உணரவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்துக்கொண்டு) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமல்போன) என்னுடைய கழுத்துமாலை கிடைத்தது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. என் சிவிகை இறக்கப்பட்ட இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று கருதினேன். நான் இறக்கப்பட்ட அந்த இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மேலிட்டு, தூங்கி விட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களைச் சேகரித்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு, நான் இருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்து சேர்ந்தார்.

அவர் (அங்குத்) தூங்கிக்கொண்டிருந்த ஓர் உருவத்தை(என்னை)ப் பார்த்துவிட்டு, என்னை நோக்கி வந்திருக்கிறார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். ஹிஜாபுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருக்கிறார்.

அவர் என்னை அறிந்துகொண்டு, "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று கூறிய அவரது (உரத்த) குரல் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை(த்தம் காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடந்து வரலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள் ..." - அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ: 4750 ; 2661 ; 4141.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:47

மேற்காணும் ஹதீஸிலும் பெண்கள் வெளியில் செல்லும்போது எப்போதும் முகத்திரை அணிந்து கொண்டிருக்க வேண்டும் எனும் கருத்தைப் பெறமுடியவில்லை. பெண்கள் பயணிக்கும் வாகன (ஒட்டக) முதுகின்மீது வைக்கப்படும் சிவிகைக்கே திரையிடப்படும்; பெண்களின் முகத்துக்கன்று. மேலும் அந்நியரைக் கண்டதும், "என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்" என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறுவதிலிருந்து முகத்தை மூடுவதற்கான 'நிகாப்' எனும் முகத்திரையைப் பயணத்தில் அவர் அணிந்து கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:47

சான்று [2:9] ஹதீஸ் :

நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான அல்காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அல்காசிம் கொச்சைப் பேச்சுக்காரராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி), "இந்த என் சகோதரரின் மகனைப் போன்று நீ தெளிவாகப் பேசுவதில்லையே ஏன்? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்து கொண்டேன்", "இவரை, இவருடைய தாய் வளர்த்திருக்கிறார்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள் மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்குமுன் உணவுத் தட்டு கொண்டு வரப்பட்டபோது அல்காசிம் எழுந்து விட்டார். ஆயிஷா (ரலி) "எங்கே (போகிறாய்)?" என்று கேட்க, அல்காசிம் "நான் தொழப்போகிறேன்" என்றார். ஆயிஷா (ரலி) "உட்கார்!" என்றார்கள். அல்காசிம், "நான் தொழப்போகிறேன்" என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) "அவசரக்காரனே! உட்கார். 'உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர், மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்று இருக்கிறேன்" என்றார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக இப்னு அபீஅத்தீக் (ரஹ்) - முஸ்லிம் 869.

மேற்காணும் நிகழ்வு, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெகுகாலம் கழித்து நடந்ததாகும். இதில், தம் வீட்டுக்கு வருகை தந்த அந்நியர் இருவரைத் தம்மோடு அமர்ந்து உணவு உண்ணுமாறு அன்னை ஆயிஷா (ரலி) வற்புறுத்துகிறார்கள். பெற்ற மகனை ஒரு தாய் அதட்டுவதுபோல் அதட்டுகிறார்கள்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:48

அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ( زينب بنت جحش ரலி) - ஹிஜாப் இறைவசனத்தின் பின்னணியில்

அன்னை ஸைனப் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அத்தையான உமைமா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களின் மகளாவார். அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பர்ரா ( بَرَّةَ நன்மையானவள்) என்பதாகும். அன்னையின் பெயரை 'ஸைனப்' என்று நபி (ஸல்) மாற்றினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஸைனப் (ரலி) 20 ஆண்டுகள் இளையவர்.

அன்னை கதீஜா (ரலி) அவர்களால் நபி (ஸல்) அவர்களுக்குத் திருமணப் பரிசாக அன்பளிக்கப்பட்ட ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) எனும் அடிமையை உடனே விடுதலை செய்து, தம் சொந்த மகனைப்போல அண்ணலார் (ஸல்) வளர்த்து வந்தார்கள். அவர் வாலிப வயதை அடைந்ததும் தம் அத்தை மகளான ஸைனப் (ரலி) அவர்களை ஸைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) மணமுடித்து வைத்தார்கள்.

தொடக்கத்திலிருந்தே குரைஷிக்குலப் பெண்ணான ஸைனப் (ரலி) அவர்களின் மேட்டிமைக்கும் முன்னாள் அடிமையான ஸைத் (ரலி) அவர்களின் தாழ்வுணர்ச்சிக்கும் ஒத்துப் போகவில்லை.

விவகாரம் முற்றிப்போய், ஸைத் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஸைனபிடமிருந்து நான் பிரிந்துவிடவே விரும்புகிறேன்" என உறுதியாகக் கூறியபோது, நபி (ஸல்) அவர்களுக்குப் புரிந்துவிட்டது. இதற்குமேல் சரிப்பட்டு வராது என்று தெரிந்துவிட்டது. என்றாலும் மக்களின் எள்ளலுக்கு அஞ்சியவர்களாக, "அவ்வாறு செய்யாதே!" என நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைத் தடுத்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் ஏற்பாடு அதற்கு எதிராக - வேறுவிதமாக - இருந்தது:

وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا ...

(நபியே!) அல்லாஹ் அருள்புரிந்து, நீங்களும் அருள்புரிந்தவரிடத்தில், "அல்லாஹ்வுக்கு அஞ்சி, நீர் உம் மனைவியை (மணவிலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்" என்று நீங்கள் சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்கு அஞ்சி, நீங்கள் உங்கள் உள்ளத்துக்குள் ஒளித்து வைத்திருந்தீர்கள். ஆனால் அல்லாஹ்தான் நீங்கள் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன். ஆகவே, ஸைது அவளை மணவிலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம் ..." அல்குர்ஆன் (33:37).

பிற்றைய காலத்தில், "பிற பெண்களுக்கெல்லாம் அவர்தம் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து இந்த பூமியில் வைத்துத் திருமணம் செய்து கொடுத்தனர். தன் தூதரை எனக்குக் கணவராகத் தேர்ந்தெடுத்து, ஏழுவான்களுக்கு மேலிருந்து அல்லாஹ் என் திருமணத்தை நடத்தி வைத்தான்" எனப் பெருமை பொங்கக் கூறுபவராக அன்னை ஸைனப் (ரலி) திகழ்ந்தார் - புகாரீ 7420.

இந்தத் திருமணத்தின்போதுதான் ஹதீஸ்களிலும் வரலாற்றிலும் "ஹிஜாபுடைய வசனம்" எனக் குறிக்கப்படும் (33:53) வசனம் இறக்கியருளப் பெற்றது. ஹிஜாபுடைய வசனம் எனப்படுவது முகத்திரை பற்றியதா? எனப் பார்ப்போம்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:48

சான்று [2:9] ஹதீஸ் :

நபி (ஸல்), ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு குழுவினர் வருவார்கள்; உண்பார்கள்; புறப்பட்டுவிடுவார்கள். பிறகு, மற்றொரு குழுவினர் வருவார்கள்; உண்பார்கள்; போய்விடுவார்கள்.

இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பதுவரை நான் மக்களை அழைத்துவிட்டேன். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை' என்றேன். அவர்கள், 'உங்களுக்கான உணவை எடுத்துச் செல்லுங்கள்!' என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்றுபேர் மட்டும் (நேரம் போவது தெரியாமல்) வீட்டில் பேசிக்கொண்டே இருந்துவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று 'இல்லத்தாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் - உங்களின்மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி), 'வஅலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹ் - தங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்! தங்களின் (புதிய) துணைவியார் எப்படி இருக்கிறார்? பாரக்கல்லாஹ்! - அல்லாஹ் தங்களுக்கு வளவாழ்வு வழங்கட்டும்!' என்று (மணவாழ்த்துக்) கூறினார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா (ரலி) கூறியது போன்றே (பிரதி முகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (புதுமணப்பெண் ஸைனப் அவர்களிடம்) திரும்பிவர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களோ அதிக கூச்ச(சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, (விருந்தினர்களைச் சீக்கிரம் எழுந்துபோகச் சொல்லாமல், மீண்டும்) ஆயிஷா (ரலி) அவர்களின் அறைய நோக்கி நடந்தபடி புறப்பட்டார்கள். (இறுதியாக) அந்த மூவரும் வெளியேறினர். அதை நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா? (யார் மூலமாவது) தெரிவிக்கப்பட்டதா? என்று எனக்கு (சரியாக) நினைவில்லை. (அதை அறிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் இல்லத்துக்குத்) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒருகாலை (அறையின்) வாசல்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். (அப்போதுதான்)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَن يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ...

"இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் விருந்துண்ண அழைக்கப்பட்டாலேயன்றி, நபியுடைய வீடுகளில் நுழையாதீர்கள். (அழைக்கப்பட்டாலும்) முன்னதாகச் சென்று, (சமையலாகும்) பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு (காத்துக்) கிடக்காதீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டால் சென்று, விருந்துண்டு முடித்துவிட்டால் (விரைந்து) கலைந்துபோய் விடுங்கள்; (அங்கேயே) அமர்ந்து, (உங்கள்) பேச்சுகளில் மெய்மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அது நபிக்குச் சங்கடமளிக்கும். அதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார். ஆனால் உண்மையைக்கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. (நபியுடைய மனைவியரான) அவர்களிடம் ஏதாவது கேட்பதாயின், திரைக்கு இப்பாலிருந்தே கேளுங்கள் ..." எனும் ஹிஜாப் தொடர்பான இறைவசனம் (33:53) அருளப்பெற்றது - அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) - புகாரீ: 4791, 4792, 4793, 4794, 5166, 5466, 6238, 6239, 6271.

"ஹிஜாபுடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம்" எனக் குறிக்கப்படும் மேற்காணும் (33:53) வசனத்திலோ இந்த வசனத்துக்கு விளக்கமான புகாரீ ஹதீஸ் பதிவிலான மேற்காணும் 9 அறிவிப்புகளிலோ இன்னபிற ஹதீஸ்களிலோ முகத்திரை பற்றிப் பேசப்படவேயில்லை. மாறாக, வீட்டின் அறைகளுக்குப் போடப்படும் திரைச்சீலை பற்றிய விபரம்தான் கூறப்படுகிறது. இதன்மூலம் ஹிஜாப் என்பது இந்த இடத்தைப் பொருத்த மட்டில், இல்லத்தில் பயன்படும் திரைதானேயன்றி முகத்தை மறைக்கும் துணியல்ல என்று தெள்ளென விளங்குகிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:49

[3] நபித்தோழர்கள்/தோழியர்

சான்று [3:1] ஹதீஸ்

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا

நான் நபி (ஸல்) அவர்களோடு (அவையில்) இருந்த(ஒரு)போது அவர்களிடம் ஒருவர் வந்து, தாம் அன்சாரிப் பெண்களுள் ஒருவரை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை" என்றார். "அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்வீராக! ஏனெனில், அன்சாரி(ப்பெண்)களின் கண்களில் (குறை) ஒன்றுண்டு'' என்று சொன்னார்கள் - அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) - முஸ்லிம் 2783.

அன்ஸாரிப் பெண்களில் பெரும்பாலோருக்குக் கண்கள் சற்றே சிறுத்தும் விழிகளில் நீலநிறம் கலந்துமிருக்கும். முகத்தைத் திரையிடாமல் திறந்திருந்தால் மட்டுமே அந்தக் குறையை அறியமுடியும். மேலும், முகத்திரை(நிகாப்) அணிந்து முழுக்க மூடியுள்ள பெண்களின் கண்களைப் பார்க்க முடியாது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum