Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
Uyarthiru 420-உயர்திரு 420
Page 1 of 1
Uyarthiru 420-உயர்திரு 420
வெறும் 420யாக இருக்கிற ஒருத்தன் எப்படி உயர்திரு 420ஆகிறான்ங்கிறதுதான் கதை.
திருடர்களிடமே லூட் அடிக்கும் தில்லாலங்கடி திருடன் சினேகன்.
ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வங்கிக் கடனை நம்பி இருக்கும் வசீகரனின்
ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜெனரல் மேனேஜராய் போலி சர்ட்டிபிகேட்டுகளை
கொடுத்து சேர்கிறார் சினேகன். ஹோட்டல் தொழிலில் முத்திரை பதிக்க ஆசைப்படும்
வசீகரனுக்கு, தமிழின் முன்னணி நடிகையுடன் காதல். வங்கிக் கடனைக் கட்டச்
சொல்லி வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கும் வேளையில், காதல் திருமணம்
மூலமும் சிக்கலை எதிர்கொள்கிறார் வசீகரன். அதேவேளையில் தொழில் போட்டியில்
வசீகரனை வீழ்த்த ஜெயப்பிரகாஷும், சந்திரசேகரும் திட்டமிடுகின்றனர். இந்த
பிரச்சினைகளில் இருந்து விடுபட சினேகன் உதவுவார் என்று நினைக்கும்போது,
வசீகரனைக் கொல்ல முயற்சிக்கிறார் அவர். ஏன், எதற்கு..? என்பது விறுவிறுக்க
வைக்கும் மீதிக்கதை!
புதிய பின்னணியில் சஸ்பென்ஸ் முடிச்சுக்களை அடுக்கி, அதை ஒவ்வொன்றாக
அவிழ்க்கும் விதத்தில் கவனத்தை கவர்கிறார் அறிமுக இயக்குநர்
எஸ்.பிரேம்நாத்.
'கண்களால் கைது செய்' படத்தில் நடித்த வசீகரன் நீண்ட நெடுநாளைக்குப்
பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் கூலிங்கிளாஸ்
அணிந்தபடி ரிச் லுக் பாயாக வலம் வருகிறார். இறுதி வரை கனவு, லட்சியம் என்று
ஆசை ஆசையாகப் பேசிக்கொண்டே இருக்கும் வசீகரன், படம் முடியும் வரை அதற்காக
உருப்படியாக ஒரு நடவடிக்கையும் எடுப்பேனா என்கிறாரே!
'420' ஆகப் பாடலாசிரியர் சினேகன் நடித்திருக்கிறார். 'இத்தாலி மெஷின்'
என்று ஆசை காட்டி, பேட்டை தாதாவிடமே 10 லட்சம் லபக்குவது, சரவணா ஸ்டோர்
அட்ரஸ் சொல்லி, முரட்டு ரவுடியைக் குழப்புவது, மேக்னா ராஜைக் குழப்பி,
சாப்பாடு பார்சல் வாங்குவது போன்ற தகிடுதத்தங்களின்போது ஓ.கே. ஆனால்,
படத்தின் எல்லா சூழலிலும் முறைத்த விழிகளும் விறைத்த நடையுமாகவே சினேகன்
அலைவதால் இவரது கேரக்டர் குழப்பம், மேலும் இன்வால்வ் ஆக முடியாமல்
தடுக்கிறது. ஒன்று ஹீரோவாக இருக்க வேண்டும், இல்லை வில்லனாக இருக்க
வேண்டும் இப்படி ரெண்டும் கெட்டான் கேரக்டரில் எதிலும் ஒட்டாமல் படம்
பார்ப்பது கஷ்டமாய் இருக்கிறது. இவரும் பாதி நேரம் கூலிங்க்ளாஸ் போட்டு
நடித்திருப்பது கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கிறது. ரூமில் இருக்கும்போதுகூட
க்ளாஸ் போட்டு பேசுவது என்பது நடிப்பு வராதவர்களுக்கான ஆப்ஷன் அதை தொடர்வது
ஒரு நடிகனுக்கு சரியானதல்ல. சினேகனுக்கு குரல் கொடுத்த சஞ்சீவுக்கு
வாழ்த்துகள். அருமையாய் நடித்திருக்கிறார் குரலில்.
மேக்னா நாயுடு கொஞ்சம் நயன்தாரா போல் இருக்கிறார் சிரிக்கும் போது.
ஆனால், சீட்டிங் என்று தெரிந்தும் ஹீரோவை லவ்வும் வழக்கமான லூசுப் பெண்
கேரக்டருக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார். இன்னொரு கதாநாயகி அக்ஷரா
ஆங்காங்கே எக்ஸ்போஸ் செய்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். எந்த கேரக்டரையும் அல்வா
சாப்பிடுற மாதிரி பண்றவராச்சே.... இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.
பாஸ்கி, தீபக், ரமேஷ்கண்ணா எல்லோருமே கிடைத்த வாய்ப்பை
பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் சந்திரசேகரும் சில
காட்சிகள் வந்து போகிறார். வில்லியாக நடித்திருக்கும் அக்ஷயாவும் ரசிகர்களை
கவருகிறார்.
இம்மாதிரியான கதைகளில் ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் இருந்தால்தான்
சுவாரஸ்யம் மிகும். ஆனால் இயக்குநர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
சினேகனின் புத்திசாலித்தனத்தை அவ்வளவு டீடெயிலாக காதல் காட்சிகளில்
காட்டியவர். வசீகரனின் தொழிலை எப்படி புத்திசாலித்தனமாய் விரிவுபடுத்தினார்
என்பதை காட்டவில்லை.
எதற்காக சினேகன், வசீகரனின் ஹோட்டலுக்கு வந்து சரி செய்ய வேண்டும்?.
அவருக்கும் வசீகரனுக்கு எந்த விதத்தில் நட்பு?. எதற்காக அவர் வசீகரனுக்கு
நேர்மையாக இருக்க வேண்டும்?. வசீகரனுக்கும் நடிகைக்குமான காதல்?.
ஜெயபிரககுக்கும் வசீகரனுக்கும் வெறும் தேர்தலில் நின்றதினால்தான் ரைவலரியா?
அது போதாமல் இருக்கிறது. தீடீரென வரும் ஒலக பிஸினெஸ்மேன் சந்திரசேகர்
கேரக்டர் எதற்கு?. அந்த மலேசிய அரண்மனையை வாங்கி கொடுத்துவிட்டால்
வசீகரனின் கனவு முடிந்துவிடுமா?. சினேகன் ஏன் சந்திரசேகருடன் போக வேண்டும்.
இப்படி பல கேள்விகள் துரத்துகிறது.
மேக்னா வில்லன்களிடம் மாட்டிக்கொள்வதும் அவர்களிடமிருந்து சினேகன்
மேக்னாவைக் காப்பாற்றுவதும் விறுவிறு காட்சிகள். கேமராவை ஹோட்டல்
ரூமிற்குள் வைத்துவிட்டு காரில் போகும் பெண்ணை காரில் சினேகன் துரத்திச்
செல்லும் காட்சி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்திருக்க வேண்டும்.
அந்த அளவுக்கு கார் சேசிங்கை பிரமிக்கிற மாதிரியாக படம்
பிடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன பண்றது. அந்த காட்சி ரொம்ப ரொம்ப நீளமாக
இருப்பதால் எவ்வளவு நேரம்தான் அதை ரசிப்பது.
வசீகரன்-நடிகையின் படுக்கையறை கேசட்டை ஜெயப்பிரகாஷ் பத்திரிகை
செய்தியாக்குவது திருப்பம். அதை சாக்காக வைத்து வசீகரன் தற்கொலை செய்து
கொள்வதுபோல் சினேகன் தூக்கில் தொங்க வைப்பது சீட் நுனிக்கு இழுக்கும் பர
பர...
'டோலு டோலு...' பாடல் தாளம் போட வைக்கிறது. மேக்னாவும், சினேகனும்
சேர்ந்து பாடும் அந்த டூயட் பாடலும் ரசிக்க வைக்கிற ரகம். ஸ்டார் ஓட்டலில்
ஒரு கானா பாடலை படம் பிடித்திருக்கிறார்கள். டி.சங்கரின் ஒளிப்பதிவில் கார்
டைரடிங் காட்சிகளும், மலேசிய தாஜ்மஹால் காட்சிகளும் பிரமாண்டம்.
ராதாகிருஷ்ணனின் வசனங்கள் ஆங்காங்கே நச்சென இருக்கிறது. முக்கியமாய்
காதலைப் பற்றி பேசும் வசனங்கள். கொஞ்சம் தர்க்கம் செய்யும் காட்சிகளிலும்.
உயர்திரு 420 - ஜகஜால கில்லாடி!
நடிகர்கள்
சினேகன், வசீகரன், மேக்னா ராஜ், அக்ஷயா, அக்ஷரா, ஜெயப்பிரகாஷ், பாஸ்கி, தீபக், சந்திரசேகர்
இசை
மணிசர்மா
இயக்கம்
பிரேம்நாத்
தயாரிப்பு
சந்திரசேகர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|