Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
வெளிநாட்டு மச்சான்….!!!
+7
அப்புகுட்டி
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
இன்பத் அஹ்மத்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
முfதாக்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வெளிநாட்டு மச்சான்….!!!
போர் புரிந்த கலியாணம்
இப்போ வேர் பிரிந்து கிடக்கிறது
மாரின் மேட்டுக்குள்ள
மயக்கம் வந்து போகிறது
ஊர் சனம் நமைப்
பார்த்து உயர்வாக நினைத்திருக்க
உள்ளுக்குள் நம் பாடு
தலை இல்லா வெறுங் கூடு
பொறுத்திரடி கொஞ்ச நாள்
பூஜைக்கு நான் வாறேன்
கறுத்திருந்த நாட்கள் எல்லாம்
கருஞ்சிவப்பா தான் தாறேன்
மச்சானே உன்னால
மனமழுது வடிக்குதய்யா
கச்சாங் காற்றுக்கும்
இச்சை வரப் பார்க்குதய்யா
தலயணைக்குப் புருஷனாகி
இலக்கணம் நான் மறந்தேண்டி
பலகணையா வாழ்வு போச்சு
நிலவணைக்கும் நேரமாச்சு
பிள்ளை ஒன்று கத்துதிங்க
புரியாம கத்துதிங்க
என்னவென்று நான் சொல்ல
எப்படித்தான் நான் சொல்ல
எனது பிள்ளை பத்திரம்டி
எப்படியும் காத்திடன்டி
என் மண்டைக்குள்ள
எல்லாமே ம(ய்)யானமாய் ஆகுதடி
ஒரு வருடம் போனீங்க
பல வருடம் ஆயிடிச்சி
உங்கள் மகன் தான் வழர்ந்து
ஒண்ணாவதும் படிக்கின்றான்
ஒற்றையில நீ நின்று
ஒருத்தியாய்த் தவிக்கிறது
மெத்தை மடி என் கண்ணீரக்
குத்தகைக்கு எடுத்திருக்கு
கலங்காத காதல் மச்சான்
காலம் ஓடும் மெல்ல மச்சான்
அலங்காரப் பூவு இங்கு
அலங்கோலம் ஆயிடிச்சே
உணர்ச்சியைக் கொட்டாதே
உழறியே முட்டாதே
கண்ணுக்குள்ள தண்ணிவந்து
கரையேறப் பார்க்குதடி
காலையில் நீங்கள் வரக்
கனா ஒன்று கண்டேனே
என் சேலயில் முகம் துடைக்க
சிலையாகி நின்றேனே
கனவெனக்குப் புதிதில்ல
காரியமும் பழசில்ல
மனசெனக்கு அங்கேயே
உடம்பு மட்டும் இங்கேயே
நீங்கள் வைத்த மாமரமோ
நிழல் மரம் ஆயிடிச்சி
ஏங்க வைத்து எமை நீங்க
அங்கே தான் இருப்பதென்ன
பணம் பார்க்க வந்தேனே
நடைப் பிணமாய் ஆனேனே
கணம் எனக்கு ஒவ்வொன்றும்
பல யுகமாக ஆகுதடி
அணை கடந்த வெள்ளதை
அடக்கிவிட வா மச்சானே
துணை கிடந்து வெடிக்குதிங்க
தூண்டில் புழு துடிக்குதிங்க
பருத்தி விதை பறித்தவளே
பாக்கெடுத்துக் கொறித்தவளே
கருத்து வெறி நான் பிடித்து
மரத்துப்போய் இருகேனே
எங்கு மணி அடித்தாலும்
ஓடி வந்து நான் பார்ப்பேன்
நம்ம வீட்டில் மணி அடிக்கும்
நாழும் - வருவதெப்போ
கூட்டுக் கறி தான் உண்ண
குடும்பமாய்க் கண்டேனே
வீட்டுக் கறி விருந்தெல்லாம்
சேட்டுக்கடை போலாச்சி
மாட்டிறைச்சி பதமாக்கி
மாதமாய்க் கிடக்குதிங்க
ஆட்டிறைச்சிக் கறி கூட
ஆசப்பட்டு நாளாச்சே
பக்கத்தில் நீ இன்றிப்
படுக்கையும் வறண்டிடிச்சி
துக்கத்தில தொண்டையில
தண்ணீர் வற்றிப் போயிடிச்சி
தொலை பேசி இல்லண்ணா
நம்ம தொடர்பறுந்து போயிடுமோ
அலை பேசி தான் நமக்குள்
அப்பப்ப ஆறுதலா
விலை பேசி வச்சிருக்கன்
வீட்டுப் பொருள் எல்லாம்
விட்டிடடி வேணாம்
வேண்டாத பேச்சை எல்லாம்
வாப்பா வாப்பாண்ணு
உங்கள் பிள்ளை அழும் போது
கூப்பாடு போட்டுக்
குழறுதிங்க உள் மனசு
சோலக்குள் கருங்குயிலோ
சுரம் ஏறிக் கத்துதடி
காலைக்குள் அடைபட்டு
ஆண்மயிலும் அலறுதடி
ஏழ்மைக்கு வெளினாடு
எழிமைக்கு உள்நாடு
பாழ்மைக்கு என்வாழ்வும்
பலியாகிப் போனதய்யா
இன்னும் நான் என்ன சொல்ல
இருட்டுதடி கண்ணிரண்டும்
எண்ணும் நாள் தூரமில்லை
இனியும் நெஞ்சில் பாரமில்லை
ஏக்கம் குறஞ்சிடிச்சி
இறைவன் துணை வந்திடிச்சி
தேக்கும் கவலை எல்லாம்
தூரமாய் போட்டிடடி...!!!
இக்கவிதை,
வெளிநாடுகளில் வேலை செய்யும்
எமது சேனை நண்பர்களுக்கு அர்ப்பணம்...!!!
இப்போ வேர் பிரிந்து கிடக்கிறது
மாரின் மேட்டுக்குள்ள
மயக்கம் வந்து போகிறது
ஊர் சனம் நமைப்
பார்த்து உயர்வாக நினைத்திருக்க
உள்ளுக்குள் நம் பாடு
தலை இல்லா வெறுங் கூடு
பொறுத்திரடி கொஞ்ச நாள்
பூஜைக்கு நான் வாறேன்
கறுத்திருந்த நாட்கள் எல்லாம்
கருஞ்சிவப்பா தான் தாறேன்
மச்சானே உன்னால
மனமழுது வடிக்குதய்யா
கச்சாங் காற்றுக்கும்
இச்சை வரப் பார்க்குதய்யா
தலயணைக்குப் புருஷனாகி
இலக்கணம் நான் மறந்தேண்டி
பலகணையா வாழ்வு போச்சு
நிலவணைக்கும் நேரமாச்சு
பிள்ளை ஒன்று கத்துதிங்க
புரியாம கத்துதிங்க
என்னவென்று நான் சொல்ல
எப்படித்தான் நான் சொல்ல
எனது பிள்ளை பத்திரம்டி
எப்படியும் காத்திடன்டி
என் மண்டைக்குள்ள
எல்லாமே ம(ய்)யானமாய் ஆகுதடி
ஒரு வருடம் போனீங்க
பல வருடம் ஆயிடிச்சி
உங்கள் மகன் தான் வழர்ந்து
ஒண்ணாவதும் படிக்கின்றான்
ஒற்றையில நீ நின்று
ஒருத்தியாய்த் தவிக்கிறது
மெத்தை மடி என் கண்ணீரக்
குத்தகைக்கு எடுத்திருக்கு
கலங்காத காதல் மச்சான்
காலம் ஓடும் மெல்ல மச்சான்
அலங்காரப் பூவு இங்கு
அலங்கோலம் ஆயிடிச்சே
உணர்ச்சியைக் கொட்டாதே
உழறியே முட்டாதே
கண்ணுக்குள்ள தண்ணிவந்து
கரையேறப் பார்க்குதடி
காலையில் நீங்கள் வரக்
கனா ஒன்று கண்டேனே
என் சேலயில் முகம் துடைக்க
சிலையாகி நின்றேனே
கனவெனக்குப் புதிதில்ல
காரியமும் பழசில்ல
மனசெனக்கு அங்கேயே
உடம்பு மட்டும் இங்கேயே
நீங்கள் வைத்த மாமரமோ
நிழல் மரம் ஆயிடிச்சி
ஏங்க வைத்து எமை நீங்க
அங்கே தான் இருப்பதென்ன
பணம் பார்க்க வந்தேனே
நடைப் பிணமாய் ஆனேனே
கணம் எனக்கு ஒவ்வொன்றும்
பல யுகமாக ஆகுதடி
அணை கடந்த வெள்ளதை
அடக்கிவிட வா மச்சானே
துணை கிடந்து வெடிக்குதிங்க
தூண்டில் புழு துடிக்குதிங்க
பருத்தி விதை பறித்தவளே
பாக்கெடுத்துக் கொறித்தவளே
கருத்து வெறி நான் பிடித்து
மரத்துப்போய் இருகேனே
எங்கு மணி அடித்தாலும்
ஓடி வந்து நான் பார்ப்பேன்
நம்ம வீட்டில் மணி அடிக்கும்
நாழும் - வருவதெப்போ
கூட்டுக் கறி தான் உண்ண
குடும்பமாய்க் கண்டேனே
வீட்டுக் கறி விருந்தெல்லாம்
சேட்டுக்கடை போலாச்சி
மாட்டிறைச்சி பதமாக்கி
மாதமாய்க் கிடக்குதிங்க
ஆட்டிறைச்சிக் கறி கூட
ஆசப்பட்டு நாளாச்சே
பக்கத்தில் நீ இன்றிப்
படுக்கையும் வறண்டிடிச்சி
துக்கத்தில தொண்டையில
தண்ணீர் வற்றிப் போயிடிச்சி
தொலை பேசி இல்லண்ணா
நம்ம தொடர்பறுந்து போயிடுமோ
அலை பேசி தான் நமக்குள்
அப்பப்ப ஆறுதலா
விலை பேசி வச்சிருக்கன்
வீட்டுப் பொருள் எல்லாம்
விட்டிடடி வேணாம்
வேண்டாத பேச்சை எல்லாம்
வாப்பா வாப்பாண்ணு
உங்கள் பிள்ளை அழும் போது
கூப்பாடு போட்டுக்
குழறுதிங்க உள் மனசு
சோலக்குள் கருங்குயிலோ
சுரம் ஏறிக் கத்துதடி
காலைக்குள் அடைபட்டு
ஆண்மயிலும் அலறுதடி
ஏழ்மைக்கு வெளினாடு
எழிமைக்கு உள்நாடு
பாழ்மைக்கு என்வாழ்வும்
பலியாகிப் போனதய்யா
இன்னும் நான் என்ன சொல்ல
இருட்டுதடி கண்ணிரண்டும்
எண்ணும் நாள் தூரமில்லை
இனியும் நெஞ்சில் பாரமில்லை
ஏக்கம் குறஞ்சிடிச்சி
இறைவன் துணை வந்திடிச்சி
தேக்கும் கவலை எல்லாம்
தூரமாய் போட்டிடடி...!!!
இக்கவிதை,
வெளிநாடுகளில் வேலை செய்யும்
எமது சேனை நண்பர்களுக்கு அர்ப்பணம்...!!!
Last edited by mufftaaa mod on Thu 29 Dec 2011 - 21:16; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
கலைஞனின் கற்பனையை அணு அணுவாக ரசித்தேன் அதைபோல் ஒரு கணவன் மனைவியின் உறையாடல் எப்படி இருக்கும் அவர்களின் ஏக்கம் என்னவென்று அற்புதமாக சொன்ன விதம் அருமை தாகமும் தவிப்பும் உச்சத்தின் எல்லைக்கு கொண்டு சென்ற உங்களின் வரிகள் என் உள்மனதை ஒரு நொடி ஊமையாக்கியது நண்பா.
நாடு கடந்து தலையணையை துனையாக்கி கண்ணீர் சிந்தும் என்னைப் போன்ற உள்ளங்களின் நிதர்சன ஏக்கம் உங்களின் வரி குறுகிய காலத்தில் சேனையின் உள்ளங்களுக்கு உயிர் கொடுத்தது உங்களின் கவி.(சேனையில் உள்ள உறவுகள் அதிகம் மத்திய கிழக்கில் என்ற உண்மை தெரிந்தே அமைந்தது உம் கவி)எங்களின் கண்ணீர் துடைத்தது.
வார்தைகளை வசமாக்கி உணர்வுகளை உறமாக்கி வரிகளை முத்தாக்கி சேனையில் சிந்திவிட்ட நண்பனுக்கு நன்றி .
உங்களின் கவியில் எனக்கு இந்த வார்தை மட்டும் புரியவில்லை இதை எனக்கு சொல்லுங்கள் நண்பா?(சோலக்குள் கருங்குயிலோ சுரம் ஏறிக் கத்துதடி)
என்றும் நட்புடன் சம்ஸ்
நாடு கடந்து தலையணையை துனையாக்கி கண்ணீர் சிந்தும் என்னைப் போன்ற உள்ளங்களின் நிதர்சன ஏக்கம் உங்களின் வரி குறுகிய காலத்தில் சேனையின் உள்ளங்களுக்கு உயிர் கொடுத்தது உங்களின் கவி.(சேனையில் உள்ள உறவுகள் அதிகம் மத்திய கிழக்கில் என்ற உண்மை தெரிந்தே அமைந்தது உம் கவி)எங்களின் கண்ணீர் துடைத்தது.
வார்தைகளை வசமாக்கி உணர்வுகளை உறமாக்கி வரிகளை முத்தாக்கி சேனையில் சிந்திவிட்ட நண்பனுக்கு நன்றி .
உங்களின் கவியில் எனக்கு இந்த வார்தை மட்டும் புரியவில்லை இதை எனக்கு சொல்லுங்கள் நண்பா?(சோலக்குள் கருங்குயிலோ சுரம் ஏறிக் கத்துதடி)
என்றும் நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
வெளிநாட்டு மச்சான்….!!!
””சோலக்குள் கருங்குயிலோ சுரம் ஏறிக் கத்துதடி””
என்றால் ஆண்குயில் தனியாக இருந்து அலறிக் கூவுவதைக் கண்ணிருபீர் அது எதற்காக ...!!!
தனியே இருந்து தன் தாகத்தினைத் தணித்துக் கொள்ள துணை தேடி அழைப்பதைத் தான் இவ்வாறு சொல்லி இறுக்கிறேன்...
நாயகன் தனிமையில் கிடந்து துவழ்கின்ற நிலை இது...
”””சம்ஸ்”””
””சோலக்குள் கருங்குயிலோ சுரம் ஏறிக் கத்துதடி””
என்றால் ஆண்குயில் தனியாக இருந்து அலறிக் கூவுவதைக் கண்ணிருபீர் அது எதற்காக ...!!!
தனியே இருந்து தன் தாகத்தினைத் தணித்துக் கொள்ள துணை தேடி அழைப்பதைத் தான் இவ்வாறு சொல்லி இறுக்கிறேன்...
நாயகன் தனிமையில் கிடந்து துவழ்கின்ற நிலை இது...
”””சம்ஸ்”””
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
mufftaaa mod wrote:வெளிநாட்டு மச்சான்….!!!
””சோலக்குள் கருங்குயிலோ சுரம் ஏறிக் கத்துதடி””
என்றால் ஆண்குயில் தனியாக இருந்து அலறிக் கூவுவதைக் கண்ணிருபீர் அது எதற்காக ...!!!
தனியே இருந்து தன் தாகத்தினைத் தணித்துக் கொள்ள துணை தேடி அழைப்பதைத் தான் இவ்வாறு சொல்லி இநுக்கிறேன்...
நாயகன் தனிமையில் கிடந்து துவழ்கின்ற நிலை இது...
”””சம்ஸ்”””
நன்றி நண்பா அருமையான கவிக்கும் கருத்திற்கும் @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
mufftaaa mod கவிதை மூலமாக கலக்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் கவிதைகள் சூப்பர் mufftaaa mod :!@!: :!@!:
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
அருமையான கவி வரிகள் நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
கரு கிடைத்ததும் சும்மா புகுந்து விளையாடி விட்டீர்கள் நண்பா மிகவும் மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது பிரிந்த காதல் ஜோடிகள் ஒன்று மெலோடி டூயட் பாடுவதைப் போன்றுள்ளது அவ்வளவு பிரமாதமாக உள்ளது.
இனிமையாக வரிகளைக் கொண்டு வந்து இடையில் ஒரு வரி என்னை வெறுக்கச் செய்து விட்டது
இந்த வரியை மறைத்துப் படித்துப்பார்க்கையில்
இந்தக்கவிதைக்கு ஆஸ்கார் அவாடு தரலாம் அவ்வளவு அருமை
மிகவும் பெருமையாக உள்ளது எனக்கு. நீங்கள் சேனைக்கு வந்த விதம் என்னை இன்னும் மகிழ்விக்கிறது.
இதே அன்போடு உற்சாகத்தோடு பயணிப்போம்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள
நண்பன்.
#heart
இனிமையாக வரிகளைக் கொண்டு வந்து இடையில் ஒரு வரி என்னை வெறுக்கச் செய்து விட்டது
பக்கத்து வீட்டானும் மொக்கை
போடப் பார்கின்றான்
இந்த வரியை மறைத்துப் படித்துப்பார்க்கையில்
இந்தக்கவிதைக்கு ஆஸ்கார் அவாடு தரலாம் அவ்வளவு அருமை
மிகவும் பெருமையாக உள்ளது எனக்கு. நீங்கள் சேனைக்கு வந்த விதம் என்னை இன்னும் மகிழ்விக்கிறது.
இதே அன்போடு உற்சாகத்தோடு பயணிப்போம்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள
நண்பன்.
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
பக்கத்து வீட்டானும் மொக்கை
போடப் பார்கின்றான்
இந்தவரி இட்டதன் காரணம் எம்மவர்களில் பல நாய்கள் உண்டு என்பதனைப் படம் பிடித்துக் காட்டவே
ஆண்கள் இல்லை என்றால் பெண்ளினை வேசிகளாய் நோக்கும் கயவர்கள் உள்ளார்கள் என்பதற்காகவே இது சேற்க்கப்பட்டது
உண்மையில் வேறு எந்த நோக்கமும் இல்லை
நண்பா,,,
போடப் பார்கின்றான்
இந்தவரி இட்டதன் காரணம் எம்மவர்களில் பல நாய்கள் உண்டு என்பதனைப் படம் பிடித்துக் காட்டவே
ஆண்கள் இல்லை என்றால் பெண்ளினை வேசிகளாய் நோக்கும் கயவர்கள் உள்ளார்கள் என்பதற்காகவே இது சேற்க்கப்பட்டது
உண்மையில் வேறு எந்த நோக்கமும் இல்லை
நண்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
எது எப்படியோ அந்த அழகிய வரிகளில் இது கரும் புள்ளியாகவே உள்ளது நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி உறவே :+=+: :+=+:mufftaaa mod wrote:பக்கத்து வீட்டானும் மொக்கை
போடப் பார்கின்றான்
இந்தவரி இட்டதன் காரணம் எம்மவர்களில் பல நாய்கள் உண்டு என்பதனைப் படம் பிடித்துக் காட்டவே
ஆண்கள் இல்லை என்றால் பெண்ளினை வேசிகளாய் நோக்கும் கயவர்கள் உள்ளார்கள் என்பதற்காகவே இது சேற்க்கப்பட்டது
உண்மையில் வேறு எந்த நோக்கமும் இல்லை
நண்பா,,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
மீண்டும் ஒரு முறை இந்த கவிதை வரிகளைப் படித்தேன் தேனாய் வந்து மனதில் பாய்கிறது அவ்வளவு அருமையாக உள்ளது தோழா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மாறா அன்புடன்
நண்பன்.
#heart
மாறா அன்புடன்
நண்பன்.
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
””பக்கத்து வீட்டானும் மொக்கை போடப் பார்கின்றான்””
எனபதற்குப் பதிலாக,
பக்கத்தில் நீர் இல்லாமப்-படுக்கையும் வறண்டிடிச்சி
துக்கத்தில் தொண்டையில - தண்ணீர் வற்றிப் போயிடிச்சி
எனப் போட்டிருக்கலாமோ...??? :
எனபதற்குப் பதிலாக,
பக்கத்தில் நீர் இல்லாமப்-படுக்கையும் வறண்டிடிச்சி
துக்கத்தில் தொண்டையில - தண்ணீர் வற்றிப் போயிடிச்சி
எனப் போட்டிருக்கலாமோ...??? :
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
mufftaaa mod wrote:””பக்கத்து வீட்டானும் மொக்கை போடப் பார்கின்றான்””
எனபதற்குப் பதிலாக,
பக்கத்தில் நீர் இல்லாமப்-படுக்கையும் வறண்டிடிச்சி
துக்கத்தில் தொண்டையில - தண்ணீர் வற்றிப் போயிடிச்சி
எனப் போட்டிருக்கலாமோ...??? :
சூப்பர் நண்பா @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
ம்ம் மனதால் சிரிக்கிறேன் அன்பு உறவே என்ன சொல்வதென்றே தெரிய வல்லை வாழ்த்துவதற்கும் வரிகளில்லை அவ்வளவு அருமையாக உள்ளது வரிகள் :+=+: :+=+: :+=+:mufftaaa mod wrote:””பக்கத்து வீட்டானும் மொக்கை போடப் பார்கின்றான்””
எனபதற்குப் பதிலாக,
பக்கத்தில் நீர் இல்லாமப்-படுக்கையும் வறண்டிடிச்சி
துக்கத்தில் தொண்டையில - தண்ணீர் வற்றிப் போயிடிச்சி
எனப் போட்டிருக்கலாமோ...??? :
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
வரிக்குவரி அருமையான எண்ண அலைகளை ஓடையாக்கிய விதம் கவிதைக்கு அழகு சில விடயங்கள் வெளிப்படை உண்மைதான் அவற்றை மறைத்தலும் தகும் உங்கள் பின் கருத்தில் வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள் சமுகத்தில் சரியும் உண்டு பிழையும் உண்டு பொதுவாகவே வெளிநாட்டு வாழ்க்கை வெறுக்கத்தக்கதொரு நிலை யாரிடம் கேட்டாலும் நிர்பந்தமாகியிருக்கிறது என்பதைத்தான் சொல்வார்கள் பாராட்டுகள் வார்த்ததைகளில்லை வாழ்த்துச் சொல்ல அத்தனை மெருகேறிய கவிதை நானும் லயித்தேன் கவிதையில் நன்றி
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
நண்பன் wrote:கரு கிடைத்ததும் சும்மா புகுந்து விளையாடி விட்டீர்கள் நண்பா மிகவும் மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது பிரிந்த காதல் ஜோடிகள் ஒன்று மெலோடி டூயட் பாடுவதைப் போன்றுள்ளது அவ்வளவு பிரமாதமாக உள்ளது.
இனிமையாக வரிகளைக் கொண்டு வந்து இடையில் ஒரு வரி என்னை வெறுக்கச் செய்து விட்டதுபக்கத்து வீட்டானும் மொக்கை
போடப் பார்கின்றான்
இந்த வரியை மறைத்துப் படித்துப்பார்க்கையில்
இந்தக்கவிதைக்கு ஆஸ்கார் அவாடு தரலாம் அவ்வளவு அருமை
மிகவும் பெருமையாக உள்ளது எனக்கு. நீங்கள் சேனைக்கு வந்த விதம் என்னை இன்னும் மகிழ்விக்கிறது.
இதே அன்போடு உற்சாகத்தோடு பயணிப்போம்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள
நண்பன்.
எங்களுக்கு பொருத்தமான கவிதை
தொடர்ந்து எழுதுங்கள் முஹம்மட்
வாழ்த்துக்கள்.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்
சிறந்த கவிதை
:!@!:
வணங்குகிறேன்
சிறந்த கவிதை
:!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
மீனுக் குஞ்சுக்கென் மிதமான
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
மீனும் மீண்டும் ஒரு முறை சொல்.............மீனு wrote:வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்
சிறந்த கவிதை
:!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
:flower: :flower:முfதாக் wrote:மீனுக் குஞ்சுக்கென் மிதமான
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
(*(: (*(:*சம்ஸ் wrote:மீனும் மீண்டும் ஒரு முறை சொல்.............மீனு wrote:வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்
சிறந்த கவிதை
:!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
ஏன் மீனு என்னாச்சி :”: :”:மீனு wrote:(*(: (*(:*சம்ஸ் wrote:மீனும் மீண்டும் ஒரு முறை சொல்.............மீனு wrote:வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்
சிறந்த கவிதை
:!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
அப்புகுட்டி எங்கே போயிட்டார் அழைத்து வாருங்கள்.அப்புகுட்டி wrote:நண்பன் wrote:கரு கிடைத்ததும் சும்மா புகுந்து விளையாடி விட்டீர்கள் நண்பா மிகவும் மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது பிரிந்த காதல் ஜோடிகள் ஒன்று மெலோடி டூயட் பாடுவதைப் போன்றுள்ளது அவ்வளவு பிரமாதமாக உள்ளது.
இனிமையாக வரிகளைக் கொண்டு வந்து இடையில் ஒரு வரி என்னை வெறுக்கச் செய்து விட்டதுபக்கத்து வீட்டானும் மொக்கை
போடப் பார்கின்றான்
இந்த வரியை மறைத்துப் படித்துப்பார்க்கையில்
இந்தக்கவிதைக்கு ஆஸ்கார் அவாடு தரலாம் அவ்வளவு அருமை
மிகவும் பெருமையாக உள்ளது எனக்கு. நீங்கள் சேனைக்கு வந்த விதம் என்னை இன்னும் மகிழ்விக்கிறது.
இதே அன்போடு உற்சாகத்தோடு பயணிப்போம்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள
நண்பன்.
எங்களுக்கு பொருத்தமான கவிதை
தொடர்ந்து எழுதுங்கள் முஹம்மட்
வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
அருமையாகவுள்ளது கவியுள்ளமே நன்றி வாழ்த்துக்கள் ...muftha
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வெளிநாட்டு மச்சான்….!!!
அருமையான கவிதை வரிகளில் ஏக்கம் பெருமூச்சு விடுகிறது :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கப்பலுக்கு போன மச்சான்
» கப்பலுக்கு போன மச்சான்-பாடல்
» கவிதை : எப்ப மச்சான் வருவீக..?
» மச்சான் வரும் நேரமாச்சு...???
» சின்ன மச்சான் ஹீரோவாயிட்டாரு!
» கப்பலுக்கு போன மச்சான்-பாடல்
» கவிதை : எப்ப மச்சான் வருவீக..?
» மச்சான் வரும் நேரமாச்சு...???
» சின்ன மச்சான் ஹீரோவாயிட்டாரு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|