சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை Khan11

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை

3 posters

Go down

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை Empty ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை

Post by rammalar Thu 3 Jul 2014 - 2:18

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை 11-480x264

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை 77

சித்தர்களில் ஒருவரான போகர், முருகனை தரிசிக்க
பழனிக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழி
தெரியவில்லை. எனவே இரும்பறையில் தங்கிய
அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார்.
அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழியைக்
காண்பித்ததாக சொல்லப்படுகிறது.

வழி காட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று
தொலைவிலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர்
கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார்.
ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழி
காட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில்
ஐந்து முகங்களுடன் அருள்கிறார்.
8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார்.

இந்த அமைப்பிலுள்ள முருகனை “”கவுஞ்சவேதமூர்த்தி’
என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து
திகழ இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் அருள்கிறார்.
இவரை வணங்கிய பிறகே முருகனை தரிசிக்க வேண்டும்
என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த வடிவில்
அமைக்கப்பட்டுள்ளது.
முருகனுக்கு வலப்புறத்தில் காசி விஸ்வநாதரும், இ
டப்புறம் காசி விசாலாட்சியும் தனித்தனி சந்நிதிகளில்
காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும்
சந்நிதி இருக்கிறது.

படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது,
விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை
வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன்,
பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவர்
தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே ப
டைப்புத் தொழிலை துவங்கினார்.
அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து
முகங்கள் இருந்தன. எனவே,முருகனும் அவரது அ
மைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகைப்
படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து
உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே
பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள்.

சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி
கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம்
கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி,
பிரம்மாவையும் விடுவித்தார்.

முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி
பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலை
அடிவாரத்தில் தனிக் கோயிலில் இருக்கிறார்.
முருகனை சந்திக்க சிவபெருமான் மட்டும் தனித்து
வந்தார். உடன் அம்பிகை வரவில்லை.
எனவே இக்கோயிலில் அம்பிகை சந்நிதி கிடையாது.
பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்
படுத்தியதால், இவ்வூர் “‘இரும்பறை’ என்று
அழைக்கப்படுகிறது
சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின்
விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம்,
ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு
ஓதிய (உபதேசம் செய்த) மலை என்பதால் தலம்,
“ஓதிமலை’ என்றும், சுவாமி “ஓதிமலையாண்டவர்’
என்றும் பெயர் பெற்றார்.

உற்ஸவர் கல்யாண சுப்பிரமணியர்.
தல விருட்சம் ஒதிமரம்.
தீர்த்தம் சுனை தீர்த்தம்.
1000 வருடங்களுக்கு முற்பட்டது இக்கோயில்.
போகர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல்
தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசேஷ
காலங்களில் இதையே பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
அமைவிடம்: கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம்
செல்லும் சாலையில் 48 கி.மீ. தூரத்தில் புளியம்பட்டி
சென்று, அங்கிருந்து 10 கி.மீ. சென்றால் இரும்பறையை
அடையலாம்.
விசேஷங்கள்: தைப்பூசத்தில் 9 நாட்கள் பிரம்மோற்ஸவம்,
சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு,
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.
-
——————————–
–பார்வதி அருண்குமார் (தினமணி)


_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24299
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை Empty Re: ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை

Post by jasmin Thu 3 Jul 2014 - 12:24

ஹிந்துகளின் நம்பிக்கை வியக்க வைக்கிறது ..ஆறுமுகன் முருகனின் செய்திகள் அருமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை Empty Re: ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை

Post by ராகவா Thu 3 Jul 2014 - 12:44

jasmin wrote:ஹிந்துகளின் நம்பிக்கை வியக்க வைக்கிறது ..ஆறுமுகன் முருகனின் செய்திகள் அருமை
 )(( )(( )(( 
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.
மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.

மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.

மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.

இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை Empty Re: ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum