சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும் Khan11

மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்

Go down

மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும் Empty மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்

Post by சே.குமார் Wed 24 Apr 2019 - 10:46

விடுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த 'ஒரு அடார் லவ்' மலையாளப் படத்தையும் பார்க்க நேரிட்டது.

பள்ளிக் கூடப் பிள்ளைகளுக்கு காதல் செய்யக் கற்றுக் கொடுக்கும் படம்... இப்படிப் படங்கள்தான் படிக்கும் பிள்ளைகளை அறியாத வயதில் காதல் என்னும் கத்திரிக்காய்க்குள் விழ வைக்கின்றன... அருமையான படங்களைக் கொடுக்கும் மலையாளத்தில் அரிதாய் வந்திருக்கும் நச்சுச் செடி இந்தப் படம்... நல்லவேளை தனிமையில் சந்திக்கும் போது பாடலுடன் முடித்துக் கொண்டார்கள். பள்ளிக்கூட வகுப்பறை, படிக்கட்டுக்கள் என எல்லா இடத்திலும் முத்தமழை பொழிந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை... எத்தனை அபத்தமாய் படமெடுக்கிறார்கள் இந்தக் கலாச்சார காவலர்கள்.

படம் வெளிவரும் முன்னரே பிரியா வாரியரின் கண் அசைவு மிகப் பிரசித்தி பெற்றிருந்தது... ஆனால் படமும் பிரியாவும்...? ஆமா அதென்ன சிகை அலங்காரம்...? வாந்தி எடுத்தது போல... இவர்தான் நாயகி என தயாரிப்பாளரோ / இயக்குநரோ போராடி வாய்ப்பைக் கொடுத்தார்களாம்... அப்படி என்ன அழகைப் பார்த்து விட்டார்கள்... பாவம் இனி பிரியாவுக்கு வாய்ப்பு வருமோ...?

நாயகியாய் நடிக்க வேண்டிய நூரின் ஷெரிப் நாயகனின் தோழியாய்... கிடைத்த கேப்பில் எல்லாம் அடித்து ஆடியிருக்கிறார்... செம.. அடுத்த படத்தில் நாயகியாய் நடிப்பதாய் செய்திகள்... பின்னே... அந்தச் சிரிப்பும் சீரான நடிப்பும் எல்லாரையும் கண்டிப்பாக ஈர்க்கும்தானே..!  இனி தமிழிலும் உடனே புக் பண்ணுவார்கள் பாருங்கள்... அடித்துக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை... ரஜினி மட்டும் அடுத்த பட நாயகியாக நூரின் வேண்டுமென கேட்காமல் இருக்க இறைவன் கருணை வேண்டும்.

படம் முடியும் போது பிரியாவைப் பின்னுக்குத் தள்ளி மனம் முழுவதும் நூரின் மட்டுமே நிற்கிறார்.

அட ஏன் அப்படி ஒரு முடிவு படத்தில்...?

மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும் Noorin_Shereef_1
[size]

சம்பந்தமே இல்லாத இறுதிக்காட்சி கடுப்பைத்தான் கொடுத்தது... அதிலும் பத்து நிமிடத்துக்கு மேல பின்னணிப் பாடலுடன்... நம்பியார் காலத்துப் படம் போல நாயகனும் நாயகியும் செல்லும் இடம் தெரிந்து வில்லன்கள் வருவது... முடியல...

துள்ளுவதோ இளமை தனுஷ் மாதிரி... ரோஷனுக்கு டபுள் தமாக்காதான்... பிரியாவோட உதடுகளில் விளையாடுகிறான்... நூரினும் கொஞ்சலோ கொஞ்சல்.

இப்படியான படங்கள்... அதாவது ஒரு அடார் லவ், 90ML போன்றவை சமூகத்தை சீர் திருத்த வந்த, கலாச்சாரத்தை காப்பாற்ற வந்த படங்கள்... இன்றைய இளம் இயக்குநர்களுக்கு ஏன் சாதியும், சிறுவயதுக் காதலும், காமமும் மட்டுமே கண்ணுக் தெரிகிறது என்பதுதான் தெரியவில்லை.

இது ஒரு அட்டு லவ் படம்... தயவு செய்து பதின்ம வயதுப் பிள்ளைகளைப் பார்க்க விடாதீர்கள்.

[/size]
*********
[size]

ழுத்து அடைந்திருக்கும் இடம் மகிழ்வைக் கொடுத்தாலும் பயத்தையும் கொடுக்கிறது. அவனவன் புத்தகங்களாய் போட்டுக் கொண்டிருக்க, பொருளாதார சூழலின் நிமித்தம் பிரசுரங்களின் பக்கம் செல்லாத போதும் சேமித்த எழுத்தை வாசித்த நண்பர்கள் அது குறித்து எழுதும் போதும் பேசும் போதும் உண்மையிலேயே சங்கோஜமும் சங்கடமுமே எனக்குள்.

என்னடா இப்படி பேசுகிறார்கள்...? இவனே எழுதுங்க... பேசுங்கன்னு சொல்றானோன்னு யாரும் நினைப்பார்களோங்கிற எண்ணமும் வராமல் இல்லை... பேசப் பயம் எனக்கு என்பவன்தான் நான் என்ற போதிலும் எழுத எப்பவும் யோசிப்பதில்லை... ஆன இப்ப மற்றவர்கள் எழுதவதைப் பார்த்து இன்னும் நல்லா எழுதணுமோங்கிற எண்ணம் எழத்தான் செய்கிறது. எனக்கே தெரியாமல் என்னையும் உள்ளிழுத்து இது மாதிரிப் பகிரும் உறவுகள்தான் என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். என் எழுத்து எப்படியோ சிலரையேனும் கவர்கிறதே என்பதே சந்தோஷம்தான். மகிழ்ச்சி இராஜாராம் (இது ஒரு வாரம் முன்பு முகநூல் அவர் பகிர்ந்தது அப்படியே கீழே).

ஆமா அவரு அப்படி எந்தக் கதையை மகளிடம் சொல்லியிருப்பார்...? யோசிங்க... இறுதியில் சொல்றேன்....

அண்ணே மாலை வணக்கம்![/size]

முதல் தொகுப்பு முடிந்து அடுத்த தொகுப்பை ஆரம்பித்து விட்டேன், பத்து முடிந்தது.

படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கதையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே அக்கதையை முடித்தவுடன் என் மகளுக்கு சொல்ல வேண்டுமென நினைத்தேன். 

பள்ளி விடுமுறையென்பதால் நல்ல நித்திரை போல மாலை ஐந்து மணிக்கு மேல்தான் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது, அலைபேசில்தான் சொன்னேன். சொல்வதற்கு முன் உங்களுக்கு எங்கெங்கு சந்தேகம் இருக்கிறதோ அதை கேட்கலாம், கேட்டு முடிந்தவுடன் கதையைப் பற்றி உங்கள் கருத்தையும் சொல்லலாம் என்றேன். 

கதை சொல்ல தொடங்கி... சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதை கேட்கும் சத்தம் கூட எனக்கு கேட்கவில்லை....

என்னம்மா...கேட்குதா..?

சொல்லுங்க கேட்குது என்றார்.

கதை சொல்லி முடிந்தவுடன், 

சூப்பர் கதைப்பா...

நல்லா இருக்கு... 

எங்க படிச்சீங்க..?

நல்லா இருக்கே...

யாரும்...சொன்னாங்களா..?

நீங்களாவே சொல்றீங்களா? 

அடுக்கிய கேள்விக்கு பதில் சொல்லுமுன்னே...அக்கதைக்கு ஒரு நீதியையும் சொல்லிவிட்டு..என் நண்பர்களுக்கும் சொல்வேன் என்றார். பிறகு நான் அக்கதையை எங்கு படித்தேன், யார் எழுதியது என்பதை பற்றிய விவரணைகளை தகப்பனும், மகளும் ஒரு பத்து நிமிட உரையாடல் நீண்டது.

இதுவும் எழுத்தின் வெற்றிதான்....

ஆனால் இக்கதையின் மூலம் ஆசிரியர் அண்ணன் நித்யா குமார் அவர்கள் யாருக்கு.. என்ன சொல்ல முற்பட்டாரோ? ஆனால் ஒரு ஒன்பது வயது சிறுமி ஒரு கதையைக் கேட்டவுடன் இது எனக்கான கதையென்றும் அதற்கான நீதியையும் சொல்வதும் வெற்றிதானே 

வாசிக்கும்போதே நம்மை கூட்டிச்செல்லும் எழுத்துநடை அருமை.....

இக்கதையையும் ஒலிவடிவில் கேட்க அருமையாக இருக்கும்... பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

இதுபோன்ற கதைகளை வாசிக்க தந்தமைக்கு மிக்க நன்றிண்ணே!

என்ன கதையின்னு தெரிந்ததா...?

ம்... ஆமா அதேதான்...

சுபஸ்ரீ மிஸ் அடிச்சாங்களா..?

ஒரு குழந்தையிடம் சொல்லப்பட்டு, அவரும் ரசித்திருப்பதில் ரொம்பச் சந்தோஷம். இனி எழுதும் கதைகள் இன்னும் நன்றாக எழுத வேண்டுமே என்ற கவலையை விதைத்திருக்கும் பகிர்வு இது.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum