சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

காமன்வெல்த் போட்டி. Khan11

காமன்வெல்த் போட்டி.

Go down

காமன்வெல்த் போட்டி. Empty காமன்வெல்த் போட்டி.

Post by ஹனி Sun 12 Dec 2010 - 12:23

காமன்வெல்த் போட்டி. Commonwealth-games
பிரிட்டனும் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நாடுகளும் சேர்ந்த கூட்டமைப்பே காமன்வெல்த் எனப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி நடந்த நாடுகளில் விடுதலை கோரி போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அந்தந்த நாட்டு மக்களிடம் பிரிட்டிஷ் அரசு மீது நல்லெண்ணத்தையும் நட்புறவையும் ஏற்படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் 1891-லேயே பிரிட்டனில் ஏற்பட்டது. அது ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து, 1930-ஆம் ஆண்டு கனடாவில் பிரிட்டிஷ் எம்பயர் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் நடத்தப்பட்டது. 1954-இல் பிரிட்டிஷ் எம்பயர் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என பெயர் மாற்றம் பெற்றது. 1970-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்பட்டது. 1978 முதல், தற்போதைய பெயரான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஒலிலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போலவே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படு கின்றன. கடந்த முறை (2006) ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. அடுத்தப் போட்டிகள்(2014) ஸ்காட்லாந்தில் நடைபெறுகின்றன. 2010-ஆம் ஆண்டுக்கான 19-வது காமன்வெல்த் போட்டிகளை நடத்திய இந்தியா பெரும் போட்டிக்கிடையேதான் இந்த வாய்ப்பைப் பெற்றது. யார் போட்டியை நடத்துவது என்பதில் கடைசிவரை, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இழுபறி இருந்து வந்தது. காமன்வெல்த் நாடுகளின் கூடுதல் ஆதரவைப் பெற்று இந்தியா இந்த வாய்ப்பைப் பெற்றது. 1982-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு டெல்லிலியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மிகப்பெரிய விளையாட்டுப் போட்டி இதுதான். ஒலிலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பது இன்றுவரை கனவாகவே இருந்து வருவதால் காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்துவதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் ஏற்பட்டது. ஆனால், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கிய போதே, ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு, சர்வதேச அளவில் இந்தியா விமர்சனத் திற்குள்ளானது.


காமன்வெல்த் போட்டி களுக்கான ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக இந்திய ஒலிலிம்பிக் சங்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஒருங் கிணைப்புக் குழுவுக்கு மத்திய அரசு 1600 கோடி ரூபாய் கடனுதவியும் அளித்தது. இந்த நிதி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பில் சுரேஷ் கல்மாடி இருந்தார். பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு டெல்லிலி மாநில அரசுக்கும் டெல்லிலி மாநகராட் சிக்கும் இருந்தது.

பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், அதன் தரம் சந்தேகத்திற்குரியதாக இருப் பதாகவும் அதனால் குறித்த தேதியில் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகத்தை காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக் ஃபென்னல் எழுப்பினார். விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் செயல்பாட்டுத்தன்மை, அமைக்கப்பட்ட அரங்குகளின் தரம், புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு கிராமத்தில் கட்டப்பட்ட வீடுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு, வாடகைக்கு வாங்கப்பட்ட விளை யாட்டுப் பொருள்களுக்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுரேஷ் கல்மாடி, டெல்லிலி முதல்வர் ஷீலா தீட்சித், அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் படிந்தன. இத்தகைய குற்றச் சாட்டுகளால் போட்டியில் கலந்துகொள்ள பலநாட்டு வீரர்களும் தயங்கினர். பாதுகாப்பு குறைபாடுகளும் இதற்கு காரணமானது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுடனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்புகொண்டு அவை பங்கேற்க சம்மதிக்க வைத்தது. “போட்டிகளை நல்ல முறையில் நடத்தியபிறகு , உரிய விசாரணை நடத்தப்படும்’ என அறிவித்தார் பிரதமர் மன்மோகன்சிங்.

இதனையடுத்து, 2010 அக்டோபர் 3-ஆம் தேதி 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிலிக்கும் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள்- அணி வகுப்புகளுடன் இங்கிலாந்து இளவரசர் சார்லசும், இந்திய குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலும் டெல்லியில் தொடங்கி வைத்தனர். 54 நாடுகளைச் சேர்ந்த 71 காமன்வெல்த் அணிகளின் 6081 வீரர்கள் இதில் பங்கேற்றனர். ஷெரா என்கிற புலிலி பொம்மை இப்போட்டிக்கான சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்கர் விருதுபெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான , ஜியோ உத்தோ படோ ஜீட்டோ என்ற பாடல் மைய நோக்குப் பாடலாக இசைக்கப்பட்டது.

நீச்சல், வில்வித்தை, தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள் ஓட்டுதல், ஜிம்னாஸ் டிக்ஸ், ஹாக்கி, லான் பவுல்ஸ், வலைப்பந்து, ரக்பி செவன்ஸ், துப்பாக்கிச்சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட 17 விளையாட்டுகள் இதில் இடம்பெற்றன. அறிமுக விளையாட்டாக கபடி இடம்பெற்றது. நீண்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டும் கிரிக்கெட் இடம் பெறவில்லை.

காமன்வெல்த் போட்டிகள் என்றாலே ஆஸ்திரேலிலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்தும். டெல்லியில் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா 74 தங்கம், 55 வெள்ளி, 48 வெண்கலம் என 177 பதக் கங்களுடன் முதலிலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை, இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என 101 பதக்கங்களுடன் நமது நாட்டுக்கு கிடைக்கச் செய்தனர். மூன்றாமிடத்தை இங்கிலாந்தும், நான்காம் இடத்தை கனடாவும் பெற்றன.

இந்திய அணி காமன்வெல்த் போட்டிகளில் இத்தனைப் பதக்கங்களைக் குவித்திருப்பது இதுவே முதல் முறை. சொந்த மண்ணில் நடந்தப் போட்டிகளில் தங்கள் திறமையைக் காட்டி டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், வில்வித்தை போன்றவற்றில் அதிகப் பதக்கங்களை அள்ளினர். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் நமது அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்து, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. இந்திய வீரர்-வீராங்கனைகளின் பதக்க வேட்டை விளையாட்டு ரசிகர்களைப் பெருமை கொள்ள வைத்திருக்கிறது.

சர்வதேச அளவில் அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியினர் குறிப்பிடத்தக்க அளவில் பதக்கம் பெற, காமன்வெல்த் போட்டிகள் ஊக்கமளித்துள்ளன. இந்திய அரசின் விளையாட்டுத்துறை அதற்கேற்ற வகையில் வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி, பரிசுத்தொகை, விளையாட்டுக் கள வசதிகள் ஆகியவற்றை உருவாக்கித் தரவேண்டும். ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 7000 கோடி ரூபாய் ஊழல் என்கிற முதல்கட்ட விசாரணைத் தகவலும், முழு ஊழலையும் விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ. அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதும் இந்தியாவில் விளையாட்டுத் துறை மேம்பாடு அடையுமா என்ற சந்தேகத்தையே அதிகரிக்கச் செய்கிறது.

ஊழலுக்கென உலக அளவில் விளை யாட்டுப் போட்டி நடத்தப்பட்டால் இந்தியர் களுக்குத்தான் அதிகத் தங்கப்பதக்கம் கிடைக்கும். அது கிடைப்பதற்கும், எப்படி ஊழல் செய்யலாம் என்பதை அரசு இயந்திரங்களும் அதிகார வர்க்கமும் யோசித்து வைத்திருக்கும்.













ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
» காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மேலும் 10 புதிய வழக்கு சி.பி.ஐ. அதிரடி திட்டம்
» காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum