Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. அதனை கீழ்கண்ட நபிமொழிகள் நமக்கு சுட்டிக்காடுகின்றன்.
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,
''ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.'' (நூல்: திர்மிதி 761)
o அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,
''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)
o அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,
''ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: அஹ்மது)
o அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு.
''யார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248,)
o அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹு,
''சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)
o அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
''நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.'' (நூல்: திர்மிதி)
o அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா ரளியலலாஹு அன்ஹு,
''நீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
‘என்னிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன்.
‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன்.
‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடையளித்தார்கள்.'' (நூல்: ஹாகிம்)
நன்றி நீடூர்
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,
''ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.'' (நூல்: திர்மிதி 761)
o அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,
''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)
o அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,
''ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: அஹ்மது)
o அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு.
''யார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248,)
o அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹு,
''சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)
o அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
''நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.'' (நூல்: திர்மிதி)
o அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா ரளியலலாஹு அன்ஹு,
''நீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
‘என்னிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன்.
‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன்.
‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடையளித்தார்கள்.'' (நூல்: ஹாகிம்)
நன்றி நீடூர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
உலகில் மனிதனை படைக்க நாடிய காலத்தில் இருந்து மலக்குகள் அல்லாஹ்விடம் மனிதனைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டார்கள் அில்லாஹ்வும் அதற்கு பொருமையாக பதில் அளித்தான் .அதில் நோன்பாளியின் சிறப்பை அல்லாஹ் சிலாஹித்து நோன்பாளிகளுக்கு மட்டும் ஒரு சிறப்பு சொர்க்கத்தைப் படைத்தான் .அதுபற்றி மலக்குகள் கேட்ட போது அந்த கருணையின் நாயகன் கியாமத்தின் அரசன் சொன்னான் .மனிதன் எல்லா விஷ்யங்களிலும் தன்னை ஏமாற்றி விடலாம் ஆனால் நோன்பில் அவ்வாறு முடியாது ,
நான் கட்டளையிட்டு விட்டேன் என்பதற்காக தன் கண்முன்னால் இருக்கும் தன் அருசுவை உணவைக்கூட யாரும் இல்லா தனிமையிலும் நோன்பாளி உண்ண மாட்டான் .அது அவன் எனக்கு தரும் என் கட்டளைக்கு தரும் கண்ணியம் . நான் படைத்த என் அடிமையான அவன் இப்படி இருந்தால் அவனைப் படைத்த நான் அவனுக்கு எப்படி கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும் அதற்காகவே இந்த சொர்க்கம் என்றான் .அல்லாஹ் நம் நோன்பாளிகள் அனைவரும் அந்த அத்னு என்ற சொர்க்கவாசிகளாக அங்கிகரித்துக்க்கொள்வானாக ...ஆமீன்
நான் கட்டளையிட்டு விட்டேன் என்பதற்காக தன் கண்முன்னால் இருக்கும் தன் அருசுவை உணவைக்கூட யாரும் இல்லா தனிமையிலும் நோன்பாளி உண்ண மாட்டான் .அது அவன் எனக்கு தரும் என் கட்டளைக்கு தரும் கண்ணியம் . நான் படைத்த என் அடிமையான அவன் இப்படி இருந்தால் அவனைப் படைத்த நான் அவனுக்கு எப்படி கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும் அதற்காகவே இந்த சொர்க்கம் என்றான் .அல்லாஹ் நம் நோன்பாளிகள் அனைவரும் அந்த அத்னு என்ற சொர்க்கவாசிகளாக அங்கிகரித்துக்க்கொள்வானாக ...ஆமீன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
ஆமீன் ஆமீன் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
» முதல் பத்து பணக்கார நாடுகள் !
» உலகில் எப்பவுமே முதல் பத்து இடத்தை பிடித்திருக்கும் பணக்காரர்கள்
» முதல் பத்து இடங்களை பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
» முதல் பத்து பணக்கார நாடுகள் !
» உலகில் எப்பவுமே முதல் பத்து இடத்தை பிடித்திருக்கும் பணக்காரர்கள்
» முதல் பத்து இடங்களை பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|