Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
3 posters
Page 1 of 1
தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
* பெற்ற சுதந்திரத்தை காட்டிக் கொடுக்காது நாட்டை முன்னேற்றுவோம்
* வடபகுதியைப் போன்றே தென்பகுதி தமிழருக்கும் அபிவிருத்திகள்
* மொனராகலை விபுலானந்த வித்தியாலயத்தில் ஜனாதிபதி தமிழில் உரை
இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல. எனவே அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்களென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு, தெற்கு - தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியால யத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவிகளின் பல்வேறு கலை கலாசார அம்சங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் வித்தியாலயத்திற்கு வருகை தந்து இங்கு மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துவிட்டு இங்கு தமிழ் பாடசாலையிலும் அதேபோன்ற மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தைத் திறந்து வைப்பது எமக்கு மகிழ்ச்சி.
வடக்கைப் போன்றே தென்பகுதியிலும் தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது எமது நோக்கமாகும். பிள்ளைகளே! நீங்களே இந்த நாட்டின் எதிர்காலம். இந்த நாட்டின் சிறந்த செல்வங்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக முன்னேற வேண்டும். படித்தால் மட்டும் போதாது சிறந்த குண நலன்களைக் கொண்டிருப்பது முக்கியம்.
இந்த வாரத்தில் மாத்திரம் நாம் பல மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துள்ளோம். இது பெற்றோர்களுக்கல்ல. எமது எதிர்கால சந்ததியர்களான பிள்ளைகளுக்கானது. இந்த நாட்டில் மட்டுமின்றி உலகை வெல்லக்கூடிய மாணவர்களாக உங்களை காண்பதே எமது எதிர்பார்ப்பு.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே! இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது.
வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.
இதனை கருத்திற் கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதை நாம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிள்ளைகள் ஒழுங்காக கல்வியைக் கற்று முன்னேற அவர்களை தயார்படுத்துவது பெற்றோர்கள் ஆசிரியர்களே.
இந்த விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த முன்னேற்றமடைந்து இங்கிருந்து பல டாக்டர்கள். பொறியியலாளர்கள் ஏனைய துறை நிபுணர்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தோடு மொழி பயிற்சிக் கூடமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளை இங்கு கற்கக் கூடிய வசதிகளுண்டு. இவற்றை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகைய வசதிகள் தற்போது கிராமப்புறங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம் இனி கிராமிய பிள்ளைகளுக்கும் சொந்தமாகிறது. 68 ற்கு மேற்பட்ட கணனிகள் இப்பாடசாலைக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
நன்றாகக் கற்று இதன் மூலம் முழுமையான பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் இங்குள்ள மாணவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
பெற்றோர்களே இது நம் அனைவரதும் தாய்நாடு. இதனை நாம் அனைவரும் இணைந்து பாதுகாப்போம். இந்த நாட்டை முன்னேற்றுவோம்.
அரசாங்கம் எம்மிடம் இருப்பதாலேயே இவை அத்தனையையும் எம்மால் மேற்கொள்ள முடிகிறது. மாகாண சபைகள்.
பிரதேச சபைகள் என அனைத்தும் எம் வசமே உள்ளன. இதன் மூலம் இந்த மாகாணத்தை முன்னேற்றச் செய்து அதன் மூலம் நாட்டையும் முன்னேற்றி உலகை வெற்றிகொள்ள எம்மால் முடியும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இன்றுள்ள சுதந்திரம் இருக்கவில்லை. அதனை மக்கள் மறக்கமாட்டார்கள். சில இடங்களுக்கு எம்மால் போக முடியாமலும் மக்கள் எம்மை நெருங்க முடியாமலும் இருந்த காலம் இந்த நாட்டில் இருந்தது. நாம் அதனை மாற்றியுள்ளோம்.
தினகரன்
* பெற்ற சுதந்திரத்தை காட்டிக் கொடுக்காது நாட்டை முன்னேற்றுவோம்
* வடபகுதியைப் போன்றே தென்பகுதி தமிழருக்கும் அபிவிருத்திகள்
* மொனராகலை விபுலானந்த வித்தியாலயத்தில் ஜனாதிபதி தமிழில் உரை
இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல. எனவே அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்களென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு, தெற்கு - தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியால யத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவிகளின் பல்வேறு கலை கலாசார அம்சங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் வித்தியாலயத்திற்கு வருகை தந்து இங்கு மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துவிட்டு இங்கு தமிழ் பாடசாலையிலும் அதேபோன்ற மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தைத் திறந்து வைப்பது எமக்கு மகிழ்ச்சி.
வடக்கைப் போன்றே தென்பகுதியிலும் தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது எமது நோக்கமாகும். பிள்ளைகளே! நீங்களே இந்த நாட்டின் எதிர்காலம். இந்த நாட்டின் சிறந்த செல்வங்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக முன்னேற வேண்டும். படித்தால் மட்டும் போதாது சிறந்த குண நலன்களைக் கொண்டிருப்பது முக்கியம்.
இந்த வாரத்தில் மாத்திரம் நாம் பல மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துள்ளோம். இது பெற்றோர்களுக்கல்ல. எமது எதிர்கால சந்ததியர்களான பிள்ளைகளுக்கானது. இந்த நாட்டில் மட்டுமின்றி உலகை வெல்லக்கூடிய மாணவர்களாக உங்களை காண்பதே எமது எதிர்பார்ப்பு.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே! இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது.
வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.
இதனை கருத்திற் கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதை நாம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிள்ளைகள் ஒழுங்காக கல்வியைக் கற்று முன்னேற அவர்களை தயார்படுத்துவது பெற்றோர்கள் ஆசிரியர்களே.
இந்த விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த முன்னேற்றமடைந்து இங்கிருந்து பல டாக்டர்கள். பொறியியலாளர்கள் ஏனைய துறை நிபுணர்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தோடு மொழி பயிற்சிக் கூடமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளை இங்கு கற்கக் கூடிய வசதிகளுண்டு. இவற்றை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகைய வசதிகள் தற்போது கிராமப்புறங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம் இனி கிராமிய பிள்ளைகளுக்கும் சொந்தமாகிறது. 68 ற்கு மேற்பட்ட கணனிகள் இப்பாடசாலைக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
நன்றாகக் கற்று இதன் மூலம் முழுமையான பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் இங்குள்ள மாணவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
பெற்றோர்களே இது நம் அனைவரதும் தாய்நாடு. இதனை நாம் அனைவரும் இணைந்து பாதுகாப்போம். இந்த நாட்டை முன்னேற்றுவோம்.
அரசாங்கம் எம்மிடம் இருப்பதாலேயே இவை அத்தனையையும் எம்மால் மேற்கொள்ள முடிகிறது. மாகாண சபைகள்.
பிரதேச சபைகள் என அனைத்தும் எம் வசமே உள்ளன. இதன் மூலம் இந்த மாகாணத்தை முன்னேற்றச் செய்து அதன் மூலம் நாட்டையும் முன்னேற்றி உலகை வெற்றிகொள்ள எம்மால் முடியும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இன்றுள்ள சுதந்திரம் இருக்கவில்லை. அதனை மக்கள் மறக்கமாட்டார்கள். சில இடங்களுக்கு எம்மால் போக முடியாமலும் மக்கள் எம்மை நெருங்க முடியாமலும் இருந்த காலம் இந்த நாட்டில் இருந்தது. நாம் அதனை மாற்றியுள்ளோம்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
சொல்வதெல்லாம் சரிதான் பேச்சளவில் இருந்தால் எப்படி
இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அதில் உதித்த அத்தனை பேரும் அதற்கு சொந்தக்காரர்கள் அதை பாகுபோட்டு பிரித்து சொந்தங்கொண்டாடுபவர்களல்லவா உணர வேண்டும்
இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அதில் உதித்த அத்தனை பேரும் அதற்கு சொந்தக்காரர்கள் அதை பாகுபோட்டு பிரித்து சொந்தங்கொண்டாடுபவர்களல்லவா உணர வேண்டும்
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
நான் இலங்கையில் பிறந்தேன்!எனக்கு இலங்கை பிரஜா உரிமை வேண்டும், தருவார்களா என கேட்டு சொல்லுங்கள் இந்த ஜனாதிபதியிடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
சரியாகச்சொன்னீர்கள் வெளியில் இவ்வாறு பேசி விட்டு ஆள் வைத்துப் பேசுகிறார் எவ்வாறென்றால்நேசமுடன் ஹாசிம் wrote:சொல்வதெல்லாம் சரிதான் பேச்சளவில் இருந்தால் எப்படி
இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அதில் உதித்த அத்தனை பேரும் அதற்கு சொந்தக்காரர்கள் அதை பாகுபோட்டு பிரித்து சொந்தங்கொண்டாடுபவர்களல்லவா உணர வேண்டும்
இது சிங்கள நாடு இது பௌத்த நாடு கெட்ட கெட்ட வார்த்தை வாயில் வருது வேண்டாம் !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
Nisha wrote:நான் இலங்கையில் பிறந்தேன்!எனக்கு இலங்கை பிரஜா உரிமை வேண்டும், தருவார்களா என கேட்டு சொல்லுங்கள் இந்த ஜனாதிபதியிடம்!
போங்க அக்கா நாங்களே கடுப்பா இருக்கும் போது நீங்க வேற ஜோக் அடிக்கிறீங்க _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
எங்கே போகனூமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
ஜானாதிபதி என்ன தருவது நான் தருகிறேன் வாங்கNisha wrote:நான் இலங்கையில் பிறந்தேன்!எனக்கு இலங்கை பிரஜா உரிமை வேண்டும், தருவார்களா என கேட்டு சொல்லுங்கள் இந்த ஜனாதிபதியிடம்!
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
நேசமுடன் ஹாசிம் wrote:ஜானாதிபதி என்ன தருவது நான் தருகிறேன் வாங்கNisha wrote:நான் இலங்கையில் பிறந்தேன்!எனக்கு இலங்கை பிரஜா உரிமை வேண்டும், தருவார்களா என கேட்டு சொல்லுங்கள் இந்த ஜனாதிபதியிடம்!
அப்படியா? அப்படியே பிடிச்சு உள்ளே போட்டிருவாங்களே! இலங்கை வருவதா பிரச்சனை! இலங்கை பாஸ்போட் தான் கேன்சலாகிவிடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
Nisha wrote:எங்கே போகனூமாம்?
என்னா வில்லத்தனம் சுவிஸ் பிரஜா உரிமை கிடைத்தும் அங்கயே இருங்க உள்நாட்டு யுத்தமில்லை வஞ்சகமில்லை நல்ல வெள்ள மனிதர்கள் சந்தோசமாக வாழுங்கள் எங்களைப் பார்க்க மட்டும் இலங்கை வாருங்கள் அது போதும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
அப்படின்னால் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
உங்க கிட்ட எனக்குப் பிடித்ததே இந்த அடக்கம்தான் நல்ல பிள்ளை சொக்கிம்மா ^*Nisha wrote:அப்படின்னால் சரி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
நண்பன் wrote:உங்க கிட்ட எனக்குப் பிடித்ததே இந்த அடக்கம்தான் நல்ல பிள்ளை சொக்கிம்மா ^*Nisha wrote:அப்படின்னால் சரி!
ஹாஹா !
ரெம்ப கூலா குளு குளுன்னு இருக்கிங்களா தும்பி!iceiceiceiceice
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
ஆமா ரொம்ப கூலா இருக்கிறேன் (((Nisha wrote:நண்பன் wrote:உங்க கிட்ட எனக்குப் பிடித்ததே இந்த அடக்கம்தான் நல்ல பிள்ளை சொக்கிம்மா ^*Nisha wrote:அப்படின்னால் சரி!
ஹாஹா !
ரெம்ப கூலா குளு குளுன்னு இருக்கிங்களா தும்பி!iceiceiceiceice
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது
» நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான உணவுகள்
» நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாதவர் முஃமினா?
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
» ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
» நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான உணவுகள்
» நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாதவர் முஃமினா?
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
» ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|