சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Khan11

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

+3
kalainilaa
நண்பன்
jasmin
7 posters

Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by jasmin Mon 8 Aug 2011 - 14:37

என் வீட்டு மாடியில் இருந்த அறை ஜன்னல் வழியாக அந்த மொட்டை மாடியைப் பார்த்தேன் .அதன் சின்ன சுவர்களில் அமர்ந்து இருந்த அவள் முகம் வாடி இருந்தது .எப்போதுமே மலர்ந்த மலர்போல் சின்ன சிரிப்புடன் காணப்படும் அவள் முகம் அன்று வாடி இருந்தது கண்டு என் மனம் வருந்தியது.

என் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் அவளுடையது.என் வீட்டிற்கும் அவள் வீட்டிற்கும் இடையில் ஒரு சிறிய பாதை இருந்ததால் தனிதனி வீடாக இருந்தன.

ரோஜா என்ற அழகிய மலரின் பெயர்தான் அவள் பெயர் ,ரோஜாவுக்குகூட அடியில் முள் இருக்கும் ஆனால் இந்த ரோஜாவுக்கு அணியும் உடை இலைகூட மென்மையாக இருக்கும் .

எப்போதாவது ஏதாவது எங்கள் வீட்டிற்கு ஏதாவது கொண்டுவருவாள்.அப்போது அம்மா வா ரோஜா என்று பாசத்தோடு அழைக்கும்போது அவள் பெயரைக் கேட்டு இருக்கிறேன்.அந்த இனிமையான நேரமெல்லாம் அவளின் மலர்ந்த முகத்தைப் பார்க்கவேண்டும் என்று மாடியில் இருந்து கீழே இறங்கி வருவேன் .

நான் கீழே வந்தவுடன் படபடவென அடித்துக்கொள்ளும் அவள் கண்களைப் பார்த்து ரசித்து இருக்கிறேன் . நான் வருவதைக்கண்டு என்னை நேராக பார்க்காமல் வாரேன் ஆண்டி என்று சொல்லிவிட்டு ஓடி விடுவாள்.

அம்மாதான் சொல்லுவாள் ரோஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் ஒன்றும் அமைய மாட்டேன்கிறது ..ரெம்ப தங்கமான பொண்ணு போற இடத்தில் நல்லா இருக்கணும் என்று வாழ்த்துவாள்.அப்போதெல்லாம் அந்த நல்ல இடம் ஏன் நம் வீடாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் என்னை வாட்டுவது உண்டு.

என் பெயர் செல்வகுமார் .எலக்டிரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இஞ்சினீரிங் படித்துவிட்டு இ பி யில் அஸிஸ்டெண்ட் இஞ்ஜினியராக வேலையில் சேர்ந்து இருக்கிறேன் .அப்பா தங்கையா அதே இ பி யில் குமஷ்தாவாக வேலை செய்கிறார். நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை செல்லப் பிள்ளை . நான் படிக்கும் காலத்திலேயே மகன் வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக வீட்டின் மாடியில் ஒரு பெரிய அறையக் கட்டி அதில் கண்ணிமுதல் கழிப்பறை வரை தனியாக அமைத்து தந்த நல்லவர் .

நான் படித்த கல்லூரியிலும் ,வேலை செய்யும் இடத்திலும் எத்தனையோ பெண்களைப் பார்த்து பழகி இருக்கிறேன் .ஆனால் அவர்கள் யாரும் என்னை இந்த அளவு கவர்ந்தது இல்லை .ஆனால் பக்கத்து வீட்டில் இருந்தும் பழகாமலே ரோஜா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.

அதற்கு என்ன காரணம் என்று எனக்கு இதுவரை விளங்கவில்லை .அந்த ஊருக்கு வந்து நாங்கள் ஆறுவருடம் ஆகிறது.வாடகைக்கு இருந்த வீட்டையே வாங்கி அப்பா மாற்றி அமைத்து இருந்தார் .

நாங்கள் அங்கு வரும்போது ரோஜா சிறுமி. பள்ளிக்கு போய் கொண்டு இருந்தாள் .அப்பொதே பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பாள்.அவளுடைய சின்ன சிரிப்பையும் மலர்ந்த முகத்தையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் .

அம்மா கீழே புலம்பிக்கொண்டு இருந்தாள்.அந்த பிள்ளைக்கு என்ன நேரமோ தெரியவில்லை .வந்தவங்க எல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தட்டிகிட்டே போகுது பாவம் என்று புழம்பி தீர்த்தாள்.

அன்று இரவு அப்பாவும் அம்மாவும் தனியாக பேசிக்கொள்வதை நான் மாடியின் படிகளில் ஒழிந்து இருந்து கேட்டேன் .அம்மா அப்பவிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்....என்னங்க நம்ம பக்கத்து வீட்டு ரோஜாவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க ..

ஏன் கேக்குர கமலம் ..கமலம் அம்மாவின் பெயர் .

இல்ல சும்மாதான் கேட்டேன்.

நீ கேட்பதைப் பார்த்தால் ஏதோ பொடி வைத்து கேட்பதைப் போல் இருக்கே அப்பா மூக்குக்கண்ணாடி வழியே அம்மாவைப் பார்த்தார்.

ஏங்க அந்த பெண்ணை எனக்கு ரெம்ப பிடிச்சுப் போச்சு நம்ம செல்வாவுக்கு கேட்டா என்ன ?

இதைக்கேட்ட அப்பா பதறி துடிக்கவில்லை .மீண்டும் அம்மாவைப் பார்த்து ஏன் எனக்கு மட்டும் ஆசை இல்லையா? கமலம் ..ஆனால் நாம வேற ஜாதி அவங்க வேற ஜாதி அதுவும் இல்லாம நாம இங்க பொழைக்க வந்து இருக்கிறோம் ஏதாவது பிரச்சனை வந்துவிடும் பேசாமல் இரு என்று அம்மாவை அடக்கினார் .

ஏங்க இந்த காலத்துல ஏதுங்க ஜாதி கீதின்னு அதெல்ல்லாம் ஒன்னும் இல்லைங்க அம்மா இழுத்தாள்.

அப்ப நிதானமாக உனக்கும் எனக்கும் ஜாதி இல்லை கமலம் ஆனால் அவர்களுக்கு ..ஒத்துக்கொள்வார்களா? இதெல்லாம் சரியா வராது என்றார்.

ஒன்று பாத்தியா கமலம் இந்த இரண்டு பிள்ளைகளும் பக்கத்து பக்கத்து வீட்டில்தான் இருக்கின்றன ஆனால் இதுவரை காதல் காமம் என்று ஏதாவது பேச்சு உண்டா எவ்வளவு ஒழுக்கமாக இருக்கின்றன .எனக்குப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது கமலம் .இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறை அப்படி இல்லையே பார்க்கலாம் என்றார்.

எனக்கு அன்று இரவு முழுதும் தூக்கம் வராமல் புரண்டேன் ..இருதியில் தூங்கியபோது கனவில் எனக்கும் ரோஜாவிற்கும் திருமணமனமாகி முதல் இரவு நடந்தது. காலையில் திடுக்கிட்டு விழித்த எனக்கு கண்ட கனவை நினைத்து வெட்கம் வந்தது.அன்றிலிருந்து என் கண்கள் ஜோஜாவைக் காண அழைய ஆரம்பித்தது.

அன்று காலையில் அம்மா பர பரப்பாக இருந்தாள்.பக்கத்து வீட்டிலும் பர பரப்பாக இருந்தது . நான் கேட்காமலே அம்மாவே சொன்னாள் ... நம்ம ரோஜா பொண்ணு இல்ல அந்த பொண்ணுக்கு இன்னைக்கு நிச்சயம் பண்ண வாராங்க...சாயங்காலம் வரை நான் அங்குதான் இருப்பேன் என்றாள். ஏற்கனவே பொண்ணைப் பார்த்துவிட்டு போனவர்களாம் கொஞ்சம் சீர் செனத்தியில் பிரட்சனை இருந்ததாம் இப்ப எல்லாம் முடிந்து இன்று நிச்சயதார்த்தம் ....எப்படியோப்பா அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் போதும் என்றாள்.

எனக்கு ஏனோ மனதை பிசைந்தது.சரிம்மா என்று சொல்லி விட்டு அலுவலகம் புறப்பட்டேன் .மாலையில் வீட்டிற்கு வரவே எனக்கு மனம் ஒப்பவில்லை.அதனால் என் அலுவலக நண்பர்களோடு அரட்டை அடித்து விட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்தேன்.இன்னேரம் எல்லாம் முடிந்து இருக்கும் என்று மனம் அமைதியானது.பக்கத்து வீடு அமைதியாக இருந்தது.அதைவிட அமைதியாக எங்கள்வீடு இருந்தது.

அப்பா ஈசி சேரில் அமர்ந்து அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.அம்மா ஏதோ பிரேமை பிடித்த மாதிரி அமர்ந்து இருந்தாள்.ஏதோ விபரீதம் நடந்து இருப்பது தெரிந்தது.அப்பாவை என்ன என்பதுபோல் பார்த்தேன் .

அப்பா ..உன் அம்மா செய்த கூத்தை கேட்டாயா பக்கத்து வீட்டில் யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன ?

அங்கு போய் நிச்சயம் பண்ண வேண்டிய நேரத்தில் மாப்பிள்ளைப் பையன் வரலையாம் ..ஏதோ காதல் கீதல்ன்னு ஓடிட்டானாம் ..அதனால் அவர்கள் வீட்டில் ஒரே கலாட்டா ..அந்த கலாட்டா பத்தாதுன்னு உங்க அம்மா, யாரும் ஓடிப்போனா என்ன ? என் மகனுக்கு ரோஜாவை நான் கட்டிக்கொள்வேன் என்று உளரி இருக்கிறாள்.இதில் அதிர்ச்சியான அங்கு வந்த அவர்கள் உறவினர்கள் உன் அம்மாவை கண்டபடி ஜாதி பெயர் சொல்லி திட்டி அடிக்கப் போய் இருக்கிறார்கள்,அதான் உன் அம்மா அதிச்சியாயிட்டா என்றார். நான் மெதுவாக அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கைகளைப் பிடித்து முத்தமிட்டேன் .அம்மாவின் கண்களில் வழிந்த நீரை மெல்ல துடைத்தேன் .

வாம்மா எனக்கு பசிக்கிறது வந்து சாப்பாடு போடு என்றேன்.அம்மாவும் கொஞ்சம் நிதானித்து என் தலையைக் கோதிவிட்டு எழுந்தாள்.அப்போது யாரோ கதவை தட்டுவது கேட்டது .அப்பா கதவை திறக்க எழுந்தார். உடனே நான் அப்பாவை தடுத்து நானே கதவை திறந்தேன் .

அங்கே ரோஜாவின் அப்பாவும் அம்மாவும் தாம்பூழ தட்டுடன் நின்றுகொண்டு இருந்தனர். நான் வாங்க என்று அழைக்கும் முன்பே இருவரும் உள்ளே வந்தனர்.எழுந்து நின்ற என் அப்பாவின் கைகளை ரோஜாவின் தந்தை பிடித்துக்கொண்டார்.

எங்களுக்கும் ஜாதி மத பேதமெல்லாம் இல்லை .. நிச்சயத்துக்கு வந்த சிலர் வேண்டுமென்றே பிரச்சனை கிளப்பி விட்டார்கள் என்றார்.ரோஜாவின் அம்மா தாம்பூழ தட்டோடு என் அம்மாவை அணைத்துக்கொண்டார்.என் அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

என் தந்தை எதுவுமே பேசவில்லை .எல்லாமே ரோஜாவின் அப்பாவும் அம்மாவும் பேசி முடித்தார்கள்.அவர்கள் பேசி முடித்தபடி இதோ ரோஜா என் அருகில் .முதலிரவு அறையில் என் மனைவியாக.

ரோஜா இது நமக்கு முதலிரவு இல்லை இரண்டாவது இரவு தெரியுமா ..என்றேன்.என்ன இரண்டாம் இரவா என்று கண்கள் பட படக்க ஆச்சர்யமாக விழிகளை விரித்துப் பார்த்த அவள் கன்னத்தில் செல்லமாக தட்டி என் முதலிரவு கனவை சொன்னேன் .

சீ.....என்று சொல்லி முகத்தை மூடி அந்த மலர் சிரித்தது.அவள் கையை விலக்கி அவள் சிரிப்பைப் பார்த்தேன் அந்த சிரிப்பில் அவள் கடவாய் பல்கூட தெரிந்தது...அதில் இருந்த ஒரு சொத்தைப் பல் என்னைப் பார்த்து சிரித்தது ,,,முற்றும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 15:53

விருவிருப்பாகவும் அதிக எதிர் பார்ப்பாகவும் இருந்தது
பல முறை ஏமாந்து விட்டேன் முடிவு இப்படி இருக்குமோ முடிவு அப்படி இருக்குமோ இறுதியில் நான் நினைத்த முடிவு இல்லை இன்னும் அருமையாக இருந்தது

கதை படித்து முடித்த பிறகு சிரிப்பு வந்து விட்டது அதில் இருந்த ஒரு சொத்தைப் பல் என்னைப் பார்த்து சிரித்தது என்று உள்ளதா அதைப் பார்த்து நானும் சிரித்து விட்டேன் ஜாஸ்மின் பின்னிட்டீங்க போங்க எப்படிப்பா அருமை அருமை

இன்னும் எழுதுங்கள் ஆர்வமாக படித்தேன் இனியும் படிப்பேன் வாழ்த்துக்கள் ஜாஸ்மின் இந்தக் கதையின் விமர்சனங்கள் இன்னும் எழுதலாம் உங்கள் நேரத்தை வீணாக்காமல் இத்தோடு நிறுத்தி விடுகிறேன் சூப்பர்டா செல்லம் :+=+:

பின் குறிப்பு
அந்த ரோஜா இந்த மல்லிகை இல்லையே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by jasmin Mon 8 Aug 2011 - 16:00

இல்லை நண்பரே அது என் தோழி ..அவளுக்கு கிடைத்து போல் ஒரு வாழ்க்கை எல்லா பெண்களுக்கும் கிடக்க வேண்டும் அவ்வளவு அழகான படித்த பண்பான கணவன் ...ரோஜாவும் மிகவும் நல்லவள்....இதை எப்படி நீங்கள் கேட்கலாம் நம் மார்க்கத்தில்தான் ஜாதி இல்லையே ராசா...மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  552533
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 16:01

jasmin wrote:இல்லை நண்பரே அது என் தோழி ..அவளுக்கு கிடைத்து போல் ஒரு வாழ்க்கை எல்லா பெண்களுக்கும் கிடக்க வேண்டும் அவ்வளவு அழகான படித்த பண்பான கணவன் ...ரோஜாவும் மிகவும் நல்லவள்....இதை எப்படி நீங்கள் கேட்கலாம் நம் மார்க்கத்தில்தான் ஜாதி இல்லையே ராசா...மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  552533

சும்மா லகலக #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by kalainilaa Mon 8 Aug 2011 - 16:03

jasmin wrote:இல்லை நண்பரே அது என் தோழி ..அவளுக்கு கிடைத்து போல் ஒரு வாழ்க்கை எல்லா பெண்களுக்கும் கிடக்க வேண்டும் அவ்வளவு அழகான படித்த பண்பான கணவன் ...ரோஜாவும் மிகவும் நல்லவள்....இதை எப்படி நீங்கள் கேட்கலாம் நம் மார்க்கத்தில்தான் ஜாதி இல்லையே ராசா...மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  552533

:!+: :!+: :!+: :!+: @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by jasmin Mon 8 Aug 2011 - 16:04

இருந்தாலும் உங்களுக்கு அது கொஞ்சம் அதிகம் தான் ..ஆமாம் இன்னைக்கு மதிப்பீடு கிடையாதா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 16:07

jasmin wrote:இருந்தாலும் உங்களுக்கு அது கொஞ்சம் அதிகம் தான் ..ஆமாம் இன்னைக்கு மதிப்பீடு கிடையாதா
இன்று நீங்கள் பதிவு இட்டுள்ளீர்கள் நீங்கதான் எங்களுக்கு மதிப்பீடு தரனும் மேடம் :,”,: :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by jasmin Mon 8 Aug 2011 - 16:10

அப்படியா ஏதோ சொல்றீங்க பாத்து செய்யுங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 16:12

jasmin wrote:அப்படியா ஏதோ சொல்றீங்க பாத்து செய்யுங்க
ஒன்றும் தெரியாத பாப்பா (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by jasmin Mon 8 Aug 2011 - 16:14

அப்புறம் நோன்பு நேரத்தில் போட முடியாது தாழ்ப்பா..போதுமா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by kalainilaa Mon 8 Aug 2011 - 16:14

jasmin wrote:இருந்தாலும் உங்களுக்கு அது கொஞ்சம் அதிகம் தான் ..ஆமாம் இன்னைக்கு மதிப்பீடு கிடையாதா

முதல் கதையே ,அருமையாய் இருந்தது உண்மை .
தொடருங்கள் .நிஜத்தை ,உங்கள் பாணியில் நிழலாய் கொடுங்கள் .உங்களுக்குள் ,
ஒரு பாலகுமாரன் ,பட்டுக்கோட்டை ,ராஜேஷ்குமார் ,இருக்கலாம் .கொண்டுவாருங்கள் . :!+: :!+: :!+: :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 16:16

kalainilaa wrote:
jasmin wrote:இருந்தாலும் உங்களுக்கு அது கொஞ்சம் அதிகம் தான் ..ஆமாம் இன்னைக்கு மதிப்பீடு கிடையாதா

முதல் கதையே ,அருமையாய் இருந்தது உண்மை .
தொடருங்கள் .நிஜத்தை ,உங்கள் பாணியில் நிழலாய் கொடுங்கள் .உங்களுக்குள் ,
ஒரு பாலகுமாரன் ,பட்டுக்கோட்டை ,ராஜேஷ்குமார் ,இருக்கலாம் .கொண்டுவாருங்கள் . :!+: :!+: :!+: :!+: :!+:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by முனாஸ் சுலைமான் Mon 8 Aug 2011 - 16:25

ஒன்று பாத்தியா கமலம் இந்த இரண்டு பிள்ளைகளும் பக்கத்து பக்கத்து
வீட்டில்தான் இருக்கின்றன ஆனால் இதுவரை காதல் காமம் என்று ஏதாவது பேச்சு
உண்டா எவ்வளவு ஒழுக்கமாக இருக்கின்றன .எனக்குப் பார்த்தால் பெருமையாக
இருக்கிறது கமலம் .இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறை
அப்படி இல்லையே பார்க்கலாம் என்றார்.

அழகான கட்டுரை ஒன்று தந்திருக்கார் அன்பின் தோழி ஜாஸ்மின் நான் இன்றுதான் பார்த்தேன் கனவும் நினைவும் நன்றாகவே இருக்கிறது வாழ்த்துக்கள் தோழி ஜாஸ்மின் எல்லோர் நடையிலும் ஒரு திறமையிருக்கிறது இந்த முனாஸ் மட்டும்தான் இன்னும் பின்னுக்கே தள்ளி நிற்கிறேன் இன்சாஹ் அல்லாஹ் முயற்சிக்கிறேன் உங்கள் அனைவரின் பின்னால் நானும் வருவதற்கு............. மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by அப்புகுட்டி Mon 8 Aug 2011 - 17:33

சேனையில் அனைவரும் நல்ல திறமை சாலிதான் @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by ஹம்னா Tue 9 Aug 2011 - 18:39

மிகவும் அருமையான கதை.
கதை படிப்பது எனக்கு நல்ல விருப்பம்.
ரொம்பவும் விருவிருப்பாக இருந்தது உங்கள் கதை.
ஒரு கதாசிரியர் நம் தளத்தில் உறுவாகிறார்.
வாழ்த்துக்கள் ஜாஸ்மின் வாழ்த்துக்கள்.
எனக்கு ஒரு சந்தேகம் அந்த சொத்தைப்பல் ரோஜா.
தாங்கள் தானோ?

கதையின் முடிவு சூப்பர். சூப்பர் சூப்பர்


மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by ஹம்னா Tue 9 Aug 2011 - 18:46

முனாஸ் சுலைமான் wrote:ஒன்று பாத்தியா கமலம் இந்த இரண்டு பிள்ளைகளும் பக்கத்து பக்கத்து
வீட்டில்தான் இருக்கின்றன ஆனால் இதுவரை காதல் காமம் என்று ஏதாவது பேச்சு
உண்டா எவ்வளவு ஒழுக்கமாக இருக்கின்றன .எனக்குப் பார்த்தால் பெருமையாக
இருக்கிறது கமலம் .இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறை
அப்படி இல்லையே பார்க்கலாம் என்றார்.

அழகான கட்டுரை ஒன்று தந்திருக்கார் அன்பின் தோழி ஜாஸ்மின் நான் இன்றுதான் பார்த்தேன் கனவும் நினைவும் நன்றாகவே இருக்கிறது வாழ்த்துக்கள் தோழி ஜாஸ்மின் எல்லோர் நடையிலும் ஒரு திறமையிருக்கிறது இந்த முனாஸ் மட்டும்தான் இன்னும் பின்னுக்கே தள்ளி நிற்கிறேன் இன்சாஹ் அல்லாஹ் முயற்சிக்கிறேன் உங்கள் அனைவரின் பின்னால் நானும் வருவதற்கு............. மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  741156

கட்டுரையா?
அழகான கதை. ஐயா.


மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by lafeer Tue 9 Aug 2011 - 21:17

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  800522
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்  Empty Re: மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum