சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Khan11

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல்

Go down

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Empty ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல்

Post by rammalar Fri 13 Aug 2021 - 20:20

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Scree199

-


ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி 
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களைப் 
பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், 
நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது. 


இவ்வளவு பெருமைகள் வாய்ந்த இத்தலத்தின் 
அக்கார அடிசல் பிரசாத செய்முறையை பாலாஜி பட்டர் 
கூறுகிறார்.


தேவையான பொருட்கள்:


பச்சரிசி - 1 கிலோ
பால் - 80 லிட்டர்
கல்கண்டு - 10 கிலோ
சர்க்கரை - 7 கிலோ
பாதாம், பிஸ்தா,முந்திரி - தலா 1 கிலோ
ஜாதிக்காய் - 1.
ஜாதிபத்திரி - 20 கிராம்.
குங்குமப்பூ - 2 கிராம்.
நெய் - 7 கிலோ.




செய்முறை: 
பச்சரிசியை நெய்யில் நன்கு வறுக்க வேண்டும். 
பின் அதைப் பாலில் வேகவைக்க வேண்டும். அடுப்பை சிறு
 தீயில் வைத்து கைவிடாமல் எட்டு மணி நேரம் கிளற 
வேண்டும். 


நான்கு மணி நேரத்தில் கல்கண்டையும், சர்க்கரையையும் 
சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். ஏழாவது மணி நேரத்தில் 
முந்திரி, பாதாம், பிஸ்தா மூன்றையும் மைய அரைத்து சேர்த்து 
நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவேண்டும். 


பின் ஜாதிக்காய், ஜாதி பத்திரி, குங்குமப்பூ மூன்றையும்
 கருங்கல்லில் இழைத்துச் சேர்க்கவும். கமகமக்கும் அக்கார அடிசல் 
பிரசாதம் தயார்.


-ந.பரணிகுமார் - குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Empty Re: ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல்

Post by rammalar Sat 14 Aug 2021 - 4:57

கலவைக் காய் சாம்பார்




தேவையானவை: அவரைக்காய் - 4, பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு, கத்திரிக்காய், கேரட், பச்சை மிளகாய் - தலா ஒன்று, புளி -  எலுமிச்சைப் பழ அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைக்கவும். அவரைக்காய், பறங்கிக்காய், கத்திரிக்காய், கேரட் ஆகிய வற்றை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,  புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவைக்கவும். காய்கள் வெந்ததும் துவரம்பருப்பை சேர்த்து, நன்கு கொதித்த உடன் இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F49217022-4511-4ed0-a48a-844eff0d1422%2Fp101h.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




சின்ன வெங்காய சாம்பார்




தேவையானவை: சின்ன வெங்காயம் - 20 (தோல் உரிக்கவும்), புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழைவாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சிறிது வதக்கி, கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.  எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F0f770e38-4818-4fc8-b679-9cfe04fe77a9%2Fp101i.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




மிளகு மோர்க்குழம்பு




தேவையானவை: கெட்டியான மோர் - 500 மில்லி, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம், அரிசி - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை  வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். இந்த விழுதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து வாணலியில் ஊற்றி ஒரு கொதி விட்டு... சிறிதளவு எண்ணெயில் கடுகை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கவும்.



குறிப்பு: இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். தேவைப்பட் டால், வேகவைத்த சேப்பங் கிழங்கு சேர்த்து செய்யலாம்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2Fe34b8a06-c91d-4902-8f6e-2d09bf3aecaf%2Fp101j.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






கலவைக் கீரைக்குழம்பு


தேவையானவை: முருங்கைக்கீரை, முளைக்கீரை, தூதுவளைக் கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரைகளை வதக்கிக்கொள்ளவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி... சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய கீரையை சேர்த்துக் கிளறி, வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2Fe174b03f-db37-4dc6-9d9a-4ddce776e6fd%2Fp101k.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




மொச்சை சாம்பார்




தேவையானவை: உலர் மொச்சை - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி -  எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் - சிறிய கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,  தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக் கவும்.



புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த  விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F3d00cd7f-6fa6-4a96-aada-5f4657e1646f%2Fp101l.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு


தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 100 மில்லி, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு



செய்முறை: பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.

குறிப்பு: தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு, இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2Fb9c4c1cc-f3eb-4c2a-9c87-bd264e8196a6%2Fp101m.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




கீரை மிளகூட்டல்




தேவையானவை: முளைக் கீரை - ஒரு சிறிய கட்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து கீரையுடன் கலந்து, வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து இறக்கவும்.



குறிப்பு: இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். இதே முறையில் எல்லா கீரையிலும் தயாரிக்கலாம்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F661db561-a4b0-4b31-8fbc-eca7a90e5dc6%2Fp101n.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






வெந்தயக்கீரை சாம்பார்


தேவையானவை: வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு, துவரம்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி,  சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F2d5bb537-b871-458b-8edb-d5e4413bbcaf%2Fp101o.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




பிடிகருணை மசியல்




தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு - 200 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: பிடிகருணையை வேக வைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, வெல்லத்தைப் பொடித்து சேர்த்து கொதிக்கவிடவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2Fe17094ab-a9e4-46d3-a2b4-b611a41f6b9d%2Fp101p.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




பறங்கிக்காய் காரக்குழம்பு




தேவையானவை: பறங்கிக்காய் - ஒரு சிறிய கீற்று (துண்டுகளாக நறுக்கவும்), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து, பறங்கித் துண்டுகளையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F993d8fb9-f1ba-42ec-9408-2d938f24c343%2Fp101q.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




ஓமக் குழம்பு




தேவையானவை: ஓமம் - இரண்டு டீஸ்பூன், புளி -  எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, கடலைபருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓமத்தை சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, ஓமம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.



குறிப்பு: ஓமம் ஜீரண சக்தி தரும். வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F630cce15-de97-423d-a0ce-a42790f26b6f%2Fp101r.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






கூட்டு வடகக் குழம்பு


தேவையானவை: கூட்டு வடகம் - 15, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய்  - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்த யம், கடலைப்பருப்பு தாளித்து... கூட்டு வடகத்தைப் போட்டு வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2Fd9556a7f-0fde-4ab7-b4ee-15f85fcc398a%2Fp101s.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






முளைகட்டிய காராமணி குழம்பு


தேவையானவை: முளைகட்டிய காராமணி - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம் (வேகவைக்கவும்), சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, சாம்பார் பொடி போட்டு, முளைகட்டிய காராமணி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் மற்ற முளைகட்டிய பயறு வகைகளிலும் குழம்பு தயாரிக்கலாம்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F2c23e9dc-2e9a-4420-89ea-c5ffb0f6fbba%2Fp101t.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1




வேர்க்கடலை குழம்பு




தேவையானவை: பச்சை வேர்க் கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை 2 மணி நேரம் ஊறவைத்து, வாணலியில் சிறிது நேரம் வேகவைக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து... சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். இதனுடன் வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.



குறிப்பு: சுட்ட அப்பளம், தயிர் பச்சடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F2d384cc5-c426-4aa2-97d6-94a2214e882b%2Fp101u.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






மாம்பழ மோர்க்குழம்பு


தேவையானவை: மாம்பழம் - ஒன்று, ஓரளவு புளித்த மோர் - 500 மில்லி, காய்ந்த மிளகாய் - 2, அரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய்த்  துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து... மோருடன் கலக்கவும். இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு... எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2Ffbeb2853-f02d-42d8-850e-9edee011f1a7%2Fp101v.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






வெண்டைக்காய் மோர்க்குழம்பு


தேவையானவை: வெண்டைக்காய் - 10, ஓரளவு புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F5fb962d1-ebb5-4345-b9d6-a8a4aa333c96%2Fp101w.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






பூண்டு - வெங்காய குழம்பு


தேவையானவை: பூண்டு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 20,  சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பூண்டைத் தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் தோல் உரித்து நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F060cad66-e8d5-4db6-860d-2421209352cb%2Fp101x.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1






பலாக்கொட்டை சாம்பார்


தேவையானவை: பலாக்கொட்டை - 10, புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டையை நசுக்கி, மேலே உள்ள தோலை உரித்து, வேகவைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி.. சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பலாக்கொட்டை, துவரம்பருப்பையும் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து இறக்கவும்.



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல் Vikatan%2F2019-05%2F2cbc9697-c9d6-4a47-b7dc-fe6e6dff6fa0%2Fp101y.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum