சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

Saghakkal சகாக்கள் Khan11

Saghakkal சகாக்கள்

2 posters

Go down

Saghakkal சகாக்கள் Empty Saghakkal சகாக்கள்

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 16:38




Saghakkal சகாக்கள் Saghakkal-670


பழனிக்கு பாதயாத்திரை போகும் குழுவினரில்
இருவருக்குள் ஏற்படும் காதல் அவர்களின் சகாக்களுக்கு இடையிலான அன்பு,
பிரிவு பிரச்சினைகள் போன்றவற்றை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் இடைவேளையில்தான் சந்தித்துக்
கொள்கிறார்கள் ஆனால் அதுவரை காதலித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
வித்தியாசமான கதை சொல்லும் யுக்தியினைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்
முத்துக்குமார சுவாமி.

காதலித்தால் இவளைத்தான் காதலிக்கனும், கைபிடித்தால் இவளைத்தான்
கரம்பிடிக்கணுமென்று, பஸ் ஸ்டாண்டில் ஏதேச்சையாக பார்த்த பேரழகியை தன்
காதலியாக கற்பனை செய்து கொண்டு, தன் சகாக்களிடம் இஷ்டத்திற்கு ரீல்
சுற்றும் ஹீரோ, ஒரு நாள் ஹீரோயினிடம் சிக்குகிறார்! அப்புறம்?
அப்புறமென்ன...? அவர் சுற்றிய ரீல்கள் அத்தனைக்கும் அவர் தரும் விளக்கமும்,
கல்யாணத்திற்கு பின்பும் காதல் செய்தல் வேண்டும் எனும் சொல்லாக்கமும்
நாயகிக்கும், நாயகன் மீது காதலை ஏற்புடுத்துகிறது. வெவ்வேறு சாதியை
மட்டுமல்ல, வசதியையும் சார்ந்த இவர்களது காதல் சேர்ந்ததா...?
சீரழிந்ததா...? என்பதுதான் மீதிக்கதை!

'குளிர்-100' படத்தில் நாயகராக ஏற்கனவே அறிமுகமான சஞ்சீவ்தான் இதில்
கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல் என்றாலே எங்கேயுமே பிரச்சினைதான்.
காதல் எப்ப வரும்.. எப்படி வரும்.. யார் மீது வரும்.. என்பது பிரம்ம
ரகசியம்தான். சஞ்சீவுக்கும் அப்படித்தான் அத்வைதாவைப் பார்த்த உடனே
வருகிறது காதல். ஒரு கால்பந்தாட்ட வீரராக வந்து ரயில்வேயில் வேலை வாங்க
வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கும் சஞ்சீவ் மைதானங்களில் கோல்
போடுகிறாரோ இல்லையோ யதார்த்த நடிப்பில் கோல் போட்டு விடுகிறார். இன்னும்
கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்தால் 'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன்
போன்று புகழ் பெறலாம்.

'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்த அத்வைதாதான் இதில் கதாநாயகியாக
நடித்திருக்கிறார். முந்தைய படத்தைவிட அத்வைதா இதில் சும்மா புகுந்து
விளையாடியிருக்கிறார். கிராமத்துப் பெண்களுக்கே இருக்கும் தைரியம்,
துடுக்கத்தனங்களை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தான் திட்டி
அனுப்பியவன் மீதே காதல் வயப்படுவதும் அதனை அப்பாவிடம் சொல்ல முடியாமல்
தவிக்கும் இடங்களில் நம்மையும் அவரது சோகம் தொற்றிக் கொள்கிறது.

கதாநாயகியின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார். வெண்ணிற ஆடை
மூர்த்தி அடிக்கும் லூட்டி, தியேட்டரில் விசில் சப்தத்தை கிளப்புகிறது.

சஞ்சீவின் ஒரு சகாவாக வரும் சங்கர்(மெய்யர்) ரஜினிகாந்த், கமல்ஹாசன்,
விஜயகாந்த், பாக்யராஜ், ராஜேந்தர், சிம்பு இன்னும் ஒரு படி மேலே போய்
எம்.ஜி.ஆர். சிவாஜி என்று அனைவரையும் வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தும்
கிராமத்து இளைஞன். செம டைமிங், ஆட்டம், காமெடி என்று தூள் பறத்துகிறார்.
சஞ்சீவின் சகாக்கள் சங்கரும், சிவசங்கரும்(லெஃப்ட் பாலு) ஜோடி சேர்ந்து
சும்மா காமெடித் திருவிழா நடத்தியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இருவரும்
இணைந்து செயல்பட்டால் தமிழ்சினிமாவின் எவர்கிரீன் வெற்றிக் கூட்டணி
கவுண்டமணி-செந்தில் போன்று சிகரங்களைத் தொடுவார்கள்.

சஞ்சீவ், அத்வைதா மற்றும் சஞ்சீவின் நண்பர்கள் பழனிக்குப் பாதையாத்திரை
செல்லும் காட்சிகள் அந்த பாதயாத்திரையில் நடக்கும் ஆட்டம், பாட்டம், பரவசம்
மற்றும் சுவராஸ்யமான சம்பவங்கள் அழகு. சகாக்கள் பார்த்து விட்டு தமிழக
இளைஞர் கூட்டம் இன்னும் அதிக அளவில் பழனிக்குப் பாதையாத்திரை புறப்படலாம்.

தமிழகத்தில் இல்லாத கோவில்களா அல்லது கடவுள்களா..? இங்கிருந்து வேறு
மாநிலம் செல்லும் போது அடிப்படை வசதிகள்கூட நம்ம ஆளுங்களுக்குச் செய்து
கொடுக்க மறுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் ஏன் அங்கெல்லாம் செல்ல
வேண்டும். பழனி ஒன்றே போதும். பழனியை ஒரு சர்வதேச ஆன்மிகச்
சுற்றுலாத்தலமாக நாம், நம் இளைஞர்கள் நினைத்தால் மாற்றலாம். சகாக்களில்
காட்டியிருக்கும் பாதயாத்திரைக் காட்சிகள் நிச்சயம் அவர்களை அவ்வாறு
செய்யத்தூண்டும்.

முற்பகுதியில் கதையைப் புதிதாகச் சொன்ன இயக்குநர் பிற்பகுதியில்
அரதப்பழசான காட்சிகளுடன் கதையை நகர்த்தியிருக்கிறார். நீபா கதாபாத்திரம்,
அத்வைதா, சஞ்சீவ் மீது காதல் வயப்பட ஒரு காரணமாக இருக்கத் திணிக்கப்பட்டது
போன்ற உணர்வினையே ஏற்படுத்துகிறது.

அதைப்போலவே அத்வைதா, தந்தையிடம் தன் காதலைச் சொல்ல வருவதும் அந்த
நேரத்தில் அவர் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடியவர் அல்ல என்பதனை வேறு ஒரு
சம்பவம் மூலம் புரிய வைப்பதும், அதன் பிறகு சொல்லத் தயங்கி சொல்லாமல்
இருந்து விடுவதும், ரொம்ப பழசு இயக்குநர் அவர்களே. இடைவேளை வரை யூகிக்க
முடியாத சுவராஸ்யமான காட்சி அமைப்புகள் அதன்பிறகு..?

ஸ்ரீ.எம். அழகப்பனின் ஒளிப்பதிவும், ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.

சாதாரணமாக நமக்குப் பொரையேறுச்சுன்னா யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று
சொல்வோம் அந்த யதார்த்த வரிகளையேக் கொண்டு யுகபாரதி எழுதிய 'நீ என்ன
நெனைக்கிறியா..' பாடல் அருமை.. திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டும் அளவிற்கு
இசையமைத்திருக்கிறார் தயா ரத்னம். மற்ற பாடல்கள் கேட்கலாம் ரகம்.

நண்பர்கள் கதையென்றாலும் தெருமுனை குட்டிச் சுவரில் அமர்ந்து தம்
அடித்து பொழுதுபோக்குவது, சைட் அடிப்பது போன்ற காட்சிகள் இல்லாமல்
நட்பையும், காதலையும் யதார்த்தமாக சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர்
முத்துக்குமார சுவாமியை வாழ்த்தி வரவேற்போம்.

சகாக்கள் - புதிய டப்பால பழைய பஞ்சாமிர்தம்!






நடிகர்கள்
சஞ்சீவ், அத்வைதா, சங்கர், சிவசங்கர், ஜோசி, பானுமதி, நீபா, ஜெயப்பிரகாஷ்
இசை
தயா ரத்னம்
இயக்கம்
முத்துக்குமார சுவாமி
தயாரிப்பு
வி.வி.வி கிரியேஷன்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Saghakkal சகாக்கள் Empty Re: Saghakkal சகாக்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 20:46

:!+: :!+: நல்ல கதைதான்.


Saghakkal சகாக்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Saghakkal சகாக்கள் Empty Re: Saghakkal சகாக்கள்

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 20:49

ஹம்னா wrote: :!+: :!+: நல்ல கதைதான்.
அப்போ படம் பார்த்து விட்டீர்களா ஹம்னா :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Saghakkal சகாக்கள் Empty Re: Saghakkal சகாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum