சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Khan11

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

+5
jaleelge
SAFNEE AHAMED
ahmad78
ராகவா
முனாஸ் சுலைமான்
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 9 Jun 2014 - 20:41

First topic message reminder :

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

★கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள் பற்றிய ஆய்வுகளைப் பல வருடங்களாக மேற்க்கொண்ட முயற்சியின் பெறுபேறு இவைகள்.

நான் ஓர் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வரலாற்று ஆய்வாளர் அல்ல ; என்பதை தங்களின் மேன்மையான கவனத்துக்கும்- சிந்தனைக்கும் எத்திவைக்கிறேன் உறவுகளே !!!

♥கிழக்கிலங்கையின்  இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

●தேடல் - 01    (2014.06.09 ; மாலை-8.13)

அறிமுகம்:

பழங்குடி மக்கள்....
நதிக்கரை ஓரங்களிலும், காடுகளிலும் அலைந்து திரிந்து வேட்டையாடித் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்கு நிலையான இருப்பிட வசதிகளை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

காலம் செல்லச் செல்ல நாகரீக வளர்ச்சியும், தேவைகளும், ஒழுங்குகளும் ஏற்பட்ட நிலையில் நிலையாக அவர்கள் ஓரிடத்தில் இருந்து தொழிற்பட வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று.

(திரி   இன்னும்   நீழும்......)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down


கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:46

jaleelge wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஊர்களின் பெயர்கள்  உருவான் விதம்  மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களோடு  மிக சிறப்பாக  கட்டுரை தொடர்கின்றது!

தகுந்த ஆதரங்களோடு ஒவ்வொரு விடயங்களையும் சேமித்து அதை தட்டச்சிட்டு ஆவணப்படுத்துவது எத்தனை சிரமமானது  என்பதினை நான் அறிவேன்!

மனமார  பாராட்டுவதுடன் நன்றியும் செலுத்துகின்றேன் சார்!  தொடர்ந்து செல்லுங்கள்!
இதையே நானும் ரிப்பீட் செய்கிறேன் தொடருங்கள் சார்

அனுராகவன் தம்பி...

இந்தப் பதிவினைப் பார்ப்பதில்லையோ ?????

அவர் இப்பக்கத்துக்கு ஒரு தடவையாவது வந்ததே இல்லை...

அவருக்கு....

இந்த விடயம் விருப்பமில்லையோ தெரியாது....

இந்தப் பதிவை நான் விரு்ம்பக்காரணம் இணையத்தில் இலங்கை பற்றியும் கிழக்கு பற்றியும் அறிந்து கொள்ள விரும்பிய உறவுகள் தேடும் போது சேனைதான் முன் வந்து நிற்கும் அப்போது உங்கள் பெயர்தான் இன்னும் முன்னுக்கு நிற்கும் அந்த ஒரு சந்தோசம் என்னுள் உள்ளது நீங்கள் தொடருங்கள் படிப்பவர்கள் கருத்திடுவார்கள்
நாங்கள் தொடர்கிறோம் அடுத்தடுத்த கட்டங்களைப் படிக்க ஆர்வமாக உள்ளோம்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 23 Jun 2014 - 21:17

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஊர்களின் பெயர்கள்  உருவான் விதம்  மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களோடு  மிக சிறப்பாக  கட்டுரை தொடர்கின்றது!

தகுந்த ஆதரங்களோடு ஒவ்வொரு விடயங்களையும் சேமித்து அதை தட்டச்சிட்டு ஆவணப்படுத்துவது எத்தனை சிரமமானது  என்பதினை நான் அறிவேன்!

மனமார  பாராட்டுவதுடன் நன்றியும் செலுத்துகின்றேன் சார்!  தொடர்ந்து செல்லுங்கள்!
இதையே நானும் ரிப்பீட் செய்கிறேன் தொடருங்கள் சார்

அனுராகவன் தம்பி...

இந்தப் பதிவினைப் பார்ப்பதில்லையோ ?????

அவர் இப்பக்கத்துக்கு ஒரு தடவையாவது வந்ததே இல்லை...

அவருக்கு....

இந்த விடயம் விருப்பமில்லையோ தெரியாது....

இந்தப் பதிவை நான் விரு்ம்பக்காரணம் இணையத்தில் இலங்கை பற்றியும் கிழக்கு பற்றியும் அறிந்து கொள்ள விரும்பிய உறவுகள் தேடும் போது சேனைதான் முன் வந்து நிற்கும் அப்போது உங்கள் பெயர்தான் இன்னும் முன்னுக்கு நிற்கும் அந்த ஒரு சந்தோசம் என்னுள் உள்ளது நீங்கள் தொடருங்கள் படிப்பவர்கள் கருத்திடுவார்கள்
நாங்கள் தொடர்கிறோம் அடுத்தடுத்த கட்டங்களைப் படிக்க ஆர்வமாக உள்ளோம்...

நன்றி சார்...

உங்கள் ஆற்றுப்படுத்தலும்...

தட்டிக் கொடுப்புக்கும்...

என்றும் மறவேன் சார்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 21:22

மிக்க மகிழ்ச்சி சார் மிகுதியை நாளை படிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 23 Jun 2014 - 21:42

நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி சார் மிகுதியை நாளை படிக்கிறேன்

அப்போ ...

அவசரத்தில் படிக்காமல்தானா...

பின்னூட்டம் போட்டது...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Tue 24 Jun 2014 - 18:54

நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி சார் மிகுதியை நாளை படிக்கிறேன்

எங்கே திரியில் யாரையும் காணோம்...

அரட்டைக்கு ஒதுக்கவில்லையோ போலும்... _*  _*  _*  _* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 18:56

jaleelge wrote:
நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி சார் மிகுதியை நாளை படிக்கிறேன்

அப்போ ...

அவசரத்தில் படிக்காமல்தானா...

பின்னூட்டம் போட்டது...
படித்து விட்டுத்தான் பின்னூட்டமிட்டேன் இன்னும் இரண்டு படிக்க வேண்டி உள்ளது அதையும் படித்து விட்டு தொடர்கிறேன் என்று சொன்னேன் புரிதலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Tue 24 Jun 2014 - 19:31

15. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

தேடல் - 15
(2014.06.24; மாலை -6.21)


இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........



”பாலப்போட்டாறு” (திரு):


திருகோணமலையிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் “களுமுட்டியான்” குளத்தில் இருந்து ஊற்றெடுத்து பாய்ந்து திருகோணாமலைத் துறைமுகத்தில் கப்பல்துறை என்ற இடத்தில் கட்லோடு சங்கமமாகிறது.

இந்த ஆற்றுக்கு மேலாக ஒரு பாலம் போடப்பட்டது. அதனால் “பாலம்போட்டாறு” எனப்படுகிறது.

(ஆதார உசார்துணை நூலாக : திருவாளர் இ. வடிவேல் அவட்கள் 1997ம் ஆண்டு எழுதிய திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள் (இரண்டாம் பதிப்பு) எனும் நூலின் 110ம் பக்கத்தில் காணப்படுகிறது.)


கோட்டைக்கல்லாறு (மட்டு):


இது போர்த்துக் கீசரினால் கட்டப்பட்ட கோட்டை அதனருகில் கல்நிறைந்த பெரிய ஆறும் ஓடுகிறது. அதனால் “கோட்டைக்கல்லாறு” என்று அழைக்கப்படுகிறது.

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி க.த. செல்வராசா கோபால் (ஈழத்துப்பூராடனார்) அவர்கள் 2005ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் எனும் நூலின்  148 ம் பக்கத்தில் காணப்படுகிறது.)


கல்லாறு  (மட்டு):

கல் நிறைந்த ஆறு போன்று காணப்படுவதனால் “கல்லாறு” எனப்பட்டது.

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி க.த. செல்வராசா கோபால் (ஈழத்துப்பூராடனார்) அவர்கள் 2005ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் எனும் நூலின் 148 ம் பக்கத்தில் காணப்படுகிறது.)


கரடியனாறு (மட்டு):

    காட்டுப் பகுதியாக இருந்தமைகளும்...

அங்குள்ள ஆற்றில் கரடிகள் நீரருந்த  அதிகமாக  வருகை தருவதனாலும் “கரடியனாறு ” எனப்படுகிறது.

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி க.த. செல்வராசா கோபால் (ஈழத்துப்பூராடனார்) அவர்கள் 2005ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் எனும் நூலின் 148 ம் பக்கத்தில் காணப்படுகிறது.)


மூங்கிலாறு  (மட்டு):

இங்குள்ள ஆற்றில் அதிகமாக இரு மருங்குகளிலும் மூங்கில் மரங்கள் வளர்ந்திருந்ததனாலும் “மூங்கிலாறு” என்று அழைக்கப்பட்டது.

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி க.த. செல்வராசா கோபால் (ஈழத்துப்பூராடனார்) அவர்கள் 2005ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் எனும் நூலின் 148 ம் பக்கத்தில் காணப்படுகிறது.)


கஞ்சிக்குடிச்சாறு (அம்):

இது குடியிருப்புக் கிராமங்களினை விட தூரத்தில் உள்ள பிரதேசம்.

இங்கு செல்பவர்கள் “கஞ்சி” எனும் ஒருவகை உணவைத் தயாறித்து குடித்து விட்டு; அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்ததாகவும் , காடுகளில் விறகு வெட்டிக் கொண்டு  வந்தனர் என்றும்...

இதனால் ”கஞ்சிக்குடிச்சாறு” எனப்பட்டது.மேலும் இங்குள்ள ஆற்றுத் தண்ணீர் “கஞ்சி மாதிரி” உள்ளதாலும் அதனை குடிப்பதற்க்கு பயன்படுத்தியதாகவும்....

ஒரு செவிவழி தகவல் உள்ளது....

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி க.த. செல்வராசா கோபால் (ஈழத்துப்பூராடனார்) அவர்கள் 2005ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் எனும் நூலின் 148 ம் பக்கத்தில் காணப்படுகிறது



(தேடல் திரி .... அரட்டைத் திரியாகவும் தொடருதாம்.......)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Tue 24 Jun 2014 - 20:00

jaleelge wrote:
நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி சார் மிகுதியை நாளை படிக்கிறேன்

எங்கே திரியில் யாரையும் காணோம்...

அரட்டைக்கு ஒதுக்கவில்லையோ போலும்... _*  _*  _*  _* 

ஜலீல் சார்!

நேற்றுத்தான் ஏதோ திரியில் சொன்னிங்க நிஷா மேடத்தோட கோபப்படாமல் கடைசி வரை இந்த நட்பு தொடர இறைவன் உதவி செய்யணும்னு!

இந்த மாதிரி புரிந்துக்காமல் எழுதிகொண்டிரு்ந்தீர்கள். சேனையில் நான் கோபப்படும் முதல் நட்பு நீங்களாய் இருப்பீர்கள்!

சொன்னதை சரியாக் புரிந்துக்காமல் எப்படி சார் இப்படி பட்பட்டென இருக்கின்றீர்கள்.

இந்த திரி வரலாறு பகுதியில் வர வேண்டியது. உங்களை யார் பயனுள்ள தகவல்கள் பகுதியில் ஆரம்பிக்க சொன்னார்கள்?

இந்த திரியின் ஆய்வு வரலாறு சம்பந்தப்பட்டதுதானே சார்? ஏதோ எழுதும் போது ஒன்றிரண்டு பகுதியை தவறுதலாய் விட்டு விட்டேன்! அதில் உங்க ஆய்வுதிரியும் விடுபட்டது தற்செயலான விடயம். விடுபட்ட பகுதி அரட்டக்குரியது என நான் சொன்னேனா சார்?

என்னை புரிந்திடாமல் விவாதம் செய்த சிலர் பதிவுகளுக்கு ஒதுங்கி போய்கொண்டுதான் இருக்கின்றேன் சார்! நீங்கள் இப்படியே எழுதிட்டிருந்தீர்கள்.. நட்பாய் கூட நான் உங்களுடன் பதிவுகள் இடாமல் ஒதுங்கி போயிருவேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Tue 24 Jun 2014 - 23:07

Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி சார் மிகுதியை நாளை படிக்கிறேன்

எங்கே திரியில் யாரையும் காணோம்...

அரட்டைக்கு ஒதுக்கவில்லையோ போலும்... _*  _*  _*  _* 

ஜலீல் சார்!

நேற்றுத்தான்  ஏதோ திரியில் சொன்னிங்க நிஷா மேடத்தோட கோபப்படாமல் கடைசி வரை இந்த நட்பு தொடர இறைவன் உதவி செய்யணும்னு!

இந்த மாதிரி புரிந்துக்காமல் எழுதிகொண்டிரு்ந்தீர்கள்.  சேனையில் நான் கோபப்படும் முதல் நட்பு நீங்களாய் இருப்பீர்கள்!

சொன்னதை சரியாக் புரிந்துக்காமல் எப்படி சார் இப்படி பட்பட்டென இருக்கின்றீர்கள்.

இந்த திரி வரலாறு பகுதியில் வர வேண்டியது. உங்களை யார் பயனுள்ள தகவல்கள் பகுதியில் ஆரம்பிக்க சொன்னார்கள்?

இந்த திரியின் ஆய்வு வரலாறு சம்பந்தப்பட்டதுதானே சார்? ஏதோ எழுதும் போது ஒன்றிரண்டு பகுதியை தவறுதலாய் விட்டு விட்டேன்! அதில் உங்க ஆய்வுதிரியும் விடுபட்டது தற்செயலான விடயம்.  விடுபட்ட பகுதி அரட்டக்குரியது என நான் சொன்னேனா சார்?

 என்னை புரிந்திடாமல் விவாதம் செய்த சிலர் பதிவுகளுக்கு  ஒதுங்கி போய்கொண்டுதான் இருக்கின்றேன் சார்! நீங்கள் இப்படியே எழுதிட்டிருந்தீர்கள்.. நட்பாய் கூட நான் உங்களுடன் பதிவுகள் இடாமல் ஒதுங்கி போயிருவேன்!

நிஷா மேடம்....

உங்களின் பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

நமக்கு நாம்தான் நீதிமான்,

பதிவில் உள்ள ஒவ்வொரு வாக்கியமும்,,,,

என்னை மிகவும் சிந்திக்க வைத்தது....

இதற்க்கு நான் பதில் சொல்ல நாதியற்றவனாக  இருக்கிறேன்.

உங்களை நான் இன்னும் புரிதலில் முழுமையடையவில்லை.

இனியும் மதிப்புமிகு உங்களை தேடித் தேடி புரிவேன்.

உங்கள் முடிவினை சற்று மீள்பரிசீலனை செய்யுங்கள். )*
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Tue 24 Jun 2014 - 23:27

அதெல்லாம் சரி சார்,

நம்ம பிரச்சனையை அப்புறம் வைத்துக்கலாம், இன்றைய டாப் வன் வின்னர் என்னானது?

பதிவுகள் போடுவிங்களா மாட்டிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by பானுஷபானா Wed 25 Jun 2014 - 10:25

அண்ணா எங்கிருந்தாலும் சேனைக்கு வரவும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Wed 25 Jun 2014 - 12:46

பானுஷபானா wrote:அண்ணா எங்கிருந்தாலும் சேனைக்கு வரவும்

என் தங்கச்சி பானுஷபானா அஸ்ஸலாமூ அலைக்கும்..

நான் சேனைக்கு ஒவ்வொரு நாளும் காலையில் வருவேன்..

இரவில் ...நடு நிசியில்தான்   பேனையை விட்டுப்  போவேன்....

எனது இத் திரியில் விரும்பினால்   நீங்களும்   வந்து   போகலாம்....

நான்  அனைத்துத்  திரியிற்கும்  விஜயம்  சென்றூதான்  வருகிறேன்.....

புதிய  புதிய  அறிவுகளையும்......தகவல்களையும்.......செய்திகளையும்.....

அறிந்து கொண்டுதான் ...என் மட்டமான புத்தியையும் நேர்த்தியாக்க எண்ணியுள்ளேன் . :cheers: 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by பானுஷபானா Wed 25 Jun 2014 - 12:51

jaleelge wrote:
பானுஷபானா wrote:அண்ணா எங்கிருந்தாலும் சேனைக்கு வரவும்

என் தங்கச்சி பானுஷபானா அஸ்ஸலாமூ அலைக்கும்..

நான் சேனைக்கு ஒவ்வொரு நாளும் காலையில் வருவேன்..

இரவில் ...நடு நிசியில்தான்   பேனையை விட்டுப்  போவேன்....

எனது இத் திரியில் விரும்பினால்   நீங்களும்   வந்து   போகலாம்....

நான்  அனைத்துத்  திரியிற்கும்  விஜயம்  சென்றூதான்  வருகிறேன்.....

புதிய  புதிய  அறிவுகளையும்......தகவல்களையும்.......செய்திகளையும்.....

அறிந்து கொண்டுதான் ...என் மட்டமான புத்தியையும் நேர்த்தியாக்க எண்ணியுள்ளேன் . :cheers: 

வ அலைக்கும் சலாம் அண்ணா

தெரியாத தகவலை தெரிந்து கொள்கிறீர்கள் அதற்கு மட்டமான புத்தி என ஏன் சொல்றிங்க. அப்படி சொல்லாதிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:06

அது சரி! யாராவது இந்த திரியில் அரட்டை கிரட்டை சிரட்டை என அடிக்க ஆரம்பிங்க பார்ப்போம்..  #*  #* 

ஒழுங்கா எல்லோரும் அரட்டை பகுதிக்குள் வாங்க.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 7 Jul 2014 - 1:36

16. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

தேடல் - 16
(2014.07.06; இரவு -11.21)


இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........



”மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  கிண்ணியா பிரதேசத்தின் கடல் ஊடறுப்புக்கள் விபரம் :கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 3183672818


கட்டையாறு, குறிஞ்சாக்கேணியாறு , நடுத்தீவு ஆறு , தம்பலாகம் ஆறு , உப்பாறு , வடிச்சாறு , மணலாறு , சாவாறு போன்றன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள .....
ஆறு ஈற்றுப் பெயர்கள்  குறிப்பிடும் இடப்பெயர்கள்  விபரம் வருமாறு....

பயணண்ட ஆறு (அம்):

பயிணண் என்ற நபர் முன்னிலைப்படுத்தி கட்டப்பட்ட அணைக்கட்டு கட்டப்பட்டதாகவும் , அதனை ஒட்டி பயிணண்டாஅறு திரிபடைந்து “பயணண்டாறு” எனப்படுகிறது.


(ஆதார உசார்துணை நூலாக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)



உடங்கா ஆறு (அம்):

ஆறு உள் அடங்காத நிலையில் நீர் ஓடும் ஆறு என்பதால் உடங்காஆறு எனப்பட்டது.

(ஆதார உசார்துணை நூலாக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)

சாவாறு (அம்):

ஆரம்பகாலத்தில் (நெயினாகாடு) அணைக்கட்டு வேலைகள் செய்யும் போது  பல தொழிலாளிகள் நீரில் மூழ்கி சாவினை எய்தினர் . அதனால் “சாவாறு” என பெயர்பெற்றறு அழைக்கப்பட்டது. 

(ஆதார உசார்துணை நூலாக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)


(தேடல் திரி .... அரட்டைத் திரியாகவும் தொடருதாம்.......)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Mon 7 Jul 2014 - 1:44


ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு விளக்கம் உண்டென அறிய முடிகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 7 Jul 2014 - 2:00

Nisha wrote:
ஒவ்வொரு ஊர்களுக்கும்  ஒவ்வொரு விளக்கம் உண்டென அறிய முடிகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்!

உங்கள் உந்துதல் எனக்கு ....
இடைவெளி விடா தொடர்தல் பதிவை ....
இடு என அன்பாய் உறுத்தி நிற்க்கிறது...
நாள் ஒன்றாய் சேனைக்குள் முத்துக் குழிக்கிறேன்...
ஆனால் அதன் பெறுமானங்களை பதிவுகளில் காட்டனுமா???
என்ற கேள்வி என்னுள் எழுகிறது இப்போ...
விடை தேடி அழைகையில்....என் பதிவிலும் சோடை போகா வண்ணம்...
தினம் தோரும் பதிவிடல் சேனைக்கு அழகு அல்லவா???
மக்கு மூளைக்கு இப்பதான் தட்டுப்படுகிறது......பார்ப்போம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Mon 7 Jul 2014 - 2:14

ஹாஹா!

ஜலீல் சார்! நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள் தெரியுமா?

அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார் என்பர். நீங்கள் எதை நினைத்து எதை இடிக்கின்றீர்கள் என நான் அறியேன். ஆனால் இணைய உலகில் சேனையில் கிடைப்பது போல் அன்பும், தாழ்மையும், புரிதலுமான உறவுகள் எங்கும் உங்களுக்கு கிடைக்காது.

உறவுகளின் அன்பு அழைப்பை அசட்டை பண்ணுதலில் மூலம் நீங்கள் அவர்களில் நட்புறவையும் இழக்கின்றீர்கள். உங்கள் அசாத்திய வீம்பும் பிடிவாதமும் எதைத்தான் சாதிக்கும் என நான் அறியேன்!

நீங்கள் எத்தனை நாள் சேனையில் அலைந்து தேடினும் இழந்தவைகள் மீண்டும் கிடைக்காது!

நிதானமாய் சிந்தித்து முடிவெடுங்கள். இணைய உலகிலும் நட்பிலும் இதெல்லாம் சகஜம் தானே.. இன்றிருப்பார் நாளை வரார்.. நாளை மீண்டும் புதிதாய் ஒருவர் வருவார்.. சேனையும் நீங்களும் கூட எதற்கும் விதிவிலக்கல்ல..




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by rammalar Mon 7 Jul 2014 - 7:23

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by ராகவா Mon 7 Jul 2014 - 9:42

Nisha wrote:ஹாஹா!

ஜலீல் சார்! நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள் தெரியுமா?  

அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார் என்பர். நீங்கள் எதை நினைத்து எதை இடிக்கின்றீர்கள் என நான் அறியேன். ஆனால் இணைய உலகில் சேனையில் கிடைப்பது போல் அன்பும், தாழ்மையும், புரிதலுமான உறவுகள் எங்கும் உங்களுக்கு கிடைக்காது.

உறவுகளின் அன்பு அழைப்பை அசட்டை பண்ணுதலில் மூலம்  நீங்கள் அவர்களில் நட்புறவையும் இழக்கின்றீர்கள்.  உங்கள் அசாத்திய வீம்பும் பிடிவாதமும் எதைத்தான் சாதிக்கும் என நான் அறியேன்!  

நீங்கள் எத்தனை நாள் சேனையில் அலைந்து தேடினும் இழந்தவைகள் மீண்டும் கிடைக்காது!

நிதானமாய் சிந்தித்து முடிவெடுங்கள். இணைய உலகிலும் நட்பிலும் இதெல்லாம் சகஜம் தானே.. இன்றிருப்பார் நாளை வரார்.. நாளை மீண்டும் புதிதாய் ஒருவர் வருவார்.. சேனையும் நீங்களும் கூட  எதற்கும் விதிவிலக்கல்ல..


 )(  )(  )(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 7 Jul 2014 - 12:54

17. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 17
(2014.07.07; பிற்பகல் -12.43)


இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........


அம்பாறை மாவட்டத்தின் ஆறு ஈற்றுப் பெயர்கள்....... 

நெல்லுப்புடி ஆறு (அம்):

சம்மாந்துறையின் கிழக்கு அந்தத்தில் உள்ள ஆற்றில் விதைப்பு வேலையில் கோட்டைபோடல் - நெல் சாக்குகளினை புடித்து எடுக்கும் நிலை காணப்பட்டதனால் நெல்லுபிடி ஆறு பின் நெல்லுப்புடியாறு எனப்பட்டது.

(ஆதார உசார்துணை தகவலாளராக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)

பாலக்கராறு (அம்):

சம்மாந்துறை காரைதீவு பிரதான வீதியில் ஆற்றைக்கடக்க பாலம் அமைத்ததனால் பாலம் கடந்த ஆறு என்பது திரிபடைந்து பாலக்கராறு எனப்படுகிறது.


(ஆதார உசார்துணை தகவலாளராக.

வண்ணாண்ட ஆறு (அம்):

இவ்வாறு சம்மாந்துறை கல்முனை பிரதான வீதியில் அருகில் உள்ள இடத்தில் ஓடும் ஆறு.

 இதில் சலவைத் தொழிலாளர்கள் (வண்ணான்) ஆடைகளை சுத்தம் செய்யும் இடமாகையால் வண்ணான்டஆறு என இனம்காட்டினார்.

 இதன் நீரோட்டம் ஏனைய ஆற்றின் நீரோட்டத்தை முற்றிலும் மாறுபட்ட திசையில் செல்கிறது அதாவது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் நீரோட்டம் ஓர் சிறப்பம்சமாகும்.



(ஆதார உசார்துணை தகவலாளராக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)


பள்ளாறு (அம்):

பள்ளப்பகுதியில் உள்ள ஆறு என்பதால் பள்ளாறு எனப்பெயர்பெற்றது.


(ஆதார உசார்துணை தகவலாளராக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)


மாமரத்தடியில் உள்ள பள்ளிவாசலின் அருகில் ஓடும் ஆறு என்பதால் “மாவடிப்பள்ளியாறு” எ னப்பட்டது.

(ஆதார உசார்துணை தகவலாக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர். தேசமாண்ய. ஆய்வாளர் -ஜலீல் ஜீ( Dip.in.Journalisum) மாவடிப்பள்ளி கிராமம் பற்றி தினக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை.2000.10.21)


(தேடல் திரி  தொடருதாம்.......)


Last edited by jaleelge on Mon 7 Jul 2014 - 14:11; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 7 Jul 2014 - 13:59

18. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 18
(2014.07.07; பிற்பகல் -2.43)


இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........


அம்பாறை மாவட்டத்தின் ஆறு ஈற்றுப் பெயர்கள்.......

பட்டாம்பிட்டி ஆறு (அம்கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 3183672818


பட்டாளமாக அதிகமான நபர்கள், பிட்டி ஸ்ரீ உயர்ந்த இடம் இவ்விடத்தில் ஒன்று கூறுபவர்கள் என்பதனால் ”பட்டாம்பிட்டியாறு” எனப்படுகிறது.(ஆதார உசார்துணை தகவலராக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)
)

வர்ணாந்து ஆறு (அம்):
தென்கிழக்குப் பிரதேச டச்சுக்கம்பணியின் அதிகாரம் செலுத்திய ஜேகப் பெர்ணான்டோ எனும் நிர்வாகியால் கட்டப்பட்ட அணைக்கட்டு. உள்ளது அதனை அடியொட்டி பெர்ணாத்து ஆறு பின் திரிபடைந்து வர்ணாந்து ஆறு.

(ஆதார உசார்துணை நூலாக: கலாநிதி.எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களினால் தொகுக்கப்பட்ட...அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் -1997 எனும் தொகுப்பில்....கலாபூஷணம்.யூ.எல்.அலியார் எழுதிய கட்டுரை- பக்கம் 39ல்.)

உடையாண்ட ஆறு (அம்):
உடையார்களின் நிர்வாகத்தின் கீழ் இவ்வாறு விஸ்தரிக்கப்பட்டதனால் உடையாண்ட ஆறு எனப்படுகிறது.(ஆதார உசார்துணை தகவலராக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)

வழுக்கமடு ஆறு (அம்):
வீரமுனை - சொறிக்கல்முனை வழியில் உள்ள ஆறு. இது மடுவாகவுள்ளதாலும், களி மண் சார்ந்த பகுதியால் வழுக்கும் தன்மையுள்ளதாலும் வழுக்கமடுஆறு எனப்பட்டது.

(ஆதார உசார்துணை தகவலராக : பிரபல அச்சு ,இலத்திரணியல் ஊடகவியலாளர்.கலாஸ்ரீ - யூ.எல்.எம். றியாஸ் ( Dip.in.Journalisum)


Last edited by jaleelge on Mon 7 Jul 2014 - 14:07; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Mon 7 Jul 2014 - 14:04

கடைசி இரு பதிவையும் மீள் பார்வை பாருங்கள் ஜலீல் சார்!

எழுத்தின் அளவு செட் ஆகாமல் பல வரிகளுக்கிடையில் தெரிகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 7 Jul 2014 - 15:01

19. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 19
(2014.07.07; பிற்பகல் -3.42)


இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........

அம்பாறை மாவட்டத்தின் ஆறு ஈற்றுப் பெயர்கள்.......


தில்லை ஆறு (அம்):


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்த இவ் ஆறு அதன் ஓரங்களில் தில்லை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதனால் தில்லை ஆறு எனப்படுகிறது.

(ஆதார உசார்துணை நூலாக: மணிப்புலவர் .மருதூர் -ஏ-மஜீட் அவர்களினால் தொகுக்கப்பட்ட...ஆய்வாளர்- நா.நவநாயக மூர்த்தி (பனங்காடு) எனும் தொகுப்பில்.)


தாலிபோட்டாறு (அம்):


திருக்கோயில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆறாகும். இவ் ஆற்றில் ஆரம்பகாலத்தில் குளிக்கச் சென்ற தம்பதிகளின் தாலி கழன்று விழுந்தது.



அவை தேடியும் கிடைக்கப் பெறாமையினால் தாலிபோட்டாறு என அழைக்கப்பட்டது.


(ஆதார உசார்துணை நூலாக: மணிப்புலவர் .மருதூர் -ஏ-மஜீட் அவர்களினால் தொகுக்கப்பட்ட...ஆய்வாளர்- நா.நவநாயக மூர்த்தி (பனங்காடு) எனும் தொகுப்பில்.)


குளவிக்கூட்டாறு (மட்டு) :

ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட இவ் ஆறு ஓரப் பகுதிகளில் குளவிக்கூடுகள் அதிகமாகக் காணப் பட்டதனால் அவ் ஆற்றினை குளவிக்கூட்டாறு என சூட்டப்பட்டது.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். வை. எம். எம். ஏ. காதர் -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , ஏறாவூர் மத்தியஸ்தர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்))


”ஓடை”ஈற்றுப் பெயர்:


ஓடை = நீரோடை, குளம், அகழி, மலை, வழி, நெற்றிப்பட்டம், ஒருவகை மரம், சிற்றாறு, சிற்றருவி என்பனவற்றிலும் விடச் சிறிய நிலையில் இயற்கையாக நீர் வடிந்தோடும் நிலையிலுள்ளவை ஓடை எனப்படும்.


மெராவோடை (மட்டு):


மீரார் எனும் முஸ்லிம் நபரின் ஆரம்பக்குடி ஈரப்பின் காரணமாகவும், ஓடையின் அருகில் வாழ்ந்ததாலும் மீரார் ஓடை என்பது திரிபடைந்து மெராவேடை என்றாயிற்று.



(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். அதிபர்மணி. எம் . ஐ. கோஸ்முகம்மது -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , சம்மாந்துறை அரச ஓய்வு பெற்றோர்  சபையின் தலைவராக கடமையாற்றியவர்)





ஆய்வுத் திரி இன்னும் உங்களுக்காக.......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 7 Jul 2014 - 22:04

20. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 20
(2014.07.07; மாலை -8.16)


இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........

”ஓடை”ஈற்றுப் பெயர் நகர்கிறது...

காங்கேயனோடை (மட்டு):

கந்தசுவாமி விக்ரகம் இந்த ஓடையின் வளியாக கொண்டு வரப்பட்டதன் காரணமாக ”காங்கேயனோடை”எனப்பட்டது.

(ஆதார உசார்துணை நூலாக :பண்டிதர்  வீ. சீ. கந்தையா : எழுதிய ”மட்டக்களப்பு தமிழகம்” 1964 எனும்  வரலாற்று  நூலில் 117ம் பக்கத்தில்.)

மீனோடை (அம்):

இதற்கு பனையடிப்பிட்டி  என்றும் ஆரம்பத்தில் அழைத்தனர். அதாவது அட்டாளைச்சேனையில் இருந்த  போடிமார் தமது கமத்தொழிலுக்காக உதவியாக எருமை மந்தைகளை  அடைத்துப் பாதுகாப்பதற்க்கு “காளை  அமைத்தனர்.

பின்னர் காளை என்பது “புட்டி” என மறுவியதுடன் , இங்கு பனைமரங்கள் அதிகமாக உறுவாகி இருந்ததனால்  “பனையடிப்பிட்டி” என்றும் , இதனை தற்காலத்தில் இப்பிரதேசத்தினூடாக  கோணாவத்தை என்ற உப்பேரி ஆற்றுக்கு பெரு வெள்ளக்  காலப் பகுதியில் நீர் ஓடும் போது பெறுமதியான மீன்கள் மக்கள் பிடிப்பார்கள்.
இதனால் இவ்விடத்துக்கு “மீனோடை” என்றும் , அவ்விடத்தில்  ஓர் உயரமான கட்டு ஒன்றும் காணப்பட்டதனால் “மீனோடைக்கட்டு” என்று அழைக்கலாயினர்.

(ஆதார உசார்துணை நூலாக :அல்-ஹாஜ் ஜே. எம். சம்சுதீன் மௌலானா  எழுதிய ”வேர்களூம் விழுதுகளும்  என்ற கட்டுரை ....”அட்டாளை” 2007ல்   எனும் அட்டாளைச்சேனை  பிரதேச கலாசார விழா சிறப்பு மலரில்.)

மயிலோடை (அம்) :

சம்மாந்துறை பிரதேச செயலக  எல்லைக்குள் உட்பட்ட இவ்வோடையினூடாக  மயில்கள்  வந்து நீர் அருந்தி ...தாகம் தீர்த்ததனை  வழமையாக்கிக் கொண்டமையினால்... இப்பகுதி “ மயிலோடை” என வழங்கலாயிற்று. 

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். அதிபர்மணி. எம் . ஐ. கோஸ்முகம்மது -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , சம்மாந்துறை அரச ஓய்வு பெற்றோர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்

திராவோடை (அம்) :

இந் நீரோடை சம்மாந்துறை பிரதேச எல்லையில் இவ்வோடை உள்ளது. இவ்வோடையில் “திராய்” எனும் ஒரு வகை கீரை காணப்பட்டதால் “திராவோடை” என்று அழைக்கலாயினர்.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். அதிபர்மணி. எம் . ஐ. கோஸ்முகம்மது -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , சம்மாந்துறை அரச ஓய்வு பெற்றோர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்)

தேடல் ஆய்வுத் திரி இன்னும் நீழும்...



jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 3 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum