Latest topics
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!by rammalar Today at 5:57
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26
» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21
» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17
» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20
» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17
» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07
» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40
» பக்தி - பழமொழிகள்
by rammalar Sat 20 Jul 2024 - 17:53
» உடலை உறுதியாக்கும் பழரசங்கள்
by rammalar Sat 20 Jul 2024 - 16:16
» நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிவி
by rammalar Fri 19 Jul 2024 - 20:08
» திரைச்சுவை -
by rammalar Fri 19 Jul 2024 - 5:12
பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?
Page 1 of 1
பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251343562775_did-Sridevi-had-a-fainting-spell-in-Dubai-hotel-bathroom_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2018/Feb/201802251343562775_did-Sridevi-had-a-fainting-spell-in-Dubai-hotel-bathroom_SECVPF.gif)
திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் உள்ள பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தெரியவந்துள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.
கமல்ஹாசன்:- மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை தான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். ஸ்ரீதேவியின் திறமைக்கு இளம் வயது நடிப்பே சாட்சி. அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள். திரை உலகின் அனைத்து புகழுக்கும் தகுதியானவர்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_1_Sridevi-KamalRajini-Tribute5._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_1_Sridevi-KamalRajini-Tribute5._L_styvpf.jpg)
ரஜினிகாந்த்:- ஸ்ரீதேவியின் மரணத்தை அறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நல்ல நண்பரை இழந்து விட்டேன். திரையுலகம் உண்மையான மிகப்பெரிய சாதனையாளரை இழந்துவிட்டது.
அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நானும் வேதனையை உணருகிறேன். எனது இதயம் நிறைந்த அனுதாபங்கள் நாங்கள் அவரை இழந்து விட்டோம்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_2_Sridevi-KamalRajini-Tribute4._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_2_Sridevi-KamalRajini-Tribute4._L_styvpf.jpg)
குஷ்பு:- ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தேன். அவர் எவ்வளவோ சாதித்துள்ளார். 15 வருடம் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வித்தியாசமான ஸ்ரீதேவியை நமக்கு காண்பித்திருந்தார். ஒரு மிகப்பெரிய இழப்பு இது.
ஸ்ரீதேவியை உயர்த்தியது அவருடைய தொழில் பக்திதான். அவர் மறைய வேண்டிய வயது இல்லை.
ராதா:- ஸ்ரீதேவி அழகான ஹீரோயினி. அவருடன் நான் சந்திப்பு என்ற படத்தில் சேர்ந்து நடித்தேன். அப்போதுதான் நான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். அவர் ராணி போல இருந்தார். அவர் அதிகமாக பேசமாட்டார். ஆனால் அவரது சிரிப்பு மறக்க முடியாதது. அவரது மேக்கப், நடனமாடும் ஸ்டைல் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துள்ளேன். 1980 காலகட்டத்தில் இந்தியில் முன்னணியில் இருந்தார்.
கிளாமரில் நான் நடிக்கும் போது ஸ்ரீதேவி நடித்த காட்சிகளை டி.வி.யில் போட்டு பார்த்து தான் நடித்தேன். அவர் இறந்ததை நம்ப முடியவில்லை. இப்போது அம்மாவாக இருக்கிறார். 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அவர் எவ்வளவு ஆசையுடன் இருந்திருப்பார். நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர் ஒரு இடத்துக்கு வந்தால் எல்லோரும் அவரை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அவர் அழகானவர். எனது அக்காள் அம்பிகாவுக்கு அவர் தோழி. அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். கிளாமர், கேரக்டர் இரண்டையும் அவர் சிறப்பாக செய்வார். அவர் திரும்பவும் பிறப்பார். அவரது குழந்தைகளுக்கு கடவுள்தான் சக்தி கொடுக்க வேண்டும்.
நக்மா:- ஸ்ரீதேவி இறந்தது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அந்த தகவலை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதை நம்ப முடியவில்லை. அவரது பசுமையான நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. அவர் எனது அப்பாவின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘அவ்வாத்’ இந்தி படத்தில் ஜிதேந்தரா, ஜெயப்பிரதாவுடன் ஸ்ரீதேவியும் நடித்துள்ளார். அப்போது எனக்கு ‘டீன் ஏஜ்’ வயது. அவர் என்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். எல்லா படத்திலும் அவர் சிறப்பாக நடித்திருப்பார். அவர் ஒரு நல்ல பெண்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_3_Sridevi-KamalRajini-Tribute2._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_3_Sridevi-KamalRajini-Tribute2._L_styvpf.jpg)
குட்டி பத்மினி:- அவர் இங்கு இருந்தவரை தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகை. தெலுங்கிலும் நம்பர் ஒன். கன்னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார். 20 முதல் 25 வருடம் வரை தொடர்ந்து கதாநாயகியாக இருந்தார். இது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய விஷயம் இல்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. சகாப்தம் அவருடன் முடிந்து விட்டது. வேறு எந்த கதாநாயகியும் அத்தனை வருடம் நீடித்து நிலைக்கவில்லை. எல்லா கதாநாயகர்களுடனும் அவர் நடித்துள்ளார். கடைசி வரை அவரது திறமை மாறவில்லை. குழந்தைத்தனம் மாறாத முகம் அவருடையது. குறைந்த வயதிலேயே பத்மஸ்ரீ விருது வெற்றார். நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் இறந்தது நம்ப முடியாத விஷயம்.
கவுதமி:- ஸ்ரீதேவி இறந்தது ரொம்ப அதிர்ச்சி யாக உள்ளது. எத்தனையோ தலைமுறைகளுக்கு அவர் உதாரணமாக இருக்கிறார். இவரை பற்றி நினைக்கும் போது அவர்கள் நிரந்தரமாக இருப்பதாக ஒரு நினைப்பு நமக்கு வரும். இந்த விஷயத்தை கேட்டு ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு சினிமா என்ன என்று தெரிய ஆரம்பித்ததில் இருந்து அவர் இருந்து கொண்டே இருந்தார். நான் ரொம்பவும் நேசிக்கிற நடிகை அவர். நடிப்பு மட்டுமல்ல ஸ்டாராக இருப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர் அவர். இந்தியாவில் இருந்து உலக அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை அவர்.
நடிகர் பார்த்திபன்:- நடிகை ஸ்ரீதேவி இறந்தது வருத்தமாக இருக்கிறது. துயரமாக இருக்கிறது. மயிலு என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது தோகை விரித்தாடும் மயில் கிடையாது. நம்ம ஸ்ரீதேவி தான். 16 வயது என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது ஸ்ரீதேவி. நான் அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்துள்ளேன். பாக்யராஜ் இயக்கிய படத்தில் நான் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்துள்ளேன். அதில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவரது அழகை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றிலும் சரியாக இருக்கக் கூடியவர் அவர்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_4_Sridevi-KamalRajini-Tribute3._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_4_Sridevi-KamalRajini-Tribute3._L_styvpf.jpg)
ஷுட்டிங்குக்கு முந்தைய நாளே அவருக்கு வசனம் கொடுத்து விட வேண்டும். காலையில் ஷுட்டிங்குக்கு வரும் போது அதை சரியாக மனப்பாடம் செய்து கொண்டு வருவார். அவருடைய கூந்தல், மேக்கப், குரல், நடந்து வருவது எல்லாவற்றிலுமே தனி கவனம் செலுத்துகிற நடிகை அவர்.
மெழுகு சிலைகள் இருக்கும் லண்டனில் நான் ஒரு முறை அவரை சந்தித்தேன். அவர் நடந்து வருவதை பார்த்து அவரிடம் சொன்னேன். சிலை நடந்து வருகிறது என்றேன். அந்த சிலை போல அழகுள்ள ஸ்ரீதேவி இன்று உயிரில்லாமல் இருப்பது பெரிய வருத்தமான விஷயம். அவர் சாதித்த விஷயத்தை இன்னொரு நடிகை சாதிக்க முடியுமா? என்று தெரியவில்லை. அவ்வளவு உயரத்துக்கு போன நடிகை அவர்.
ரேகா: நான் ஒரு முறை அவரை சந்தித்துள்ளேன். நட்சத்திர நிகழ்ச்சியில் அவர் எனது கையை பிடித்து புன்னகை மன்னன் படத்தில் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என்றார். நாமெல்லாம் உயர்ந்து பார்க்கிற ஒரு நடிகை நம்மை பார்த்து இப்படி சொல்கிறார்களே என்று நினைத்தபோது பெருமையாக இருந்தது. இது நடந்து 25 வருடம் இருக்கும். அப்போது உள்ள நடிகைகள் போல இப்போது உள்ளவர்கள் இல்லை. அவரது தியாகம், மேக்கப், உடை அலங்காரம் போன்றவற்றை யாராலும் மிஞ்ச முடியாது.
தியாகத்துடன் நடிப்பதில் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் அதில் முதலில் இருப்பது ஸ்ரீதேவி என்று நினைக்கிறேன். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காதது எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் அர்த்தம். நல்ல குணம் உள்ளவர். அனைவரையும் மதிப்பவர். சினிமாவை நேசிப்பவர் என்று பலர் அவரைப் பற்றி சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரது பேட்டிகளை பார்க்கும் போது மகளை நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. அந்த பெண்ணை நடிக்க வைத்து பார்க்கும் முன்பே காலன் கொண்டு போய்விட்டார்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_5_Sridevi-KamalRajini-Tribute6._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_5_Sridevi-KamalRajini-Tribute6._L_styvpf.jpg)
இது பெரிய வருத்தமாக இருக்கிறது. இன்று இருப்பவர்கள் நாளை இருக்கிறோமா என்பது தெரியாது. எனவே இருக்கும் வரை அனைவரையும் நேசித்து தியாக உணர்வுடன் இருக்க வேண் டும். ஸ்ரீதேவி இறந்தது பொய்யான செய்தியாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். அவருக்கு குறைந்த வயது. இன்னும் அவர் என்ன கனவெல்லாம் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. நான் அவரை இழந்ததாகவே கருதுகிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ஒய்.ஜி.மகேந்திரன்:- அவரது குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். அவருடன் முதலில் கங்கா, யமுனா, சரஸ்வதி படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன் பிறகு போக்கிரி ராஜா, மூன்றாம் பிறை, நான் அடிமை இல்லை என்பது போன்ற பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளேன். அவர் அந்த காலத்தில் எனது குடும்ப நண்பராக இருந்தவர். அவர் இறந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.
நான் அடிக்கடி அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்வேன். ரஜினி வீட்டு கல்யாணத்துக்கு வரும் போது என்னை பார்த்து பேசினார். நான் அவருக்கு ரசிகராக இருந்தேன். சிறந்த நடிகை, நடனத்திலும் சிறந்தவர். இந்த செய்தியை கேட்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு சின்ன வயதுதான். இதை என்னால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. ரொம்ப அநியாயம். கடவுள் ரொம்ப கொடுமையாக இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
நயன்தாரா:- ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து உண்மையாகவே அதிர்ச்சி அடைந்தேன். உண்மையாகவே மரியாதைக்குரிய சாதனை புரிந்த சிறந்த பெண்மணி. இது மோசமான நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
நடிகர் விவேக்:- இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது. ஆயினும் நமது நெஞ்சில் எப்போதும் நிழலாடும்.
நடிகர் அக்ஷய்குமார்:- நடிகை ஸ்ரீதேவியின் மறைவு துரதிருஷ்டவசமானது.
நடிகை லட்சுமி:- யதார்த்தமான குழந்தை போன்றவர் ஸ்ரீதேவி.
நன்றி maalaimalar
கமல்ஹாசன்:- மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை தான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். ஸ்ரீதேவியின் திறமைக்கு இளம் வயது நடிப்பே சாட்சி. அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள். திரை உலகின் அனைத்து புகழுக்கும் தகுதியானவர்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_1_Sridevi-KamalRajini-Tribute5._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_1_Sridevi-KamalRajini-Tribute5._L_styvpf.jpg)
ரஜினிகாந்த்:- ஸ்ரீதேவியின் மரணத்தை அறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நல்ல நண்பரை இழந்து விட்டேன். திரையுலகம் உண்மையான மிகப்பெரிய சாதனையாளரை இழந்துவிட்டது.
அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நானும் வேதனையை உணருகிறேன். எனது இதயம் நிறைந்த அனுதாபங்கள் நாங்கள் அவரை இழந்து விட்டோம்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_2_Sridevi-KamalRajini-Tribute4._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_2_Sridevi-KamalRajini-Tribute4._L_styvpf.jpg)
குஷ்பு:- ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தேன். அவர் எவ்வளவோ சாதித்துள்ளார். 15 வருடம் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வித்தியாசமான ஸ்ரீதேவியை நமக்கு காண்பித்திருந்தார். ஒரு மிகப்பெரிய இழப்பு இது.
ஸ்ரீதேவியை உயர்த்தியது அவருடைய தொழில் பக்திதான். அவர் மறைய வேண்டிய வயது இல்லை.
ராதா:- ஸ்ரீதேவி அழகான ஹீரோயினி. அவருடன் நான் சந்திப்பு என்ற படத்தில் சேர்ந்து நடித்தேன். அப்போதுதான் நான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். அவர் ராணி போல இருந்தார். அவர் அதிகமாக பேசமாட்டார். ஆனால் அவரது சிரிப்பு மறக்க முடியாதது. அவரது மேக்கப், நடனமாடும் ஸ்டைல் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துள்ளேன். 1980 காலகட்டத்தில் இந்தியில் முன்னணியில் இருந்தார்.
கிளாமரில் நான் நடிக்கும் போது ஸ்ரீதேவி நடித்த காட்சிகளை டி.வி.யில் போட்டு பார்த்து தான் நடித்தேன். அவர் இறந்ததை நம்ப முடியவில்லை. இப்போது அம்மாவாக இருக்கிறார். 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அவர் எவ்வளவு ஆசையுடன் இருந்திருப்பார். நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர் ஒரு இடத்துக்கு வந்தால் எல்லோரும் அவரை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அவர் அழகானவர். எனது அக்காள் அம்பிகாவுக்கு அவர் தோழி. அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். கிளாமர், கேரக்டர் இரண்டையும் அவர் சிறப்பாக செய்வார். அவர் திரும்பவும் பிறப்பார். அவரது குழந்தைகளுக்கு கடவுள்தான் சக்தி கொடுக்க வேண்டும்.
நக்மா:- ஸ்ரீதேவி இறந்தது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அந்த தகவலை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதை நம்ப முடியவில்லை. அவரது பசுமையான நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. அவர் எனது அப்பாவின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘அவ்வாத்’ இந்தி படத்தில் ஜிதேந்தரா, ஜெயப்பிரதாவுடன் ஸ்ரீதேவியும் நடித்துள்ளார். அப்போது எனக்கு ‘டீன் ஏஜ்’ வயது. அவர் என்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். எல்லா படத்திலும் அவர் சிறப்பாக நடித்திருப்பார். அவர் ஒரு நல்ல பெண்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_3_Sridevi-KamalRajini-Tribute2._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_3_Sridevi-KamalRajini-Tribute2._L_styvpf.jpg)
குட்டி பத்மினி:- அவர் இங்கு இருந்தவரை தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகை. தெலுங்கிலும் நம்பர் ஒன். கன்னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார். 20 முதல் 25 வருடம் வரை தொடர்ந்து கதாநாயகியாக இருந்தார். இது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய விஷயம் இல்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. சகாப்தம் அவருடன் முடிந்து விட்டது. வேறு எந்த கதாநாயகியும் அத்தனை வருடம் நீடித்து நிலைக்கவில்லை. எல்லா கதாநாயகர்களுடனும் அவர் நடித்துள்ளார். கடைசி வரை அவரது திறமை மாறவில்லை. குழந்தைத்தனம் மாறாத முகம் அவருடையது. குறைந்த வயதிலேயே பத்மஸ்ரீ விருது வெற்றார். நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் இறந்தது நம்ப முடியாத விஷயம்.
கவுதமி:- ஸ்ரீதேவி இறந்தது ரொம்ப அதிர்ச்சி யாக உள்ளது. எத்தனையோ தலைமுறைகளுக்கு அவர் உதாரணமாக இருக்கிறார். இவரை பற்றி நினைக்கும் போது அவர்கள் நிரந்தரமாக இருப்பதாக ஒரு நினைப்பு நமக்கு வரும். இந்த விஷயத்தை கேட்டு ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு சினிமா என்ன என்று தெரிய ஆரம்பித்ததில் இருந்து அவர் இருந்து கொண்டே இருந்தார். நான் ரொம்பவும் நேசிக்கிற நடிகை அவர். நடிப்பு மட்டுமல்ல ஸ்டாராக இருப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர் அவர். இந்தியாவில் இருந்து உலக அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை அவர்.
நடிகர் பார்த்திபன்:- நடிகை ஸ்ரீதேவி இறந்தது வருத்தமாக இருக்கிறது. துயரமாக இருக்கிறது. மயிலு என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது தோகை விரித்தாடும் மயில் கிடையாது. நம்ம ஸ்ரீதேவி தான். 16 வயது என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது ஸ்ரீதேவி. நான் அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்துள்ளேன். பாக்யராஜ் இயக்கிய படத்தில் நான் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்துள்ளேன். அதில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவரது அழகை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றிலும் சரியாக இருக்கக் கூடியவர் அவர்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_4_Sridevi-KamalRajini-Tribute3._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_4_Sridevi-KamalRajini-Tribute3._L_styvpf.jpg)
ஷுட்டிங்குக்கு முந்தைய நாளே அவருக்கு வசனம் கொடுத்து விட வேண்டும். காலையில் ஷுட்டிங்குக்கு வரும் போது அதை சரியாக மனப்பாடம் செய்து கொண்டு வருவார். அவருடைய கூந்தல், மேக்கப், குரல், நடந்து வருவது எல்லாவற்றிலுமே தனி கவனம் செலுத்துகிற நடிகை அவர்.
மெழுகு சிலைகள் இருக்கும் லண்டனில் நான் ஒரு முறை அவரை சந்தித்தேன். அவர் நடந்து வருவதை பார்த்து அவரிடம் சொன்னேன். சிலை நடந்து வருகிறது என்றேன். அந்த சிலை போல அழகுள்ள ஸ்ரீதேவி இன்று உயிரில்லாமல் இருப்பது பெரிய வருத்தமான விஷயம். அவர் சாதித்த விஷயத்தை இன்னொரு நடிகை சாதிக்க முடியுமா? என்று தெரியவில்லை. அவ்வளவு உயரத்துக்கு போன நடிகை அவர்.
ரேகா: நான் ஒரு முறை அவரை சந்தித்துள்ளேன். நட்சத்திர நிகழ்ச்சியில் அவர் எனது கையை பிடித்து புன்னகை மன்னன் படத்தில் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என்றார். நாமெல்லாம் உயர்ந்து பார்க்கிற ஒரு நடிகை நம்மை பார்த்து இப்படி சொல்கிறார்களே என்று நினைத்தபோது பெருமையாக இருந்தது. இது நடந்து 25 வருடம் இருக்கும். அப்போது உள்ள நடிகைகள் போல இப்போது உள்ளவர்கள் இல்லை. அவரது தியாகம், மேக்கப், உடை அலங்காரம் போன்றவற்றை யாராலும் மிஞ்ச முடியாது.
தியாகத்துடன் நடிப்பதில் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் அதில் முதலில் இருப்பது ஸ்ரீதேவி என்று நினைக்கிறேன். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காதது எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் அர்த்தம். நல்ல குணம் உள்ளவர். அனைவரையும் மதிப்பவர். சினிமாவை நேசிப்பவர் என்று பலர் அவரைப் பற்றி சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரது பேட்டிகளை பார்க்கும் போது மகளை நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. அந்த பெண்ணை நடிக்க வைத்து பார்க்கும் முன்பே காலன் கொண்டு போய்விட்டார்.
![பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_5_Sridevi-KamalRajini-Tribute6._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201802251333191756_5_Sridevi-KamalRajini-Tribute6._L_styvpf.jpg)
இது பெரிய வருத்தமாக இருக்கிறது. இன்று இருப்பவர்கள் நாளை இருக்கிறோமா என்பது தெரியாது. எனவே இருக்கும் வரை அனைவரையும் நேசித்து தியாக உணர்வுடன் இருக்க வேண் டும். ஸ்ரீதேவி இறந்தது பொய்யான செய்தியாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். அவருக்கு குறைந்த வயது. இன்னும் அவர் என்ன கனவெல்லாம் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. நான் அவரை இழந்ததாகவே கருதுகிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ஒய்.ஜி.மகேந்திரன்:- அவரது குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். அவருடன் முதலில் கங்கா, யமுனா, சரஸ்வதி படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன் பிறகு போக்கிரி ராஜா, மூன்றாம் பிறை, நான் அடிமை இல்லை என்பது போன்ற பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளேன். அவர் அந்த காலத்தில் எனது குடும்ப நண்பராக இருந்தவர். அவர் இறந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.
நான் அடிக்கடி அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்வேன். ரஜினி வீட்டு கல்யாணத்துக்கு வரும் போது என்னை பார்த்து பேசினார். நான் அவருக்கு ரசிகராக இருந்தேன். சிறந்த நடிகை, நடனத்திலும் சிறந்தவர். இந்த செய்தியை கேட்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு சின்ன வயதுதான். இதை என்னால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. ரொம்ப அநியாயம். கடவுள் ரொம்ப கொடுமையாக இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
நயன்தாரா:- ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து உண்மையாகவே அதிர்ச்சி அடைந்தேன். உண்மையாகவே மரியாதைக்குரிய சாதனை புரிந்த சிறந்த பெண்மணி. இது மோசமான நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
நடிகர் விவேக்:- இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது. ஆயினும் நமது நெஞ்சில் எப்போதும் நிழலாடும்.
நடிகர் அக்ஷய்குமார்:- நடிகை ஸ்ரீதேவியின் மறைவு துரதிருஷ்டவசமானது.
நடிகை லட்சுமி:- யதார்த்தமான குழந்தை போன்றவர் ஸ்ரீதேவி.
நன்றி maalaimalar
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஸ்ரீதேவியின் திருமண படங்கள்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» முதலையின் மேல் குண்டு பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!
» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» முதலையின் மேல் குண்டு பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!
» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|