Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
குழந்தைகளை உருவாக்குவது எப்படி?
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
குழந்தைகளை உருவாக்குவது எப்படி?
தற்காலக் குழந்தைகள் கருவிகளைக் கையாள்வதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு புதிய கருவி அவர்களின் கைக்குக் கிடைக்கின்ற போது அதை இயக்குவதில் அதிலுள்ள செயலிகளை அறிவதிலும் குழந்தைகள் காட்டும் ஆர்வம் வியக்கத்தக்கதாக உள்ளது. ஆனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருவிகளைக் கையாளும் விடயத்தில் இன்னும் கட்டுத்திட்டங்களையே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சுதந்திரத்திற்குப் பிந்திய நமது கல்விப் பரம்பரை எந்தக் கருவிகளையும் ஒழுங்காகக் கையாளத்தெரியாதவர்களாக மாறிவிட்டார்கள். அந்நிலை இனியும் நீடிக்கவிடக்கூடாது. நமது குழந்தைகளுக்கு புதிய கருவிகளைக் கொடுத்து அவற்றை கையாளுவதற்கான பயிற்சியை அளிப்பதற்கான நேரம் வந்து நீண்டகாலமாகிவிட்டது.
கற்கால மனிதனிலிருந்து கருவிப்பயன்பாடு தோன்றிவிட்டதாக மானுடவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். வேட்டையுகத்திற்கு முந்திய மனிதன் உடல்பலத்தையும் தனது கரங்களையும் பயன்படுத்தியே தனக்கான உணவைப் பெற்றுக் கொண்டான். அதற்கேற்ப அவனது உடல் பருமனும் உயரமும் ஆயுளும் அமைந்திருந்தது. ஆனால் கருவி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் மனிதனுடைய உருவத்திலும் ஆயுளிலும் படிப்படியான குறைவு ஏற்பட்டு வந்து இன்று அவனது கரங்களும் காதுகளும்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு மின்திரைக்கு முன்னால் அவன் உட்கார்ந்திருக்கிறான். இது மனிதனின் பகுத்தறிவின் வளர்ச்சியின் உச்சகட்டமாக்க் கருதப்படுகின்றது. வேட்டையுக மனிதன் வேட்டையுகத்திற்கான அம்பு, வில் போன்ற கருவிகளில் தேர்ச்சி பெறுவது அந்த யுகத்திற்கான கல்வியாகவும் வாழ்வாகவும் இருந்தது. எனவே இன்றைய மனிதனும் இன்றைய யுகத்திற்கான அறிவையும் வாழ்வையும்தான் அடையவேண்டும். கருவிகளைக் கையாள்வது கஷ்டமான விடயமல்ல. திரும்பத்திரும்ப கையாளும் போது பரிச்சயமாகிவிடும். ஒரு புதிய கருவி சந்தைக்கு வரும்போது அதை அபூர்வ வஸ்த்துவாக கருதுவது எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறது. முன்னைய காலங்களோடு ஒப்பிட்டு அக்கருவிகளை புறமொதுக்குகின்ற தடை செய்கின்ற கிராமிய மனப்பாங்கு எல்லாக் காலப்பிரிவிலும் இருந்திருக்கின்றது. கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவாகியதற்கான காரணங்களை பொதுவாக இரண்டாக வகுக்கலாம். ஒன்று, கிராமத்தில் சந்தைவாய்ப்பு இல்லாமல் போனமை. மற்றது, மாற்றத்தை விரும்பாத கிராமிய மனப்பாங்கு. ஒரு மாணவன் வெளியூரில் கற்றுவிட்டு தனது ஊருக்குத் திரும்பும் போது அவ்வூரில் தனது அறிவைப் பயன்படுத்தக்கூடிய கற்றல் உபகரணங்கள் அதற்கான மக்கள் திரளும் இல்லாத போது அவன் நகரத்தை நோக்கியே குடியேற முயற்சிப்பான். புதிய கருவிகளை வாங்கி விற்க்க்கூடிய மனப்பாங்கு கிராமத்திலுள்ள வியாபாரிக்கு இல்லாவிட்டால் காலப்போக்கில் அங்கிருக்கின்ற சந்தை மெல்லமெல்ல அழிந்து கொண்டு செல்லும். ஒரு காலத்தில் மிகப்பெரும் வானொலிப் பெட்டிகள் இருந்தன. இன்று அவை இல்லை. ஆனால் அந்த வடிவம்தான் இல்லை. அது வேறொரு வடிவில் இன்னும் பல விடயங்களையும் தாங்கி நமது உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. அதில் தொலைக்காட்சியிருக்கிறது, தொடர்பு கொள்வதற்கான வசதியிருக்கிறது, குறுஞ்செய்தி அனுப்புதற்கான செயலிகள் உள்ளன. நினைவகங்கள் உள்ளன. இதை ஆய்வாளர்கள் புத்தாக்கத் தற்கொலை என்றழைக்கிறார்கள். பழைய வானொலியும் தொலைக்காட்சியும் தெலைபேசியும் அழிந்து புதிய வடிவம் பெற்றிருக்கிறது. மாற்றத்தை விரும்பும் மனப்பாங்குள்ளவர்களே இக்கருவிகளை கையாள்வதற்கு முன்வருவார்கள். இவை இன்று அத்தியவசியப் பொருட்களாக மாறிவிட்டன. வரலாற்றில் ஒவ்வொரு யுகங்கள் இருக்கின்றன. வேட்டையுகம், கைத்தொழில் யுகம் மாதிரி இது தகவல் தொழில்நுட்ப கோளமயமாக்கப்பட்ட யுகமாகும். இந்த யுகத்திற்கேற்ப நமது குழந்தைகளை பயிற்றுவிப்பதுதான் நம்மீதுள்ள மகத்தான பொறுப்பாகும். அதைவிட்டுவிட்டு நமது யுகத்திற்கேற்ப குழந்தைகளை உருவாக்கக்கூடாது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்குவது?
» கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
» ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
» குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
» குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
» கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
» ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
» குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
» குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|