Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!
3 posters
Page 1 of 1
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!
* உண்மையை ஒத்துக் கொள்ளாமல் அதை மறைக்க முயல்கிறோம். இதுவே நம்முடைய பிரச்னைகளுக்கு மூல காரணம். மாற்ற முடிந்ததை மாற்றவும், மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டால் வாழ்வில் பிரச்னை குறைந்து விடும்.
* வாழ்வில் எந்த செயலில் ஈடுபட்டாலும், இன்பதுன்பம் கலந்தே இருக்கும். தனித்த இன்பமோ, தனித்த துன்பமோ பெற மனிதனால் ஒருபோதும் முடியாது.
* மனிதன் நீண்டஆயுள், சுகம், அறிவு இந்த மூன்றையும் வாழ்வில் தேட வேண்டியிருக்கிறது. இவற்றை அடிப்படை விருப்பம் என்றே சொல்லலாம்.
* சுகதுக்கங்களை அனுபவிக்கும்போது மனிதன் தன்னை "நான் சுகவாசி' "நான் சிரமப்படுவதற்கென்றே பிறந்தவன்' என்று சொல்லிக் கொள்கிறான். சுகமோ, துக்கமோ மனிதனைப் பாதிப்பதில்லை. மனதில் எழும் எண்ணங்களே மனிதனைப் பெரிதும் பாதிக்கின்றன.
* பிறர் என்னைப் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அதனால் ஏமாற்றமே உண்டாகும். "பிறர் எனக்கு அதிக மதிப்பு மரியாதை தரவேண்டும்' என்று அதிகாரத்தோடு கேட்பதும் தவறு.
* செடியில் மலரும் பூக்கள் பிறர் புகழ வேண்டும் என்பதற்காக மலர்வதில்லை. செடிகளின் இயல்பு பூப்பூப்பது. அதுபோல, பிறர் நன்மைக்காக உங்களின் திறமைகளைப் பயன்படுத்துங்கள்.
* புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மன பாதிப்பை உண்டாக்கக் கூடாது. நம் செயலில் காட்டும் திறமையால் புகழ் தானாக தேடி வரவேண்டுமே ஒழிய, நாம் தேடி அலையக் கூடாது.
* இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால் தான், வாழ்வில் நன்மை நடக்கிறதே ஒழிய, நாமாக ஒன்றையும் அடைந்து விட முடியாது. வாழ்வில் சாதனை புரிந்தாலும், அதற்கு காரணம் "நானே' என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது.
* மன்னிக்கும் மனோபாவத்தால் மனதில் சாந்தம் எப்போதும் நிறைந்திருக்கும். மன்னிப்பவனின் மனம் கோயிலுக்கு சமமானது. வெறும் குற்றத்தை மட்டும் பார்க்காமல், அதைச் செய்தவனின் சூழ்நிலை, வாழ்வு முறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டால் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும்.
* முற்றும் நல்லவர், தீயவர் என்று ஒருவரைப் பார்க்க முடியாது. விருப்பும், வெறுப்பும் கலந்தவர்களாகவே எல்லாரும் இருக்கிறோம். இதை உணர்ந்து விட்டால் பொறுமையுடன் விட்டுக் கொடுக்கும் பண்பு நம்மிடம் உருவாகும்.
* உடலைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பதைப் போல, மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்ற அழுக்குகளைப் போக்க அமைதி, அடக்கம், கொல்லாமை போன்ற சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.
* தாவரம், விலங்கு, பூச்சி, மனிதன் என உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கை பொதுவானது. "வாழ்க்கை வாழ்வதற்கே' என்னும் குறிக்கோளுடன் வாழ வேண்டும். இதை விட சிறந்த குறிக்கோள் வேறு எதுவும் இல்லை.
நன்றி தினமலர்
* வாழ்வில் எந்த செயலில் ஈடுபட்டாலும், இன்பதுன்பம் கலந்தே இருக்கும். தனித்த இன்பமோ, தனித்த துன்பமோ பெற மனிதனால் ஒருபோதும் முடியாது.
* மனிதன் நீண்டஆயுள், சுகம், அறிவு இந்த மூன்றையும் வாழ்வில் தேட வேண்டியிருக்கிறது. இவற்றை அடிப்படை விருப்பம் என்றே சொல்லலாம்.
* சுகதுக்கங்களை அனுபவிக்கும்போது மனிதன் தன்னை "நான் சுகவாசி' "நான் சிரமப்படுவதற்கென்றே பிறந்தவன்' என்று சொல்லிக் கொள்கிறான். சுகமோ, துக்கமோ மனிதனைப் பாதிப்பதில்லை. மனதில் எழும் எண்ணங்களே மனிதனைப் பெரிதும் பாதிக்கின்றன.
* பிறர் என்னைப் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அதனால் ஏமாற்றமே உண்டாகும். "பிறர் எனக்கு அதிக மதிப்பு மரியாதை தரவேண்டும்' என்று அதிகாரத்தோடு கேட்பதும் தவறு.
* செடியில் மலரும் பூக்கள் பிறர் புகழ வேண்டும் என்பதற்காக மலர்வதில்லை. செடிகளின் இயல்பு பூப்பூப்பது. அதுபோல, பிறர் நன்மைக்காக உங்களின் திறமைகளைப் பயன்படுத்துங்கள்.
* புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மன பாதிப்பை உண்டாக்கக் கூடாது. நம் செயலில் காட்டும் திறமையால் புகழ் தானாக தேடி வரவேண்டுமே ஒழிய, நாம் தேடி அலையக் கூடாது.
* இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால் தான், வாழ்வில் நன்மை நடக்கிறதே ஒழிய, நாமாக ஒன்றையும் அடைந்து விட முடியாது. வாழ்வில் சாதனை புரிந்தாலும், அதற்கு காரணம் "நானே' என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது.
* மன்னிக்கும் மனோபாவத்தால் மனதில் சாந்தம் எப்போதும் நிறைந்திருக்கும். மன்னிப்பவனின் மனம் கோயிலுக்கு சமமானது. வெறும் குற்றத்தை மட்டும் பார்க்காமல், அதைச் செய்தவனின் சூழ்நிலை, வாழ்வு முறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டால் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும்.
* முற்றும் நல்லவர், தீயவர் என்று ஒருவரைப் பார்க்க முடியாது. விருப்பும், வெறுப்பும் கலந்தவர்களாகவே எல்லாரும் இருக்கிறோம். இதை உணர்ந்து விட்டால் பொறுமையுடன் விட்டுக் கொடுக்கும் பண்பு நம்மிடம் உருவாகும்.
* உடலைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பதைப் போல, மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்ற அழுக்குகளைப் போக்க அமைதி, அடக்கம், கொல்லாமை போன்ற சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.
* தாவரம், விலங்கு, பூச்சி, மனிதன் என உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கை பொதுவானது. "வாழ்க்கை வாழ்வதற்கே' என்னும் குறிக்கோளுடன் வாழ வேண்டும். இதை விட சிறந்த குறிக்கோள் வேறு எதுவும் இல்லை.
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!
புகழ் என்பது தானாய் வருவது. நம் செயல்பாடுகள் கண்டு நமக்கு கிடைப்பது. ஆனால் நம்மை தான் புகழ வேண்டும் எதிர்பார்ப்பது தவறுதான்.* பிறர் என்னைப் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அதனால் ஏமாற்றமே உண்டாகும். "பிறர் எனக்கு அதிக மதிப்பு மரியாதை தரவேண்டும்' என்று அதிகாரத்தோடு கேட்பதும் தவறு.
அதே போல் மரியாதையும் மதிப்பும் அவரவர் செயல்கள் பார்த்து நம் மன்சில் இயல்பாய் வருவது. காசு கொடுத்தெல்லாம் வாங்க முடியாது.
ரெம்ப சரிதான். ஆனால் இப்போவெல்லாம் நாம் பாராட்டினால் மட்டும் எல்லோருக்கும் பிடிக்கும். தவறு என சுட்டினால் நாம் அவர்கள் எதிரியாவது தான் நடக்கும். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. புகழ்ச்சி மட்டும் தான் மனிதருக்கு வேண்டும். தவறை சுட்டுவது இகழ்தல் என நம்மை புரிந்துக்காமல் போகும் மனிதர்கள் தான் அனேகம்.புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மன பாதிப்பை உண்டாக்கக் கூடாது. நம் செயலில் காட்டும் திறமையால் புகழ் தானாக தேடி வரவேண்டுமே ஒழிய, நாம் தேடி அலையக் கூடாது.
ஹாஹா! இந்த கட்டுரையை எழுதியவரே முதலில் மன்னிப்பு எனில் என்ன என புரிந்து எழுதி இருப்பாரோ என்னமோ?மன்னிக்கும் மனோபாவத்தால் மனதில் சாந்தம் எப்போதும் நிறைந்திருக்கும். மன்னிப்பவனின் மனம் கோயிலுக்கு சமமானது. வெறும் குற்றத்தை மட்டும் பார்க்காமல், அதைச் செய்தவனின் சூழ்நிலை, வாழ்வு முறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டால் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும்.
கட்டுரை என்னமோ நல்லதை தான் சொல்கின்றது. படிக்க சுவாரஷ்யமாக இருக்கின்றது. ஆனால் இதை படிப்பவரெல்லாம் கடைபிடிக்கின்றார்கள் என சொல்ல முடியாது.
நம்மிடம் நான் எனும் ஈகோ இருக்கும்வரை
ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது!
கட்டுரைப்பதிவுக்கு நன்றிங்க சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!
நேற்று நான் எடுத்த முடிவு இன்று கட்டுரையாக பதிவாக பதிந்துள்ளீர்கள்
வெறுப்புக்காட்டி நாம் நேசிக்கும் உள்ளங்களைக் காயப்படுத்துவதை விட்டு வெறுப்பையும் விருப்பாக மாற்ற முயல்வோம் மறப்போம் மன்னிப்புாம் வாழ்வை சிறப்பாக வாழ்வோம்
நன்றி சம்ஸ் சிறந்த கட்டுரை
நன்றியுடன் நண்பன்
வெறுப்புக்காட்டி நாம் நேசிக்கும் உள்ளங்களைக் காயப்படுத்துவதை விட்டு வெறுப்பையும் விருப்பாக மாற்ற முயல்வோம் மறப்போம் மன்னிப்புாம் வாழ்வை சிறப்பாக வாழ்வோம்
நன்றி சம்ஸ் சிறந்த கட்டுரை
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!
நண்பன் wrote:நேற்று நான் எடுத்த முடிவு இன்று கட்டுரையாக பதிவாக பதிந்துள்ளீர்கள்
வெறுப்புக்காட்டி நாம் நேசிக்கும் உள்ளங்களைக் காயப்படுத்துவதை விட்டு வெறுப்பையும் விருப்பாக மாற்ற முயல்வோம் மறப்போம் மன்னிப்புாம் வாழ்வை சிறப்பாக வாழ்வோம்
நன்றி சம்ஸ் சிறந்த கட்டுரை
நன்றியுடன் நண்பன்
எப்படி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!
நன்றி!
கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தும் நிஷா மேடம்,நண்பன் உங்களின் பின்னூட்டமும் அருமை விடையில்லாமல் கேள்வி இல்லை அனைத்து கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடை என்று ஒன்று இருக்கும். அதை நாம் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.தவறு எங்கு இருக்கிறது எதனால் நடக்கிறது அதை எப்படி சரி செய்வது என்று சிந்தித்தால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
மன்னிப்பதும் மறப்பதும் மனித வாழ்வில் முக்கியமான ஒன்று அதை யார் ஏற்று நடக்கிறாரோ அவர் வெற்றி பெறுவார்.
கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தும் நிஷா மேடம்,நண்பன் உங்களின் பின்னூட்டமும் அருமை விடையில்லாமல் கேள்வி இல்லை அனைத்து கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடை என்று ஒன்று இருக்கும். அதை நாம் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.தவறு எங்கு இருக்கிறது எதனால் நடக்கிறது அதை எப்படி சரி செய்வது என்று சிந்தித்தால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
மன்னிப்பதும் மறப்பதும் மனித வாழ்வில் முக்கியமான ஒன்று அதை யார் ஏற்று நடக்கிறாரோ அவர் வெற்றி பெறுவார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது _
» சமைக்கத் தெரிந்த ஆண்கள்
» நினைக்கத் தெரிந்த மனமே...!
» இங்கிதம் தெரிந்த கணவர்..
» கண்ணாடியில் தெரிந்த டயானா ஆவி உருவம்
» சமைக்கத் தெரிந்த ஆண்கள்
» நினைக்கத் தெரிந்த மனமே...!
» இங்கிதம் தெரிந்த கணவர்..
» கண்ணாடியில் தெரிந்த டயானா ஆவி உருவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|