சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

உடைபடுமா சிறைக்கதவு?   Khan11

உடைபடுமா சிறைக்கதவு?

Go down

உடைபடுமா சிறைக்கதவு?   Empty உடைபடுமா சிறைக்கதவு?

Post by *சம்ஸ் Wed 10 Nov 2010 - 21:57

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருவதும், சர்வதேச எதிர்ப்புகளை ராணுவ ஆட்சியாளர்கள் எளிதாகச் சமாளிப்பதும் வேதனைக்குரிய வியப்பு.
ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள் என்ற வகையில், இராக்கையும், ஆப்கானிஸ்தானையும் உலக நாடுகள் பார்த்த அளவில் ஒரு சிறிய அளவுகூட மியான்மரை பார்க்காதது அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
அதன் விளைவு, இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து 1962-ம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டாலும், சர்வாதிகாரிகளின் பிடியிலிருந்து மீண்டு, ஜனநாயகக் காற்றை அந்நாட்டு மக்கள் முழுமையாகச் சுவாசிக்க முடியவில்லை.
ஹிட்லர், இடிஅமீன், சதாம் உசேன் என ராணுவ, சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட முடிவு தெரிந்தும்கூட மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் தம் நாட்டில் மக்களாட்சி மலரத் தடைபோடுகிறார்கள்.
1990-ல் நடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயகப் போராளி ஆங்சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் அந்தத் தேர்தலையே ரத்துசெய்துவிட்டு, தொடர்ந்து ஆட்சியைத் தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள் மாறினாலும் ராணுவ ஆட்சி மட்டும் இன்றளவும் தொடர்கிறது.
அரசியல்வாதிகள் ஆட்சியில்தான் ஊழல் என்றில்லை. ராணுவ ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. பொருளாதாரம் கவலைதரும் விதத்தில் உள்ளது. மற்ற நாடுகளுடனான உறவும் அத்தனை விசேஷமில்லை.
ராணுவ ஆட்சியை எதிர்க்கும் அனைவர் மீதும் பல்வேறு வழக்குகளைப் போட்டு அவர்களைச் சிறையில் அடைத்துவைத்துள்ளனர் ஆட்சியாளர்கள். 1990-ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறார் ஆங்சான் சூகி.
1991-ல் அமைதிக்கான நோபல் பரிசு ஆங்சான் சூகிக்கு வழங்கப்பட்டது. உலகைப் பொறுத்தவரை அவர் அமைதிக்காகப் பாடுபட்டவர் என்றால், மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர் அமைதிக்கு எதிரானவர். எப்படி இருக்கிறது இது?
இப்போது ஒருவழியாக 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தல் தேதியை தேர்வு செய்ததிலும் விஷயம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நீதிமன்ற உத்தரவுப்படி, ஆங்சான் சூகி நவ.13-ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளார். தேர்தலுக்கு முன்னர் ஆங்சான் சூகி விடுதலை செய்யப்பட்டு, அதனால் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் முடிவு அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரது விடுதலைக்கு முன்னதாகத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆங்சான் சூகியின் கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி இத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அவரைக் கண்டு அத்தனை பயம் ராணுவ ஆட்சியாளர்களுக்கு.
இத் தேர்தலில் ராணுவ ஆதரவுக் கட்சிகள்தான் பிரதானமாக களத்தில் நிற்கின்றன. அவை ஆட்சியைக் கைப்பற்றினால் வெறும் பொம்மை அரசாங்கம்தான் நடக்கும். உண்மையில் அப்போதும் ராணுவத்தின் கையில்தான் ஆட்சி என்றும் அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மியான்மர் மக்களைப் போலவே உலக நாடுகளும் இத் தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றன. "நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதை ராணுவ ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களும் வாக்களிக்க வழி செய்ய வேண்டும்'' என ஐ.நா. பொதுச்செயலர் பான்கிமூனும், ""தேர்தல் நியாயமாக நடைபெற்று ஜனநாயக ஆட்சி மலர்ந்தால் ராணுவ ஆட்சியாளர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர். ஆனால், தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்ற வழக்கமான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இத் தேர்தல் முடிவைவிடவும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள விஷயம் ஆங்சான் சூகியின் விடுதலை. இதற்கு முன்னர் பலமுறை அவரை விடுதலை செய்வதாகச் சொல்வதும், பின்னர் ஏதாவது வழக்குகளைப் போட்டு வீட்டுச் சிறையில் அடைப்பதுமே ராணுவ ஆட்சியாளர்களின் பழக்கம். இப்போதும் அதுபோல நடந்துவிடக் கூடாது என்பதே உலக நாடுகளின் கவலை.
அதேபோல தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும் அதை மதித்து ஜனநாயக ஆட்சி மலர ராணுவ ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அப்போதுதான் சிறைக்கதவுகள் உடைபட்டு ஆங்சான் சூகிக்கு மட்டுமல்ல, மியான்மர் மக்களுக்கும் உண்மையான விடுதலை கிடைக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum