Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஐ.தே.க பிளவு உக்கிரம்
Page 1 of 1
ஐ.தே.க பிளவு உக்கிரம்
ஐ.தே.க பிளவு உக்கிரம்
கரு’வை வைத்து காய் நகர்த்த சஜpத் வியு+கம்
நிரூஷி விமலவீர
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத சமயத்தில்
கட்சித் தலைமைத் துவத்திற்கு கட்சி பிரதித்தலைவர் கரு ஜயசூரியவை கொண்டுவர
மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு மேலும் உக்கிரமடைந்து,
கட்சி இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடப்பதற்கு முன்னரே ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவர் லண்டன் பயணமானார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை
பொறுப்பை ஏற்குமாறு கட்சி பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ அடங்கலான
மாற்றுக் குழுவினர் மற்றொரு பிரதித்தலைவரான கரு ஜயசூரியவை கோரினர்.
இதன்படி, கட்சித்
தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என கரு ஜயசூரியவும் விருப்பம் தெரிவித்தார். கட்சி ஒப்
படைக்கும் எந்த சவாலையும் தான் ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்சித் தலைமைத் துவத்தைப் பிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ள சஜித் பிரேமதாஸ
திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி கரு ஜயசூரியவை கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.
இந்த திடீர் திருப்பத்தினால் தனது தலைமைத்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று
பயந்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜய சூரியவை சமாளிக்கும் வகையில்
லண்டனில் இருந்து நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை யும் முரண்பாடுகளையும் தவிர்த்து, கட்சியை ஒரே
தலைமைத்துவத் தில் செயற்படுவதற்கான அதிகாரங்களை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதாக
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க லண்டனிலிருந்து விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைப்பொறுப்பை கரு ஜயசூரிய ஏற்றுக்கொள்வது தொடர்பாக லண்டனில் உள்ள
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பேசிய போதே எதிர்கட்சித் தலைவர்
இவ்வாறு தெரிவித்ததோடு அறிக்கையும் விடுத்துள்ளார்.
கட்சியின் பெரும்பான்மையோர் இடையே நிலவி வரும் கருத்து வேறு பாட்டை நீக்குவதற்கும்
உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கும் கரு ஜயசூரியவிற்கு பாரிய கடப்பாடு உள்ளதாகவும்
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்தி கட்சியை ஒரே தலைமைத்துவத்தின் கீழ்
கொண்டுவருவதற்கான அனுபவ முள்ளவர் கரு ஜயசூரிய எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்சி பிரதித்தலைவர் கரு ஜயசூரிய நேற்று முன்தினம் (28) திடீரென
இந்தியாவுக்கு சென்றுள்ள தாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. இவர் இந்தியா
சென்றதற்கான காரணம் தெரியவில்லை.
இதே வேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை செயற் குழுவினால் மாத்திரமே
மாற்றியமைக்க முடியும். அவ்வாறு தலைமைத்துவத்தை மாற்றம் செய்வதற்கு செயற்குழுவில்
உள்ள பெரும்பான்மையோர் சம்மதம் தெரிவித்தால் மாத்திரமே கட்சியின் தலைவரை மாற்ற
முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
சிலர் செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதன் மூலம் தலைமைத்துவத்தை மாற்ற முடியாது.
கட்சியின் மகா சம்மேளனம் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தால்
செயற்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்துடன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றால்
மாத் திரமே தலைமைத்துவத்தை மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாஸ அடங்கலான குழுவினர் நேற்று மற்றொரு ஊடகவியலாளர்
மாநாட்டை கூட்டினர்.
ரணிலின் அறிக்கையை ஏற்க முடியாது. கட்சி அரசியலமைப்பின் பிரகாரம் தாம் கட்சித்
தலைமைத்துவத்தை மாற்றப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
ஐ.தே.க. தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்ற கடந்த காலத்தில்
எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அதிகமான ஐ.தே.க. எம்.பிக்கள்
ரணில்விக்கிரமசிங்க தலை மையை விரும்பவில்லை. இருந்தாலும் கட்சியின்
நிறைவேற்றுக்குழுவிலும், செயற்குழுவிலும் ரணில்விக் கிரமசிங்கவிற்கு
விசுவாசமானவர்களே உள்ளதால் கட்சியின் யாப்பின் பிரகாரம் அவரை அகற்ற முடியாதுள்ளதாக
அறிவிக்கப்படுகிறது.
65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வி அடைந்து ஒரு உள்ளூராட்சி
சபையை கூட ஐ.தே.க. கைப்பற்ற முடியாத நிலையில் மீண்டும் கட்சிக்குள் விரிசல்
ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஏற்பட்டுள்ள பிளவினால் கட்சி மேலும் பல துண்டுகளாக உடையும் என கட்சி
வட்டாரங்கள் கூறின. இதே வேளை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள திடீர் கொந்தளிப்பு தொடர்பாக
ரணில் விக்கிரமசிங்க தனக்கு நம்பிக்கையானவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய
வருகிறது.
கரு’வை வைத்து காய் நகர்த்த சஜpத் வியு+கம்
நிரூஷி விமலவீர
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத சமயத்தில்
கட்சித் தலைமைத் துவத்திற்கு கட்சி பிரதித்தலைவர் கரு ஜயசூரியவை கொண்டுவர
மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு மேலும் உக்கிரமடைந்து,
கட்சி இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடப்பதற்கு முன்னரே ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவர் லண்டன் பயணமானார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை
பொறுப்பை ஏற்குமாறு கட்சி பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ அடங்கலான
மாற்றுக் குழுவினர் மற்றொரு பிரதித்தலைவரான கரு ஜயசூரியவை கோரினர்.
இதன்படி, கட்சித்
தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என கரு ஜயசூரியவும் விருப்பம் தெரிவித்தார். கட்சி ஒப்
படைக்கும் எந்த சவாலையும் தான் ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்சித் தலைமைத் துவத்தைப் பிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ள சஜித் பிரேமதாஸ
திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி கரு ஜயசூரியவை கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.
இந்த திடீர் திருப்பத்தினால் தனது தலைமைத்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று
பயந்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜய சூரியவை சமாளிக்கும் வகையில்
லண்டனில் இருந்து நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை யும் முரண்பாடுகளையும் தவிர்த்து, கட்சியை ஒரே
தலைமைத்துவத் தில் செயற்படுவதற்கான அதிகாரங்களை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதாக
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க லண்டனிலிருந்து விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைப்பொறுப்பை கரு ஜயசூரிய ஏற்றுக்கொள்வது தொடர்பாக லண்டனில் உள்ள
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பேசிய போதே எதிர்கட்சித் தலைவர்
இவ்வாறு தெரிவித்ததோடு அறிக்கையும் விடுத்துள்ளார்.
கட்சியின் பெரும்பான்மையோர் இடையே நிலவி வரும் கருத்து வேறு பாட்டை நீக்குவதற்கும்
உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கும் கரு ஜயசூரியவிற்கு பாரிய கடப்பாடு உள்ளதாகவும்
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்தி கட்சியை ஒரே தலைமைத்துவத்தின் கீழ்
கொண்டுவருவதற்கான அனுபவ முள்ளவர் கரு ஜயசூரிய எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்சி பிரதித்தலைவர் கரு ஜயசூரிய நேற்று முன்தினம் (28) திடீரென
இந்தியாவுக்கு சென்றுள்ள தாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. இவர் இந்தியா
சென்றதற்கான காரணம் தெரியவில்லை.
இதே வேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை செயற் குழுவினால் மாத்திரமே
மாற்றியமைக்க முடியும். அவ்வாறு தலைமைத்துவத்தை மாற்றம் செய்வதற்கு செயற்குழுவில்
உள்ள பெரும்பான்மையோர் சம்மதம் தெரிவித்தால் மாத்திரமே கட்சியின் தலைவரை மாற்ற
முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
சிலர் செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதன் மூலம் தலைமைத்துவத்தை மாற்ற முடியாது.
கட்சியின் மகா சம்மேளனம் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தால்
செயற்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்துடன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றால்
மாத் திரமே தலைமைத்துவத்தை மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாஸ அடங்கலான குழுவினர் நேற்று மற்றொரு ஊடகவியலாளர்
மாநாட்டை கூட்டினர்.
ரணிலின் அறிக்கையை ஏற்க முடியாது. கட்சி அரசியலமைப்பின் பிரகாரம் தாம் கட்சித்
தலைமைத்துவத்தை மாற்றப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
ஐ.தே.க. தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்ற கடந்த காலத்தில்
எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அதிகமான ஐ.தே.க. எம்.பிக்கள்
ரணில்விக்கிரமசிங்க தலை மையை விரும்பவில்லை. இருந்தாலும் கட்சியின்
நிறைவேற்றுக்குழுவிலும், செயற்குழுவிலும் ரணில்விக் கிரமசிங்கவிற்கு
விசுவாசமானவர்களே உள்ளதால் கட்சியின் யாப்பின் பிரகாரம் அவரை அகற்ற முடியாதுள்ளதாக
அறிவிக்கப்படுகிறது.
65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வி அடைந்து ஒரு உள்ளூராட்சி
சபையை கூட ஐ.தே.க. கைப்பற்ற முடியாத நிலையில் மீண்டும் கட்சிக்குள் விரிசல்
ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஏற்பட்டுள்ள பிளவினால் கட்சி மேலும் பல துண்டுகளாக உடையும் என கட்சி
வட்டாரங்கள் கூறின. இதே வேளை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள திடீர் கொந்தளிப்பு தொடர்பாக
ரணில் விக்கிரமசிங்க தனக்கு நம்பிக்கையானவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய
வருகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஐ.தே.க தலைமைத்துவ பிரச்சினை மேலும் உக்கிரம்.
» இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்
» இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்
» தலிபான் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு
» தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தார் மோடி: பா.ஜ தலைவர்களுடன் மோதல் உக்கிரம்
» இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்
» இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்
» தலிபான் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு
» தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தார் மோடி: பா.ஜ தலைவர்களுடன் மோதல் உக்கிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|