Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
கழிவு பொருட்களை கொண்டு 'விழிப்புணர்வு பூங்கா': எக்ஸ்னோரா-மாணவர்கள் சாதனை
Page 1 of 1
கழிவு பொருட்களை கொண்டு 'விழிப்புணர்வு பூங்கா': எக்ஸ்னோரா-மாணவர்கள் சாதனை
சென்னை, மார்ச் 25-
புவி வெப்பமயமாதல், மாசு போன்ற பிரச்சினையில் இருந்து சமுதாயத்தை காப்பாற்ற கழிவு பொருட்களை கொண்டு சென்னையில் மாதிரி பூங்காவை எக்ஸ்னோரா அமைப்புடன் சேர்ந்து மாணவர்கள் அமைத்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எதிரே 'அரிஹன்ட் மெஜஸ்டிக் டவர்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பூங்காவில், எஸ்னோரா அமைப்பும், சக்தி என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து, 'நந்தவனசேவை' என்ற பெயரில் உபயோகமற்ற பொருட்களை கொண்டு தோட்டம் அமைத்துள்ளனர்.
உடைந்த மண் பானையில் கத்திரிக்காய் செடியும், பழைய கார் டயரை பாதியாக அறுத்து அதில் சிறு கீரை செடியும், பழைய 'ஷூ'-வில் ஓமம் செடியும், உடைந்துபோன கார் பேட்டரியில் புதினா செடியும், பிளாஸ்டிக் டிரேக்களில் தண்டுக்கீரை, கற்றாழை, பப்பாளி கன்று, மணத்தக்காளி போன்ற செடிகளையும் வைத்து பூங்காவை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதுதவிர உடைந்த டி.வி.டி பிளேயர், பிளாஸ்டிக் கூடை, மிக்சி, மிக்சி ஜார், பொம்மை, டி.வி. பெட்டி, மீன் தொட்டி, டெலிபோன், வாஷ்பேசின் என்று உபயோகமற்ற பொருட்களில் செடிகளை மாணவர்கள் வளர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் எம்.பி. நிர்மல் கூறியதாவது:-
விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனையாகவும், விவசாயிகள் எல்லாம் ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் மாறி வருகின்றனர். இதனால் விவசாயம் ஒட்டு மொத்தமாக அழிந்து வருகிறது. எனவே உணவு பொருட்களுக்கு கையேந்தி நிற்கப்போகும் நிலை வந்து கொண்டிருக்கிறது. நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட 2020-ம் ஆண்டு அரிசியை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த பிரச்சினைகளை போக்க, எல்லாரும் வீட்டு மொட்டை மாடியில், காலி இடங்களில் செடி, கொடிகளை வைத்து தோட்டம் அமைக்கவேண்டும். அதுவும், தேவையில்லை என்று குப்பையில் வீசும் பொருட்களை கொண்டு செடிகளை வளர்க்கலாம் என்பதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன்மூலம் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை இந்த தோட்டத்தில் இருந்து பெற முடியும்.
மேலும் மாசு அடைவது, புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒவ்வொருவரும் தங்களது பிறந்தநாளுக்கு 'கேக்' வெட்டுவதுடன் ஒரு செடியை நடவேண்டும் என்று உறுதி ஏற்கவேண்டும். இதனால் மாசு அடைந்து வரும் சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.
குப்பையில் வீசிய பொருட்களை கொண்டு பூங்கா அமைப்பதால், செலவு எதுவும் ஏற்படாது. பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் சென்னை மாநகரத்தின் குப்பையின் அளவும் குறையும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பூங்காவை உருவாக்கியுள்ளோம்.
சமுதாய நலன் கருதி, இதுபோன்ற பூங்காக்களை பொது மக்கள் வீடுகளில் உருவாக்கவேண்டும்.
இவ்வாறு நிர்மல் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஒரு லிட்டர் எரிபொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை
» காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை
» சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
» மழை கழிவு நீரால் சென்னையில் எலி காய்ச்சல்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
» காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை
» சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
» மழை கழிவு நீரால் சென்னையில் எலி காய்ச்சல்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|