Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
4 posters
Page 1 of 1
ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
சென்னையில் உள்ள கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற சில வங்கிகளின் ஏ.டி.எம். மெஷின்களில் கடந்த சில நாட்களில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு பயங்கர அதிர்ச்சி! அவர்களின் வங்கிக் கணக்குகளில் கொத்துக் கொத்தாகப் பணம் காணாமல் போயிருப் பதைப் பார்த்துத் திடுக்கிட்டனர். உடனே பதறியபடி வங்கிகளுக்கு ஓடினர். வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் படையெடுத்தனர்.
சென்னையில் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம். மற்றும் கிரடிட் கார்டு மோசடிகளை விசாரிப்பதகு என்றே, துணைக் கமிஷனர் ராதிகா தலைமையில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு (போன்: 2345 2317) செயல்படுகிறது. இதன் உதவி கமிஷனர் ஜான் ரோஸிடம் பேசினோம்.
''கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் 35 லட்சம் வரை கொள்ளை போனதாக சுமார் 65 புகார்கள் பதிவாகி உள்ளன. அதேபோல், இந்த மாதம் 19-ம் தேதி வரையில் சுமார் 50-க்கும் அதிகமானவர்கள், ரூ. 2 கோடி வரை கொள்ளை போனதாக புகார் செய்திருக்கிறார்கள்.
கிரடிட் மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்ளும் அறிவுரை எச்சரிக்கை இதுதான். 'ஏ.டி.எம். கார்டுகளின் பின் நம்பரை அடிக்கடி மாற்றி புது எண்ணைப் பதிவு செய்யுங்கள். ஏனென்றால், பழைய எண்ணை கொள்ளையர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்தத் தகவல் மூலம் வெளிநாடுகளில் இருந்து உங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அதனால் புதிய எண்ணுக்கு மாறுங்கள்'.
இந்த கொள்ளைகளின் சூத்திரதாரியான ஷார்ட்டி (எ) உமேஷ் என்ற இலங்கைக்காரரை அக்டோபர் முதல் வாரத்திலேயே கைது செய்துவிட்டோம். ஆனால், அதற்குப் பின்னரும் பணத்தைப் பறிகொடுத்ததாக பலரும் புகார் செய்யவே, தீவிரமாக விசாரணையில் இறங்கினோம்.
அப்போதுதான், இந்த ஷார்ட்டி இங்குள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை நூதனமுறையில் திருடி, வெளிநாடுகளில் பிரபல கும்பல்களிடம் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்தத் தகவல்களை விலைக்கு வாங்கிய கும்பல்தான், வெளிநாடுகளில் இருந்து இங்குள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் புகுந்து களவாடி வருகிறார்களோ?’ என்று சந்தேகப்படுகிறோம்!'' என்றவரிடம், ''எப்படி இந்த மோசடி நடக்கிறது?'' எனக் கேட்டோம்.
''ஸ்கிம்மர் என்கிற கருவி 25 ஆயிரத்துக்கு சீனாவில் கிடைக்கிறது. மெல்லிய ஸ்டிக்கர் மாதிரி இருக்கும். இதை ஏ.டி.எம். மையங்களில் கார்டு நுழைக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாதபடி பொருத்தி விடுவார்கள். நாம் பணம் எடுக்க கார்டை நுழைக்கும்போது அது, ஸ்கிம்மரைத் தாண்டித்தான் மிஷினுக்குள் போகும். அப்போது கார்டு நம்பர், பின் நம்பர் உள்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிடும். அந்த ஸ்கிம்மரை வெளியே எடுத்து, 'என்கோடர்' என்கிற சி.டி. ரைட்டர் மாதிரியான மெஷினுடன் இணைத்து அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொள்வார்கள்.
பிறகென்ன, போலி கார்டுகள் தயாரித்து ஏ.டி.எம். மெஷின்களில் பணத்தைக் களவாடி விடுவார்கள். இதைத்தவிர, கீ ஹோல் கேமராவை ஏ.டி.எம். வளாகத்தில் எங்காவது மேலே பொருத்தி, அதன் மூலமும் பின் நம்பரைத் தெரிந்து கொள்வார்கள்...'' என்றார்.
''ஷார்ட்டி என்ற குற்றவாளியை எப்படிப் பிடித்தீர்கள்?''
''எங்களுக்கு வந்த புகார்களில் எந்த நேரத்தில் பணம் களவாடப்படுகிறது என்பதை கவனித்தோம்.ஷார்ட்டி கும்பல் இரவு 11 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை ஏ.டி.எம். மையத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தையும், மறுநாள் கணக்கில் அதாவது இரவு 12 மணிக்கு மேல் அதே மையத்தில் காத்திருந்து, மேலும் பணம் எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தோம். இதுதான் முதல் க்ளூ. அந்த நேரத்தில் ... அந்த ஏ.டி.எம். மைய வளாகத்தில் இருந்து சென்ற செல்போன் எண்களைக் கிராஸ் செக் செய்தபோது, குறிப்பிட்ட எண் சிக்கியது. அதுதான், ஷார்ட்டியின் செல்போன். இவன் ஏற்கெனவே எங்களிடம் இரண்டு முறை கிரடிட் கார்டு மோசடியில் சிக்கியவன். அந்த வகையில், இவனது ஜாதகமே இருந்தது. கோவிலம்பாக்கம் ஏரியாவில் வாடகைக்கு வீடு எடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்தான். அவனது வீட்டை நாங்கள் நள்ளிரவு முற்றுகையிட்டபோது, கூட்டாளி களுடன் சிக்கினான். ஷார்ட்டி தயார் செய்த போலி டெபிட் கார்டுகளை வைத்து, 'ரன்னர்ஸ்' என்று அழைக்கப்படும் அவனது கூட்டாளிகளான திவ்யன், உதயகுமார், ராஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாகப் போய் ஏ.டி.எம். மையங் களில் பணத்தைத் திருடி வருவார்களாம். நாங்கள் ஷார்ட்டி வீட்டில் மூன்று சொகுசு கார்கள், 5 லேப் டாப்கள், விலை உயர்ந்த 10 ஐ-போன்கள், ஸ்கிம்மர் மற்றும் என்கோடர் கருவிகளைக் கைப்பற்றினோம். அவற்றை கோர்ட்டில் ஒப்படைத்து இருக்கிறோம். இப்போது வெளிநாட்டில் இருந்து திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வழியை ஆராய்ந்து வருகிறோம். அவ்வப்போது பின் நம்பரை மாற்றி னால் மட்டுமே, இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக் கொள்ள முடியும்'' என்றார்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
இவர்கள்தான் லைசன் எடுத்த திருடர்களோ
தகவலுக்கு நன்றி நண்பா :];: :];:
தகவலுக்கு நன்றி நண்பா :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
தகவலுக்கு நன்றி நண்பா
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
தகவலுக்கு நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
:];: :];: :];:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்கள்!
» விண்டோஸ் சிடியின் சீரியல் நம்பரை கண்டுபிடிக்க ஒரு எளியமுறை
» ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..
» உடனே முடிவெடுக்காதீர்கள்.!!
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்கள்!
» விண்டோஸ் சிடியின் சீரியல் நம்பரை கண்டுபிடிக்க ஒரு எளியமுறை
» ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..
» உடனே முடிவெடுக்காதீர்கள்.!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|