Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
கவிதை- அலகுகளால் செதுக்கிய கூடு...!
4 posters
Page 1 of 1
கவிதை- அலகுகளால் செதுக்கிய கூடு...!
அலகுகளால் செதுக்கிய கூடு...!
ரோஷான் ஏ.ஜிப்ரி
நீங்கள் நினைக்கலாம்
வெறும் ஈர்க்குகளும்,சுள்ளிகளும் என்று
ஆனால் பிரித்தெறிந்தது
ஒரு வாழ்க்கைக்கு போதுமான
ஒட்டுமொத்த என் உழைப்பு
உங்களுக்கு தெரிந்த வகையில்
குறுகிய வட்டத்திற்குள் வசித்தாலும்
எனது விருட்சம் மிக விசாலமானது
வேர்களும்,இலைகளும்,கிளைகளும்,
பூக்களும்,காய்களும்,கனிகளும்
பிரபஞ்ச ஜீவிதமும் ஆனதது
வானம் முழுக்க எனக்கு வசப்பட்ட
எனது சுதந்திரத்தை
அறிந்துணர கூட உங்களிடம்
அனுபவமோ,ஆளுமையோ இல்லை
அது எனக்கே உரித்தான இசம்
கனவுளை சிதைப்பதென்பது
உங்களுக்கு சாதாரணம்
எனக்கது சதா ரணம்
சுருக்கமாய் சொல்வதென்றால்
நீங்கள் சந்தர்ப்ப வாதிகள்
சந்தேக சாதிகள்
அடுத்தவரை அழவைத்தே பழகிய
பரம்பரையில் வழித்தோன்றல்களாகவே
இன்னமும் வாழ்கிறீர்கள்
தேன் கூடுகளை கலைப்பதில்
நீங்கள் எடுக்கும் கவனம்
அதன் ஆக்கத்திற்கான
சிரமத்தை ஆராய ஒருபோதும்
சிரத்தை எடுத்ததில்லை
முரட்டு கோடாரிகள் கொண்டு
நீங்கள் வீழ்த்தியது
வெறும் மரமொ,கூடோ அல்ல...,
இசை கவிழ்ந்து நிழல் விரியும்
ஒரு தோப்பை
புள்ளினங்கள் இனம்பெருக்கும்
பெரும் வீட்டை
அவைகளின் வம்சத்தின் வரலாற்றை
காலத்தை திரும்பிப் பார்த்து
கை சேதங்களை கணக்கிடும்போது
நிராயுத பாணிகளாய் நிற்பீர்கள்
எதுவுமற்று எதிலியாய்
குற்றவாளி கூண்டில்!
அப்போது நான் அலகுகளால்
தயார் செய்து கொண்டிருப்பேன்
இன்னொரு கூட்டை வேறொரு கிளையில்.
ரோஷான் ஏ.ஜிப்ரி
நீங்கள் நினைக்கலாம்
வெறும் ஈர்க்குகளும்,சுள்ளிகளும் என்று
ஆனால் பிரித்தெறிந்தது
ஒரு வாழ்க்கைக்கு போதுமான
ஒட்டுமொத்த என் உழைப்பு
உங்களுக்கு தெரிந்த வகையில்
குறுகிய வட்டத்திற்குள் வசித்தாலும்
எனது விருட்சம் மிக விசாலமானது
வேர்களும்,இலைகளும்,கிளைகளும்,
பூக்களும்,காய்களும்,கனிகளும்
பிரபஞ்ச ஜீவிதமும் ஆனதது
வானம் முழுக்க எனக்கு வசப்பட்ட
எனது சுதந்திரத்தை
அறிந்துணர கூட உங்களிடம்
அனுபவமோ,ஆளுமையோ இல்லை
அது எனக்கே உரித்தான இசம்
கனவுளை சிதைப்பதென்பது
உங்களுக்கு சாதாரணம்
எனக்கது சதா ரணம்
சுருக்கமாய் சொல்வதென்றால்
நீங்கள் சந்தர்ப்ப வாதிகள்
சந்தேக சாதிகள்
அடுத்தவரை அழவைத்தே பழகிய
பரம்பரையில் வழித்தோன்றல்களாகவே
இன்னமும் வாழ்கிறீர்கள்
தேன் கூடுகளை கலைப்பதில்
நீங்கள் எடுக்கும் கவனம்
அதன் ஆக்கத்திற்கான
சிரமத்தை ஆராய ஒருபோதும்
சிரத்தை எடுத்ததில்லை
முரட்டு கோடாரிகள் கொண்டு
நீங்கள் வீழ்த்தியது
வெறும் மரமொ,கூடோ அல்ல...,
இசை கவிழ்ந்து நிழல் விரியும்
ஒரு தோப்பை
புள்ளினங்கள் இனம்பெருக்கும்
பெரும் வீட்டை
அவைகளின் வம்சத்தின் வரலாற்றை
காலத்தை திரும்பிப் பார்த்து
கை சேதங்களை கணக்கிடும்போது
நிராயுத பாணிகளாய் நிற்பீர்கள்
எதுவுமற்று எதிலியாய்
குற்றவாளி கூண்டில்!
அப்போது நான் அலகுகளால்
தயார் செய்து கொண்டிருப்பேன்
இன்னொரு கூட்டை வேறொரு கிளையில்.
Re: கவிதை- அலகுகளால் செதுக்கிய கூடு...!
அடடா அருமை சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை- அலகுகளால் செதுக்கிய கூடு...!
சிறப்பான வரிகள் கொண்டு அருமையான எழுதியுள்ளீர்கள் தோழரே வாழ்த்துக்கள் உங்களின் கவி பயணம் இமையம் தொட வாழ்த்துகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|