Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
தொடர்கதை : கலையாத கனவுகள்... !
+2
பானுஷபானா
Nisha
6 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தொடர்கதை : கலையாத கனவுகள்... !
First topic message reminder :
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன்.
நன்றி.
என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....
அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
[url=http://www.chenaitamilulaa.net/t50220p121-topic#468857]அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்[/url]
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன்.
நன்றி.
நட்புடன்...,
சே.குமார்.
*****************
அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
[url=http://www.chenaitamilulaa.net/t50220p121-topic#468857]அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்[/url]
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்
- Spoiler:
- 1. படிப்பே பிரதானம்1996-ஆம் வருடம்...
மாடு,ஆடு, நாய், கோழிகளின் சத்தத்துடன் அழகான கிராமத்துக் காலைப் பொழுது...
"என்னடா குட்டி போட்ட நாயாட்டம் சுத்தி சுத்தி வாறே..."
"இன்னைக்கு ரிசல்ட் வருதுல்லம்மா... அதான் பயமா இருக்கு"
"என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... பாஸ் பண்ணிருவல்ல... ஒங்கப்பன் போனதுக்கு அப்பறம் பாலு யாவாரம் பாத்துத்தான் ஒங்கள படிக்க வக்கிறேன்... மூத்தவன் குடும்ப சூழ்நிலையால படிக்க முடியல... அக்கா படிச்சா... பொட்டபுள்ளய காலகாலத்துல கரை சேக்குற காரியத்தை பாக்காம படிக்க வச்சி அழகு பாக்குறியோன்னு அங்காளி பங்காளிக சத்தம் போட்டதால படிப்ப நிப்பாட்டி வீட்டுல இருக்க வச்சிட்டேன். நீயாவது நல்லா படிக்கணுங்கிறது என்னோட கனவுடா... அதுல மட்டும் மண் அள்ளிப் போட்டுறாதேடா..."
"ஐய்யோ அம்மா... ஆ...ஊன்னா புராணம் வாசிக்க ஆரம்பிச்சிருவே..."
"ஆமாடா... நாஞ் சொல்றது ஒனக்கு புராணமாத்தான்டா இருக்கும்... காலேசு படிக்கப் போறமுன்னு தெனாவெட்டு வந்திருச்சா..."
"அதெல்லாம் இல்லம்மா... நல்ல மார்க் வாங்கணுமேன்னு கவலையா இருக்கும்மா... நீங்க வேற தேவையில்லாம பேசி டென்சனாக்கிட்டிங்க..."
"நா... பேசுற ஒங்களுக்கு தேவையில்லாததுதான்... நாயி படிச்சா நாளைக்கு ஒம் பொண்டாட்டி புள்ள மதிக்கும்... இல்லயின்னா கேவலந்தான் படணும்... எனக்கா நாளக்கி சம்பாதிச்சு போடப்போறே... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட சிறுக்கின்னு கூட கேக்குறியோ இல்லையோ.... யாரு கண்டா... சரி சரி கஞ்சிய குடிச்சிட்டு சித்தம் போக்கு செவம் போக்குன்னு சுத்தி வா... எனக்கு வேல கெடக்கு... ஒனக்கு கஞ்சிய ஊத்திட்டு நா போயி மாடுகளை அவுத்து விட்டிட்டு வாறேன்..."
"சரிம்மா..."---
இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.ரிசல்ட் வந்து மார்க் சீட்டும் வாங்கியாச்சு... முன்னூற்றி அறுபது மார்க் வாங்கியிருந்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் நல்லது என்று சொல்லி அவனையும் அதற்கே அப்ளிகேசன் போடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு சிலவாகும் என்றும் சொன்னதால் அம்மாகிட்ட கேட்டுத்தாண்டா சொல்லணும் என்று சொல்லிவிட்டான்.
"அம்மா... என் பிரண்டெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேரப் போறாங்களாம்."
"என்ன பூட்டரோ படி... வேணாங்கல... நாலு பேருமாதிரி நீ நல்லா இருக்கணும்... அதுவும் ஒம்மாமனுக்கு முன்னால நாலெழுத்து படிச்சு உசந்து நிக்கணும்... இந்த ஸ்கூலுல சேக்கப் போகும்போது படிச்சவன் அவந்தான்னு ஒதவி கேக்கப் போனா வேலயிருக்குன்னு சொல்லி வரமாட்டேனுட்டான்... அன்னைக்கு நா ஒன்னய குறுக்கால நடந்து கூட்டிக்கிட்டு போயி கஷ்டப்பட்டு சேர்த்தேன்... அத மறந்துறாத... அதுதான் முக்கியம்..."
"படிப்பேம்மா... ஆனா கம்ப்யூட்டர் படிப்புக்கு அதிகம் செலவாகுமாம்..."
"எம்புட்டாம்... கூடையிலயா கேக்கப்போறாங்க..."
"இல்ல நம்ம சரவணன் அக்கா படிக்கிறாங்க... அவங்க சொன்னாங்க ஒரு செமஸ்டருக்கு ஆறாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்குமாம்... "
"வருசத்துக்கா...?"
"வருசத்துக்கு ரெண்டு செமஸ்டராம்... பன்னெண்டாயிரம்... அப்புறம் மத்த செலவு..."
"அம்புட்டுக்காசுக்கு ஆத்தா நா எங்கய்யா போவேன்... குருவி சேக்கிறமாதிரி சீதை கல்யாணத்துக்குத்தான் சேத்துக்கிட்டு வாறேன். அதை எடுத்துக் கொடுத்துப்புட்டா நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் அவள கரை சேக்காம இருக்க முடியாதேய்யா... அண்ணங்கிட்ட கேளு... நாளக்கி சரவணன் வீட்டுக்கு போகும் போது போன்ல அண்ணன கூப்பிட்டு விவரம் சொல்லு... அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்...ம்... சரியா..."
"ம்..."----
"டேய் உங்கண்ணன்கிட்ட அம்மா பேச சொன்னாங்கன்னாய்... பேசுடா"
"வேணான்டா... அதையும் வீணாவுல செரமப்படுத்திக்கிட்டு... பேசாம பிஸிக்ஸ் சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்... அது போதுன்டா...""சரி... உனக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யிடா..."
“ம்... குடும்ப சூழலையும் பாக்கணுமில்ல... அக்காவுக்கு எப்ப வேணுமின்னாலும் கல்யாணம் வைக்கலாம்...”
"ம்.... சரி... அப்புறம் நாளக்கி காலேசுல அப்ளிகேசன் கொடுக்கிறாங்களாம்... காலயில பத்து மணிக்கெல்லாம் அறிவு வரச் சொல்லியிருக்கான்... அவங்க அப்பா சொன்னாராம்..."
அறிவு அப்பா காலேசு ஆபீஸ்லதான் வேலை செய்யிறார். அதனால அவன் மூலமா நினைக்கிற குரூப் வாங்கிரலாமுன்னு சொல்லியிருந்தான்."சரிடா... எங்க வரணும்?""கரெக்டா 9.45க்கு காலேசு எண்ட்ரண்ஸ்க்கிட்ட வந்திடு..."
"சரிடா"
"சீக்கிரமா வந்தா செம்மேரிசுக்கு எதிர்த்தாப்புல இருக்க கடைக்கிட்ட நில்லு. நாங்க வந்திடுறோம்..."
"ம்..."---மறுநாள் காலை 10 மணி...
முன்னதாகவே செம்மேரிசுக்கு எதிர்த்த டீக்கடையில் நிற்க, நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.
தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன்.
-தொடரும்...****************************-'பரிவை' சே.குமார்.
Last edited by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:22; edited 1 time in total
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
Nisha wrote:அடேங்கப்பா!
அருமையான விமர்சனம், மொத்தக்கதையையும் ஒரே விமர்சனத்தில் சொல்லி விட்டீர்கள் போல இருக்குதே!
ம்ம் நடத்துங்க.. நன்றி, நன்று!
என் விமர்சனம் தொடரும் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
*சம்ஸ் wrote:ஏழைக் குடும்பதில் பிறந்த ஒருவரின் நிலை அதுவும் அப்பா இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தால் எப்படி இருக்கும் தாயின் எதிர் பார்ப்பு என்ன அந்த மகணின் எதிர் பார்ப்பு என்னவென்று உணர முடிகிறது.கதை அருமையாக நகர்கிறது கதையின் அடுத்த பாகதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.2ம் அத்தியாயத்தின் பின்னூட்டத்தை பிறகு தருகிறேன்.
மிகச் சிறப்பான விமர்சனம் சகோதரரே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
சே.குமார் wrote:*சம்ஸ் wrote:ஏழைக் குடும்பதில் பிறந்த ஒருவரின் நிலை அதுவும் அப்பா இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தால் எப்படி இருக்கும் தாயின் எதிர் பார்ப்பு என்ன அந்த மகணின் எதிர் பார்ப்பு என்னவென்று உணர முடிகிறது.கதை அருமையாக நகர்கிறது கதையின் அடுத்த பாகதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.2ம் அத்தியாயத்தின் பின்னூட்டத்தை பிறகு தருகிறேன்.
மிகச் சிறப்பான விமர்சனம் சகோதரரே...
ஆக்கப்பூர்வமான அருமையான கதை தொடராக படித்து கருத்திடுகிறேன் சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
உண்மையில் தாயின் ஏக்கம் கனவு மகன்மீதான பாசம் எல்லாம் படிக்கும் போது என்னை எங்கேயோ அழைத்துச் செல்கிறது. ஒவ்வெறு ஏழை தாயின் எதிர் பார்ப்பு என்ன தாயின் பாசம் என்னவென்று அருமையாக எடுத்துக் காட்டி உள்ளீர்கள்.
வேர்த்து வரும் போது முகம் துடைத்து விடுவதும் நனைந்து வரும் போது தலை துவட்டி விடுவதுமாக பாசம் காட்ட தாயை தவிர வேறு உறவு இல்லை.மகன் படிக்க ”காலேஜில் சீட்டு” கிடைத்தற்கே அந்த தாயிக்கு இத்தனை சந்தோஷம் என்றால் அப்படியான மகன் படித்து பட்டம் பெற்றால் சொல்லவா வேண்டும்.ஒவ்வெறு தாய்க்கும் பிள்கைள் மீது அக்கரையும் எதிர் பார்ப்பும் இருக்கதான் செய்கிறது அதை பிள்ளைகள் தான் புரிந்து கொள்ள தாமதம் ஆகிறது.
அக்காவின் மறைமுகமான பாசம் அடுத்த அடுத்த சொந்தங்களின் பாசம் என்று அத்தனையும் சிறப்பாக சொல்லப் படுகிறது கதை எதிர் பார்ப்புடன் நகர்கிறது.
வேர்த்து வரும் போது முகம் துடைத்து விடுவதும் நனைந்து வரும் போது தலை துவட்டி விடுவதுமாக பாசம் காட்ட தாயை தவிர வேறு உறவு இல்லை.மகன் படிக்க ”காலேஜில் சீட்டு” கிடைத்தற்கே அந்த தாயிக்கு இத்தனை சந்தோஷம் என்றால் அப்படியான மகன் படித்து பட்டம் பெற்றால் சொல்லவா வேண்டும்.ஒவ்வெறு தாய்க்கும் பிள்கைள் மீது அக்கரையும் எதிர் பார்ப்பும் இருக்கதான் செய்கிறது அதை பிள்ளைகள் தான் புரிந்து கொள்ள தாமதம் ஆகிறது.
அக்காவின் மறைமுகமான பாசம் அடுத்த அடுத்த சொந்தங்களின் பாசம் என்று அத்தனையும் சிறப்பாக சொல்லப் படுகிறது கதை எதிர் பார்ப்புடன் நகர்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
அட! அட! அட! அடடடடா!
இது சம்ஸ் தானா? இதுவல்லவோ விமர்சனம். நிஜமாகவே சூப்பரோ சூப்பர் சம்ஸ்! அருமையான அசத்தலான விமர்சனம். சாரு இப்பத்தான் கதையை ஒழுங்காக முழுக்க படித்திருக்கார் போலவே!
நன்று, நன்றி! இன்னும் இப்படியே தொடருங்கள்.
இது சம்ஸ் தானா? இதுவல்லவோ விமர்சனம். நிஜமாகவே சூப்பரோ சூப்பர் சம்ஸ்! அருமையான அசத்தலான விமர்சனம். சாரு இப்பத்தான் கதையை ஒழுங்காக முழுக்க படித்திருக்கார் போலவே!
நன்று, நன்றி! இன்னும் இப்படியே தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
Nisha wrote:அட! அட! அட! அடடடடா!
இது சம்ஸ் தானா? இதுவல்லவோ விமர்சனம். நிஜமாகவே சூப்பரோ சூப்பர் சம்ஸ்! அருமையான அசத்தலான விமர்சனம். சாரு இப்பத்தான் கதையை ஒழுங்காக முழுக்க படித்திருக்கார் போலவே!
நன்று, நன்றி! இன்னும் இப்படியே தொடருங்கள்.
நன்றி மேடம் என் விமர்சனத்தை பாராட்டி எழுதியமைக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
சகோதரருக்கு...
மிக அருமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்...
இதுபோன்ற விமர்சனங்களே மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்....
நிஷா அக்காவின் சப்போர்ட் எனக்கு மிகப்பெரிய பலம்...
மிக அருமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்...
இதுபோன்ற விமர்சனங்களே மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்....
நிஷா அக்காவின் சப்போர்ட் எனக்கு மிகப்பெரிய பலம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
சேனையில் தொடர்கதையா? இப்போதுதான் பார்த்தேன். கவனத்திற்கு கொண்டு வந்த நிஷா மேடத்திற்கு நன்றி. விரைவில் அனைத்து அத்தியாயங்களையும் படித்து பின்னூட்டம் இடுகிறேன் குமார் ஐயா.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
கமாலுதீன் wrote:சேனையில் தொடர்கதையா? இப்போதுதான் பார்த்தேன். கவனத்திற்கு கொண்டு வந்த நிஷா மேடத்திற்கு நன்றி. விரைவில் அனைத்து அத்தியாயங்களையும் படித்து பின்னூட்டம் இடுகிறேன் குமார் ஐயா.
தங்கள் கருத்துக்கு நன்றி.
ஐயாவெல்லாம் வேண்டாம்.. குமாரே போதும்...
கதைக்கான கருத்தைச் சொல்லுங்க...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
ஆமாமா! கருத்தினை சீக்கிரமாக சொன்னால் தான் அடுத்த பாகம் வரும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
கலையாத கனவுகள் : (அத்தியாயம் 1 - 4)
படிப்பே பிரதானம்!
அம்மாவின் ஆசை!
ராக்கிங் ஆரம்பம்!
ராக்கிங் ராஜாங்கம்!
இதுதான் உங்களின் கதைகளில் நான் படிக்கும் முதல் கதை. தொடர்கதையாக இருந்தாலும் சிறு சிறு அத்தியாங்களாக இருப்பது கதையின் சிறப்பு. முதல் நான்கு அத்தியாயங்களை முழு மூச்சில் படித்து விட்டேன். அருமையான நடை. முதல் இரு அத்தியாயங்களில் ஒரு கிராமத்து படம் பார்ப்பது போன்றோ அல்லது ஒரு கிராமத்துக்கே போனது போன்றோ ஒரு உணர்வு. அந்த கிராமத்து உரையாடல், கிராமத்து தாய், சகோதரி, நண்பர்கள் மற்றும் அவர்களின் பழக்கங்கள் நம்பிக்கைகள் மற்றும் உபசரிப்புகள் என அனைத்து உணர்வுகளோடும் நம்மை ஒன்ற வைத்துவிடும் எழத்து நடை கதையின் மிகப்பெரிய பலம்.
கிராமச் சூழலில் இருந்து கல்லூரி சூழலுக்கு மாறுவதே தெரியாமல் வாசிப்பவர்களை புதிய சூழலுக்கு (மூன்றாம் மற்றும் நான்காம் பாகம்) புதிய நடையில் அழைத்து சென்றிருப்பது எழுத்தாளரின் திறமைக் காட்டுகிறது. "ராக்கிங் இல்லாத சூழலில் கல்லூரி படிப்பை முடித்த எனக்கு, அந்த பெண்களின் ராக்கிங்கைப் படித்த போது அடடா இப்படி ஒரு சூழல் நமக்கு அமையவில்லையே எனவும் அப்படி அமைந்திருந்தால் நாம் எப்படி நடந்திருபோம்" என கற்பனை செய்யவும் வைத்தது இந்த அத்தியாயங்களின் மிகப்பெரிய வெற்றி.
மொத்தத்தில் நான்கு அத்தியாயங்களும் இயற்கையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுவது அதன் சிறப்பு.
மற்ற அத்தியாயங்களைப் படித்து தொடர்ந்து எழுதுகிறேன். தொடர்கதைக்கு தொடர் விமர்சனம் எழுதுவதுதானே சிறப்பு.
வாழ்த்துக்கள் குமார்.
படிப்பே பிரதானம்!
அம்மாவின் ஆசை!
ராக்கிங் ஆரம்பம்!
ராக்கிங் ராஜாங்கம்!
இதுதான் உங்களின் கதைகளில் நான் படிக்கும் முதல் கதை. தொடர்கதையாக இருந்தாலும் சிறு சிறு அத்தியாங்களாக இருப்பது கதையின் சிறப்பு. முதல் நான்கு அத்தியாயங்களை முழு மூச்சில் படித்து விட்டேன். அருமையான நடை. முதல் இரு அத்தியாயங்களில் ஒரு கிராமத்து படம் பார்ப்பது போன்றோ அல்லது ஒரு கிராமத்துக்கே போனது போன்றோ ஒரு உணர்வு. அந்த கிராமத்து உரையாடல், கிராமத்து தாய், சகோதரி, நண்பர்கள் மற்றும் அவர்களின் பழக்கங்கள் நம்பிக்கைகள் மற்றும் உபசரிப்புகள் என அனைத்து உணர்வுகளோடும் நம்மை ஒன்ற வைத்துவிடும் எழத்து நடை கதையின் மிகப்பெரிய பலம்.
கிராமச் சூழலில் இருந்து கல்லூரி சூழலுக்கு மாறுவதே தெரியாமல் வாசிப்பவர்களை புதிய சூழலுக்கு (மூன்றாம் மற்றும் நான்காம் பாகம்) புதிய நடையில் அழைத்து சென்றிருப்பது எழுத்தாளரின் திறமைக் காட்டுகிறது. "ராக்கிங் இல்லாத சூழலில் கல்லூரி படிப்பை முடித்த எனக்கு, அந்த பெண்களின் ராக்கிங்கைப் படித்த போது அடடா இப்படி ஒரு சூழல் நமக்கு அமையவில்லையே எனவும் அப்படி அமைந்திருந்தால் நாம் எப்படி நடந்திருபோம்" என கற்பனை செய்யவும் வைத்தது இந்த அத்தியாயங்களின் மிகப்பெரிய வெற்றி.
மொத்தத்தில் நான்கு அத்தியாயங்களும் இயற்கையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுவது அதன் சிறப்பு.
மற்ற அத்தியாயங்களைப் படித்து தொடர்ந்து எழுதுகிறேன். தொடர்கதைக்கு தொடர் விமர்சனம் எழுதுவதுதானே சிறப்பு.
வாழ்த்துக்கள் குமார்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
கமாலுதீன் wrote:கலையாத கனவுகள் : (அத்தியாயம் 1 - 4)
படிப்பே பிரதானம்!
அம்மாவின் ஆசை!
ராக்கிங் ஆரம்பம்!
ராக்கிங் ராஜாங்கம்!
இதுதான் உங்களின் கதைகளில் நான் படிக்கும் முதல் கதை. தொடர்கதையாக இருந்தாலும் சிறு சிறு அத்தியாங்களாக இருப்பது கதையின் சிறப்பு. முதல் நான்கு அத்தியாயங்களை முழு மூச்சில் படித்து விட்டேன். அருமையான நடை. முதல் இரு அத்தியாயங்களில் ஒரு கிராமத்து படம் பார்ப்பது போன்றோ அல்லது ஒரு கிராமத்துக்கே போனது போன்றோ ஒரு உணர்வு. அந்த கிராமத்து உரையாடல், கிராமத்து தாய், சகோதரி, நண்பர்கள் மற்றும் அவர்களின் பழக்கங்கள் நம்பிக்கைகள் மற்றும் உபசரிப்புகள் என அனைத்து உணர்வுகளோடும் நம்மை ஒன்ற வைத்துவிடும் எழத்து நடை கதையின் மிகப்பெரிய பலம்.
கிராமச் சூழலில் இருந்து கல்லூரி சூழலுக்கு மாறுவதே தெரியாமல் வாசிப்பவர்களை புதிய சூழலுக்கு (மூன்றாம் மற்றும் நான்காம் பாகம்) புதிய நடையில் அழைத்து சென்றிருப்பது எழுத்தாளரின் திறமைக் காட்டுகிறது. "ராக்கிங் இல்லாத சூழலில் கல்லூரி படிப்பை முடித்த எனக்கு, அந்த பெண்களின் ராக்கிங்கைப் படித்த போது அடடா இப்படி ஒரு சூழல் நமக்கு அமையவில்லையே எனவும் அப்படி அமைந்திருந்தால் நாம் எப்படி நடந்திருபோம்" என கற்பனை செய்யவும் வைத்தது இந்த அத்தியாயங்களின் மிகப்பெரிய வெற்றி.
மொத்தத்தில் நான்கு அத்தியாயங்களும் இயற்கையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுவது அதன் சிறப்பு.
மற்ற அத்தியாயங்களைப் படித்து தொடர்ந்து எழுதுகிறேன். தொடர்கதைக்கு தொடர் விமர்சனம் எழுதுவதுதானே சிறப்பு.
வாழ்த்துக்கள் குமார்.
வாவ் அசத்தல்! அருமை. கதை படிப்பது போன்று உங்களின் விமர்சனத்தையும் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் படித்தேன் சிறப்போ சிறப்பு!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
கமாலூதீன்! மிகச்சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள். ஒரு கதையோ தொடரோ எழுதும் போது அதை படித்து ஊக்க்ம் கொடுத்தால் தான் அடுத்து ஆர்வமாய் எழுத தோன்றும். இறைக்க இறைக்க ஊறும் நீரைப்பொல் நாம் விமர்சனம் எனும் நீரை ஊற்றினால் தான் எழுதுபவர் மனதில் கற்பனை செழித்து வளரும். உந்து சக்தி தரக்கூடிய வ்மர்சனம் எழுதக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது கமாலூதீன்.
நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து படித்து எழுதுங்கள்.
http://www.chenaitamilulaa.net/t50260-topic#465088
நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து படித்து எழுதுங்கள்.
http://www.chenaitamilulaa.net/t50260-topic#465088
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
Nisha wrote:கமாலூதீன்! மிகச்சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள். ஒரு கதையோ தொடரோ எழுதும் போது அதை படித்து ஊக்க்ம் கொடுத்தால் தான் அடுத்து ஆர்வமாய் எழுத தோன்றும். இறைக்க இறைக்க ஊறும் நீரைப்போல் நாம் விமர்சனம் எனும் நீரை ஊற்றினால் தான் எழுதுபவர் மனதில் கற்பனை செழித்து வளரும். உந்து சக்தி தரக்கூடிய வ்மர்சனம் எழுதக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது கமாலூதீன்.
நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து படித்து எழுதுங்கள்.
http://www.chenaitamilulaa.net/t50260-topic#465088
தாங்கள் சொல்வது உண்மை தான் மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
நன்றி நிஷா மேடம் மற்றும் சம்ஸ்.*சம்ஸ் wrote:Nisha wrote:கமாலூதீன்! மிகச்சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள். ஒரு கதையோ தொடரோ எழுதும் போது அதை படித்து ஊக்கம் கொடுத்தால் தான் அடுத்து ஆர்வமாய் எழுத தோன்றும். இறைக்க இறைக்க ஊறும் நீரைப்போல் நாம் விமர்சனம் எனும் நீரை ஊற்றினால் தான் எழுதுபவர் மனதில் கற்பனை செழித்து வளரும். உந்து சக்தி தரக்கூடிய வ்மர்சனம் எழுதக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது கமாலூதீன்.
நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து படித்து எழுதுங்கள்.
http://www.chenaitamilulaa.net/t50260-topic#465088
தாங்கள் சொல்வது உண்மை தான் மேடம்
விமர்சனத்திற்கே விமர்சனம் செய்து
ஊக்கப்படுத்துவதற்கு ஊக்கம் அளித்து
ஆர்வமூட்டுவதற்கு ஆர்வமளித்து
பாராட்டுவதை பாராட்டி
நட்போடும் அன்போடும்
அனைவரையும் அரவணைத்து
சேனைக்கும் சேனைத்தமிழுக்கும்
தாங்கள் செய்யும் சேவை
பாராட்டுக்குரியது.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
@ நண்பர் கமாலுதீன்...
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
சே.குமார் wrote:@ நண்பர் கமாலுதீன்...
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.
குமார் சார் தாங்கள் சொல்லவது போன்று பதிபவர்கள் அனைவரைம் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது நமது ஒவ்வொருவரினதும் கடமை நமது பதிவு பின்னூட்டம் என்று மட்டும் பாராது அனைவரினதும் சொந்த பதிவுகளை கவனித்து நல்ல பின்னூட்டம் இடுவதால் இன்னும் அவர்களை எழுத தூண்டும். எழுத்தாளர்களை ஊக்கப் படுத்துவோம்!நல்ல பின்னூட்டங்களை இடுவதால்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
நல்லது!
அடுத்து தொடருங்கள் குமார்!
அடுத்து தொடருங்கள் குமார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
*சம்ஸ் wrote:சே.குமார் wrote:@ நண்பர் கமாலுதீன்...
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.
குமார் சார் தாங்கள் சொல்லவது போன்று பதிபவர்கள் அனைவரைம் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது நமது ஒவ்வொருவரினதும் கடமை நமது பதிவு பின்னூட்டம் என்று மட்டும் பாராது அனைவரினதும் சொந்த பதிவுகளை கவனித்து நல்ல பின்னூட்டம் இடுவதால் இன்னும் அவர்களை எழுத தூண்டும். எழுத்தாளர்களை ஊக்கப் படுத்துவோம்!நல்ல பின்னூட்டங்களை இடுவதால்.
அதென்ன பின்னூட்டங்களில் நல்ல பின்னூட்டம் கெட்ட பின்னூட்டம்?
விமர்சனம் என்பது பாராட்டுதலாய் மட்டும் இருக்காது தட்டிக்கொடுப்பதாயும் குட்டித்திருத்துவதாயும் இருந்தால் தான் எழுத்து மேன்மையுறும். தட்டல் மட்டும் வேண்டும். குட்டலும் திட்டலும் வேண்டாம் என சொன்னால் இந்த நல்ல பின்னூட்டம் எனும் வரையறைக்குள் அடங்க நான் தயாராய் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
Nisha wrote:*சம்ஸ் wrote:சே.குமார் wrote:@ நண்பர் கமாலுதீன்...
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.
குமார் சார் தாங்கள் சொல்லவது போன்று பதிபவர்கள் அனைவரைம் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது நமது ஒவ்வொருவரினதும் கடமை நமது பதிவு பின்னூட்டம் என்று மட்டும் பாராது அனைவரினதும் சொந்த பதிவுகளை கவனித்து நல்ல பின்னூட்டம் இடுவதால் இன்னும் அவர்களை எழுத தூண்டும். எழுத்தாளர்களை ஊக்கப் படுத்துவோம்!நல்ல பின்னூட்டங்களை இடுவதால்.
அதென்ன பின்னூட்டங்களில் நல்ல பின்னூட்டம் கெட்ட பின்னூட்டம்?
விமர்சனம் என்பது பாராட்டுதலாய் மட்டும் இருக்காது தட்டிக்கொடுப்பதாயும் குட்டித்திருத்துவதாயும் இருந்தால் தான் எழுத்து மேன்மையுறும். தட்டல் மட்டும் வேண்டும். குட்டலும் திட்டலும் வேண்டாம் என சொன்னால் இந்த நல்ல பின்னூட்டம் எனும் வரையறைக்குள் அடங்க நான் தயாராய் இல்லை.
குட்டுதலும் தட்டுதலும் இருக்கட்டும் மேடம்.நான் சொன்னது சும்மா அருமை ,வாழ்த்துக்கள் என்று மட்டும் எழுதுவதை தவிர்ந்து சிறந்த விமர்சனம் எழுதுவதால் எழுத்தளர்களை ஊக்கப்படுத்த முடியும் என்று சொல்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
அதுவும் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
புரிதலுக்கு நன்றி மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
கண்டிப்பாக சம்ஸ்...
கொஞ்சம் பிஸி.... முடிந்தவரை கருத்து இட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்...
கொஞ்சம் பிஸி.... முடிந்தவரை கருத்து இட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
அக்கா...
எட்டாவது பகுதி இந்த லிங்கில் இருக்கு....
http://www.chenaitamilulaa.net/t50220p55-topic#465026
எட்டாவது பகுதி இந்த லிங்கில் இருக்கு....
http://www.chenaitamilulaa.net/t50220p55-topic#465026
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !
கலையாத கனவுகள் எட்டு அத்தியாயங்களையும் படித்துவிட்டேன். ராம்கி வீட்டு குடும்ப நிகழ்வுகள் மற்றும் கல்லூரியில் காதல் என இருவேறு சூழல்களில் கதை அருமையாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இரண்டு சூழல்களிலும் நிகழ்வுகள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மிகவும் சுவரஸ்யமாகவும் எதிர்பார்ப்புடனும் செல்கிறது. பாரட்டுக்கள் குமார்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கலையாத கனவு
» தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)
» தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)
» கனவுகள்..!
» எதிர்கால கனவுகள்..
» தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)
» தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)
» கனவுகள்..!
» எதிர்கால கனவுகள்..
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|