Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters
Page 23 of 25
Page 23 of 25 • 1 ... 13 ... 22, 23, 24, 25
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
First topic message reminder :
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அனுபவத்தை மதிக்கிறேன் அக்காNisha wrote:தனிமையிலே இனிமை காண முடியும் என்கின்றீர்கள் பர்சான்!
எல்லா நேரமும் தனிமை இனிமையாகாது என்பது இனி வரும் காலத்தில் புரியும்.
முன்னொரு காலத்தில் நானும் தனிமை விரும்பி தான். அந்த அனுபவத்தில் சொன்னேன்.
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஆமாம் அக்கா எனக்கும் சரியாக நினைவில்லை அந்த அனுபவம் இரண்டு மூன்று வயதிருக்கும் இரவு படம்பார்க்க விடமாட்டார்கள் பொன்மாலை பொழுது நானும் அக்காவும் விடாமல் பார்க்க போவோம் அதிலும் நான் பாதியில் தூங்கிவிடுவேன்Nisha wrote:ஞாயிறு பகல் பொன்மாலை பொழுது பார்த்தது
இன்னும் இனிக்கும் பொழுதுகள் நினைக்கும் போதெல்லாம்...!!
மாதம் ஒரு முறை தமிழ் திரைப்படம்
அட உங்களுக்கு நினைவிருக்கா பர்சான்!
ரூபவாகினியில் போடும் படம் தானே.. பொன்மாலை பொழுதுடன், உதயகீதம், ஒலி ஒளியையும் சேர்த்திருக்கலாம்ல!
டீவி வைத்திருக்கும் பக்கத்து வீட்டில் ஒத்தை குட்டி டீவி முன்னாடி வீட்டு ஹாலிலிருந்து முற்றம் வரை உட்கார்ந்திருந்து படம் பார்த்து விட்டு நடு இரவில் கூட்டமாய் வீடு திரும்பும் அந்தக்கால இன்பம் பெரிய திரை போல் டீவியை நம் வீட்டு ஹாலில் வைத்து தனியே பார்க்கும் போது இல்லையே!
அப்போவெல்லாம் படம் பார்க்கவென போகும் போது குளிருக்கு பாதுகாப்பாக அப்பாவின் சாரம் ஒன்றை எடுத்து அதற்குள் நுழைந்து தலையிலிருந்து போர்த்திட்டு போய் படம் பாதியில் போகும் போதே தூங்கிருவோம். படம் முடிந்ததும் அம்மா எழுப்பி கூட்டிட்டு வருவா.. எப்பவுமே முழுதாக படம் பார்த்த நினைவில் இல்லப்பா!ஆரவரமாய் ஆரம்பித்து தூங்கிருவோம்.
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உண்மைதான் அன்று உண்மையான உறவுகள் பக்கத்து வீடுகளில் இருதார்கள் ஆனால் இன்று பக்கத்தில் இருக்கும் குடும்பம் யாரெண்டே தெரியாத காலம்...*சம்ஸ் wrote:Nisha wrote:ஞாயிறு பகல் பொன்மாலை பொழுது பார்த்தது
இன்னும் இனிக்கும் பொழுதுகள் நினைக்கும் போதெல்லாம்...!!
மாதம் ஒரு முறை தமிழ் திரைப்படம்
அட உங்களுக்கு நினைவிருக்கா பர்சான்!
ரூபவாகினியில் போடும் படம் தானே.. பொன்மாலை பொழுதுடன், உதயகீதம், ஒலி ஒளியையும் சேர்த்திருக்கலாம்ல!
டீவி வைத்திருக்கும் பக்கத்து வீட்டில் ஒத்தை குட்டி டீவி முன்னாடி வீட்டு ஹாலிலிருந்து முற்றம் வரை உட்கார்ந்திருந்து படம் பார்த்து விட்டு நடு இரவில் கூட்டமாய் வீடு திரும்பும் அந்தக்கால இன்பம் பெரிய திரை போல் டீவியை நம் வீட்டு ஹாலில் வைத்து தனியே பார்க்கும் போது இல்லையே!
அப்போவெல்லாம் படம் பார்க்கவென போகும் போது குளிருக்கு பாதுகாப்பாக அப்பாவின் சாரம் ஒன்றை எடுத்து அதற்குள் நுழைந்து தலையிலிருந்து போர்த்திட்டு போய் படம் பாதியில் போகும் போதே தூங்கிருவோம். படம் முடிந்ததும் அம்மா எழுப்பி கூட்டிட்டு வருவா.. எப்பவுமே முழுதாக படம் பார்த்த நினைவில் இல்லப்பா!ஆரவரமாய் ஆரம்பித்து தூங்கிருவோம்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!அந்த நாள் ஞாபகம் வருதே! அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. மீண்டும் வராது மீளப் பெறமுடியாதது அந்த நாள்.நல்ல மனசி உள்ள மனிதர்கள் நடமாடிய மகத்தான நாட்கள் அது.இன்று வசதிகளும் வீன் சிலவும் ஆடம்பரமும் அதிகரித்து அடுத்தவரை மதிக்க தெரியவர்கள் பாரில்.உறவுகள் செந்தங்கள் அடுத்த வீட்டார்கள் என்று கலகலப்பாக கதைகள் பேசி கலந்து மகிழ்ந்த நாட்கள் அது.
இதற்கு நல்ல உதாரணம்
-------------------------
ஒரு மனிதரை இன்னொரு மனிதர் சந்தித்து இருக்கிறார் அப்போது அவர் கேட்டிரிக்கிறார் உங்களை எங்கயோ பார்த்திரிக்கிறேன் Facebook, tweeterla இருக்கின்கிங்களா என்று
அதற்க்கு மற்றவர் சொல்லி இருக்குகிறார் இல்ல சார் நான் உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரல் என்று.
பாருங்களன் இதுதான் இன்றைய நவீன காலம்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க நன்றி குமார் ஐயா..!!சே.குமார் wrote:ஆஹா.... அந்தச் சுகம் அலாதியானது.
அருமையான கவிதையாய் நினைவலைகள்...
நினைவுகள் என்றும் அருமை அழியாதவை
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க நன்றி காயத்ரி அக்காகாயத்ரி வைத்தியநாதன் wrote:
- Code:
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.
அழகிய காலமும் கூட...கவித்துளிகள் அற்புதம்....
உங்கள் வாழ்த்துக்கள் என்னை சந்தோசபடுத்துகிறது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:உண்மைதான் அன்று உண்மையான உறவுகள் பக்கத்து வீடுகளில் இருதார்கள் ஆனால் இன்று பக்கத்தில் இருக்கும் குடும்பம் யாரெண்டே தெரியாத காலம்...*சம்ஸ் wrote:Nisha wrote:ஞாயிறு பகல் பொன்மாலை பொழுது பார்த்தது
இன்னும் இனிக்கும் பொழுதுகள் நினைக்கும் போதெல்லாம்...!!
மாதம் ஒரு முறை தமிழ் திரைப்படம்
அட உங்களுக்கு நினைவிருக்கா பர்சான்!
ரூபவாகினியில் போடும் படம் தானே.. பொன்மாலை பொழுதுடன், உதயகீதம், ஒலி ஒளியையும் சேர்த்திருக்கலாம்ல!
டீவி வைத்திருக்கும் பக்கத்து வீட்டில் ஒத்தை குட்டி டீவி முன்னாடி வீட்டு ஹாலிலிருந்து முற்றம் வரை உட்கார்ந்திருந்து படம் பார்த்து விட்டு நடு இரவில் கூட்டமாய் வீடு திரும்பும் அந்தக்கால இன்பம் பெரிய திரை போல் டீவியை நம் வீட்டு ஹாலில் வைத்து தனியே பார்க்கும் போது இல்லையே!
அப்போவெல்லாம் படம் பார்க்கவென போகும் போது குளிருக்கு பாதுகாப்பாக அப்பாவின் சாரம் ஒன்றை எடுத்து அதற்குள் நுழைந்து தலையிலிருந்து போர்த்திட்டு போய் படம் பாதியில் போகும் போதே தூங்கிருவோம். படம் முடிந்ததும் அம்மா எழுப்பி கூட்டிட்டு வருவா.. எப்பவுமே முழுதாக படம் பார்த்த நினைவில் இல்லப்பா!ஆரவரமாய் ஆரம்பித்து தூங்கிருவோம்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!அந்த நாள் ஞாபகம் வருதே! அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. மீண்டும் வராது மீளப் பெறமுடியாதது அந்த நாள்.நல்ல மனசி உள்ள மனிதர்கள் நடமாடிய மகத்தான நாட்கள் அது.இன்று வசதிகளும் வீன் சிலவும் ஆடம்பரமும் அதிகரித்து அடுத்தவரை மதிக்க தெரியவர்கள் பாரில்.உறவுகள் செந்தங்கள் அடுத்த வீட்டார்கள் என்று கலகலப்பாக கதைகள் பேசி கலந்து மகிழ்ந்த நாட்கள் அது.
இதற்கு நல்ல உதாரணம்
-------------------------
ஒரு மனிதரை இன்னொரு மனிதர் சந்தித்து இருக்கிறார் அப்போது அவர் கேட்டிரிக்கிறார் உங்களை எங்கயோ பார்த்திரிக்கிறேன் Facebook, tweeterla இருக்கின்கிங்களா என்று
அதற்க்கு மற்றவர் சொல்லி இருக்குகிறார் இல்ல சார் நான் உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரல் என்று.
பாருங்களன் இதுதான் இன்றைய நவீன காலம்
அன்று பார்த்து பேசிய பழகிய காலம் சென்று இன்று பார்காமல் சட்டிங் செய்யும் காலம் இன்றய முகவரி முகநூல்,ஏனனைய இணையதளங்கள் என்றாகி விட்டது சர்சான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
என்னய்யா இப்புடி டப்புன்னு ஐயா போட்டுட்டீங்க... இன்னும் 40க்குள்ளயே போகலையே ஐயா... கொஞ்சம் மாசம் இருக்கேய்யா...Farsan S Muhammad wrote:மிக்க நன்றி குமார் ஐயா..!!சே.குமார் wrote:ஆஹா.... அந்தச் சுகம் அலாதியானது.
அருமையான கவிதையாய் நினைவலைகள்...
நினைவுகள் என்றும் அருமை அழியாதவை
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
சே.குமார் wrote:என்னய்யா இப்புடி டப்புன்னு ஐயா போட்டுட்டீங்க... இன்னும் 40க்குள்ளயே போகலையே ஐயா... கொஞ்சம் மாசம் இருக்கேய்யா...Farsan S Muhammad wrote:மிக்க நன்றி குமார் ஐயா..!!சே.குமார் wrote:ஆஹா.... அந்தச் சுகம் அலாதியானது.
அருமையான கவிதையாய் நினைவலைகள்...
நினைவுகள் என்றும் அருமை அழியாதவை
இதென்ன புதுக்கவலையா?
பர்சான் உங்களை விட பெரியவருப்பா.. நீங்க அவரை தாத்தா என அழைப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
குமார் ஐயாவும் நல்லாத்தான் இருக்குப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
சே.குமார் wrote:என்னய்யா இப்புடி டப்புன்னு ஐயா போட்டுட்டீங்க... இன்னும் 40க்குள்ளயே போகலையே ஐயா... கொஞ்சம் மாசம் இருக்கேய்யா...Farsan S Muhammad wrote:மிக்க நன்றி குமார் ஐயா..!!சே.குமார் wrote:ஆஹா.... அந்தச் சுகம் அலாதியானது.
அருமையான கவிதையாய் நினைவலைகள்...
நினைவுகள் என்றும் அருமை அழியாதவை
40க்குள்ள போனால் ஐயா சொல்லாம் அப்படியா? குமார் ஐயா!
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
என் கைகளால்
என் கண்களை
குத்துகின்றேன்
மறு கை
தடுக்கின்றது
வேண்டாம்
விட்டுவிடு என்று
விடிந்து
பார்க்கிறேன்
காயங்கள்
எதுவும் இல்லை
அப்போதுதான்
அறிந்து
கொண்டேன்
அது இரவு
கண்ட கனவில்
தொக்கி நின்ற
சில
நினைவுகள் என்று.....!
என் கண்களை
குத்துகின்றேன்
மறு கை
தடுக்கின்றது
வேண்டாம்
விட்டுவிடு என்று
விடிந்து
பார்க்கிறேன்
காயங்கள்
எதுவும் இல்லை
அப்போதுதான்
அறிந்து
கொண்டேன்
அது இரவு
கண்ட கனவில்
தொக்கி நின்ற
சில
நினைவுகள் என்று.....!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஐயோ...!! அப்படி அர்த்தப்பட சொல்லவில்லை உங்கள் படைப்புக்களை கௌரவிக்கவே ஐயா என்று சொன்னேன் தவறிருந்தால் மன்னிக்கவும்சே.குமார் wrote:என்னய்யா இப்புடி டப்புன்னு ஐயா போட்டுட்டீங்க... இன்னும் 40க்குள்ளயே போகலையே ஐயா... கொஞ்சம் மாசம் இருக்கேய்யா...Farsan S Muhammad wrote:மிக்க நன்றி குமார் ஐயா..!!சே.குமார் wrote:ஆஹா.... அந்தச் சுகம் அலாதியானது.
அருமையான கவிதையாய் நினைவலைகள்...
நினைவுகள் என்றும் அருமை அழியாதவை
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மன்னிப்பெல்லாம் எதுக்குங்க...Farsan S Muhammad wrote:ஐயோ...!! அப்படி அர்த்தப்பட சொல்லவில்லை உங்கள் படைப்புக்களை கௌரவிக்கவே ஐயா என்று சொன்னேன் தவறிருந்தால் மன்னிக்கவும்சே.குமார் wrote:என்னய்யா இப்புடி டப்புன்னு ஐயா போட்டுட்டீங்க... இன்னும் 40க்குள்ளயே போகலையே ஐயா... கொஞ்சம் மாசம் இருக்கேய்யா...Farsan S Muhammad wrote:மிக்க நன்றி குமார் ஐயா..!!சே.குமார் wrote:ஆஹா.... அந்தச் சுகம் அலாதியானது.
அருமையான கவிதையாய் நினைவலைகள்...
நினைவுகள் என்றும் அருமை அழியாதவை
நானும் ஜாலிக்குத்தான் சொன்னேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பள்ளித் தோழர்கள்
****************
பற்களால் சீவிய பென்சில்
உமிழ்நீரால் அளித்த எழுத்துக்கள்
புத்தகத்திற்குள் வைத்த மயில் இறகு...!!
மேசையில் வரைந்த இரட்டை பெயர்கள்
கிழித்தெறிந்த காதல் கடிதங்கள்
குழுக்களுக்கிடையில் நடந்த போட்டிகள்...!!
பாலைமரத்தடி பாடம்
பக்கத்து வீட்டு குச்சி ஐஸ்
பாட்டி விற்கும் கச்சான் சுருள்...!!
கெண்டீன் கடை முண்டியடிப்பு
தாமதித்து வந்து வாங்கிய அடிகள்
வெண்கட்டி துண்டு சண்டைகள்
வெள்ளாடையில் படிந்த கறைகள்...!!
அத்தனையையும் என்று நினைத்தாலும்
கண்ணீர் துளிகளே பதில் சொல்கின்றது....!!
உலகில் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும்
எங்கள் நினைவுகளை என்றும்
அசைபோட்டுக்கொண்டே இருப்பார்கள்....!!
எங்கள் பாடசாலை உறவுகள்
என்றோ ஓர் நாள் ஒன்று சேர்வோம்
என்ற நம்பிக்கையுடன் கழிகின்றது நாட்கள் ...!!
****************
பற்களால் சீவிய பென்சில்
உமிழ்நீரால் அளித்த எழுத்துக்கள்
புத்தகத்திற்குள் வைத்த மயில் இறகு...!!
மேசையில் வரைந்த இரட்டை பெயர்கள்
கிழித்தெறிந்த காதல் கடிதங்கள்
குழுக்களுக்கிடையில் நடந்த போட்டிகள்...!!
பாலைமரத்தடி பாடம்
பக்கத்து வீட்டு குச்சி ஐஸ்
பாட்டி விற்கும் கச்சான் சுருள்...!!
கெண்டீன் கடை முண்டியடிப்பு
தாமதித்து வந்து வாங்கிய அடிகள்
வெண்கட்டி துண்டு சண்டைகள்
வெள்ளாடையில் படிந்த கறைகள்...!!
அத்தனையையும் என்று நினைத்தாலும்
கண்ணீர் துளிகளே பதில் சொல்கின்றது....!!
உலகில் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும்
எங்கள் நினைவுகளை என்றும்
அசைபோட்டுக்கொண்டே இருப்பார்கள்....!!
எங்கள் பாடசாலை உறவுகள்
என்றோ ஓர் நாள் ஒன்று சேர்வோம்
என்ற நம்பிக்கையுடன் கழிகின்றது நாட்கள் ...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
தேடல்கள்
*********
என் தேடல்கள் தொடர்ந்து
கொண்டே இருக்கின்றன
ஆனாலும் தேவைகள் முடிந்தபாடில்லை...!
என் தேடலின் ஆரம்பம் நான் பிறந்த அன்றே
என் அன்னையின் மார்பில் தாய்ப்பால்
புசிப்பதற்கான தேடலாய் இருந்திருக்கும்...!
அதில் இருந்து தேடல்கள் காலம் முழுக்க
தொடரூர்தியாய் தொடர்ந்து கொண்டே
போகின்றது பெட்டிகள் மாறுகிறதே ஒழிய
என் தேடலுக்கான பயணம்
தொடர்ந்து கொண்டே செல்கின்றது...!
என் தேடல் என்று முற்றுப்பெறுகிறதோ
அன்று என் மூச்சு முற்றுப்பெற்றிருக்கும் ..!
என் வாழ்வில் தேடல்களே வாழ்க்கையை
வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற
உந்துதலை என்னுள் விதைக்கின்றது...!
அதன் பரிணாமமே வாழ்க்கையில்
சிலபல போராட்டங்களை
சந்திக்க வேண்டி இருக்கின்றது...!
அதில் வெற்றியோ தோல்வியோ
தேடல் முற்றுப்பெறுவதில்லை
அதன் அடுத்த நகர்வு
அதில் இருந்து ஆரம்பிக்கிறது மீண்டும் ...!!
*********
என் தேடல்கள் தொடர்ந்து
கொண்டே இருக்கின்றன
ஆனாலும் தேவைகள் முடிந்தபாடில்லை...!
என் தேடலின் ஆரம்பம் நான் பிறந்த அன்றே
என் அன்னையின் மார்பில் தாய்ப்பால்
புசிப்பதற்கான தேடலாய் இருந்திருக்கும்...!
அதில் இருந்து தேடல்கள் காலம் முழுக்க
தொடரூர்தியாய் தொடர்ந்து கொண்டே
போகின்றது பெட்டிகள் மாறுகிறதே ஒழிய
என் தேடலுக்கான பயணம்
தொடர்ந்து கொண்டே செல்கின்றது...!
என் தேடல் என்று முற்றுப்பெறுகிறதோ
அன்று என் மூச்சு முற்றுப்பெற்றிருக்கும் ..!
என் வாழ்வில் தேடல்களே வாழ்க்கையை
வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற
உந்துதலை என்னுள் விதைக்கின்றது...!
அதன் பரிணாமமே வாழ்க்கையில்
சிலபல போராட்டங்களை
சந்திக்க வேண்டி இருக்கின்றது...!
அதில் வெற்றியோ தோல்வியோ
தேடல் முற்றுப்பெறுவதில்லை
அதன் அடுத்த நகர்வு
அதில் இருந்து ஆரம்பிக்கிறது மீண்டும் ...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
தேடல்கள் தொடர்கிறது தேவைகள் முடியவில்லை .தேவை முடியும் நாள்
மூச்சு முற்றுப்பெற்றிருக்கும் என்று வாழ்க்கையின் தேவைகளை தொடும் உங்கள் வரிகள் அருமை வாழ்த்துக்கள் பர்சான்.
மூச்சு முற்றுப்பெற்றிருக்கும் என்று வாழ்க்கையின் தேவைகளை தொடும் உங்கள் வரிகள் அருமை வாழ்த்துக்கள் பர்சான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
thedal kavi arumai
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
சின்னச்சின்ன நினைவுகள்
நான் நடந்து வந்த பாதையின்
வண்ண வண்ண கனவுகளை
வாஞ்சையோடு மீட்டிப்பார்க்கிறேன்...!!
அன்னையின் அரவணைப்பில் மழலைக்காலம்
பசுமை நிறைந்த பாடசாலை காலம்
பரவசம் பொங்கும் பதின்ம காலம்
இனிமை நிறைந்த இளவேனிற் காலம்
அழகு நிறைந்த அத்தனை காலங்களும் அற்புதமே...!!
சில நினைவுகள் என்னை மீட்டிப்பார்கின்றன
சில நினைவுகள் கண்களை குளமாக்கின்றன
சில நினைவுகள் என் இதயத்தை கனதியாக்குகின்றது...!!
சிலதை நினைக்கையில் சுவையாக இருக்கின்றது
சிலதை நினைக்கையில் சுமையாக இருக்கின்றது
சிலதை நினைக்கையில் சுவாரஷ்யமாக இருக்கின்றது...!!
தெவிட்டாத தேன் சிந்தும் அத்தனை
நினைவுகளும் என்றும் அருமையே...!!
நான் நடந்து வந்த பாதையின்
வண்ண வண்ண கனவுகளை
வாஞ்சையோடு மீட்டிப்பார்க்கிறேன்...!!
அன்னையின் அரவணைப்பில் மழலைக்காலம்
பசுமை நிறைந்த பாடசாலை காலம்
பரவசம் பொங்கும் பதின்ம காலம்
இனிமை நிறைந்த இளவேனிற் காலம்
அழகு நிறைந்த அத்தனை காலங்களும் அற்புதமே...!!
சில நினைவுகள் என்னை மீட்டிப்பார்கின்றன
சில நினைவுகள் கண்களை குளமாக்கின்றன
சில நினைவுகள் என் இதயத்தை கனதியாக்குகின்றது...!!
சிலதை நினைக்கையில் சுவையாக இருக்கின்றது
சிலதை நினைக்கையில் சுமையாக இருக்கின்றது
சிலதை நினைக்கையில் சுவாரஷ்யமாக இருக்கின்றது...!!
தெவிட்டாத தேன் சிந்தும் அத்தனை
நினைவுகளும் என்றும் அருமையே...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க நன்றி தேடல் இல்லாத வாழ்க்கை முற்றுபெறுவதில்லை*சம்ஸ் wrote:தேடல்கள் தொடர்கிறது தேவைகள் முடியவில்லை .தேவை முடியும் நாள்
மூச்சு முற்றுப்பெற்றிருக்கும் என்று வாழ்க்கையின் தேவைகளை தொடும் உங்கள் வரிகள் அருமை வாழ்த்துக்கள் பர்சான்.
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க நன்றி சகோதரிபானுஷபானா wrote:thedal kavi arumai
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி நன்றி உங்கள் கைதட்டலே என் கைகளை இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறதுansar hayath wrote:
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நாளை
******
தேடலுக்கு நாளை என்பது உற்சாகம்
தேடியவனுக்கு நாளை என்பது நிம்மதி
ஏழைக்கு நாளை என்பது வெறுமை
வெற்றியாளனுக்கு நாளை என்பது பெருமை
கோழைக்கு நாளை என்பது பகைமை
படைப்பாளனுக்கு நாளை என்பது புதுமை
இளமைக்கு நாளை என்பது முதுமை
பொய்மைக்கு நாளை என்பது பயம்
உண்மைக்கு நாளை என்பது வெற்றி...!!
******
தேடலுக்கு நாளை என்பது உற்சாகம்
தேடியவனுக்கு நாளை என்பது நிம்மதி
ஏழைக்கு நாளை என்பது வெறுமை
வெற்றியாளனுக்கு நாளை என்பது பெருமை
கோழைக்கு நாளை என்பது பகைமை
படைப்பாளனுக்கு நாளை என்பது புதுமை
இளமைக்கு நாளை என்பது முதுமை
பொய்மைக்கு நாளை என்பது பயம்
உண்மைக்கு நாளை என்பது வெற்றி...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:நாளை
******
தேடலுக்கு நாளை என்பது உற்சாகம்
தேடியவனுக்கு நாளை என்பது நிம்மதி
ஏழைக்கு நாளை என்பது வெறுமை
வெற்றியாளனுக்கு நாளை என்பது பெருமை
கோழைக்கு நாளை என்பது பகைமை
படைப்பாளனுக்கு நாளை என்பது புதுமை
இளமைக்கு நாளை என்பது முதுமை
பொய்மைக்கு நாளை என்பது பயம்
உண்மைக்கு நாளை என்பது வெற்றி...!!
ARUMAI FARSAN
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி நட்பேபானுஷபானா wrote:Farsan S Muhammad wrote:நாளை
******
தேடலுக்கு நாளை என்பது உற்சாகம்
தேடியவனுக்கு நாளை என்பது நிம்மதி
ஏழைக்கு நாளை என்பது வெறுமை
வெற்றியாளனுக்கு நாளை என்பது பெருமை
கோழைக்கு நாளை என்பது பகைமை
படைப்பாளனுக்கு நாளை என்பது புதுமை
இளமைக்கு நாளை என்பது முதுமை
பொய்மைக்கு நாளை என்பது பயம்
உண்மைக்கு நாளை என்பது வெற்றி...!!
ARUMAI FARSAN
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மொத்தத்தில் நாளை என்பது நமக்கே!
கவிதையாய் நல்ல கருத்து பகிர்ந்த பர்சானுக்கு நன்றி.
கவிதையாய் நல்ல கருத்து பகிர்ந்த பர்சானுக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 23 of 25 • 1 ... 13 ... 22, 23, 24, 25
Page 23 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|