சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆமணக்கு விதையிலிருந்து நச்சு குண்டுகள்: அல்கொய்தா இயக்கத்தின் புதிய திட்டம். Khan11

ஆமணக்கு விதையிலிருந்து நச்சு குண்டுகள்: அல்கொய்தா இயக்கத்தின் புதிய திட்டம்.

Go down

ஆமணக்கு விதையிலிருந்து நச்சு குண்டுகள்: அல்கொய்தா இயக்கத்தின் புதிய திட்டம். Empty ஆமணக்கு விதையிலிருந்து நச்சு குண்டுகள்: அல்கொய்தா இயக்கத்தின் புதிய திட்டம்.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 7:03

அல்கொய்தாவின் ஏமன் பிரிவு தீவிரவாதிகள் புதிய வகை நச்சுக் குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏமனில் செயல்படும் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆமணக்கு விதையிலிருந்து நச்சுக் குண்டுகளைத் தயாரிக்கும் உத்தியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"ரிசின்" எனப்படும் இந்த நச்சுப் பொருளை சிறிய அளவிலான வெடிகுண்டுகளில் பயன்படுத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ரிசின் கலந்த நச்சுக் குண்டுகளிலிருந்து வெளிவரும் வாயுவை முகர்ந்தாலோ அல்லது இரத்தத்தில் கலந்தாலோ மரணம் சம்பவிக்கும் என்று தெரிகிறது.
இந்த நச்சுக் குண்டுகளை தயாரிப்பதற்காகவே அல்கொய்தாவின் ஏமன் பிரிவினர் கடந்த ஒரு வருடமாக ஆமணக்கு விதை உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை ரிசின் நச்சுப் பொருளைத் தயாரிக்கும் முகவர்கள் உள்ள ஷப்வா மாகாணத்துக்கு தீவிரவாதிகள் எடுத்துச் செல்ல முயன்றதாகவும், இப்பகுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
உற்பத்தி செய்யப்பட்ட குண்டுகளை பொதுமக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகளில் வெடிக்கத் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும் இத்தகைய தாக்குதல்கள் விரைவில் நிகழ வாய்ப்பில்லை என்று தெரிவித்த அதிகாரிகள் வறண்ட, வெப்பமான சூழ்நிலையில் ரிசின் நச்சுப்பொருள் கலக்கப்பட்ட குண்டுகளை வெடிக்க வைக்கும் தொழில்நுட்பத்தை அல்கொய்தா இயக்கத்தினர் இன்னும் பெறவில்லை என்று தெரிவித்தனர்.
அல்கொய்தாவினரின் இந்தத் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடந்த ஆண்டே தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், இது குறித்த தகவல்கள் உடனுக்குடன் அவருக்கு அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக 2009ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் மற்றும் அச்சு இயந்திரங்களில் பயன்படும் மைப்பெட்டகங்களிலும் வெடிபொருட்களை நிரப்பி தாக்குதல் நடத்த அல்கொய்தாவினர் செய்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தாக்குதல்கள் 2001 செப்டம்பரில் நிகழ்ந்த தாக்குதலைப் போல பெரிய அளவில் இருக்காது என்றாலும், மக்கள் மனதில் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதுபோன்ற அச்சுறுத்தலை ஒதுக்குவதற்கில்லை என்று தெரிவித்த அவர்கள் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஏமனில் உள்ள அல்கொய்தா அமைப்பினர், அறிவியல் அறிவு பெற்றவர்கள் ரிசின் போன்ற நச்சுப் பொருளை உருவாக்கி அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்த முன்வர வேண்டும் என்று தங்களது இணையதள செய்தித்தாளில் கடந்த வருடம் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகாவில் 500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்: குண்டுகள் தயாரிக்கும் திட்டம் முறியடிப்பு
» புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு
» தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு
» ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’
» புதிய தொலைபேசி இணைப்பு திட்டம் பதிவு கட்டணம் இல்லாமல் வழங்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum