Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
+10
சுறா
Rj Nousath Mohamed
rinos
ahmad78
Nisha
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
14 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
First topic message reminder :
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்கநன்றி நண்பன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சலிப்பு….!!
*
பக்தர்களைப் பயமுறுத்துகின்றது
மாலைப் பாதையில் குரங்குகள்.
*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.
*
*
பக்தர்களைப் பயமுறுத்துகின்றது
மாலைப் பாதையில் குரங்குகள்.
*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
புதிர்…!!
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
*
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கடினம்….!!
*
ஒரு வீடே பெற முடியவில்லை
நான்கு வீடு பற்றிச் சொல்கின்றது குறள்.
*
எதையும் கடைபிடிப்பது கடினம்
கடைபிடிக்காமல் இருப்பதும் கடினம்
*
ஆரோக்கியமாய் இருப்பவனைப் பார்த்து
நலமா? என்று விசாரிக்கிறார் நோயாளி.
*
*
ஒரு வீடே பெற முடியவில்லை
நான்கு வீடு பற்றிச் சொல்கின்றது குறள்.
*
எதையும் கடைபிடிப்பது கடினம்
கடைபிடிக்காமல் இருப்பதும் கடினம்
*
ஆரோக்கியமாய் இருப்பவனைப் பார்த்து
நலமா? என்று விசாரிக்கிறார் நோயாளி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
முடிவு….!!
*
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
*
*
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
அனைத்தும் அருமையாக உள்ளது
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
அனைத்தும் அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கவிதைகள் அருமை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெற்றிடமே…!!
*
வாழ்க்கை விலகிப் போகின்றது
மரணம் நெருங்கி வருகி்ன்றது.
*
எங்கும் காண்பதெல்லாம் வெற்றிடமே
வெற்றிடத்தில் தான் எல்லாமிருகின்றது
என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்..
*
*
வாழ்க்கை விலகிப் போகின்றது
மரணம் நெருங்கி வருகி்ன்றது.
*
எங்கும் காண்பதெல்லாம் வெற்றிடமே
வெற்றிடத்தில் தான் எல்லாமிருகின்றது
என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்..
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்..
அருமை ஐயா...
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்..
அருமை ஐயா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி சே.வேல்முருகன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஐயா...ந.க.துறைவன் wrote:நன்றி சே.வேல்முருகன்....
பேரை வேல்முருகன் ஆக்கிட்டீங்களே...
சே.குமார் என்பதுதான் என் பெயர்...
எப்படியோ அதுவும் முருகன் பெயர்தானே.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நட்பு…!!
*
தமிழ் இலக்கணத் தேர்வில் தோற்றார்
நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்
*
எதையும் கொண்டு வராதவர்
கையில் எதையோ கொண்டு செல்கிறார்.
*
அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் வாட்ஸ்அப் நட்பே நட்பு.
*
*
தமிழ் இலக்கணத் தேர்வில் தோற்றார்
நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்
*
எதையும் கொண்டு வராதவர்
கையில் எதையோ கொண்டு செல்கிறார்.
*
அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் வாட்ஸ்அப் நட்பே நட்பு.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
களஞ்சியம்…!!
*
என்னைத் தெரியுமென்றார்
வந்திருந்தத் தெரியாதவர்.
*
மலர் நிறைய மணம்
மடி நிறைய பணம்.
*
எழுதியிருக்கும் வாசகங்கள் தொகுத்தால்
ஆட்டோ கலைக்களஞ்சியமாகி விடும்
*
*
என்னைத் தெரியுமென்றார்
வந்திருந்தத் தெரியாதவர்.
*
மலர் நிறைய மணம்
மடி நிறைய பணம்.
*
எழுதியிருக்கும் வாசகங்கள் தொகுத்தால்
ஆட்டோ கலைக்களஞ்சியமாகி விடும்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கீரைக்காரி…!!
*
உடல் வதங்கியிருக்கிறாள் கீரைக்காரி
பச்சென்றிருக்கிறது கீரை.
*
பூம்பூம் மாட்டுக்காரன் வாசலில் நின்றான்
தலையாட்டி காசு கேட்டது மாடு.
*
எப்படியிருக்கீங்க என்று கேட்டான்
ஏதோ இருக்கேன் என்றான்.
*
*
உடல் வதங்கியிருக்கிறாள் கீரைக்காரி
பச்சென்றிருக்கிறது கீரை.
*
பூம்பூம் மாட்டுக்காரன் வாசலில் நின்றான்
தலையாட்டி காசு கேட்டது மாடு.
*
எப்படியிருக்கீங்க என்று கேட்டான்
ஏதோ இருக்கேன் என்றான்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சேலை…!!
*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.
*
*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பிடிப்பு…!!
*
பிடிப்பில்லாத வாழ்க்கையில்
பிடிப்போடு வாழ்கிறார்கள்.
*
*
செத்துவிட்டது சத்தியம்
உயிர் வாழ்கிறது பொய்.
*
யாரும் அள்ளிப் பருகுவதில்லை
சொட்டும் தேன்.
*
*
பிடிப்பில்லாத வாழ்க்கையில்
பிடிப்போடு வாழ்கிறார்கள்.
*
*
செத்துவிட்டது சத்தியம்
உயிர் வாழ்கிறது பொய்.
*
யாரும் அள்ளிப் பருகுவதில்லை
சொட்டும் தேன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அத்தனையும் அளப்பெரிய கருத்துகளைக் கொண்டு மின்னுகிறது வரிகள் வாழ்த்துகள் சார் தொடருங்கள்
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சிறகு…!!
*
காதலுக்கு என்ன கிடைத்தது?
நாம்தான் காதலுக்கு கிடைத்தப் பரிசு.
*
காதலர்க்குச் சிறகில்லை
காற்றுக்கு மரணமில்லை்.
*
பாதுகாப்பாகவே அரங்கேறுகிறது
பாதுகாக்கப்படும் அந்தரங்கம்.
*
*
காதலுக்கு என்ன கிடைத்தது?
நாம்தான் காதலுக்கு கிடைத்தப் பரிசு.
*
காதலர்க்குச் சிறகில்லை
காற்றுக்கு மரணமில்லை்.
*
பாதுகாப்பாகவே அரங்கேறுகிறது
பாதுகாக்கப்படும் அந்தரங்கம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
உதிர்ந்த இலைகள்
*
எழுத நினைத்ததை மறந்து விட்டான்
மறந்துப் போனதை எழுதி வைத்தான்.
*
கேலி செய்தவனே
கேலிக் கிரையானான்
*
யாரும் துக்கத்தில் இல்லை
ரொக்கத்தில் தான் வாழ்கிறார்கள்.
*
பிரமாதமாக நடக்கிறது பிரசாரம்
யாருக்கும் மயக்கம் தெளியவில்லை.
*
அவரவர் பிரார்த்தனையாக
தண்ணீரில் மிதக்கிறது பணம்.
*
*
எழுத நினைத்ததை மறந்து விட்டான்
மறந்துப் போனதை எழுதி வைத்தான்.
*
கேலி செய்தவனே
கேலிக் கிரையானான்
*
யாரும் துக்கத்தில் இல்லை
ரொக்கத்தில் தான் வாழ்கிறார்கள்.
*
பிரமாதமாக நடக்கிறது பிரசாரம்
யாருக்கும் மயக்கம் தெளியவில்லை.
*
அவரவர் பிரார்த்தனையாக
தண்ணீரில் மிதக்கிறது பணம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மலைப்பு…!!
*
துணைக்கு வந்தவள் தொணதொணப்பு
தாங்கமுடியாதவள் முகம் சிடுசிடுப்பு.
*
பேசிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்
நின்றிருந்தவன் கையசைத்து கூப்பிட்டான்.
*
விலை கேட்டவர் திகைத்தார்
வாங்கியவர் மகிழ்ந்தார்.
*
எதிரே வந்தது பிணஊர்வலம்
அச்சத்தில் ஒதுங்கின வாகனங்கள்.
*
மலையைப் பார்த்து மலைத்தேன்
கீழே விரித்தப் பாய்களாய் வயல்கள்
*
*
துணைக்கு வந்தவள் தொணதொணப்பு
தாங்கமுடியாதவள் முகம் சிடுசிடுப்பு.
*
பேசிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்
நின்றிருந்தவன் கையசைத்து கூப்பிட்டான்.
*
விலை கேட்டவர் திகைத்தார்
வாங்கியவர் மகிழ்ந்தார்.
*
எதிரே வந்தது பிணஊர்வலம்
அச்சத்தில் ஒதுங்கின வாகனங்கள்.
*
மலையைப் பார்த்து மலைத்தேன்
கீழே விரித்தப் பாய்களாய் வயல்கள்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வரிகள்…!!
*
சேலை மறைப்பில் பிரசவ வரிகள்
முகத்தில் என்றும் கவலை வரிகள்.
*
உன்னை உள்ளே வைத்துக் கொண்டு
வெளியே தேடுகிறேன் அப்பாவியாய்…!!
*
அனாவசியமாக பேசுவதை விட
அமைதியாக இருப்பதே சிறந்தது.
*
*
சேலை மறைப்பில் பிரசவ வரிகள்
முகத்தில் என்றும் கவலை வரிகள்.
*
உன்னை உள்ளே வைத்துக் கொண்டு
வெளியே தேடுகிறேன் அப்பாவியாய்…!!
*
அனாவசியமாக பேசுவதை விட
அமைதியாக இருப்பதே சிறந்தது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
முள்கள்…!!
*
சந்தோஷம் முகத்தில் மலரும் பூக்கள்
சந்தேகம் மனதைக் குத்தும் முள்கள்
*
உயர்ந்த கோபுரத்திலும் வாழ்கின்றன
கூண்டிலும் வாழ்கின்றன புறாக்கள்.
*
இன்று உங்களை இகழ்பவர்கள்
நேற்று உங்களைப் பாராட்டியவர்கள்.
*
செயலைத் தொடங்குவது எளிது
செய்து முடிப்பதுதான் கடினம்.
*
*
சந்தோஷம் முகத்தில் மலரும் பூக்கள்
சந்தேகம் மனதைக் குத்தும் முள்கள்
*
உயர்ந்த கோபுரத்திலும் வாழ்கின்றன
கூண்டிலும் வாழ்கின்றன புறாக்கள்.
*
இன்று உங்களை இகழ்பவர்கள்
நேற்று உங்களைப் பாராட்டியவர்கள்.
*
செயலைத் தொடங்குவது எளிது
செய்து முடிப்பதுதான் கடினம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பாச கவிதைகள்
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பாச கவிதைகள்
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|