Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
தொடர்கதை : கலையாத கனவுகள்... !
+2
பானுஷபானா
Nisha
6 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தொடர்கதை : கலையாத கனவுகள்... !
First topic message reminder :
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன்.
நன்றி.
என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....
அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
[url=http://www.chenaitamilulaa.net/t50220p121-topic#468857]அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்[/url]
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன்.
நன்றி.
நட்புடன்...,
சே.குமார்.
*****************
அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
[url=http://www.chenaitamilulaa.net/t50220p121-topic#468857]அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்[/url]
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்
- Spoiler:
- 1. படிப்பே பிரதானம்1996-ஆம் வருடம்...
மாடு,ஆடு, நாய், கோழிகளின் சத்தத்துடன் அழகான கிராமத்துக் காலைப் பொழுது...
"என்னடா குட்டி போட்ட நாயாட்டம் சுத்தி சுத்தி வாறே..."
"இன்னைக்கு ரிசல்ட் வருதுல்லம்மா... அதான் பயமா இருக்கு"
"என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... பாஸ் பண்ணிருவல்ல... ஒங்கப்பன் போனதுக்கு அப்பறம் பாலு யாவாரம் பாத்துத்தான் ஒங்கள படிக்க வக்கிறேன்... மூத்தவன் குடும்ப சூழ்நிலையால படிக்க முடியல... அக்கா படிச்சா... பொட்டபுள்ளய காலகாலத்துல கரை சேக்குற காரியத்தை பாக்காம படிக்க வச்சி அழகு பாக்குறியோன்னு அங்காளி பங்காளிக சத்தம் போட்டதால படிப்ப நிப்பாட்டி வீட்டுல இருக்க வச்சிட்டேன். நீயாவது நல்லா படிக்கணுங்கிறது என்னோட கனவுடா... அதுல மட்டும் மண் அள்ளிப் போட்டுறாதேடா..."
"ஐய்யோ அம்மா... ஆ...ஊன்னா புராணம் வாசிக்க ஆரம்பிச்சிருவே..."
"ஆமாடா... நாஞ் சொல்றது ஒனக்கு புராணமாத்தான்டா இருக்கும்... காலேசு படிக்கப் போறமுன்னு தெனாவெட்டு வந்திருச்சா..."
"அதெல்லாம் இல்லம்மா... நல்ல மார்க் வாங்கணுமேன்னு கவலையா இருக்கும்மா... நீங்க வேற தேவையில்லாம பேசி டென்சனாக்கிட்டிங்க..."
"நா... பேசுற ஒங்களுக்கு தேவையில்லாததுதான்... நாயி படிச்சா நாளைக்கு ஒம் பொண்டாட்டி புள்ள மதிக்கும்... இல்லயின்னா கேவலந்தான் படணும்... எனக்கா நாளக்கி சம்பாதிச்சு போடப்போறே... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட சிறுக்கின்னு கூட கேக்குறியோ இல்லையோ.... யாரு கண்டா... சரி சரி கஞ்சிய குடிச்சிட்டு சித்தம் போக்கு செவம் போக்குன்னு சுத்தி வா... எனக்கு வேல கெடக்கு... ஒனக்கு கஞ்சிய ஊத்திட்டு நா போயி மாடுகளை அவுத்து விட்டிட்டு வாறேன்..."
"சரிம்மா..."---
இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.ரிசல்ட் வந்து மார்க் சீட்டும் வாங்கியாச்சு... முன்னூற்றி அறுபது மார்க் வாங்கியிருந்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் நல்லது என்று சொல்லி அவனையும் அதற்கே அப்ளிகேசன் போடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு சிலவாகும் என்றும் சொன்னதால் அம்மாகிட்ட கேட்டுத்தாண்டா சொல்லணும் என்று சொல்லிவிட்டான்.
"அம்மா... என் பிரண்டெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேரப் போறாங்களாம்."
"என்ன பூட்டரோ படி... வேணாங்கல... நாலு பேருமாதிரி நீ நல்லா இருக்கணும்... அதுவும் ஒம்மாமனுக்கு முன்னால நாலெழுத்து படிச்சு உசந்து நிக்கணும்... இந்த ஸ்கூலுல சேக்கப் போகும்போது படிச்சவன் அவந்தான்னு ஒதவி கேக்கப் போனா வேலயிருக்குன்னு சொல்லி வரமாட்டேனுட்டான்... அன்னைக்கு நா ஒன்னய குறுக்கால நடந்து கூட்டிக்கிட்டு போயி கஷ்டப்பட்டு சேர்த்தேன்... அத மறந்துறாத... அதுதான் முக்கியம்..."
"படிப்பேம்மா... ஆனா கம்ப்யூட்டர் படிப்புக்கு அதிகம் செலவாகுமாம்..."
"எம்புட்டாம்... கூடையிலயா கேக்கப்போறாங்க..."
"இல்ல நம்ம சரவணன் அக்கா படிக்கிறாங்க... அவங்க சொன்னாங்க ஒரு செமஸ்டருக்கு ஆறாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்குமாம்... "
"வருசத்துக்கா...?"
"வருசத்துக்கு ரெண்டு செமஸ்டராம்... பன்னெண்டாயிரம்... அப்புறம் மத்த செலவு..."
"அம்புட்டுக்காசுக்கு ஆத்தா நா எங்கய்யா போவேன்... குருவி சேக்கிறமாதிரி சீதை கல்யாணத்துக்குத்தான் சேத்துக்கிட்டு வாறேன். அதை எடுத்துக் கொடுத்துப்புட்டா நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் அவள கரை சேக்காம இருக்க முடியாதேய்யா... அண்ணங்கிட்ட கேளு... நாளக்கி சரவணன் வீட்டுக்கு போகும் போது போன்ல அண்ணன கூப்பிட்டு விவரம் சொல்லு... அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்...ம்... சரியா..."
"ம்..."----
"டேய் உங்கண்ணன்கிட்ட அம்மா பேச சொன்னாங்கன்னாய்... பேசுடா"
"வேணான்டா... அதையும் வீணாவுல செரமப்படுத்திக்கிட்டு... பேசாம பிஸிக்ஸ் சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்... அது போதுன்டா...""சரி... உனக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யிடா..."
“ம்... குடும்ப சூழலையும் பாக்கணுமில்ல... அக்காவுக்கு எப்ப வேணுமின்னாலும் கல்யாணம் வைக்கலாம்...”
"ம்.... சரி... அப்புறம் நாளக்கி காலேசுல அப்ளிகேசன் கொடுக்கிறாங்களாம்... காலயில பத்து மணிக்கெல்லாம் அறிவு வரச் சொல்லியிருக்கான்... அவங்க அப்பா சொன்னாராம்..."
அறிவு அப்பா காலேசு ஆபீஸ்லதான் வேலை செய்யிறார். அதனால அவன் மூலமா நினைக்கிற குரூப் வாங்கிரலாமுன்னு சொல்லியிருந்தான்."சரிடா... எங்க வரணும்?""கரெக்டா 9.45க்கு காலேசு எண்ட்ரண்ஸ்க்கிட்ட வந்திடு..."
"சரிடா"
"சீக்கிரமா வந்தா செம்மேரிசுக்கு எதிர்த்தாப்புல இருக்க கடைக்கிட்ட நில்லு. நாங்க வந்திடுறோம்..."
"ம்..."---மறுநாள் காலை 10 மணி...
முன்னதாகவே செம்மேரிசுக்கு எதிர்த்த டீக்கடையில் நிற்க, நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.
தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன்.
-தொடரும்...****************************-'பரிவை' சே.குமார்.
Last edited by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:22; edited 1 time in total
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
ஞாயிறு மதியமும் கம்மாய்க்கரையும்.... எங்க ஊரில் ஆலமரமும் குளத்தங்கரையும் என்றாகும். கதையில் வரும் அனைத்தும் எங்க ஊரிலும் நடப்பதை கண்டிருக்கின்றேன். வேப்பமரத்தடி. மாலை நேர பேச்சுக்கள், விளையாட்டுக்கள் என சுவாரஷ்யமாய் அக்காலத்துக்கே அனைவரையும் இழுத்து செல்லும் சூழல்.
சேகர்.. காவேரி.. ஜாயின்ட் ஆயாச்சு! இவர்களுக்கும். ஆரம்பம் மோதல் தான் என்பது இப்ப இங்கே படிக்கும் போது தான் புரியிது. அப்ப படித்த போது நினைவில் இல்லை.
வைரவன் குறித்த ராம்கியின் புரிதலுக்கு சேகரின் பதில்...ஆண் , பெண் நட்புக்குறித்த சேகரின் வியாக்கினம் எல்லாம் நல்லாத்தான் இருக்குப்பா!பஸ்ஸில் வரும் பெண்னுங்க கூடவே சினிமால்லாம் பார்க்க போனேன்னு சொல்லும் போது கூடவே படித்திருந்தால் என்னா தில்லு இருக்கும் இந்த சேகருக்கு!
ம்ம் அடுத்து தொடருங்கள்.!
சேகர்.. காவேரி.. ஜாயின்ட் ஆயாச்சு! இவர்களுக்கும். ஆரம்பம் மோதல் தான் என்பது இப்ப இங்கே படிக்கும் போது தான் புரியிது. அப்ப படித்த போது நினைவில் இல்லை.
வைரவன் குறித்த ராம்கியின் புரிதலுக்கு சேகரின் பதில்...ஆண் , பெண் நட்புக்குறித்த சேகரின் வியாக்கினம் எல்லாம் நல்லாத்தான் இருக்குப்பா!பஸ்ஸில் வரும் பெண்னுங்க கூடவே சினிமால்லாம் பார்க்க போனேன்னு சொல்லும் போது கூடவே படித்திருந்தால் என்னா தில்லு இருக்கும் இந்த சேகருக்கு!
ம்ம் அடுத்து தொடருங்கள்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
அன்பின் அக்கா...Nisha wrote:ராக்கிங்க் ராஜாங்கத்தில் வைரவன் , அண்ணாத்துரை, ராம்கி, பூபாலன் குறித்த அறிமுகமும், பூபாலன் என்பவரின் தம்பி என்பதற்காக அண்ணாத்துரைக்கு கிடைக்கும் தீடீர்மதிப்பும். பூபாலனும்,வைரவன் போல் அடி தடி வில்லன் தான் போல..
அண்ணாதுரை எனும் பெயர் ... சுருக்கினால் வயதில் பெரியவர்களுக்கும் அண்ணா தான் ! எங்கூரில் தம்பித்துரை என ஒருத்தர் இருந்தார். எல்லோரும் தம்பி என்பார்கள். நான் தம்பி அண்ணா என அழைப்பேன். என்னை விட ஆறேழு வயது பெரியவர் அவர். ஹாஹா!
இன்னாருக்கு உறவு என ஊரில் பெரிந்தலைகளை, படிப்பிக்கும் ஆசிரியர்களை சொல்லிக்கூட தப்பிக்க முடியாத போது அடிதடிவில்லங்கள் பெயரை சொல்லி தப்பிக்க முடிவது தான் இன்றைய உண்மை அல்லவா?
எழுத்து நடை அருமை குமார்!
உங்களது விரிவான கருத்துரைக்காகவே எல்லாக் கதைகளையும் இங்கு பதியலாம் போல...
ரொம்ப அழகான பார்வை...
நான் அலைனில் இருக்கும் போது தங்கியிருந்த அறை உரிமையாளர் பெயர் தம்பி, மலையாளியான அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார். இப்பவும் போனில் பேசுவார். நான் அவரை தாங்கள் சொன்னது போல் தம்பி அண்ணா என்றுதான் அழைப்பேன்..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
நாங்களும் கம்மாக்கரை, வேப்பமரத்தடி, புளியமரம். மாமரம், கண்மாய் மடை, பாலம் என எல்லா இடத்திலும் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம்... கதைக்கான களம் கல்லூரி என்றாலும் நாயகன் கிராமம் என்பதால் நாம பார்த்து ரசித்த எல்லாமே அவனைச் சுற்றி கதை நகரும்போது சேர்த்து எழுதியிருப்பேன்...Nisha wrote:ஞாயிறு மதியமும் கம்மாய்க்கரையும்.... எங்க ஊரில் ஆலமரமும் குளத்தங்கரையும் என்றாகும். கதையில் வரும் அனைத்தும் எங்க ஊரிலும் நடப்பதை கண்டிருக்கின்றேன். வேப்பமரத்தடி. மாலை நேர பேச்சுக்கள், விளையாட்டுக்கள் என சுவாரஷ்யமாய் அக்காலத்துக்கே அனைவரையும் இழுத்து செல்லும் சூழல்.
சேகர்.. காவேரி.. ஜாயின்ட் ஆயாச்சு! இவர்களுக்கும். ஆரம்பம் மோதல் தான் என்பது இப்ப இங்கே படிக்கும் போது தான் புரியிது. அப்ப படித்த போது நினைவில் இல்லை.
வைரவன் குறித்த ராம்கியின் புரிதலுக்கு சேகரின் பதில்...ஆண் , பெண் நட்புக்குறித்த சேகரின் வியாக்கினம் எல்லாம் நல்லாத்தான் இருக்குப்பா!பஸ்ஸில் வரும் பெண்னுங்க கூடவே சினிமால்லாம் பார்க்க போனேன்னு சொல்லும் போது கூடவே படித்திருந்தால் என்னா தில்லு இருக்கும் இந்த சேகருக்கு!
ம்ம் அடுத்து தொடருங்கள்.!
சேகர் காவேரியின் கதை ராம்கியோடு சேர்ந்தே கடைசி வரைக்கும் பயணிக்கும்... கொஞ்சம் வித்தியாசமாய்... உங்களுக்குத்தான் தெரியுமே அக்கா...
சேகர் மாதிரி நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன் அக்கா... எங்க காலேஜ் பசங்க கூட காரைக்குடி போற பொண்ணுக கூட படத்துக்குப் பொயிட்டு வந்து பெரிய கதையா சொல்லிக்கிட்டு இருப்பாங்க...
அதெல்லாம் ரொம்ப எஞ்சாய் பண்ற காலமேச்சே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
சே.குமார் wrote:அன்பின் அக்கா...Nisha wrote:ராக்கிங்க் ராஜாங்கத்தில் வைரவன் , அண்ணாத்துரை, ராம்கி, பூபாலன் குறித்த அறிமுகமும், பூபாலன் என்பவரின் தம்பி என்பதற்காக அண்ணாத்துரைக்கு கிடைக்கும் தீடீர்மதிப்பும். பூபாலனும்,வைரவன் போல் அடி தடி வில்லன் தான் போல..
அண்ணாதுரை எனும் பெயர் ... சுருக்கினால் வயதில் பெரியவர்களுக்கும் அண்ணா தான் ! எங்கூரில் தம்பித்துரை என ஒருத்தர் இருந்தார். எல்லோரும் தம்பி என்பார்கள். நான் தம்பி அண்ணா என அழைப்பேன். என்னை விட ஆறேழு வயது பெரியவர் அவர். ஹாஹா!
இன்னாருக்கு உறவு என ஊரில் பெரிந்தலைகளை, படிப்பிக்கும் ஆசிரியர்களை சொல்லிக்கூட தப்பிக்க முடியாத போது அடிதடிவில்லங்கள் பெயரை சொல்லி தப்பிக்க முடிவது தான் இன்றைய உண்மை அல்லவா?
எழுத்து நடை அருமை குமார்!
உங்களது விரிவான கருத்துரைக்காகவே எல்லாக் கதைகளையும் இங்கு பதியலாம் போல...
ரொம்ப அழகான பார்வை...
நான் அலைனில் இருக்கும் போது தங்கியிருந்த அறை உரிமையாளர் பெயர் தம்பி, மலையாளியான அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார். இப்பவும் போனில் பேசுவார். நான் அவரை தாங்கள் சொன்னது போல் தம்பி அண்ணா என்றுதான் அழைப்பேன்..
அப்படின்னால் எல்லா பதிவையும் இங்கே பதியுங்கள். கருத்திடுவதுக்கு நானாச்சு!
இந்த பெயருடன் உறவு சொல்லி அழைக்கும் விடயம் சுவாரஷ்யமானது தான்.
அண்ணா மாமா.
தம்பி அண்ணா..
ஐயா சித்தப்பா..
மாஸ்டர் அங்கிள் என நிரம்ப உண்டே....!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
சே.குமார் wrote:
நாங்களும் கம்மாக்கரை, வேப்பமரத்தடி, புளியமரம். மாமரம், கண்மாய் மடை, பாலம் என எல்லா இடத்திலும் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம்... கதைக்கான களம் கல்லூரி என்றாலும் நாயகன் கிராமம் என்பதால் நாம பார்த்து ரசித்த எல்லாமே அவனைச் சுற்றி கதை நகரும்போது சேர்த்து எழுதியிருப்பேன்...
சேகர் காவேரியின் கதை ராம்கியோடு சேர்ந்தே கடைசி வரைக்கும் பயணிக்கும்... கொஞ்சம் வித்தியாசமாய்... உங்களுக்குத்தான் தெரியுமே அக்கா...
சேகர் மாதிரி நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன் அக்கா... எங்க காலேஜ் பசங்க கூட காரைக்குடி போற பொண்ணுக கூட படத்துக்குப் பொயிட்டு வந்து பெரிய கதையா சொல்லிக்கிட்டு இருப்பாங்க...
அதெல்லாம் ரொம்ப எஞ்சாய் பண்ற காலமேச்சே...
கிராமமும் நகரமும் சேர்த்திணைந்து வருவதால் கதை சுவாரஷ்யம் அதிகமாகத்தான் இருக்கும். கிராமத்து நினைவுகள் என்றும் நீங்காதும் நிலைக்கும்.
ம்ம் சேகர் மாதிரி ஜம்பம் அடிப்பவங்களை நானும் தான் பார்த்திருக்கேன். சினிமா போகாமல் அந்தபெண்னோட போனேன் என கதை விடுபவர்களையும் பார்த்திருக்கேனாக்கும். ம்ம்ம்ம்க்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
பதிந்தால் போச்சு அக்கா...
நீங்க சொன்ன மாதிரி கதை விடுபவர்களையும் பார்த்திருக்கிறேன் அக்கா...
நீங்க சொன்ன மாதிரி கதை விடுபவர்களையும் பார்த்திருக்கிறேன் அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
தொடர்கதை : கலையாத கனவுகள்
6. கண்ணெதிரே தோன்றினாள்
முன்கதைச் சுருக்கம்...
ஏழைக் குடும்பத்தில் பிறந்து தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். ராக்கிங் அதன் பின்னான நட்பு வட்டம் என கல்லூரி வாழ்க்கை இனிமையாக கழிய ஆரம்பிக்கிறது.
இனி...
நாட்கள் வாரங்களாக... வாரங்கள் மாதங்களாகிப் போய்க்கொண்டிருந்தது... கல்லூரி வாழ்க்கையும் பழகி முதல் செமஸ்டரையும் அரியர் இல்லாமல் முடித்துவிட்டான் ராம்கி. இரண்டாம் செமஸ்டருக்கான வகுப்புக்கள் மொழிப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் மாற்றத்துடன் துவங்கிவிட்டன.
ஒரு மதியவேளை சாப்பிட்டுவிட்டு வகுப்பறையை ஆர்க்கெஸ்ட்ரா அரங்கமாக மாற்றியிருந்தார்கள் ராம்கியும் நண்பர்களும்... அவர்களில் சேவியர்தான் பாடகன், சர்ச்சில் பாடுவதுடன் ஒரு சிறிய இசைக்குழுவிலும் அவ்வப்போது பாடி வந்தான். அதனால் மதியம் எப்பவும் கச்சேரி களைகட்டும். ஒரு முறை வெள்ளையன் சார் கூட பாடுங்க வேண்டாங்கலை... அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கக்கூடாது என எச்சரித்திருந்தார். எனவே டெஸ்க் இசை ராஜாக்கள் தங்களது இசையை வெகுவாக குறைத்துவிட்டார்கள்.
"இங்க யாரு... ராம்கி" ரம்மியமான குரலைக் கேட்டு பாடிக்கொண்டிருந்த சேவியர் பாட்டை நிறுத்த, ராம்கி உள்பட எல்லாரும் வகுப்பறை வாசலை நோக்கினர்.
மஞ்சள் கலர் தாவணியில் பட்டுப் போல ஒரு பருவச்சிட்டு நின்றாள். எல்லாரும் அவளையே பார்க்க, "அலோ பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்த்த மாதிரி பாக்கிறீங்க... முன்னப்பின்ன பொண்ணுங்களைப் பார்த்ததில்லையா? இங்க யாரு செந்தூரப்பூவே ராம்கின்னு கேட்டேன்" நக்கலாகக் கேட்டாள்.
"டேய்.... மச்சான்... நிரோஷா கேக்குறாங்கடா... நாந்தேன்னு சிவாஜி மாதிரி எந்திரிச்சி நில்லுடா" என்று பழனி சொல்லவும் எல்லாரும் 'ஹே...' என சிரிக்க,
"என்ன நக்கலாக்கும்" என்றவள் "ஆழந்தெரியாம காலை விடாதீங்க... அப்புறம் நொண்டிக்கிட்டுத்தான் திரியணும்... என்ன நீ.... நீங்கதான் ராம்கியா... முத்துச்சாமி ஐயா வரச்சொன்னார்..."
"அட புறாப்பொறக்கி அய்யான்னு சொல்ல வேண்டியதுதானே..."
"வாத்தியாரை கேலி பண்ணாதீங்க... உங்க மார்க்கையும் புறா பொறக்கிக்கிட்டுப் போயிடும்... சரி வாங்க கூப்பிட்டார்"
"மாப்ளே... நடத்து... நடத்து... பொம்பளப்புள்ள உன்னய தேடி வருது... நம்மளை எல்லாம் போலீசுதான் தேடி வரும்... ம்.... எங்கயோ மச்சம் இருக்குடா உனக்கு" மெதுவாக முணங்கினான் அண்ணாத்துரை.
"சும்மா இருங்கடா... நான் ஐயாவைப் பார்த்து என்னன்னு கேட்டுட்டு வாறேன்..."
"வாங்க ராம்கி..." என்றார் முத்துச்சாமி ஐயா.
"என்னங்கய்யா... எதுக்கு என்னைய வரச்சொன்னீங்க..."
"காரைக்குடி கம்பன் கழகத்துல கட்டுரைப் போட்டி வச்சிருக்காங்க... அது குறித்த தகவல் எல்லா வகுப்பறைக்கும் வரும். நீங்க கண்டிப்பாக கலந்துக்கணும்..."
"காரைக்குடியிலயா... அம்மாகிட்ட கேக்கணும்..."
'அது சரி... பால்வாடி போல... இதெல்லாம் போட்டிக்கு வந்து... ம்...' வாய்க்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.
"சரி.... நாளைக்குச் சொல்லுங்க அவசரமில்ல... உங்களைப் பற்றி தேபிரித்தோவுல வேலை பார்க்கிற என்னோட மாணவர் அலெக்ஸ் சொல்லியிருக்கார். அது போக நான் ஒரு பேச்சுப் போட்டிக்கு உங்க பள்ளிக்கு நடுவரா வந்திருக்கேன். அதுல நீங்கதான் முதல் பரிசு... சரியா.."
"ம்..."
'பால்வாடிக்கிட்ட சரக்கு இருக்கும் போல...ம்' மனசுக்குள் நினைத்தவள் சிரித்துக் கொண்டாள்.
"அதனாலதான் உங்களைப் போகச் சொல்றேன்... அப்புறம் இது புவனா... நல்ல பேச்சாளி, கவிஞரும் கூட... முதல் பருவம் வரைக்கும் திறமையாளர்களை கண்டுபிடிக்க முடியலை... ஏன்னா எந்தப் போட்டியும் வைக்கலை... சண்டையும் விடுமுறையுமா போச்சு... இவங்க என் பொண்ணோட பிரண்ட்... அதனால சுலபமா தெரிஞ்சிக்க முடிஞ்சது... இவங்க... நீங்க... அப்புறம் கலந்துக்க போறவங்க எல்லாரும் சேர்ந்துதான் காரைக்குடி போறீங்க... பேருந்துக் கட்டணத்தை தமிழ்துறை ஏத்துக்கும்... அதனால போட்டிக்கு தயாராகுங்கள்."
"சரிங்கய்யா..."
ராம்கி சார்ந்த துறையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறையும் ஒரே அறைக்குள் இருந்தது. ராம்கி ஐயாவிடம் பேசிக் கொண்டு நிற்கும்போது அவர்களை கடந்து சென்ற வெள்ளையன் சார் "என்னப்பா இங்க நிக்கிறே...?" என்று வினவினார்.
"ஐயா கூப்பிட்டாங்க... அதான் சார்..." பவ்யமாய் சொல்ல
"வெள்ளையன் சார் தம்பி ராம்கி நல்ல படிப்பாளி மட்டுமில்ல... பேச்சு, கட்டுரையின்னு நிறைய பரிசு வாங்கியிருக்காங்க... ரொம்ப தங்கமான பிள்ளை" என்று ஐயா சொல்ல, ஒற்றைச் சிரிப்பை உதிர்த்துச் சென்றார் பசங்களால் சில்வர் பிளஸ் மண்டையன் என்று செல்லமாக அழைக்கபடும் வெள்ளையன் சார். அவரது டாலடிக்கும் வழுக்கைத் தலையைப் பார்த்து ராம்கி சிரித்துக் கொண்டான்.
"சரி வாரேன்ய்யா" என்று கிளம்ப அவன் பின்னே வந்த புவனா, "எக்ஸ் கியூஸ் மீ..." என்றாள். என்ன என்பது போல ராம்கி திரும்பிப் பார்க்க... ஆணின் பார்வை பட்டதும் மாராப்பை சரிசெய்யும் பெண்களின் வழக்கத்தை அவளும் தொடர்ந்தபடி கேட்டாள்.
"பேரே ராம்கிதானா இல்ல வேற..." உதட்டை சுளித்து இழுத்தாள். அதுவும் அழகாய்த்தான் இருந்தது. ஆனால் ராம்கிக்கு அதெல்லாம் தெரியவில்லை.
இதுவரை பெண்களுடன் அதிகம் பேசியதில்லை, முதன் முதலில் ஒரு பெண் பெயரைக் கேட்கிறாள். அதுவும் தங்கச்சிலையாட்டம் அழகி அருகில் வந்து பேசுகிறாள். அவனுக்குப் படபடப்பு அதிகமாகியது. நாக்கு வறண்டு மேலே ஒட்டிக்கொண்டது. என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் இருந்தான்.
"என்னப்பா... பேரைக் கேட்டா பேந்தப் பேந்த விழிக்கிறே...? ராம்கியின்னு கிராமத்து அம்மா பேரு வச்சாங்களான்னு சந்தேகத்துல கேட்டேன்... ஓகே... நான் வாறேன்..."
"ரா.. ராம்... ராமகிருஷ்ணன் மு... முழுப்பேரு..." சொல்வதற்குள் முகமெல்லாம் வேர்த்தது.
"அழகா டிரஸ் பண்ணித்தானே முன்னாடி நிக்கிறேன்... பேயைப் பார்த்த மாதிரி குழறுது....ம்ம்... ஓகே... நான் புவனா... பர்ஸ்ட் மாத்ஸ்... சரி பார்க்கலாம்...பை..." என்றபடி கிளம்பினாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வகுப்பை நோக்கி நடந்தான்.
"மாப்ளே... என்னடா... என்ன பேசினா... எதோ சொன்னா நாங்க பார்த்தோமே..." அண்ணாத்துரை அவசரமாக கேட்டான்.
"ஒண்ணும் சொல்லலைடா... ஐயா ஒரு போட்டிக்குப் போகச் சொன்னார். அம்புட்டுத்தான் வெளிய வந்ததும் பாக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போனா...."
"அப்புறம் என்ன அடிக்கடி பார்த்துட வேண்டியதுதானே....?"
"போங்கடா... சும்மா கேலி பண்ணாம..."
"ம்.... தேவதை தேடி வந்திருக்கா... அப்புறம் என்ன காரைக்குடி பயணம்... பாண்டியன்ல படம்... ம் கலக்குடா மச்சான்..."
"அட போங்கடா.... ஐயா கூட்டியார சொன்னதால கூட்ட வந்திச்சி... இனி அதுக்கும் நமக்கும் என்ன இருக்கு..."
"சரி... பார்ப்போம்... என்ன இருக்குன்னு... ஆமா இம்புட்டு அழகியா இருக்காளே... யார் இவ... மொதல்ல விசாரிக்கணும்டா..." என்ற பழனி, "என்ன டிபார்ட்மெண்டுன்னு சொன்னால..." என்றான்.
"இல்லடா... பேசவே இல்லை அதெல்லாமா கேப்பாங்க..." அப்பாவியாய் சொன்னான்.
"எப்படியும் நாளைக்கு அவ என்ன கிளாஸ்ன்னு கண்டுபிடிக்கிறோம்... " அண்ணாத்துரை அழுத்தமாக சொல்ல, மீண்டும் தனது கச்சேரியை ஆரம்பித்த சேவியர் "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..." எனப்பாட மற்றவர்கள் சந்தோஷமாய் தாளமிட ஆரம்பித்தார்கள்.
ராம்கி மனசுக்குள் மஞ்சள் தாவணி லாவணி பாடியது.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
ஓ மை காட் கலையாத கனவுகள் ஐந்து கதைகள் உள்ளது நிறைய நேரமெடுத்து படிக்க வேண்டும் நீங்கள் தொடருங்கள் பின்னால் வருகிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
பழனி, "என்ன டிபார்ட்மெண்டுன்னு சொன்னால..." என்றான்.
"இல்லடா... பேசவே இல்லை அதெல்லாமா கேப்பாங்க..." அப்பாவியாய் சொன்னான்.
.ம்ம்... ஓகே... நான் புவனா... பர்ஸ்ட் மாத்ஸ்... சரி பார்க்கலாம்...பை...
ராம்கியும் புவனாவும் சந்தித்தாகி விட்டது!
முதல்சந்திப்பிலேயே தன் நண்பர்களிடன் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார் ராம்கி.
நல்ல ஆசிரியர்கள், திற்மையானவர்களை கண்டு ஊக்குவிக்கும் இப்படிப்பட ஆசிரியர்கள் கிடைப்பதும் அரிது தான். கதையில் ராம்கியில் படிப்பை தவிர மறைந்திருக்கும் திறமைகளை அடுத்தவர்கள் சொல்லி கேட்டு உணர்ந்து ஊக்குவிக்கும் பாங்கு அருமை.
ராம்கி, புவனா... அடுத்து காரைக்குடிப்பயணமா?
புவனா யாரென தெரிந்தால் பசங்கல்லாம் பயந்து ஓடிருவாங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
எப்படியோ ஒரு பாகம் படிச்சிட்டேன் மீதி படிக்கணும் . கதை சுவராசியமா போகுது அருமை குமார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
ஒரு பாகம் தான் படிச்சிங்களா?
அதுக்கான பின்னூட்டம் எங்கே?
அதுக்கான பின்னூட்டம் எங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
Nisha wrote:ஒரு பாகம் தான் படிச்சிங்களா?
அதுக்கான பின்னூட்டம் எங்கே?
net problem irukku nalaikku poduren nisha
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
பர்மிசன் கிராண்டட் மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
இந்தக் கதை படித்ததும் நினைவு வந்தது என் பையனிடம் நான் பேசியது .நீ படித்தால் உனக்கு உன் மனைவி பிள்ளைகளுக்கு நல்லது... உன் எதிர்காலம் கஷ்டமில்லாமல் இருக்கும். நாளை உன் பிள்ளைகளை நீ நல்ல விதமாக வளர்க்கலாம் என்று அடிக்கடி சொல்வேன்.
கதை மிக அருமை மீதியை முடிந்தவரை படிக்கிறேன் குமார் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் எழுத்தாளரே.
கதை மிக அருமை மீதியை முடிந்தவரை படிக்கிறேன் குமார் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் எழுத்தாளரே.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
கதையின் அனைத்து பாகங்களையும் படித்தாகி விட்டதோ?
இன்னும் நிரம்ப பாகம் இருக்கின்றதுப்பா. வெயிட் செய்யுங்கள்.
இன்னும் நிரம்ப பாகம் இருக்கின்றதுப்பா. வெயிட் செய்யுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
Nisha wrote:பர்மிசன் கிராண்டட் மேடம்!
அங்கே டைப் செய்து கொஞ்சம் வைத்திருந்தேன் கனெக்சன் வந்ததும் அவசரமாக எழுதி விட்டேன் நிஷா.நல்ல வேளை போஸ்ட் செய்யும் வரை லைட் எரிந்தது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
Nisha wrote:கதையின் அனைத்து பாகங்களையும் படித்தாகி விட்டதோ?
இன்னும் நிரம்ப பாகம் இருக்கின்றதுப்பா. வெயிட் செய்யுங்கள்.
ஒரு பாகம் வரை பின்னூட்டம் போட்டேன் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
//ராம்கி, புவனா... அடுத்து காரைக்குடிப்பயணமா?//Nisha wrote:பழனி, "என்ன டிபார்ட்மெண்டுன்னு சொன்னால..." என்றான்."இல்லடா... பேசவே இல்லை அதெல்லாமா கேப்பாங்க..." அப்பாவியாய் சொன்னான்..ம்ம்... ஓகே... நான் புவனா... பர்ஸ்ட் மாத்ஸ்... சரி பார்க்கலாம்...பை...
ராம்கியும் புவனாவும் சந்தித்தாகி விட்டது!
முதல்சந்திப்பிலேயே தன் நண்பர்களிடன் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார் ராம்கி.
நல்ல ஆசிரியர்கள், திற்மையானவர்களை கண்டு ஊக்குவிக்கும் இப்படிப்பட ஆசிரியர்கள் கிடைப்பதும் அரிது தான். கதையில் ராம்கியில் படிப்பை தவிர மறைந்திருக்கும் திறமைகளை அடுத்தவர்கள் சொல்லி கேட்டு உணர்ந்து ஊக்குவிக்கும் பாங்கு அருமை.
ராம்கி, புவனா... அடுத்து காரைக்குடிப்பயணமா?
புவனா யாரென தெரிந்தால் பசங்கல்லாம் பயந்து ஓடிருவாங்களா?
அக்கா கதையைச் சொல்லக்கூடாது... சஸ்பென்ஸ் போயிரும்ல்ல...
//புவனா யாரென தெரிந்தால் பசங்கல்லாம் பயந்து ஓடிருவாங்களா?//
அப்புறம்தானே அக்கா சூடு பிடிக்கும்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
பானுஷபானா wrote:இந்தக் கதை படித்ததும் நினைவு வந்தது என் பையனிடம் நான் பேசியது .நீ படித்தால் உனக்கு உன் மனைவி பிள்ளைகளுக்கு நல்லது... உன் எதிர்காலம் கஷ்டமில்லாமல் இருக்கும். நாளை உன் பிள்ளைகளை நீ நல்ல விதமாக வளர்க்கலாம் என்று அடிக்கடி சொல்வேன்.
கதை மிக அருமை மீதியை முடிந்தவரை படிக்கிறேன் குமார் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் எழுத்தாளரே.
கருத்துக்கு நன்றி அக்கா...
தொடர்ந்து வாசியுங்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
அசத்தல் சார் உங்களின் முதல் கதை என்றாலும் சிறப்பான ஆரம்பம் அருமையாக செல்கிறது அடுத்த அடுத்த பக்கங்களை சுவரசியமாக படிக்க முனைகிறது தொடர்ந்து படித்து முடிந்த வரை கருத்திடுகிறேன் சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
நிஜமாக முழுதும் படித்திட்டிங்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
நான் முழுதும் படித்தேன் என்று சொல்ல வில்லை படித்ததை வைத்து எழுதினேன் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
என்ன படித்தீர்கள் எது வரை படித்தீர்கள் ?
இது வரை படித்ததைக்குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன..? இப்படில்லாம் நாங்க கேட்போமே!
இது வரை படித்ததைக்குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன..? இப்படில்லாம் நாங்க கேட்போமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டால் எனக்கு அழுகை அழுகையாக வரும் ஆமா...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
எனக்கு அழுகை எல்லாம் வேண்டாம். கதைக்கான விமர்சனம் மட்டும் போதும். அதை மட்டும் எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கலையாத கனவு
» தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)
» தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)
» கனவுகள்..!
» எதிர்கால கனவுகள்..
» தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)
» தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)
» கனவுகள்..!
» எதிர்கால கனவுகள்..
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|