சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு... Khan11

என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு...

Go down

என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு... Empty என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு...

Post by முfதாக் Fri 17 Feb 2012 - 7:16


என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்:
மும்பையில் சீமான் பேச்சு









என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு... Images

மும்பை
மாநகராட்சிக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும்
தாராவி, சயான் கோல்லிவாடா ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும்
தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து 13ஆம் தேதி மாலை சீமான் பரப்புரை செய்தார்.

தாராவியில்
90 அடிச் சாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
காங்கிரஸூக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய
அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இலங்கையில் ராஜபக்ச அரசு தமிழர்களை
அழித்தொழிக்க நடத்திய இனப் படுகொலைப் போருக்கு மத்திய காங்கிரஸ் அரசு
ஆயுதம் கொடுத்தும், ஆலோசனை வழங்கியும், ராடார் அளித்தும், நிதியுதவி,
சிங்கள படையினருக்குப் பயிற்சி என்று எல்லா வகையிலும் உதவியதை
எடுத்துரைத்த சீமான், “என் இனத்தை வேரோடு அழிக்கத் துணைபோன காங்கிரஸ்
கட்சியை என்னுயிர் தமிழ்ச் சொந்தங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும்
அழித்தொழிக்க வேண்டும்” என்று கூறினார்.

“உண்மையான ஒவ்வொரு
தமிழனும் இலங்கையில் தன் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக
வாக்களித்து பழி தீர்க்க வேண்டும். இதற்கு மேலும் காங்கிரஸ் கட்சிக்கு
எந்தத் தமிழனாவது வாக்களித்தால் அவனது பிறப்பை சந்தேகிக்க வேண்டும்”
என்றும் கூறினார்.

தாராவியில் உள்ள 178 வார்டில், பாரதிய ஜனதா,
சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக
போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான்
கேட்டுக்கொண்டார். இதே பகுதியில் மற்றொரு வார்டில் போட்டியிடும் அதிமுக
வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
178வது வார்டில் போட்டியிட்டிருக்க வேண்டியவர் அப்பகுதி தமிழர்களிடையே
செல்வாக்குப் பெற்ற முத்துராமலிங்கம் என்பவரே. ஆனால் அந்த வார்ட் இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என்று ஒதுக்கப்பட்டுவிட்டதால்,
மராட்டியத்தில் தமிழர்கள் பொது பிரிவினர் என்று உள்ளதால், முத்துராமலிங்கம்
போட்டியிடும் வாய்ப்பை பெறவில்லை. எனவே, அவருடைய ஆதரவு பெற்ற உமேஷ் மகாலே
போட்டியிடுகிறார்.

தாராவி பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்த
பிறகு, சயான் கொல்லிவாடா பகுதியில் உள்ள 168வது வார்டில் பா.ஜ.க. கட்சி
சார்பில் போட்டியிடும் தமிழரான கேப்டன் இரா.தமிழ்ச் செல்வனை ஆதரித்து
சீமான் பரப்புரை செய்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, போரை
நிறுத்துமாறு பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில்
ஈடுபட்டவர் தமிழ்ச் செல்வன் ஆவார்.

இங்கும் சீமான் பேச்சை கேட்க
தமிழர்களும், மராட்டியர்களும் பெருமளவிற்குத் திரண்டிருந்தனர். காங்கிரஸ்
கட்சியின் சின்னமான கை சின்னத்தை பார்க்கும்போதெல்லாம் அது தமிழர்களைக்
கொன்ற இரத்தம் படிந்த கை என்பதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று
சீமான் கூறினார்.

“தமிழினப் பகைவனான இராஜபக்சாவுடன்
சேர்ந்துக்கொண்டு ஒன்றேமுக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ்
அரசை மத்தியில் இருந்து மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரம், கேளரம்,
மராட்டியம், குஜராத் என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும்
இடத்தில் எல்லாம் சென்று பரப்புரை செய்து தோற்கடிக்க முயற்சிப்பேன். இது
சத்தியம்” என்று சீமான் முழங்கியபோது மக்களிடமிருந்த பலத்த கரவோலி
எழும்பியது.

தமிழக மீனவர்கள் 550க்கும் மேற்பட்டோர் சிங்கள
கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருமுறை கூட கண்டிக்காத காங்கிரஸ்
அரசு, எதற்காக தமிழினத்திற்குத் தேவை என்பதை ஒவ்வொரு தமிழனும்
சிந்தித்துப்பார்க்க வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டார். உலகின்
எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழர்கள் ஒரு மனதுடனேயே சிந்திக்க வேண்டும்
என்றும் அதுவே தமிழினத்தின் மீட்சிக்கு அவசியமானது என்றும் சீமான்
கூறினார்.

“எந்த சின்னத்திற்காக சீமான் வாக்குக் கேட்கிறான்
என்பதல்ல, எந்த எண்ணத்தின் அடிப்படையில் கேட்கிறான் என்பதே முக்கியம். என்
இனத்தை அழித்தவனை அழிக்க மராட்டிய மண்ணில் வாழும் என் சொந்தங்களின்
வாக்குப் பலத்தை சரியான திசையில் பயன்படுத்தியே காங்கிரஸ் கட்சியை வீழ்த்த
இந்த பரப்புரையை செய்கிறேன்” என்று சீமான் கூறினார்.

சீமானுடன்
நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ஊடகவியலாளருமான
கா.அய்யநாதனும் இவ்விரு இடங்களிலும் பரப்புரை செய்தார். நாம் தமிழர்
கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசனும், கலை பண்பாட்டுப்
பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பால முரளி வர்மனும் இக்கூட்டங்களில்
கலந்துகொண்டனர்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி பரபரப்பு புகார்! - சீமான் மறுப்பு
» தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
» 2ஜி..ப.சிதம்பரம் விவகாரம்: காங்கிரஸை திருப்பி அடிக்கும் திமுக!
» காங்கிரஸை ஆட்டிப் படைக்கும் வகையில் தனித்தெலுங்கானா கோரிக்கை தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum