Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
4 posters
Page 1 of 1
600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்ப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி எனக் கருதப்படும் கருணா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) சிபாரிசு செய்துள்ளது
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே மேற்படி பரிந்துரை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலிஸார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் அளித்த சாட்சியத்தின் பிரகாரம் அச்சம்பவத்தில் கருணாவினதும் ஏனைய எல்.ரி.ரி.ஈ தலைவர்களினதும் பங்களிப்பு குறித்து கூறினார்கள். ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய உத்தரவிடப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை குறித்து அவர்கள் தெரிவித்தனர்.
கருணா எனும் முரளிதரனிடம் ஆணைக்குழு இது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அவர் இக்கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். எனினும் மேற்படி 600 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் படுகொலை குறித்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதில் ஆணைக்குழு கவலை கொள்கிறது.
இக்கொலைகளின் தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் அது கொண்டுள்ள தன்மை காரணமாக இவ்விடயம் முழுமையான விசாரணைக்குரியது என ஆணைக்குழு கருதுகிறது.
கடத்தல் கப்பம் வசூலித்தல் சம்பவங்களில் இனியபாரதி!
அதேவேளை பாரதி என்பவர் கிழக்கு மாணத்தில் பல கடத்தல் கப்பம் வசூலித்தல் முதலான பல குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு ஆணைக்குழு கொண்டுவந்த போதிலும் தவறிழைத்ததாக கூறப்படுபவருக்கு எதிராக எவ்வித அர்த்தமுள்ள நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதில் ஆணைக்குழு கவலை கொள்கிறது.
அத்துடன் சட்ட விரோத ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆணைக்குழு விஜயம் செய்தபோது வழங்கப்பட்ட பல சாட்சியங்களின்படி இத்தகைய சட்ட விரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது எனவும் இடம்பெற்றததாக கூறப்படும் பல கடத்தல்கள் தவறான சிறைவைப்புகள் கப்பம் வசூலித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் வாழ்வதற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்ட விரோத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இக்குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முடிவு கட்டவும் வேண்டும். இல்லா விட்டால் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாரதூரமான தடையை ஏற்படுத்திவிடும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
EPDP மீதும் நடவடிக்கை அவசியம்!
அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கப்பம் வசூலித்தல் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. ஈபிடிபிக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு கருதுகிறது. விசாரணை இல்லா விட்டால் தண்டனைப் பயமற்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.
மேஜர் சீலன் என்பவர் தொடர்பாக கடத்தல் கப்பம் வசூலித்தல் பாதுகாப்புப் படைகளின் சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளைடித்தமை போன்ற பல குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் கவனத்துக் கொண்டு வரப்பட்டன. இவை தொடர்பாக அப்பகுதி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு ஆணைக்குழு கொண்டு வந்தபின் மேஜர் சீலனின் சகா ஒருவர் கைதானார்.
எனினும் குறித்த பிரதான குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இவ்விடயதில் ஆணைக்குழுவானது சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் தொடர்பாக தெரிவித்த தனது இடைக்கால சிபாரிசுகளை முழுமையாக வினைத்திறனாக்குவது குறித்து ஆணைக்குழு மீள வலியுறுத்துகிறது.
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே மேற்படி பரிந்துரை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலிஸார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் அளித்த சாட்சியத்தின் பிரகாரம் அச்சம்பவத்தில் கருணாவினதும் ஏனைய எல்.ரி.ரி.ஈ தலைவர்களினதும் பங்களிப்பு குறித்து கூறினார்கள். ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய உத்தரவிடப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை குறித்து அவர்கள் தெரிவித்தனர்.
கருணா எனும் முரளிதரனிடம் ஆணைக்குழு இது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அவர் இக்கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். எனினும் மேற்படி 600 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் படுகொலை குறித்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதில் ஆணைக்குழு கவலை கொள்கிறது.
இக்கொலைகளின் தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் அது கொண்டுள்ள தன்மை காரணமாக இவ்விடயம் முழுமையான விசாரணைக்குரியது என ஆணைக்குழு கருதுகிறது.
கடத்தல் கப்பம் வசூலித்தல் சம்பவங்களில் இனியபாரதி!
அதேவேளை பாரதி என்பவர் கிழக்கு மாணத்தில் பல கடத்தல் கப்பம் வசூலித்தல் முதலான பல குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு ஆணைக்குழு கொண்டுவந்த போதிலும் தவறிழைத்ததாக கூறப்படுபவருக்கு எதிராக எவ்வித அர்த்தமுள்ள நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதில் ஆணைக்குழு கவலை கொள்கிறது.
அத்துடன் சட்ட விரோத ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆணைக்குழு விஜயம் செய்தபோது வழங்கப்பட்ட பல சாட்சியங்களின்படி இத்தகைய சட்ட விரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது எனவும் இடம்பெற்றததாக கூறப்படும் பல கடத்தல்கள் தவறான சிறைவைப்புகள் கப்பம் வசூலித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் வாழ்வதற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்ட விரோத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இக்குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முடிவு கட்டவும் வேண்டும். இல்லா விட்டால் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாரதூரமான தடையை ஏற்படுத்திவிடும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
EPDP மீதும் நடவடிக்கை அவசியம்!
அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கப்பம் வசூலித்தல் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. ஈபிடிபிக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு கருதுகிறது. விசாரணை இல்லா விட்டால் தண்டனைப் பயமற்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.
மேஜர் சீலன் என்பவர் தொடர்பாக கடத்தல் கப்பம் வசூலித்தல் பாதுகாப்புப் படைகளின் சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளைடித்தமை போன்ற பல குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் கவனத்துக் கொண்டு வரப்பட்டன. இவை தொடர்பாக அப்பகுதி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு ஆணைக்குழு கொண்டு வந்தபின் மேஜர் சீலனின் சகா ஒருவர் கைதானார்.
எனினும் குறித்த பிரதான குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இவ்விடயதில் ஆணைக்குழுவானது சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் தொடர்பாக தெரிவித்த தனது இடைக்கால சிபாரிசுகளை முழுமையாக வினைத்திறனாக்குவது குறித்து ஆணைக்குழு மீள வலியுறுத்துகிறது.
Re: 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
இவனை கடத்தி இவன் தலையை கொய்ய வேண்டியதுதானே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
முடியாது ஜாஸ்மின் இப்ப அவர் அமைச்சராகி விட்டார். {))jasmin wrote:இவனை கடத்தி இவன் தலையை கொய்ய வேண்டியதுதானே
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
@. @. ஜனாதிபதியாக இருந்தாலும் குற்றம் குற்றமே (*(: (*(: (*(: (*(:ஹம்னா wrote:முடியாது ஜாஸ்மின் இப்ப அவர் அமைச்சராகி விட்டார். {))jasmin wrote:இவனை கடத்தி இவன் தலையை கொய்ய வேண்டியதுதானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
ஏன் நண்பன் ரொம்ப குதிக்கிறீங்க நீங்கள்தானே அவர்களுக்கு புல்சப்போர்ட்.நண்பன் wrote:@. @. ஜனாதிபதியாக இருந்தாலும் குற்றம் குற்றமே (*(: (*(: (*(: (*(:ஹம்னா wrote:முடியாது ஜாஸ்மின் இப்ப அவர் அமைச்சராகி விட்டார். {))jasmin wrote:இவனை கடத்தி இவன் தலையை கொய்ய வேண்டியதுதானே
நல்லது செய்தாங்க நல்லது செய்தாங்கன்னு பின்ன என்ன. :oops:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» தந்தையை படுகொலை செய்த மகள்மாருக்கு ஆயுள் தண்டனை
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
» "சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» தந்தையை படுகொலை செய்த மகள்மாருக்கு ஆயுள் தண்டனை
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
» "சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|