சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Mon 2 Mar 2015 - 8:46

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக்  கதைப்பதற்கு
நீண்ட நாள் எடுத்துவிட்டேன்!
எட்டாத நிலவென்று 
நித்தமும் நினைத்து விட்டேன்!
தொட்டதனால் தெரிந்துவிட்டேன்
வெற்றி வெகு தூரமில்லை!

எட்டி விடும் நிலவென்று  
தொட்டதன் பின் உணர்ந்தவரோ நீங்கள். 

நன்று!
அப்படித்தான் உள்ளது அக்கா 
முயற்சி செய்திருக்கலாம் 
நேரத்தோடு வெற்றி பெற்றிருக்கலாம் 
அருமை அருமை
வெற்றி எனக்கு கிடைத்த பின்தான் உணர்தேன் அனைத்தும் நமக்கு அருகில் உள்ளது. நாம் நினைக்கிறோம் அனைத்தும் வெகு தூரம் உள்ளது என்று.

அதுதான் நிஜம் நமது முயற்சி நிஜமானால் வெற்றி நிச்சியம்
வெற்றி பெற்றதன் பின்தான் உணர்வோம் நாம்தான் முயற்சிக்க வில்லை என்று
அருமையாக உள்ளது சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 2 Mar 2015 - 9:09

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக்  கதைப்பதற்கு
நீண்ட நாள் எடுத்துவிட்டேன்!
எட்டாத நிலவென்று 
நித்தமும் நினைத்து விட்டேன்!
தொட்டதனால் தெரிந்துவிட்டேன்
வெற்றி வெகு தூரமில்லை!

எட்டி விடும் நிலவென்று  
தொட்டதன் பின் உணர்ந்தவரோ நீங்கள். 

நன்று!
அப்படித்தான் உள்ளது அக்கா 
முயற்சி செய்திருக்கலாம் 
நேரத்தோடு வெற்றி பெற்றிருக்கலாம் 
அருமை அருமை
வெற்றி எனக்கு கிடைத்த பின்தான் உணர்தேன் அனைத்தும் நமக்கு அருகில் உள்ளது. நாம் நினைக்கிறோம் அனைத்தும் வெகு தூரம் உள்ளது என்று.

அதுதான் நிஜம் நமது முயற்சி நிஜமானால் வெற்றி நிச்சியம்
வெற்றி பெற்றதன் பின்தான் உணர்வோம் நாம்தான் முயற்சிக்க வில்லை என்று
அருமையாக உள்ளது சம்ஸ்
ம்ம் முயற்சி செய்வோம் வெற்றி பெருவோம்.நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 19:12

*சம்ஸ் wrote:கனத்த மனதுடன் உறக்கத்தை வரவழைத்து 
கண்களை இறுக்க மூடி தூங்க நினைத்து 
கட்டிலில் கிடக்கிறேன்!

கட்டிய தாவணியும் கண்சிமிட்டலுமாக
காதல் நிறைந்த கண்களுடன்.
கண்ணெதிரே வந்து நிற்கின்றாய்!
கனவுதானே என்று  நினைத்தே 
விழிகளை திறக்கின்றேன்
வியந்து  போகின்றேன் !
நனவினில் உனை கண்டு மகிழ்வதாய் 
சிரித்து மறுபக்கம் உருள 
அடடே என்று அடிக்கிறான் நண்பன்!
வெட்கத்தில் தலை தாழ்த்தினால்
ஆறுதல் சொல்கிறான்!

படைத்தவனை வேண்டி 
தூக்கத்தை தொடர
இரவுகள் ஒவ்வென்றும்
நிஜங்களைத் தேடி 
கனவுகளாக கடந்து செல்கிறது !!!

அடடா நினைவில் மட்டுமல்ல
கனவிலும் உன்னவள்தான் வருகிறாள்
சில வேளைகளில் பஞ்சணையும்
முள்ளணையாக மாறும் 
காலம் கனியும் 
யாவும் நிறைவேறும்
கற்பனை சிறப்பு
பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 5 Mar 2015 - 7:37

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:கனத்த மனதுடன் உறக்கத்தை வரவழைத்து 
கண்களை இறுக்க மூடி தூங்க நினைத்து 
கட்டிலில் கிடக்கிறேன்!

கட்டிய தாவணியும் கண்சிமிட்டலுமாக
காதல் நிறைந்த கண்களுடன்.
கண்ணெதிரே வந்து நிற்கின்றாய்!
கனவுதானே என்று  நினைத்தே 
விழிகளை திறக்கின்றேன்
வியந்து  போகின்றேன் !
நனவினில் உனை கண்டு மகிழ்வதாய் 
சிரித்து மறுபக்கம் உருள 
அடடே என்று அடிக்கிறான் நண்பன்!
வெட்கத்தில் தலை தாழ்த்தினால்
ஆறுதல் சொல்கிறான்!

படைத்தவனை வேண்டி 
தூக்கத்தை தொடர
இரவுகள் ஒவ்வென்றும்
நிஜங்களைத் தேடி 
கனவுகளாக கடந்து செல்கிறது !!!

அடடா நினைவில் மட்டுமல்ல
கனவிலும் உன்னவள்தான் வருகிறாள்
சில வேளைகளில் பஞ்சணையும்
முள்ளணையாக மாறும் 
காலம் கனியும் 
யாவும் நிறைவேறும்
கற்பனை சிறப்பு
பாராட்டுக்கள்

ம் நன்றி நண்பா உன் பாராட்டுக்கு  முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 5 Mar 2015 - 9:16

நேற்று
நண்பர்களுக்கு இடையில்
இருந்தேன் மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை..!

இன்று
தனிமையில் இருக்கிறேன்.
பிரிவின் கொடுமை தெரிகிறது .......!!

நாளை என் நிலை??
மரணத்தின் முடிவில்
எங்கோ தெரியவில்லை!


Last edited by *சம்ஸ் on Wed 11 Mar 2015 - 8:33; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 10 Mar 2015 - 16:05

ஊண் இழந்து உறக்கமிழந்து 
தாய் இழந்து தனிநாடிழந்து
அரவணைக்க யாருமின்றி
அலைகிறோம் அக்கா தம்பியாய்.!

வேளைக்கு தூக்கம் 
விளையாட நேரம் 
விதவிதமான சாப்பாடு 
விடிந்ததும் படிப்பென்று
மகிழ்ந்தது ஒருகாலம்

மாற்றுடையின்றி 
நிம்மதியை அழித்து
பசியால் அலையவைத்து
பிஞ்சுமனதில் வஞ்சகம் 
நிறையவைத்தது
மாற்றான் செய்தவையல்ல 
வீட்டான் செய்தவை

வடுக்கள் மாறி 
வளரும் மரமாய் 
மாறுவது எப்போ..!!
அழுகிறேனென்று ஆறுதல் 
சொன்னதுயார் அயல்நாட்டு சபையா?
இல்லை பஞ்சணையில் 
மஞ்சம்குளிக்கும் உறவினரா?
தாயகத்தில் ஓங்கும்
தனிமனித போராட்டம்! 
தனிமையில் வாடுமெனக்கு
தந்துதவுமா தாயை
விடியலை நோக்கி 
விடிவெள்ளியை 
பார்த்த வண்ணம் 
பறிக்கப் பட்டபிஞ்சுகளாய்
பரிதவித்து நிற்கிறோம் 
சொந்தமண்ணில்...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 17:48

*சம்ஸ் wrote:
நேற்று
நண்பர்களுக்கு இடையில்
இருந்தேன் மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை..!

இன்று
தனிமையில் இருக்கிறேன்.
பிரிவின் கொடுமை தெரிகிறது .......!!

நாளை என் நிலை??
மரணத்தின் முடிவில்
எங்கோ தெரியவில்லை!

நேற்று இன்று நாளையாக இருந்திருக்க வேண்டும்
அருமையாக உள்ளது கவிதை
கவிதை என்றாலும் இது நிஜமும் கூட
பாராட்டுக்கள்  அனுதாப வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 17:58

விடியலை நோக்கி
விடிவெள்ளியை
பார்த்த வண்ணம்
பறிக்கப் பட்டபிஞ்சுகளாய்
பரிதவித்து நிற்கிறோம்
சொந்தமண்ணில்...

யார் சொன்னது சொந்த மண்ணில் பரிதவித்து நிற்பதாய்
தமிழன் சாதிக்கப்பிறந்தவன்
அழிக்க வந்தவனையும் வாழ வைத்தவன்
அச்சமே இல்லை அவன் குலத்தை
அழித்தொழிப்பான் அவனிலத்தைில்
அடிமைத்தனத்தை...

ஈழம் பற்றிய கவிதைகள் அவர் அவர் எண்ணத்தில்
வித விதமாக வரைகிறீர்கள் பாராட்டுக்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 10 Mar 2015 - 18:14

சுட்டமண்ணில் சுதந்திரம் இழந்து 
தினமும் வெடிச்சத்தம் 
நிம்மதி அற்ற உறக்கம்
பசியின் விளிம்பில்-நான்
இனியும் யார் வருவார்

உற்றார் உறவினர்களின் 
ஐயோ அம்மா என்ற அவலக் குரல்
காதுகளில் ஒலிர ஓடுறோம் ஓடுறோம் 
தாய் மடியிருக்க தாழ்ந்த குழி தேடி
இனியும் யார் வருவார்!!

சிறப்பான கல்வி 
இலட்சியத்தில் நாம் படிக்க
தமிழனாய் நான் இருக்க
தந்த பட்டம் புலியடா
வெறி கொண்ட அரக்கனின் வெடிச்சத்தம்
காதுகளை கிழிக்க பரிட்சைக்கு
படித்தவை பாழாகி போனதடா 
என் வாழ்கையும் அழிந்ததடா 
இனியும் யார் வருவார் !

இருள் நீக்கிட இமயம் அடைந்திட
இளைஞனாய் நாமும் எதிர்த்து
கண்டது எத்தனை!
இழந்தோம் உறவை
மறந்தோம் மண்ணை
இனியும் யார் வருவார்!!!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Tue 10 Mar 2015 - 18:29

யார் வருவார்?

நல்ல கேள்வி தான் !  கேள்வியோடு முடிந்தாலும் கடந்த கால கசப்புக்களையும்  எதிர்கால  வினாக்களோடு  கவிதையாய்  வந்து விழுந்த வரிகள் கனமானதே!

 நன்று சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 11 Mar 2015 - 8:34

நண்பன் wrote:
விடியலை நோக்கி
விடிவெள்ளியை
பார்த்த வண்ணம்
பறிக்கப் பட்டபிஞ்சுகளாய்
பரிதவித்து நிற்கிறோம்
சொந்தமண்ணில்...

யார் சொன்னது சொந்த மண்ணில் பரிதவித்து நிற்பதாய்
தமிழன் சாதிக்கப்பிறந்தவன்
அழிக்க வந்தவனையும் வாழ வைத்தவன்
அச்சமே இல்லை அவன் குலத்தை
அழித்தொழிப்பான் அவனிலத்தைில்
அடிமைத்தனத்தை...

ஈழம் பற்றிய கவிதைகள் அவர் அவர் எண்ணத்தில்
வித விதமாக வரைகிறீர்கள் பாராட்டுக்கள்..

நன்றி நண்பா கருத்திற்கு ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 11 Mar 2015 - 9:16

Nisha wrote:யார் வருவார்?

நல்ல கேள்வி தான் !  கேள்வியோடு முடிந்தாலும் கடந்த கால கசப்புக்களையும்  எதிர்கால  வினாக்களோடு  கவிதையாய் வந்து விழுந்த வரிகள் கனமானதே!

நன்று சம்ஸ்!

நன்றி மேடம் ஊக்குவிற்புக்கும் உங்கள் கருதிற்கும். ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 14 Mar 2015 - 16:51

ஈழம்!!

வங்கக்கடல் சூழ்ந்திருக்க சங்ககால மலர்கள் சோலையாக்க
சேலையணிந்த மாந்தரின் கூந்தல் வாசம் வீச
வானுயர் கோபுரத்தின் ஓலி ஒளியும்
வானவரை அழைத்து நிற்க.. சேவல் கூவி துயிலெழுப்ப.
காலையில் பாடும்  புள்ளினத்தின் இனிய சந்தத்தோடு
சுள்ளெனப்படும் சூரியனின் பிரகாசமும்
மாலையில் மயக்கும் மஞ்சள் பூசும் வானமுமாய்
பரவசத்தில் ஆழ்த்துமே எங்கள் ஈழம்!

நாவினிக்கும் செந்தமிழும் நாவூறும் பனங்கட்டியும்
மெல்லிய பனிச் சாரலுடன் மிருதுவாய் மேனிதடவி
மெதுவாகத் தூங்கவைக்கும் கடற்காற்றும்
கூடி நிற்கும் தென்னந்தோப்பும்
கூவி திரியும் குயில் ஓசையும்
காற்றில் அசையும் மூங்கில்களும்
ஜோடியாக பேசும் தோப்புக்கிளிகளும்.
ஈழத்தை சோலையாக்கும் !

புல்தரையில் பட்டுவரும் பனிச்சாரல்
கொஞ்சி பேசும் கடல் அலைகள்
சேலை கட்டி அசைந்தாடும்  மேகக்கூட்டம்
ஓவியனின் தூரிகையால் வரைந்தது போல்
பச்சை வண்ண வயல் வெளிகள்.
வானம் தொடும் திராட்சை செடியிடையே..
நாணத்தோடு எட்டிப்பார்க்கும் வெற்றிலையும்.
எங்கள் ஈழத்தின் புகழ் பாடும்!

ஈழமென்றால் தன்னம்பிக்கை, ஈழமென்றால் தைரியம்
ஈழமென்றால் ஒன்றுபடல்.. ஈழமென்றால் விருந்தோம்பல்
ஈழமென்றால் விட்டுக்கொடுத்தல் என்றெல்லாம்
சொல்லிடத்தான் ஆசை.. புகழ் பேசும் மனதினுள்ளே
இகழாய் எழுந்து நிற்கும் வன்முறையும்,வதைகளும்
மறைவாய் எட்டிப்பார்த்து சொர்க்கமான என் பூமியை  
சோகமாய் மாற்றியதேன்?
எட்டப்பர்கள் எட்டி நின்றால் ஈழமென்றும் சொர்க்கமாகும்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 26 Mar 2015 - 8:14

காலையில் எழுந்து
கதிரவனைப் பாராது
பிஞ்சுகளின் பிணத்திலும்
வீருட்டோடும் இரத்தத்திலும்
பார்த்துத்தவித்த பாழான
அரக்கன் குடியிருந்த
வாழ்வின் நொடிகள் போதுமடா

ஆறறிவு அரசனும்
முப்படை முட்டாள்களும்
முண்டியடித்து அதரப்பதற விரட்டி
ஒட விட்டு பின்னுதைத்ததை
பசுமரத்தாணியாய் பதிந்து
படுக்கையிலும் பதறும்
பாழான இந்தபப்பிறவியில்
பரிதவித்தது போதுமடா


கொடியவரின் பிடியில்
கொடுங்கோலாட்சியில்
சிக்கிச் சிதறி அழுதழுது
துன்பமே துயராக தொடர்ந்த
துர்பாக்கிய வாழ்வுடன்
இனியும் ஒரு பிறவி வேண்டாமடா

என்னழுகை கேளாமல்
என்னருமை பாராமல்
கொண்டாடிச் சிரிக்கும்
கேவலங்கெட்ட மானிடம்
வாழும் இன்னொரு பிறவி
எப்போதுமே வேண்டாமடா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 26 Mar 2015 - 9:39

கவிதை சிறப்பாக உள்ளது
வளரும் கவிஞரே நீர் இன்னும் சிகரம் தொட எனது வாழ்த்துக்கள்

வாழ்க்கைக்கு இரு பக்கங்கள் உள்ளது
இழந்ததை எண்ணி இருப்பதை தவற விடக்கூடாது
இருப்பதைக் கொண்டு வாழ்ந்து முன்னேற வேண்டும்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கமாலுதீன் Thu 26 Mar 2015 - 10:26

நமக்கோ அல்லது நமது உறவுக்கோ வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள், எழுத்தாய் வரும் போது உள்ளத்தை உருகச்செய்யும். உம் கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல நண்பர் சம்ஸ் அவர்களே!

அதர்மத்தின் வெற்றி என்றுமே நிரந்தரமில்லை. அநியாயம் செய்தவர்கள் காலத்திற்கு பதில் சொல்லாவிட்டாலும் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

(தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்)

இவ்வுலகில் பட்ட வலிகளுக்கெல்லாம் படைத்தவனிடம் பலன் உண்டு சகோதரா, கவலை வேண்டாம்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 26 Mar 2015 - 10:38

கமாலுதீன் wrote:நமக்கோ அல்லது நமது உறவுக்கோ வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள், எழுத்தாய் வரும் போது உள்ளத்தை உருகச்செய்யும். உம் கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல நண்பர் சம்ஸ் அவர்களே!

அதர்மத்தின் வெற்றி என்றுமே நிரந்தரமில்லை. அநியாயம் செய்தவர்கள் காலத்திற்கு பதில் சொல்லாவிட்டாலும் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

(தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்)

இவ்வுலகில் பட்ட வலிகளுக்கெல்லாம் படைத்தவனிடம் பலன் உண்டு சகோதரா, கவலை வேண்டாம்

அருமையாகச் சொன்னீர்கள் அண்ணா ஆமோதிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 26 Mar 2015 - 11:29

நண்பன் wrote:கவிதை சிறப்பாக உள்ளது
வளரும் கவிஞரே நீர் இன்னும் சிகரம் தொட எனது வாழ்த்துக்கள்

வாழ்க்கைக்கு இரு பக்கங்கள் உள்ளது
இழந்ததை எண்ணி இருப்பதை தவற விடக்கூடாது
இருப்பதைக் கொண்டு வாழ்ந்து முன்னேற வேண்டும்..

நன்றி நண்பா தட்டிக் கொடுத்தலுக்கும் நன்றி பாராட்டுக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 26 Mar 2015 - 11:31

கமாலுதீன் wrote:நமக்கோ அல்லது நமது உறவுக்கோ வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள், எழுத்தாய் வரும் போது உள்ளத்தை உருகச்செய்யும். உம் கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல நண்பர் சம்ஸ் அவர்களே!

அதர்மத்தின் வெற்றி என்றுமே நிரந்தரமில்லை. அநியாயம் செய்தவர்கள் காலத்திற்கு பதில் சொல்லாவிட்டாலும் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

(தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்)

இவ்வுலகில் பட்ட வலிகளுக்கெல்லாம் படைத்தவனிடம் பலன் உண்டு சகோதரா, கவலை வேண்டாம்

கண்டிப்பாக அனைதிற்கும் காலம் ஒரு நாள் பதில் சொல்லும் என்ற நம்பிக்கை உள்ளது சார் உங்களின் அருமையான கருதிற்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by பானுஷபானா Thu 26 Mar 2015 - 11:36

kavithaiyil patta vethanai therikkirathu thambi ....

azhivu varumpothu amaithi vanthu enna seyya....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 26 Mar 2015 - 15:37

பானுஷபானா wrote:kavithaiyil patta vethanai therikkirathu thambi ....

azhivu varumpothu amaithi vanthu enna seyya....

உங்களின் கருதிற்கு நன்றி அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Farsan S Muhammad Thu 26 Mar 2015 - 20:02

அத்தனை வரிகளும்  அருமை  வாழ்த்துக்க்கள்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 28 Mar 2015 - 7:34

Farsan S Muhammad wrote:அத்தனை வரிகளும்  அருமை  வாழ்த்துக்க்கள்

இந்தப் பக்கம் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி பார்சான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sun 29 Mar 2015 - 12:20

*சம்ஸ் wrote:
Farsan S Muhammad wrote:அத்தனை வரிகளும்  அருமை  வாழ்த்துக்க்கள்

இந்தப் பக்கம் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி பார்சான்.

கருத்தா எங்கே எங்கே சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 29 Mar 2015 - 14:49

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Farsan S Muhammad wrote:அத்தனை வரிகளும்  அருமை  வாழ்த்துக்க்கள்

இந்தப் பக்கம் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி பார்சான்.

கருத்தா எங்கே எங்கே சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

பாஸ் அமைதி அமைதி அவருக்கு புரியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 8 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum