Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
மன்மதன் அம்பு - விமர்சனம்
3 posters
Page 1 of 1
மன்மதன் அம்பு - விமர்சனம்
தமிழ் சினிமாவில் ஆக்ஸிடண்ட் கருவை வைத்து பல படங்கள் வந்திருக்கிறது.
ரிதம் ( இன்னொரு படம் நினைவுக்கு வரவில்லை ) மாதிரி ஆக்ஸிடண்ட் கருவை தழுவி
எடுத்த படம் மன்மதன் அம்பு.
தான் வேவு பார்க்கும் பெண்ணையே
காதலிக்கும் கதை. ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், பிறகு வேகம்
பிடித்து இடைவேளை வரை நன்றாகவே போகிறது. திரும்பவும் கடைசியில் கொஞ்சம்
வேகம் கம்மியாகி கிரேஸி மோகன் நாடகம் மாதிரி முடிகிறது.
சொந்த
கேமராவை இன்னொருவரிடம் கொடுத்து படம் எடுங்க என்று சொல்லும் போது, அவர்
அந்த கேமராவை சரியாக ஆப்பரேட் செய்கிறாரா என்று கவலையுடன் கேமராவை
கொடுத்தவர் சிரிப்பார். இந்த படத்தில் கமல் அந்த மாதிரி தான். கதை,
திரைக்கதை, வசனம் என்பதாலோ என்னவோ நடிக்கும் போது ஏனோ சில இடங்களில்
அவருடைய யூஷுவல் எனர்ஜி மிஸ்ஸிங்.
கமலின் நண்பராக ரமேஷ் அரவிந்தும்
அவர் மனைவியாக ஊர்வசியும் படம் முழுவதும் வீடியோ சாட்டில் வந்து கமலிடம்
எப்போதும் துக்கமாக பேசுகிறார்கள். இவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் படம்
முழுக்க சதா செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
சங்கீதா
இரண்டு பிள்ளைக்கு தாயாக வரும் விவாகரத்து ஆன பெண். கமலை "செம கட்டை" என்று
ஆண்களுக்கு நிகராக பேசுகிறார். ஏன் விவாகரத்து என்று காரணம் சொல்லவில்லை,
ஆனால் அவர் பேசும் பேச்சுக்கு இரண்டு குழந்தைக்கு முன்பே ஆகியிருக்க
வேண்டும் என்று தோன்றுகிறது. கடைசியில் மாதவன் சங்கீதாவை ஏற்றுக்கொள்ளுவது
கால் கட்டை விரல் ஜோக்கைவிட சிரிக்க வைக்கிறது.
படத்தில் அந்த காதல்
கவிதையை எடுத்துவிட்டார்கள். அது கூட ஒரு விதத்தில் நல்லது தான் இல்லை
தியேட்டர்காரர்களே அதை எடுத்திருப்பார்கள். படத்தில் ரிவர்ஸில் ஒரு பாடல்
காட்சியில் சொல்லும் ஃபிளேஷ் பேக். இது தான் உண்மையான கவிதை. கடைசி
காட்சியில் கே.எஸ்.ரவிகுமார் வந்து அச்சு பிச்சு என்று எதுவும் உளராமல்
இருப்பது இன்னொரு ஆறுதல்.
முதல்
பாதி ஏதோ ஃபர்ஸ்ட் கிளாஸ் படம் போலவும், இரண்டாம் பாகம் 2ஆம் கிளாஸ்
டிராமா போலவும் இருப்பது தான் படத்தை பெரிய குறை. சில இடங்களில் கமலின்
வசனம் குறிப்பாக சின்ன பசங்களிடம் மேதாவி தனமாக சரித்திரம் பேசுவதும், காவி
உடையை பற்றி கமெண்ட் அடிப்பதும் என்று பல இடங்களில் கமல் தனியாக
தெரிகிறார். குழந்தைகள் சில இடங்களில் அதிமேதாவித் தனமாக HIV பற்றி
பேசுவதும் படத்துடன் ஒட்டாமல் இருக்கிறது.
மாதவன் எப்போதும் போல்,
கொடுத்த கூலிக்கு அதிகம் நடிக்காமல் ஒழுங்காக நடிக்கிறார். "சிட்டியில்
இருக்கும் பெண்ணை சைட்டடித்துவிட்டு, வில்லேஜ் பெண்ணை கைப்பிடி" என்ற
தத்துவங்களை சொல்லுகிறார்.
த்ரிஷா முன்பே சொந்த குரலில் பேசியிருந்தால், எப்போதோ வின்னைத் தாண்டியிருப்பார்.
சில
இடங்களில் திரைக்கதை நன்றாக இருந்தாலும், கடைசியில் திரைக்கதையை எப்படி
கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும் போது கமலின் மும்பை
எக்ஸ்பிரஸ் நினைவுக்கு வருகிறது. கமல் எண்ட்ரி கொடுக்கும் சீனில் இரண்டு
ரவுடிகளை அடிப்பதும், குப்பை தொட்டியை காலால் சரி செய்வது. செல்போனை மேலே
போட்டு பேண்ட் பேக்கட்டில் பிடிப்பதும், ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.
கப்பலில்
நடந்தாலும், கேமரா இவர்களை எப்போதும் ஃபோகஸ் செய்வதால் எல்லா காட்சிகளும்
ஏதோ நாடகத்தில் பின் தெரியும் செட் போல இருப்பது மாதிரி இருக்கிறது.
அந்த மலையாள குஞ்சனும், மஞ்சுவும் காமெடி செய்கிறேன் என்று பல இடங்களில் வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.
படம்
பார்த்துவிட்டு வந்த பிறகு யாராவது படம் எப்படி என்றால் உடனே நல்ல படம்
என்று சொல்ல முடியாமல் கிளைமேக்ஸில் அவர்கள் தவிப்பதை போல நாமும்
தவிக்கிறோம். நாம் அறிவுஜீவிகள் இல்லையே !
இட்லிவடை மார்க் : 6.1/10
ரிதம் ( இன்னொரு படம் நினைவுக்கு வரவில்லை ) மாதிரி ஆக்ஸிடண்ட் கருவை தழுவி
எடுத்த படம் மன்மதன் அம்பு.
தான் வேவு பார்க்கும் பெண்ணையே
காதலிக்கும் கதை. ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், பிறகு வேகம்
பிடித்து இடைவேளை வரை நன்றாகவே போகிறது. திரும்பவும் கடைசியில் கொஞ்சம்
வேகம் கம்மியாகி கிரேஸி மோகன் நாடகம் மாதிரி முடிகிறது.
சொந்த
கேமராவை இன்னொருவரிடம் கொடுத்து படம் எடுங்க என்று சொல்லும் போது, அவர்
அந்த கேமராவை சரியாக ஆப்பரேட் செய்கிறாரா என்று கவலையுடன் கேமராவை
கொடுத்தவர் சிரிப்பார். இந்த படத்தில் கமல் அந்த மாதிரி தான். கதை,
திரைக்கதை, வசனம் என்பதாலோ என்னவோ நடிக்கும் போது ஏனோ சில இடங்களில்
அவருடைய யூஷுவல் எனர்ஜி மிஸ்ஸிங்.
கமலின் நண்பராக ரமேஷ் அரவிந்தும்
அவர் மனைவியாக ஊர்வசியும் படம் முழுவதும் வீடியோ சாட்டில் வந்து கமலிடம்
எப்போதும் துக்கமாக பேசுகிறார்கள். இவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் படம்
முழுக்க சதா செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
சங்கீதா
இரண்டு பிள்ளைக்கு தாயாக வரும் விவாகரத்து ஆன பெண். கமலை "செம கட்டை" என்று
ஆண்களுக்கு நிகராக பேசுகிறார். ஏன் விவாகரத்து என்று காரணம் சொல்லவில்லை,
ஆனால் அவர் பேசும் பேச்சுக்கு இரண்டு குழந்தைக்கு முன்பே ஆகியிருக்க
வேண்டும் என்று தோன்றுகிறது. கடைசியில் மாதவன் சங்கீதாவை ஏற்றுக்கொள்ளுவது
கால் கட்டை விரல் ஜோக்கைவிட சிரிக்க வைக்கிறது.
படத்தில் அந்த காதல்
கவிதையை எடுத்துவிட்டார்கள். அது கூட ஒரு விதத்தில் நல்லது தான் இல்லை
தியேட்டர்காரர்களே அதை எடுத்திருப்பார்கள். படத்தில் ரிவர்ஸில் ஒரு பாடல்
காட்சியில் சொல்லும் ஃபிளேஷ் பேக். இது தான் உண்மையான கவிதை. கடைசி
காட்சியில் கே.எஸ்.ரவிகுமார் வந்து அச்சு பிச்சு என்று எதுவும் உளராமல்
இருப்பது இன்னொரு ஆறுதல்.
முதல்
பாதி ஏதோ ஃபர்ஸ்ட் கிளாஸ் படம் போலவும், இரண்டாம் பாகம் 2ஆம் கிளாஸ்
டிராமா போலவும் இருப்பது தான் படத்தை பெரிய குறை. சில இடங்களில் கமலின்
வசனம் குறிப்பாக சின்ன பசங்களிடம் மேதாவி தனமாக சரித்திரம் பேசுவதும், காவி
உடையை பற்றி கமெண்ட் அடிப்பதும் என்று பல இடங்களில் கமல் தனியாக
தெரிகிறார். குழந்தைகள் சில இடங்களில் அதிமேதாவித் தனமாக HIV பற்றி
பேசுவதும் படத்துடன் ஒட்டாமல் இருக்கிறது.
மாதவன் எப்போதும் போல்,
கொடுத்த கூலிக்கு அதிகம் நடிக்காமல் ஒழுங்காக நடிக்கிறார். "சிட்டியில்
இருக்கும் பெண்ணை சைட்டடித்துவிட்டு, வில்லேஜ் பெண்ணை கைப்பிடி" என்ற
தத்துவங்களை சொல்லுகிறார்.
த்ரிஷா முன்பே சொந்த குரலில் பேசியிருந்தால், எப்போதோ வின்னைத் தாண்டியிருப்பார்.
சில
இடங்களில் திரைக்கதை நன்றாக இருந்தாலும், கடைசியில் திரைக்கதையை எப்படி
கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும் போது கமலின் மும்பை
எக்ஸ்பிரஸ் நினைவுக்கு வருகிறது. கமல் எண்ட்ரி கொடுக்கும் சீனில் இரண்டு
ரவுடிகளை அடிப்பதும், குப்பை தொட்டியை காலால் சரி செய்வது. செல்போனை மேலே
போட்டு பேண்ட் பேக்கட்டில் பிடிப்பதும், ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.
கப்பலில்
நடந்தாலும், கேமரா இவர்களை எப்போதும் ஃபோகஸ் செய்வதால் எல்லா காட்சிகளும்
ஏதோ நாடகத்தில் பின் தெரியும் செட் போல இருப்பது மாதிரி இருக்கிறது.
அந்த மலையாள குஞ்சனும், மஞ்சுவும் காமெடி செய்கிறேன் என்று பல இடங்களில் வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.
படம்
பார்த்துவிட்டு வந்த பிறகு யாராவது படம் எப்படி என்றால் உடனே நல்ல படம்
என்று சொல்ல முடியாமல் கிளைமேக்ஸில் அவர்கள் தவிப்பதை போல நாமும்
தவிக்கிறோம். நாம் அறிவுஜீவிகள் இல்லையே !
இட்லிவடை மார்க் : 6.1/10
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: மன்மதன் அம்பு - விமர்சனம்
:lol: :lol: :{:*):
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மன்மதன் அம்பு சுமாரான படம்தான் : மாதவன்
» கையடக்கத் தொலைபேசி மன்மதன்
» அவள் எய்த அம்பு!
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» லவ் – விமர்சனம்
» கையடக்கத் தொலைபேசி மன்மதன்
» அவள் எய்த அம்பு!
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» லவ் – விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|