Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சீடன் - Seedan
3 posters
Page 1 of 1
சீடன் - Seedan
பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'நந்தனம்' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'சீடன்'.
பழனியில் ஒரு அரண்மனையில் வயதான பாட்டி ஒருத்தி மட்டும் இருக்க, அவளை பார்த்துக்கொள்ள மேலும் ரெண்டு பாட்டிகளும், ஒரு அழகிய இளம் வேலைக்காரியான அனன்யாவும் இருக்கிறார்கள். அனன்யாவுக்கு பக்கத்திலிருக்கும் பழனி மலை முருகன் கோயிலுக்கு போகக்கூட முடியாத அளவுக்கு மூன்று கிழவிகள் இருக்கும் வீட்டில் வேலை. அவளுடைய ஒரே தோழி பக்கத்து வீட்டு மாமி மட்டும்தான். பாட்டியின் ஒரே பெண்ணின் பேரன் கிருஷ்ணா, லண்டன் போவதற்கு முன் பாட்டியை பார்க்க வீட்டிற்கு வர, பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார்கள். அனன்யாவுக்கும் தான் அந்த வீட்டு வேலைக்காரி என்று தெரிந்தாலும், காதல் அவளை ஆக்ரமிக்கிறது. ஆனால் பேரனின் அம்மா சுஹாசினியோ.. தன்னுடய பையனுக்கு லண்டனிலிருக்கும் தன் தோழியின் மகளை தேடிப் பிடித்து திருமணம் செய்ய நினைக்கிறாள் தன் மகனுக்கும், அனன்யாவுக்குமான காதல் தெரிந்தும். அப்போது வருகிறார் மடப்பள்ளியில் சமையல்காரனாய் இருக்கும் தனுஷ். தனுஷ் வந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள் காதலர்களை சேர்த்து வைத்ததா? இல்லையா? என்பது இறுதிக்காட்சி.
படத்தை என்னதான் தமிழ்க்கடவுள் முருகனின் வீடான பழனியை களமாய் வைத்திருந்தாலும், முழுக்க, முழுக்க தரவாட்டு வாடை. ஒரு கதையை அந்த அந்த களத்திற்காகவே ரசிக்கலாம். தரவாடு, வயதான பாட்டி, குருவாயூரப்பன் கோயில் என்று மலையாள படமாய் ரசிக்க முடிந்ததை, அப்படியே தமிழில் பார்க்க ஒட்டவேயில்லை. அதிலும் ஒரு காட்சியில் ஹீரோ சொல்லுவார் பொதுக் குளத்தில் இருக்கிற தண்ரைப் பற்றி.. நீ தெனமும் குளிப்பதால் சுவையாய் இருக்கிறது என்று. மலையாளத்தில் தரவாட்டு வீடுகளில் குளிப்பதற்கு குளம் இருக்கும் அதனால் அந்த வசனம் சரி. அதையே இங்கேயும் பேசும் போது செம காமெடியாய் இருக்கிறது. முக்கியமாய் காதல் ஜோடிகளுக்குள் எந்த விதமான கெமிஸ்ட்ரியும் இல்லை. கிட்டத்தட்ட ஆளாளுக்கு பேசினதையே பேசிக் கொண்டிருக்கின்றார்கள் டிவி சீரியல் போல. இரண்டு மணி நேர படமே போட்டு தாக்குது. இதில நம்ம தினாவின் பாடல்கள் வேறு. தனுஷ் பாடும் சமையல் பாட்டைத் தவிர பெரிதாய் ஏதும் இப்ரஸ் செய்யவில்லை.
அனன்யா தோற்றத்திலும், நடிப்பிலும் ஜொலித்திருக்கிறார். அழகாக நடித்திருக்கிறார் என்பது பிளஸ் பாயிண்ட் என்றால் மிகவும் அழகாக இருக்கிறார் என்பது மைனஸ் பாயிண்டாகவும் இருக்கலாம். ஒப்பனையிலும், உடையிலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒன்றிப்போகும் அளவிற்குச் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.
கதாநாயகன் கிருஷ்ணாவுக்கு இது முதல் படமாம். நம்ப முடியவில்லை. உணர்வுகளையும் உடல்மொழியினையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால்...அந்த ஹேர் ஸ்டைல்தான் ரொம்ப படுத்துகிறது. சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப். செயற்கையான சிரிப்பு.(டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)
இடைவேளையின் போது தனுஷ் வருகிறார். ஆல்மோஸ்ட் கடவுளுக்கான பில்டப்புடன். க்ளைமாக்ஸூக்கு முன் திடீரென காணாமல் போய்விடுகிறார். என்னமோ ஏதோ நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, விவேக்கை வைத்து ஜாதகம் சரியில்லை என்று சொல்ல வைத்ததை தவிர வேறு என்ன மாபெரும் விஷயத்தை செய்துவிட்டார் என்று தெரியவில்லை. நியாயமாய் பார்த்தால் இந்த கேரக்டருக்கு இவ்வளவு பில்டப் தேவையேயில்லை. பாவம் அவர் தான் என்ன பண்ணுவார்?
போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும். மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக் அதை மறைக்க படாத பாடுபடும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி. செம்மீன் ஷீலா, இளவரசு, மீரா கிருஷ்ணன், உமாபத்மநாபன், மனோபாலா, முருகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படத்துல சிறப்பம்சம்னு சொன்னா.. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும், ஓவியம் டிசைன் ஐடியாவும்தான். ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது. கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.
'முன் பனிக்காலம்' பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில், திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்களை போட்டதற்கு ஒரு சபாஷ். (அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்)
படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை. மசாலா, குத்தாட்டம், கத்தி, ரத்தம்.... இப்படி எதுவுமே வேண்டாம்னு விரும்புறவங்க நல்ல அழுகாச்சி கதைய பார்த்துட்டு வரலாம்.
பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'நந்தனம்' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'சீடன்'.
பழனியில் ஒரு அரண்மனையில் வயதான பாட்டி ஒருத்தி மட்டும் இருக்க, அவளை பார்த்துக்கொள்ள மேலும் ரெண்டு பாட்டிகளும், ஒரு அழகிய இளம் வேலைக்காரியான அனன்யாவும் இருக்கிறார்கள். அனன்யாவுக்கு பக்கத்திலிருக்கும் பழனி மலை முருகன் கோயிலுக்கு போகக்கூட முடியாத அளவுக்கு மூன்று கிழவிகள் இருக்கும் வீட்டில் வேலை. அவளுடைய ஒரே தோழி பக்கத்து வீட்டு மாமி மட்டும்தான். பாட்டியின் ஒரே பெண்ணின் பேரன் கிருஷ்ணா, லண்டன் போவதற்கு முன் பாட்டியை பார்க்க வீட்டிற்கு வர, பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார்கள். அனன்யாவுக்கும் தான் அந்த வீட்டு வேலைக்காரி என்று தெரிந்தாலும், காதல் அவளை ஆக்ரமிக்கிறது. ஆனால் பேரனின் அம்மா சுஹாசினியோ.. தன்னுடய பையனுக்கு லண்டனிலிருக்கும் தன் தோழியின் மகளை தேடிப் பிடித்து திருமணம் செய்ய நினைக்கிறாள் தன் மகனுக்கும், அனன்யாவுக்குமான காதல் தெரிந்தும். அப்போது வருகிறார் மடப்பள்ளியில் சமையல்காரனாய் இருக்கும் தனுஷ். தனுஷ் வந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள் காதலர்களை சேர்த்து வைத்ததா? இல்லையா? என்பது இறுதிக்காட்சி.
படத்தை என்னதான் தமிழ்க்கடவுள் முருகனின் வீடான பழனியை களமாய் வைத்திருந்தாலும், முழுக்க, முழுக்க தரவாட்டு வாடை. ஒரு கதையை அந்த அந்த களத்திற்காகவே ரசிக்கலாம். தரவாடு, வயதான பாட்டி, குருவாயூரப்பன் கோயில் என்று மலையாள படமாய் ரசிக்க முடிந்ததை, அப்படியே தமிழில் பார்க்க ஒட்டவேயில்லை. அதிலும் ஒரு காட்சியில் ஹீரோ சொல்லுவார் பொதுக் குளத்தில் இருக்கிற தண்ரைப் பற்றி.. நீ தெனமும் குளிப்பதால் சுவையாய் இருக்கிறது என்று. மலையாளத்தில் தரவாட்டு வீடுகளில் குளிப்பதற்கு குளம் இருக்கும் அதனால் அந்த வசனம் சரி. அதையே இங்கேயும் பேசும் போது செம காமெடியாய் இருக்கிறது. முக்கியமாய் காதல் ஜோடிகளுக்குள் எந்த விதமான கெமிஸ்ட்ரியும் இல்லை. கிட்டத்தட்ட ஆளாளுக்கு பேசினதையே பேசிக் கொண்டிருக்கின்றார்கள் டிவி சீரியல் போல. இரண்டு மணி நேர படமே போட்டு தாக்குது. இதில நம்ம தினாவின் பாடல்கள் வேறு. தனுஷ் பாடும் சமையல் பாட்டைத் தவிர பெரிதாய் ஏதும் இப்ரஸ் செய்யவில்லை.
அனன்யா தோற்றத்திலும், நடிப்பிலும் ஜொலித்திருக்கிறார். அழகாக நடித்திருக்கிறார் என்பது பிளஸ் பாயிண்ட் என்றால் மிகவும் அழகாக இருக்கிறார் என்பது மைனஸ் பாயிண்டாகவும் இருக்கலாம். ஒப்பனையிலும், உடையிலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒன்றிப்போகும் அளவிற்குச் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.
கதாநாயகன் கிருஷ்ணாவுக்கு இது முதல் படமாம். நம்ப முடியவில்லை. உணர்வுகளையும் உடல்மொழியினையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால்...அந்த ஹேர் ஸ்டைல்தான் ரொம்ப படுத்துகிறது. சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப். செயற்கையான சிரிப்பு.(டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)
இடைவேளையின் போது தனுஷ் வருகிறார். ஆல்மோஸ்ட் கடவுளுக்கான பில்டப்புடன். க்ளைமாக்ஸூக்கு முன் திடீரென காணாமல் போய்விடுகிறார். என்னமோ ஏதோ நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, விவேக்கை வைத்து ஜாதகம் சரியில்லை என்று சொல்ல வைத்ததை தவிர வேறு என்ன மாபெரும் விஷயத்தை செய்துவிட்டார் என்று தெரியவில்லை. நியாயமாய் பார்த்தால் இந்த கேரக்டருக்கு இவ்வளவு பில்டப் தேவையேயில்லை. பாவம் அவர் தான் என்ன பண்ணுவார்?
போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும். மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக் அதை மறைக்க படாத பாடுபடும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி. செம்மீன் ஷீலா, இளவரசு, மீரா கிருஷ்ணன், உமாபத்மநாபன், மனோபாலா, முருகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படத்துல சிறப்பம்சம்னு சொன்னா.. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும், ஓவியம் டிசைன் ஐடியாவும்தான். ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது. கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.
'முன் பனிக்காலம்' பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில், திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்களை போட்டதற்கு ஒரு சபாஷ். (அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்)
படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை. மசாலா, குத்தாட்டம், கத்தி, ரத்தம்.... இப்படி எதுவுமே வேண்டாம்னு விரும்புறவங்க நல்ல அழுகாச்சி கதைய பார்த்துட்டு வரலாம்.
சீடன் - பழைய பஞ்சாமிர்தம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீடன் - Seedan
இது பழைய படம் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|