Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
தி.மு.க. அலுவலகத்துக்கு நிலம் அபகரிப்பு: கே.என்.நேரு-அன்பில் பெரியசாமி கைது; எம்.எல்.ஏ.வும் சிக்குகி
2 posters
Page 1 of 1
தி.மு.க. அலுவலகத்துக்கு நிலம் அபகரிப்பு: கே.என்.நேரு-அன்பில் பெரியசாமி கைது; எம்.எல்.ஏ.வும் சிக்குகி
திருச்சி, ஆக. 25-
திருச்சி
சத்திரம் பஸ் நிலையம் அருகே திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகம் 3
மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கலைஞர் அறிவாலயம் என்று
பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. தலைவர்
கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தில்
மாவட்ட கட்சி அலுவலகம், திருமண மண்டபம், ஓய்வு அறைகள், உள்பட எல்லா
வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான
அண்ணா அறிவாலயத்துக்கு அடுத்தப்படியாக திருச்சி மாவட்ட தி.மு.க.
சார்பில்தான் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டதாக இந்த கலைஞர் அறிவாலயம் பற்றி
பெருமையாக பேசப்பட்டது.
முன்னாள் அமைச்சர்
கே.என்.நேரு தலைமையிலான திருச்சி மாவட்ட தி.மு.க.வினர் பல ஆண்டுகளாக
பணியாற்றி இந்த கட்டிடத்தை கட்டினார்கள். கடந்த மே மாதம் தமிழ் நாட்டில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிலஅபகரிப்பு புகார்கள் எழுந்த போது, திருச்சி
மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயமும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில்
கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
துறையூரைச்
சேர்ந்த டாக்டர் சீனிவாசன், கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ள இடத்தில்
தனக்கு சொந்தமான 13 ஆயிரம் சதுர அடி நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. அந்த
இடத்தை மீட்டு எனக்குத் தரவேண்டும் என்று திருச்சி போலீசாரிடம் புகார் மனு
கொடுத்தார்.
இதற்கிடையே திருச்சி போலீசாரிடம்
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பிலும் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ள
இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. அதை மீட்டு ஒப்படையுங்கள் என்று
கோரிக்கை விடப்பட்டிருந்தது.
புகார் மனு
கொடுத்தவர்கள், கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த
கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில்
பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ. சவுந்திர பாண்டியன், மாவட்ட தி.மு.க. துணை
செயலாளர் குடமுருட்டி சேகர், துணை மேயர் அன்பழகன், பந்தல் மாமுண்டிராஜா,
கொப்பம்பட்டி தமிழ்மாறன், ஷெரீப், ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜூலு,
தனபால், செல்வம் ஆகிய 12 பேர் தான் நிலம் அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்
சாட்டி இருந்தனர்.
இதுபற்றி திருச்சி மாவட்ட நில
அபகரிப்பு விவகாரங்களை கவனிக்கும் போலீசார் ஆய்வு செய்தனர். நிலப்பட்டா
ஆவணங்களை பரிசோதித்தபோது நிலம் அபகரிப்பு நடந்ததாக முடிவுக்கு வந்தனர்.
இதனால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேரும் எந்த நேரத்திலும்
கைது செய்யப்படலாம் என்று கடந்த மாதம் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த
நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டல் வழக்கிலும்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது புகார் கூறப்பட்டிருந்தது. இதனால்
அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தார். அவரை இன்று வரை
கைது செய்வதற்கு கோர்ட்டு தடை விதித்திருந்தது.
இன்று
அதிகாலை 5.50 மணிக்கு திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயபாண்டியன்
தலைமையில் போலீஸ் படை திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள
மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த
கே.என்.நேருவை போலீசார் எழுப்பி கைது செய்தனர்.
துறையூர்
டாக்டர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்வதாக போலீசார்
கூறினர். 6.30 மணிக்கு போலீஸ் வாகனத்தில் கே.என். நேரு கே.கே.நகர்
ஆயுதப்படை திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி
அமைப்பாளருமான அன்பில் பெரியசாமியும் கிராப்பட்டி அன்பில் நகரில் உள்ள
அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அதுபோல
கிராப்பட்டியில் வசித்து வரும் பந்தல் மாமுன்டி ராஜா மலைக்கோட்டை பகுதியைச்
சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள்
மீது நில அபகரிப்பு, கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்பட இ.பி.கோ. 147 (சட்ட
விரோதமாக கூடுதல்), 447 (ஆவணங்களை திருத்துதல்), 363, 347, 325 (அடித்து
உதைத்தல்), 387 (மிரட்டி பறித்தல்), 506(2) (கொலை மிரட்டல்), 392 (சொத்தை
அபகரித்தல்), 120 (பி) ஆகிய 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு
உள்ளது.
இவர்களில் குடமுருட்டி சேகர் ஏற்கனவே நில
அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 7
பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கே.என். நேரு
கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த திருமண மண்டபம் முன்பு ஏராளமான
தி.மு.க. வினர் குவிய தொடங்கினர். வக்கீல்களும் ஏராளமானோரும் அங்கு
வந்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவியது. பாதுகாப்புக்காக
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து
கே.என். நேரு, அன்பில் பெரியசாமி, சுந்தர்ராஜ், மாமுண்டி ஆகிய 4 பேரும்
மன்னார் புரத்தில் உள்ள ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு புஷ்பராணி வீட்டுக்கு
அழைத்து செல்லப்பட்டனர். 9.30 மணிக்கு அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பு
ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்
புஷ்பராணி உத்தரவிட்டார். அதன்படி கே.என்.நேரு உள்ளிட்ட 4 பேரும் உடனடியாக
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நில
அபகரிப்பு வழக்கு தொடர்பாக கைதாகி இருக்கும் மூன்றாவது முன்னாள் மந்திரி
கே.என்.நேரு ஆவார். ஏற்கனவே நிலத்தை மிரட்டி பறித்ததாக முன்னாள் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய் யப்பட்டு கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு முன்னாள் மந்திரி என்.கே.கே.பி.ராஜா கைதாகி, பிறகு விடுதலையானார்.
தற்போது அவர் திருச்சியில் தங்கி இருந்து கோர்ட்டில் கையெழுத்திட்டு
வருகிறார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் இதுவரை ஜெ.அன்பழகன், நிலமோசடி
வழக்கிலும், அனிதா ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கிலும் கைதானார்கள்.
லால்குடி சவுந்திரபாண்டியன் கைதான மூன்றாவது எம்.எல்.ஏ. ஆவார்.
திருச்சி
சத்திரம் பஸ் நிலையம் அருகே திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகம் 3
மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கலைஞர் அறிவாலயம் என்று
பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. தலைவர்
கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தில்
மாவட்ட கட்சி அலுவலகம், திருமண மண்டபம், ஓய்வு அறைகள், உள்பட எல்லா
வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான
அண்ணா அறிவாலயத்துக்கு அடுத்தப்படியாக திருச்சி மாவட்ட தி.மு.க.
சார்பில்தான் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டதாக இந்த கலைஞர் அறிவாலயம் பற்றி
பெருமையாக பேசப்பட்டது.
முன்னாள் அமைச்சர்
கே.என்.நேரு தலைமையிலான திருச்சி மாவட்ட தி.மு.க.வினர் பல ஆண்டுகளாக
பணியாற்றி இந்த கட்டிடத்தை கட்டினார்கள். கடந்த மே மாதம் தமிழ் நாட்டில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிலஅபகரிப்பு புகார்கள் எழுந்த போது, திருச்சி
மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயமும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில்
கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
துறையூரைச்
சேர்ந்த டாக்டர் சீனிவாசன், கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ள இடத்தில்
தனக்கு சொந்தமான 13 ஆயிரம் சதுர அடி நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. அந்த
இடத்தை மீட்டு எனக்குத் தரவேண்டும் என்று திருச்சி போலீசாரிடம் புகார் மனு
கொடுத்தார்.
இதற்கிடையே திருச்சி போலீசாரிடம்
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பிலும் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ள
இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. அதை மீட்டு ஒப்படையுங்கள் என்று
கோரிக்கை விடப்பட்டிருந்தது.
புகார் மனு
கொடுத்தவர்கள், கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த
கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில்
பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ. சவுந்திர பாண்டியன், மாவட்ட தி.மு.க. துணை
செயலாளர் குடமுருட்டி சேகர், துணை மேயர் அன்பழகன், பந்தல் மாமுண்டிராஜா,
கொப்பம்பட்டி தமிழ்மாறன், ஷெரீப், ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜூலு,
தனபால், செல்வம் ஆகிய 12 பேர் தான் நிலம் அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்
சாட்டி இருந்தனர்.
இதுபற்றி திருச்சி மாவட்ட நில
அபகரிப்பு விவகாரங்களை கவனிக்கும் போலீசார் ஆய்வு செய்தனர். நிலப்பட்டா
ஆவணங்களை பரிசோதித்தபோது நிலம் அபகரிப்பு நடந்ததாக முடிவுக்கு வந்தனர்.
இதனால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேரும் எந்த நேரத்திலும்
கைது செய்யப்படலாம் என்று கடந்த மாதம் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த
நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டல் வழக்கிலும்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது புகார் கூறப்பட்டிருந்தது. இதனால்
அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தார். அவரை இன்று வரை
கைது செய்வதற்கு கோர்ட்டு தடை விதித்திருந்தது.
இன்று
அதிகாலை 5.50 மணிக்கு திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயபாண்டியன்
தலைமையில் போலீஸ் படை திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள
மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த
கே.என்.நேருவை போலீசார் எழுப்பி கைது செய்தனர்.
துறையூர்
டாக்டர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்வதாக போலீசார்
கூறினர். 6.30 மணிக்கு போலீஸ் வாகனத்தில் கே.என். நேரு கே.கே.நகர்
ஆயுதப்படை திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி
அமைப்பாளருமான அன்பில் பெரியசாமியும் கிராப்பட்டி அன்பில் நகரில் உள்ள
அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அதுபோல
கிராப்பட்டியில் வசித்து வரும் பந்தல் மாமுன்டி ராஜா மலைக்கோட்டை பகுதியைச்
சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள்
மீது நில அபகரிப்பு, கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்பட இ.பி.கோ. 147 (சட்ட
விரோதமாக கூடுதல்), 447 (ஆவணங்களை திருத்துதல்), 363, 347, 325 (அடித்து
உதைத்தல்), 387 (மிரட்டி பறித்தல்), 506(2) (கொலை மிரட்டல்), 392 (சொத்தை
அபகரித்தல்), 120 (பி) ஆகிய 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு
உள்ளது.
இவர்களில் குடமுருட்டி சேகர் ஏற்கனவே நில
அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 7
பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கே.என். நேரு
கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த திருமண மண்டபம் முன்பு ஏராளமான
தி.மு.க. வினர் குவிய தொடங்கினர். வக்கீல்களும் ஏராளமானோரும் அங்கு
வந்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவியது. பாதுகாப்புக்காக
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து
கே.என். நேரு, அன்பில் பெரியசாமி, சுந்தர்ராஜ், மாமுண்டி ஆகிய 4 பேரும்
மன்னார் புரத்தில் உள்ள ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு புஷ்பராணி வீட்டுக்கு
அழைத்து செல்லப்பட்டனர். 9.30 மணிக்கு அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பு
ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்
புஷ்பராணி உத்தரவிட்டார். அதன்படி கே.என்.நேரு உள்ளிட்ட 4 பேரும் உடனடியாக
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நில
அபகரிப்பு வழக்கு தொடர்பாக கைதாகி இருக்கும் மூன்றாவது முன்னாள் மந்திரி
கே.என்.நேரு ஆவார். ஏற்கனவே நிலத்தை மிரட்டி பறித்ததாக முன்னாள் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய் யப்பட்டு கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு முன்னாள் மந்திரி என்.கே.கே.பி.ராஜா கைதாகி, பிறகு விடுதலையானார்.
தற்போது அவர் திருச்சியில் தங்கி இருந்து கோர்ட்டில் கையெழுத்திட்டு
வருகிறார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் இதுவரை ஜெ.அன்பழகன், நிலமோசடி
வழக்கிலும், அனிதா ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கிலும் கைதானார்கள்.
லால்குடி சவுந்திரபாண்டியன் கைதான மூன்றாவது எம்.எல்.ஏ. ஆவார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தி.மு.க. அலுவலகத்துக்கு நிலம் அபகரிப்பு: கே.என்.நேரு-அன்பில் பெரியசாமி கைது; எம்.எல்.ஏ.வும் சிக்குகி
இதுபற்றி திருச்சி மாவட்ட நில
அபகரிப்பு விவகாரங்களை கவனிக்கும் போலீசார் ஆய்வு செய்தனர். நிலப்பட்டா
ஆவணங்களை பரிசோதித்தபோது நிலம் அபகரிப்பு நடந்ததாக முடிவுக்கு வந்தனர். ஜெயா சொன்னதன் பெயரில் .
அபகரிப்பு விவகாரங்களை கவனிக்கும் போலீசார் ஆய்வு செய்தனர். நிலப்பட்டா
ஆவணங்களை பரிசோதித்தபோது நிலம் அபகரிப்பு நடந்ததாக முடிவுக்கு வந்தனர். ஜெயா சொன்னதன் பெயரில் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி உள்பட 3 பேர் கைது
» ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்
» நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள்; தமிழக அரசு ஏற்பாடு
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது
» ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்
» நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள்; தமிழக அரசு ஏற்பாடு
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|