சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Khan11

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

+2
சுறா
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Jan 2015 - 7:42

சிறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் கோசியார்பூரை சேந்தவர் ஜஸ்வீர்சிங். இவரது மனைவி சோனியா. அதே பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மா என்பவரின் மகன் ஹரிவர்மா. இவன் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது ஜஸ்வீர் சிங்சோனியா இருவரும் ஹரிவர்மாவை காரில் கடத்தி சென்றனர். 
பின்னர் அவனது தந்தை ரவிவர்மா விடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அவர் பணம் தரமறுத்ததால் ஈவு இரக்கமின்றி ஹரிவர்மாவை கொன்று வீசினர். இவ்வழக்கை விசாரித்த கோசியார்பூர் நீதிமன்றம் ஜஸ்வீர்சிங் சோனியா அவர்களுக்கு உடந்தையாக இருந்த விக்ரம் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது. 
இதையடுத்து 3 பேரும் தண்டனையை குறைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சோனியாவுக்கு விடுக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. ஜஸ்வீர் சிங்கின் தண்டனையை குறைக்க மறுத்து விட்டது. இருவரும் தற்போது பாட்டியாலா சிறையில் தனித்தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தாம்பத்ய உரிமை வழக்கு தொடர்ந்தனர். 
அதில், எங்களுக்கு திருமணமாகி 8வது மாதத்திலேயே கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளோம். நாங்கள் இறப்பதற்கு முன்பு சிறையிலேயே குழந்தை பெற விரும்புகிறோம். இதற்காக இருவரையும் பொது ஜெயிலுக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஐஸ்வீர்சிங் சோனியாவின் இந்த கோரிக்கைக்கு கொலையுண்ட சிறுவனின் தந்தை ரவிவர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 
அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இருவரும் ஜெயிலில் குழந்தை பெற உயர்நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என்று குறிப்பிட்டார். இருவரும் சேர்ந்து எனது மகனை கொன்று குடும்பத்தையே சீரழித்து விட்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை தேவைதானா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிட்டியை நியமித்தது. இதனையடுத்து அந்த கமிட்டி விசாரணை மேற்கொண்டு கைதிகள் தாம்பத்ய உறவு கொள்ளவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் தடையில்லை என்று பரிந்துரைத்தது. இந்த நிலையில் நேற்று பஞ்சாப்  ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பரபரப்பு தீர்ப்பினை அளித்தார். 
சிறையில் இருக்கும் தம்பதியர் தாம்பத்ய உறவு கொள்ளவதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் அவர்களின் அடிப்படை உரிமை என்று தெரிவித்த நீதிமன்றம், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள கணவனுடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள மனைவி தாம்பத்ய உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள தடையில்லை எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தது.
நன்றி தினக்குரல் 


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 10:26

ஆனா வெளிய யாராவது காவலுக்கு இருக்கனும் சரிதானே ஹிஹி.

கேடுகெட்ட தீர்ப்பு. கொலைகார கடத்தல் பாவிகளுக்கும் உரிமைகள் இருக்கா என்ன? இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா? அவனுக்கு எதற்கு குழந்தை. கொலைகாரனின் குழந்தை என்ற அவப்பெயருடன் ஒருகுழந்தை பிறந்து அதன் வாழ்நாள் முழுவதும் மனம் சங்கடப்படுவது மட்டும் அந்த குழந்தையின் உரிமையில் தலையிடுவதாகாதா? அடப்போங்கப்பா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Jan 2015 - 10:41

ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by பானுஷபானா Sat 10 Jan 2015 - 11:26

குழந்தை இவுங்களுக்கு ரொம்ப முக்கியம்  சுட்டுத்தள்ளு.!!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 18:48

நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??

இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Jan 2015 - 18:57

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??

இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையா


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 19:15

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??

இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையா

தம்பி உங்கள் கருணை உள்ளம் புரிகிறது. நான் சிக்கன் மட்டன் இவைகளை கொல்லவில்லை. ஆனால் கொன்ற இறைச்சியை தான் வாங்கி வந்து உண்பேன் :)

நீங்கள் சொல்லும் புல் பூண்டு போன்றவற்றில் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் உயிர்கள் தான் நானும் அறிவேன்.

சிறுபிள்ளையை கடத்தி 10 லட்சம் கேட்டு அதை கொன்றும் விட்டான். அது மிகப்பெரிய தவறாயிற்றே. சரி கடவுளின் பார்வையில் அவனுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது அதனால் தான் என்னவோ கோர்ட் அப்படி தீர்ப்பு கொடுத்திருக்கிறது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Jan 2015 - 19:41

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??

இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையா

தம்பி உங்கள் கருணை உள்ளம் புரிகிறது. நான் சிக்கன் மட்டன் இவைகளை கொல்லவில்லை. ஆனால் கொன்ற இறைச்சியை தான் வாங்கி வந்து உண்பேன் :)

நீங்கள் சொல்லும் புல் பூண்டு போன்றவற்றில் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் உயிர்கள் தான் நானும் அறிவேன்.

சிறுபிள்ளையை கடத்தி 10 லட்சம் கேட்டு அதை கொன்றும் விட்டான். அது மிகப்பெரிய தவறாயிற்றே. சரி கடவுளின் பார்வையில் அவனுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது அதனால் தான் என்னவோ கோர்ட் அப்படி தீர்ப்பு கொடுத்திருக்கிறது
அதைத்தான் நான் சொல்ல வந்தேன் அண்ணா கருணை உள்ளமும் மனித இயல்புதானே ஒருவன் பிழை செய்தான் என்பதற்காக நாமும் பிழைசெய்திட முடியாதில்லையா அதனால்தான் சொன்னேன் கோட்டின் தீர்ப்பும் அந்த கருணை அடிப்படையில்தான் இத்தீர்ப்பினையும் வழங்கியிருக்கிறது 

அவனுடைய பிழைக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாகிவிட்டது அதன்பிறகும் தண்டனை வழங்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி தீர்ப்பு வரவேற்கத்தக்தே என்பது எனது பார்வை


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 19:49

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??

இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையா

தம்பி உங்கள் கருணை உள்ளம் புரிகிறது. நான் சிக்கன் மட்டன் இவைகளை கொல்லவில்லை. ஆனால் கொன்ற இறைச்சியை தான் வாங்கி வந்து உண்பேன் :)

நீங்கள் சொல்லும் புல் பூண்டு போன்றவற்றில் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் உயிர்கள் தான் நானும் அறிவேன்.

சிறுபிள்ளையை கடத்தி 10 லட்சம் கேட்டு அதை கொன்றும் விட்டான். அது மிகப்பெரிய தவறாயிற்றே. சரி கடவுளின் பார்வையில் அவனுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது அதனால் தான் என்னவோ கோர்ட் அப்படி தீர்ப்பு கொடுத்திருக்கிறது
அதைத்தான் நான் சொல்ல வந்தேன் அண்ணா கருணை உள்ளமும் மனித இயல்புதானே ஒருவன் பிழை செய்தான் என்பதற்காக நாமும் பிழைசெய்திட முடியாதில்லையா அதனால்தான் சொன்னேன் கோட்டின் தீர்ப்பும் அந்த கருணை அடிப்படையில்தான் இத்தீர்ப்பினையும் வழங்கியிருக்கிறது 

அவனுடைய பிழைக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாகிவிட்டது அதன்பிறகும் தண்டனை வழங்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி தீர்ப்பு வரவேற்கத்தக்தே என்பது எனது பார்வை

முத்தம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Jan 2015 - 19:56

முத்தம் தந்து முடித்துவிட்டிங்களே அண்ணா. ஐ ஜாலி


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 20:01

நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் தந்து முடித்துவிட்டிங்களே அண்ணா. ஐ ஜாலி

சிறையில் முத்தம் கூட கொடுக்க அனுமதி கொடுக்கனும்னு நான் நீதிபதியை கேட்கபோறேன்  குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 20:02

நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் தந்து முடித்துவிட்டிங்களே அண்ணா. ஐ ஜாலி

பழிக்கு பழி ரத்தத்திற்கு ரத்தம் துரோகம் குரோதம் எனும் செயல்களாலேயே உலகில் அமைதியின்மை போர் என தொடர்கிறது. இறைவனின் எண்ணமும் இதனால் நாம் அறியமுடியாமல் போகிறது. அதனை நினைவூட்டியமைக்கு தான் உங்களுக்கு முத்தம்  மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by *சம்ஸ் Sat 10 Jan 2015 - 20:21

ரொம்ப முக்கியம் அது  போட்டுத்தாக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 20:33

*சம்ஸ் wrote:ரொம்ப முக்கியம் அது  போட்டுத்தாக்கு
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by *சம்ஸ் Sat 10 Jan 2015 - 20:35

ஏன் அண்ணா என்ன அவசரம் உங்களும் இப்படி ஓடுறீங்க?பதில் சொல்லிட்டு போங்க.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by சுறா Sat 10 Jan 2015 - 20:42

*சம்ஸ் wrote:ஏன் அண்ணா என்ன அவசரம் உங்களும் இப்படி ஓடுறீங்க?பதில் சொல்லிட்டு போங்க.

ரொம்ப முக்கியம் இல்லாத விசயம் பக்கம் இருந்து சீக்கிரம் ஓடிடனும்னு தான்  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by *சம்ஸ் Sat 10 Jan 2015 - 20:43

சுறா wrote:
*சம்ஸ் wrote:ஏன் அண்ணா என்ன அவசரம் உங்களும் இப்படி ஓடுறீங்க?பதில் சொல்லிட்டு போங்க.

ரொம்ப முக்கியம் இல்லாத விசயம் பக்கம் இருந்து சீக்கிரம் ஓடிடனும்னு தான்  ஐ ஜாலி

ஓ.........அப்படியா அண்ணா அப்படியென்றால் சரிதான். சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by ahmad78 Sun 11 Jan 2015 - 16:15

மிகக்கேவலமான தீர்ப்பு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by Nisha Sun 11 Jan 2015 - 18:57

அப்பா மரண தண்டனை கைதி. அம்மா ஆயுள் கைதி.. இவர்களுக்கு குழந்தை தேவையாஅப்படி ஒரு ஜீவன் இனி இவ்வுலகில் பிறந்து அதுவும் பாடுகளும், அவமானங்களும் பட வேண்டுமா? 

நீதிமன்றங்கள் தீர்ப்பு  மட்டும் தான் வழங்க முடியும். நிதானமான வாழ்க்கையையும் அமைத்து தருமா? 

நாளை  அந்த குழந்தை வளர்ந்து என்னை ஏன் பெற்றாய் என கேட்கும் போது இதே நீதிமன்றம் என்ன பதில் சொல்லும்?

நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் பிறக்கும் குழந்தைகளே வாழ்வில் தறிகெட்டு போய் போராடும் சூழலில்  சிறையில் இருப்பவர்களுக்கு குழந்தை அவசியமா? 

தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுத்தபின் அவன் செய்த தவறு தவறல்லாது போகும் எனில்’ அவனால்  போக்கப்ட்ட உயிருக்கு மீண்டும் உயிர் வருமா?  நீதி மன்ற தீர்ப்பு என்பது தண்டனையா? இனிமேலும்  வேறு  ஒருவருக்கு அக்குற்றவாளி தீங்கிளைக்க கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகத்தான்  சிறைத்தண்டனையை எடுத்து கொள்ளணும்.  சிறையில் இருக்கும் நாளில் அவன் செய்த தப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாய்  அங்கிருக்கும் காலம் அவனை உந்தணும்.- 

அதை விட்டு விட்டு  இருவர் இணைந்து செய்த தப்புக்கு பரிகாரமாய் தண்டனை கொடுத்த பின்  இன்னொரு உயிரை ஜனிக்க வைத்து  அதையும் தண்டனைக்குள்ளாக்குவது கண்டிக்க பட வேண்டியது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Jan 2015 - 19:13

Nisha wrote:அப்பா மரண தண்டனை கைதி. அம்மா ஆயுள் கைதி.. இவர்களுக்கு குழந்தை தேவையாஅப்படி ஒரு ஜீவன் இனி இவ்வுலகில் பிறந்து அதுவும் பாடுகளும், அவமானங்களும் பட வேண்டுமா? 

நீதிமன்றங்கள் தீர்ப்பு  மட்டும் தான் வழங்க முடியும். நிதானமான வாழ்க்கையையும் அமைத்து தருமா? 

நாளை  அந்த குழந்தை வளர்ந்து என்னை ஏன் பெற்றாய் என கேட்கும் போது இதே நீதிமன்றம் என்ன பதில் சொல்லும்?

நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் பிறக்கும் குழந்தைகளே வாழ்வில் தறிகெட்டு போய் போராடும் சூழலில்  சிறையில் இருப்பவர்களுக்கு குழந்தை அவசியமா? 

தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுத்தபின் அவன் செய்த தவறு தவறல்லாது போகும் எனில்’ அவனால்  போக்கப்ட்ட உயிருக்கு மீண்டும் உயிர் வருமா?  நீதி மன்ற தீர்ப்பு என்பது தண்டனையா? இனிமேலும்  வேறு  ஒருவருக்கு அக்குற்றவாளி தீங்கிளைக்க கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகத்தான்  சிறைத்தண்டனையை எடுத்து கொள்ளணும்.  சிறையில் இருக்கும் நாளில் அவன் செய்த தப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாய்  அங்கிருக்கும் காலம் அவனை உந்தணும்.- 

அதை விட்டு விட்டு  இருவர் இணைந்து செய்த தப்புக்கு பரிகாரமாய் தண்டனை கொடுத்த பின்  இன்னொரு உயிரை ஜனிக்க வைத்து  அதையும் தண்டனைக்குள்ளாக்குவது கண்டிக்க பட வேண்டியது!
எமது கோட்டில் தீர்ப்பெழுதிய நீதிபதிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தல் வேண்டும் 
தவறான தீர்ப்பினை எழுதிவிட்டார்கள்


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by Nisha Sun 11 Jan 2015 - 19:20

ஹாஹா! ஹாசிம்.

கொஞ்சம் இருங்க.. அவங்களுக்கு பிறக்கும் குழந்தையே ஏன் இப்படி தீர்ப்பு செய்து  நான் பிறக்கும் தண்டனை தந்தாய் என அவர்களை போட்டு தள்ளினாலும் தள்ளலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Jan 2015 - 19:23

Nisha wrote:ஹாஹா! ஹாசிம்.

கொஞ்சம் இருங்க.. அவங்களுக்கு பிறக்கும் குழந்தையே ஏன் இப்படி தீர்ப்பு செய்து  நான் பிறக்கும் தண்டனை தந்தாய் என அவர்களை போட்டு தள்ளினாலும் தள்ளலாம்.
குழந்தை பிறக்குதோ இல்லையோ அடிப்படை மனித உரிமை அடிப்படையில் கணவன் மனைவி அதே சிறையில் இருக்க அவர்களை சேர்ந்திருக்கச்செய்தல் தவறில்லைதானே பாவம் அவர்களும் மனிதர்களே.............


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by Nisha Sun 11 Jan 2015 - 19:31

அடடா!

அதை ஏன் ஜெயிலில் வைத்திருக்கணும். பேசாம்ல் தனி வீடு எடுத்து தங்க வைக்கலாம்ல.. சில விடயங்களுக்கு பாவம், புண்ணியம், பரிகாரம் பார்க்க முடியாது ஹாசிம். 

அரசன் அன்றறுப்பான்.. தெய்வம் நின்றறுக்கும் என்பர். கடவுளின் தீர்ப்பு மனித தீர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் நாம் உண்ர்வு வேகத்தில் செய்யும் முடிவுகள் எல்லாமே எப்போதும் சரியாக இருக்கும் என சொல்ல முடியாதே! 

இன்னொரு தாய் தகப்பனும் புத்திர சோக வேதனை யை உணர செய்யணும் எனில் இந்த மாதிரி மனிதாபிமான சிந்தனைகள் தப்பை உணர்த்தும்  வடிகாலாகாது. 

ஒன்று கிடைக்காது எனும் போது தான் அதன் அருமை புரியும். அவசியமும் புரியும். எல்லாம் கிடைக்கும் எனும் போது  அவர் தாம் செய்த தப்பை உணரும் வாய்ப்பேது ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Jan 2015 - 19:41

Nisha wrote:அடடா!

அதை ஏன் ஜெயிலில் வைத்திருக்கணும். பேசாம்ல் தனி வீடு எடுத்து தங்க வைக்கலாம்ல.. சில விடயங்களுக்கு பாவம், புண்ணியம், பரிகாரம் பார்க்க முடியாது ஹாசிம். 

அரசன் அன்றறுப்பான்.. தெய்வம் நின்றறுக்கும் என்பர். கடவுளின் தீர்ப்பு மனித தீர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் நாம் உண்ர்வு வேகத்தில் செய்யும் முடிவுகள் எல்லாமே எப்போதும் சரியாக இருக்கும் என சொல்ல முடியாதே! 

இன்னொரு தாய் தகப்பனும் புத்திர சோக வேதனை யை உணர செய்யணும் எனில் இந்த மாதிரி மனிதாபிமான சிந்தனைகள் தப்பை உணர்த்தும்  வடிகாலாகாது. 

ஒன்று கிடைக்காது எனும் போது தான் அதன் அருமை புரியும். அவசியமும் புரியும். எல்லாம் கிடைக்கும் எனும் போது  அவர் தாம் செய்த தப்பை உணரும் வாய்ப்பேது ?
சரிதான் அக்கா ஒவ்வொருத்தருடைய பார்வையும் கருணையும் வேறு வேறாக அமைகிறதென்பதுதான் உண்மை 
அதற்கு உதாரணமாக இதை கொள்ளலாம்


சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by ahmad78 Mon 12 Jan 2015 - 10:57

சிறை என்பது ஒரு வெளிஉலகில் ஒரு மனிதன் என்னவெல்லாம் அனுபவித்தானோ அதெல்லாம் கிடைக்காமல் நெருக்கடியான ஒரு வாழ்வைத்தரக்கூடிய இடம். அப்படித்தான் இருக்கவேண்டும்.

தவறு செய்யக்கூடியவன் சிறைக்கு செல்வதற்கு சிறையில் கிடைக்கின்ற தண்டனைகளுக்கு பயப்படவேண்டும்.

ஆனால் இந்த நாட்டில் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமென்றால் சிறைக்கு செல்லலாம் போலிருக்கிறது.

 3 வேலை உணவு. கேலிக்கைக்கு சினிமாக்கள் காட்டப்படுகின்றன.

தவறுகள் கூடக்கூட சுகபோகங்கள் அதிகமாக சிறையில் கிடைக்கின்ற ஒரு நிலை.
இப்போது இதுவும்.

என்ன தீர்ப்போ!?

Sliding hairSliding hairSliding hair


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரசவத்துக்கு பின் தாம்பத்திய உறவு எப்போது வைத்துக் கொள்ளலாம்.
» ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
» முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
» அன்வர் இப்ராஹிமை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு
» 2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum