சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

புதையல்  குளத்தின் அடியிலும்  Khan11

புதையல் குளத்தின் அடியிலும்

2 posters

Go down

புதையல்  குளத்தின் அடியிலும்  Empty புதையல் குளத்தின் அடியிலும்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 13:27

புதையல்  குளத்தின் அடியிலும்  Tamil-Daily-News_Paper_54479181767
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர்
பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3 கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான திருப்பதி ஏழுமலையான் கோயிலையும் இந்த கோயில் முந்தி விட்டது. 6வது அறையில் ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.


இந்த அறையை திறந்தால் கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராஜா மார்த்தாண்ட வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு 6வது அறையை திறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பத்மநாபசாமி கோயில் குளத்திலும் ஏராளமான புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான பிரதாப் கிழக்கே மடம் கூறி இருக்கிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து அவர் கூறியதாவது:
பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்ட ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9 கோட்டைகள் உள்ளன. கோயிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்குள் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோயிலுக்குள் உள்ளன.


கோயில் குளத்துக்குள் 3 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளே மீதி 3 ரகசிய அறைகளாக இருந்துள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியிலிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சால கிராமம் என்ற புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. ஏராளமான யானைகள் மீது வைத்து இந்த கற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களை நேபாளத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆகின.


இந்த கற்களை வைத்துதான் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள சால கிராம் கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே, கோயில் ரகசிய அறைகளில் ஏராளமான நகைகள் இருப்பது போல் இந்த கிணறுகளிலும் புதையல் இருக்கக் கூடும்.
இவ்வாறு பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார்.
கூட்டம் அதிகரிப்பு: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலை போல, பத்மநாப சுவாமி கோயிலில் எந்த நேரமும் கூட்டம் இருக்காது. பெரும்பாலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே காணப்படுவர். சபரிமலை சீசன், விடுமுறை காலங்களில் மட்டுமே வெளிமாநில பக்தர்கள் கூட்டம் ஓரளவு இருக்கும்.


இந்த நிலையில், ரகசிய அறைகளில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பத்மநாபசுவாமி கோயிலின் புகழ் உலகளவில் பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கோயிலில் வெளிமாநில பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புதையல்  குளத்தின் அடியிலும்  Empty Re: புதையல் குளத்தின் அடியிலும்

Post by ஹம்னா Sun 10 Jul 2011 - 14:08

தகவலுக்கு நன்றி.


புதையல்  குளத்தின் அடியிலும்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum