Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
கிராமத்து கருவாட்டு குழம்பு
4 posters
Page 1 of 1
கிராமத்து கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
கருவாடு - 200 கிராம்
கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 1 கையளவு
மல்லி தூள் - 50 கிராம்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, பின் அத்துடன் சின்ன வெங்காயம், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் அதனை குளிர வைத்து, மிக்ஸி அல்லது அம்மியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கருவாட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
காய்களானது நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
புளிச்சாறானது நன்கு கொதித்ததும், அதில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கருவாட்டு குழம்பு ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/non-veg/kiramaththu-karuvattu-kuzhambu-006499.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
படிக்கும்போதே நீர் ஊறுது (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
கருவாட்டுக்குழம்பு வாசனை சுவிஸ் வரை வருது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
சொல்ல மறந்துட்டேன் இன்று எங்க ஊர் இருந்து கருவாடும் இறச்சி பொரிச்சும் அப்றம் மீன் பொரிச்சும் அப்றம் இன்னும்மின்னும் நிறைய சாப்பாடு வந்துள்ளது ஒரு நாள் லீவு போட்டு சாப்பிடப்போகிறோம் வெள்ளிக் கிழமை
((( (((
((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
நண்பன் wrote:சொல்ல மறந்துட்டேன் இன்று எங்க ஊர் இருந்து கருவாடும் இறச்சி பொரிச்சும் அப்றம் மீன் பொரிச்சும் அப்றம் இன்னும்மின்னும் நிறைய சாப்பாடு வந்துள்ளது ஒரு நாள் லீவு போட்டு சாப்பிடப்போகிறோம் வெள்ளிக் கிழமை
((( (((
கவிதை கவிதையா கொட்டுவது ஊரை மிஸ்பண்னேன், உலகை மிஸ் பண்ணேன் , நாயை பூனையை நம் மக்களை எல்லாமே மிஸ் பண்ணினேன் என !
உட்கார்ந்து ரசித்து ருசித்து தின்பதெல்லாம் ஊர்வகை சாப்பாடு. இவங்கள் எல்லோரும் எங்களை மாதிரி வந்து மாட்டி இருந்தால் என்னல்லாம் எழுதுவார்களோ?
வாரத்துக்கு நாலு நாள் அது வந்திச்சு இது வந்திச்சு என தனியாவே சாப்பிடுங்க.. அவ்வ்வ்வ்வ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
வயிற்றெரிச்சலின் உச்ச கட்டம் என்று சொல்லல அக்கா சும்மா தமாசுக்கு எழுதி உள்ளார்கள்Nisha wrote:நண்பன் wrote:சொல்ல மறந்துட்டேன் இன்று எங்க ஊர் இருந்து கருவாடும் இறச்சி பொரிச்சும் அப்றம் மீன் பொரிச்சும் அப்றம் இன்னும்மின்னும் நிறைய சாப்பாடு வந்துள்ளது ஒரு நாள் லீவு போட்டு சாப்பிடப்போகிறோம் வெள்ளிக் கிழமை
((( (((
கவிதை கவிதையா கொட்டுவது ஊரை மிஸ்பண்னேன், உலகை மிஸ் பண்ணேன் , நாயை பூனையை நம் மக்களை எல்லாமே மிஸ் பண்ணினேன் என !
உட்கார்ந்து ரசித்து ருசித்து தின்பதெல்லாம் ஊர்வகை சாப்பாடு. இவங்கள் எல்லோரும் எங்களை மாதிரி வந்து மாட்டி இருந்தால் என்னல்லாம் எழுதுவார்களோ?
வாரத்துக்கு நாலு நாள் அது வந்திச்சு இது வந்திச்சு என தனியாவே சாப்பிடுங்க.. அவ்வ்வ்வ்வ்
அக்கா உயிர் பிரியும் வேளையில் தேன் அருந்துவது போல்தான் எங்களுக்கு நாட்டிலிருந்து வரும் பொருட்கள் கருவாடு பாவக்காய் பழுதுலங்காய் எல்லாம் கிடைக்கும் போது கவலைகள் மறந்து ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாக அதிக எண்ணங்களோடு அவர்களையும் நினைத்து அவர்கள் ஊட்டுவது போன்றும் கொஞ்ச நேரம்
சில நாட்களுக்கு வைத்திருந்தும் சாப்பிடுவோம் அவர்கள் நினைவாக பிறகு தொடரும் சோகங்களுடன் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
நான் சும்மா சொன்னேன்பா! எனக்கு அது புரியும். புரியாட்டால் மனிதராயிருக்க இயலாது.
நான் ச்ச்ச்ச்ச்சும்மம்ம்ம்ம்ம்மா கலாய்த்தேனாக்கும் !
நான் ச்ச்ச்ச்ச்சும்மம்ம்ம்ம்ம்மா கலாய்த்தேனாக்கும் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
புரிதலுக்கு நன்றிஅக்கா )( )(Nisha wrote:நான் சும்மா சொன்னேன்பா! எனக்கு அது புரியும். புரியாட்டால் மனிதராயிருக்க இயலாது.
நான் ச்ச்ச்ச்ச்சும்மம்ம்ம்ம்ம்மா கலாய்த்தேனாக்கும் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
ஆனாலும் ஒரு விடயம் நீங்கள் சரியாக புரிந்திடணும்பா.. தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகள் சென்றவர்கள் ஓரிரு வருடங்கள் ஒரு முறையாவது தம் குடும்பத்தினரை சந்தித்து அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் ஏதாவது பொருட்கள் அனுப்பி என தொடர்பில் இருக்க முடியிது.
அகதியென புறப்பட்டு நாடோடியாய் ஐரோப்பிய நாடுகள் வந்தோர் நிலை நீங்கள் நினைத்து பார்க்கவே இயலாத சோகங்கள் உடையதுப்பா..
உதாரணமாய் என் வீட்டையே எடுத்தால் .. என் அப்பா எங்களை விட்டு பிரியும் போது என் கடைசி தங்கைக்கு ஆறு மாதம்... மீண்டும் அவர் அவளை கண்டது அவள் 16 வயதில்.. அதுவரை போட்டோவில் கண்டது தான்.. அப்போவெல்லாம் இப்போது போல் தொலைபேசி இணைய வசதி இல்லையே..
ஊரிலிருக்கும் ஹாஸ்பிடலுக்கு அல்லது போஸ்ட் ஆபிஸுக்கு போன் செய்து தகவல் சொல்லி அவர்கள் சொன்ன நேரம் போய் காத்திருந்து தான் பேசுவோம்.
நானே கூட என் சகோதரர்களை விட்டு வரும் போது என் வயது 15 மீண்டும் 13 வருடங்கள் பின் தான் அவர்களை சந்தித்தேன்.. இத்தனை இடைவெளி இருக்க பாசம் எங்கிருந்துப்பா வரும்..?
அகதியென புறப்பட்டு நாடோடியாய் ஐரோப்பிய நாடுகள் வந்தோர் நிலை நீங்கள் நினைத்து பார்க்கவே இயலாத சோகங்கள் உடையதுப்பா..
உதாரணமாய் என் வீட்டையே எடுத்தால் .. என் அப்பா எங்களை விட்டு பிரியும் போது என் கடைசி தங்கைக்கு ஆறு மாதம்... மீண்டும் அவர் அவளை கண்டது அவள் 16 வயதில்.. அதுவரை போட்டோவில் கண்டது தான்.. அப்போவெல்லாம் இப்போது போல் தொலைபேசி இணைய வசதி இல்லையே..
ஊரிலிருக்கும் ஹாஸ்பிடலுக்கு அல்லது போஸ்ட் ஆபிஸுக்கு போன் செய்து தகவல் சொல்லி அவர்கள் சொன்ன நேரம் போய் காத்திருந்து தான் பேசுவோம்.
நானே கூட என் சகோதரர்களை விட்டு வரும் போது என் வயது 15 மீண்டும் 13 வருடங்கள் பின் தான் அவர்களை சந்தித்தேன்.. இத்தனை இடைவெளி இருக்க பாசம் எங்கிருந்துப்பா வரும்..?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
நீங்கள் மறக்க நினைப்பது அது நாங்கள் எங்கள் கஷ்டங்களை மறப்பது எப்படி தெரியும் தானே எங்களை விட பல மடங்கு கவலை கஷ்டம் பாசத்திற்கு ஏக்கம் என பல கோடி மக்கள் ஐரொப்பாவில் வாழ்கிறார்கள் அவர்களை நினைத்து எங்கள் கவலைகள் மறந்தே போகும்
ஆனால் உங்கள் நிலை நாங்கள் மறப்பதிற்கில்லை இதயம் உள்ள அனைவரும் ஈரம் உள்ள அனைவரும் அறிந்திருப்பார்கள்..
அமெரிககாவில் ஐரோப்பாவில் உள்ளார்கள் என்று நாங்கள் உங்களைச் சொன்னாலும் உங்கள் உள்ளக்குமுறல் என்ன என்பதை நாங்கள் நான் அறிவேன்
ஆனால் உங்கள் நிலை நாங்கள் மறப்பதிற்கில்லை இதயம் உள்ள அனைவரும் ஈரம் உள்ள அனைவரும் அறிந்திருப்பார்கள்..
அமெரிககாவில் ஐரோப்பாவில் உள்ளார்கள் என்று நாங்கள் உங்களைச் சொன்னாலும் உங்கள் உள்ளக்குமுறல் என்ன என்பதை நாங்கள் நான் அறிவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
உங்கள் பேஸ்புக் மெயிலில் ஒரு விடியோ ஷேர் செய்திருக்கேன் பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராமத்து கருவாட்டு குழம்பு
அங்கு பதில் கொடுத்து விட்டேன் பாருங்கள் _*Nisha wrote:உங்கள் பேஸ்புக் மெயிலில் ஒரு விடியோ ஷேர் செய்திருக்கேன் பாருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிராமத்து பச்சை மொச்சை குழம்பு
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கிராமத்து ஏழை
» கிராமத்து காட்சி.
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கிராமத்து ஏழை
» கிராமத்து காட்சி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|