Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
2 posters
Page 1 of 1
தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
தமிழர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதன் மூலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அந்தப் பிரதேசங்களில் இருந்து அகற்ற முடியும் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் உவர் நீர் இறால் குஞ்சு உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
உங்கள் பிரதேசம் அனைத்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மனிதன் சுதந்திரமாகவும் பயமில்லாமலும் வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் இந்நிலை காணப்படவில்லை. இன்னும் தமிழ் மக்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் கிடைக்கப்பெறவில்லை.
1948 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் நாடு சுதந்திரமடைந்த காலந்தொட்டு 2008 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தை மீட்ட காலம் வரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பாரிய அளவில் இந்தப் பிரதேசத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் உவர் நீர் இறால் குஞ்சு உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
உங்கள் பிரதேசம் அனைத்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மனிதன் சுதந்திரமாகவும் பயமில்லாமலும் வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் இந்நிலை காணப்படவில்லை. இன்னும் தமிழ் மக்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் கிடைக்கப்பெறவில்லை.
1948 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் நாடு சுதந்திரமடைந்த காலந்தொட்டு 2008 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தை மீட்ட காலம் வரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பாரிய அளவில் இந்தப் பிரதேசத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Re: தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
அதேபோன்று 1948 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆண்டு காலப்பகுதி வரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதை விடவும் பல மடங்கு நிதியை வட பிரதேசத்திற்காக அரசாங்கம் செலவு செய்திருக்கிறது. இவ்வாறாக நிதியினைச் செலவிட்டு அபிவிருத்திப் பணிகளைச் செய்திருந்தும் கூட அப்பிரதேசத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வெற்றி பெற்றது.
அதேபோன்று தான் கிழக்குப் பிரதேசத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று வருகின்றது. இந்தப் பிரதேசத்திலே பொருளாதார சுதந்திரமும் வாழ்க்கையை நடத்தக் கூடிய சுதந்திரமும் இருந்தால் மட்டும் போதாது. 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களைப் பற்றிப் பேசி வருவதால் தான் இந்நிலை காணப்படுகிறது. தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தருவதாக அவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்தப் பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தேவையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்கும் போது இந்தப் பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முடிந்துவிடும் முஸ்லிம் காங்கிரஸும் முடிந்துவிடும். எங்களிடம் பிழை இருப்பதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இங்கு வெற்றிபெற்று வருகின்றது.
மக்கள் வாக்களிப்பது சரி. நாங்கள் தோல்வியடைந்துவிட்டது ஏன் என்று சிந்திக்க வேண்டும். இந்நாட்டிலே இருக்கக்கூடிய சிங்கள மக்களின் அபிமானத்தைப் போன்று தமிழ் முஸ்லிம் மக்களின் அபிமானத்தையும் பாதுகாக்க வேண்டும். அபிமானத்தைப் பாதுகாத்துக்கொள்ள மொழி தேவையென்று அவர்கள் கருதினார்கள்.
அதேபோன்று தான் கிழக்குப் பிரதேசத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று வருகின்றது. இந்தப் பிரதேசத்திலே பொருளாதார சுதந்திரமும் வாழ்க்கையை நடத்தக் கூடிய சுதந்திரமும் இருந்தால் மட்டும் போதாது. 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களைப் பற்றிப் பேசி வருவதால் தான் இந்நிலை காணப்படுகிறது. தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தருவதாக அவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்தப் பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தேவையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்கும் போது இந்தப் பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முடிந்துவிடும் முஸ்லிம் காங்கிரஸும் முடிந்துவிடும். எங்களிடம் பிழை இருப்பதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இங்கு வெற்றிபெற்று வருகின்றது.
மக்கள் வாக்களிப்பது சரி. நாங்கள் தோல்வியடைந்துவிட்டது ஏன் என்று சிந்திக்க வேண்டும். இந்நாட்டிலே இருக்கக்கூடிய சிங்கள மக்களின் அபிமானத்தைப் போன்று தமிழ் முஸ்லிம் மக்களின் அபிமானத்தையும் பாதுகாக்க வேண்டும். அபிமானத்தைப் பாதுகாத்துக்கொள்ள மொழி தேவையென்று அவர்கள் கருதினார்கள்.
Re: தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
அந்தக் காலத்திலே அதை எமக்கு வழங்க முடியாமல் போய்விட்டது. ஆகையால் தமிழ்க் கட்சிகள் வெற்றியைப் பெற்றன. நாங்கள் தோல்வியைத் தழுவினோம். ஒரு சில காலங்கள் கடந்த பின் மொழிப் பிரச்சினை வேறு பிரச்சினையாக வடிவம் கொண்டது. எங்கள் பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு எங்களுக்கு அதிகாரத்தைத் தாருங்கள் என்று கூறினார்கள். அந்த சந்தர்ப்பத்திலே தான் நாங்கள் மொழிக்குத் தேவையான அந்தஸ்த்தை வழங்கினோம். மொழி அந்தஸ்தைக் கேட்டபோது நாங்கள் அதைக் கொடுக்கவில்லை.
Re: தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
நாட்டைப் பிரிக்காத வகையில் இந்தப் பிரதேசத்திற்குத் தேவையானவற்றை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு சில மாகாணங்களின் அதிகாரிகள் கூறுகின்றார்கள் எங்களுக்கு பொலிஸ் அதிகாரமோ காணி அதிகாரமோ தேவையில்லை என்று. தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் அவற்றை கேட்கவுமில்லை. வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தான் கேட்டார்கள். ஆனால், அதிகாரம் வழங்கப்பட்டது. தென் பகுதிக்கு 2011 ஆம் ஆண்டு முடிவடைகின்ற காலப்பகுதியிலே ஜனாதிபதி 1000 தமிழ் பொலிஸ் அதிகாரிகளை இப்பிரதேசத்திற்கு நியமிக்க இருக்கிறார். 11 ஆவது காணிச் சீர்திருத்தத்திற்கமைய காணி அதிகார சபையொன்றும் தோற்றுவிக்கப்படும். நான் முன்னாள் காணி அமைச்சர். கடந்த ஆறு மாதத்திற்கு முன் நான் காணி அமைச்சராக இருந்திருந்தால் அவ் அதிகார சபையை நான் தோற்றுவித்திருப்பேன்.
பாராளுமன்றத்திலே செனற் கமிட்டியொன்று தோற்றுவிக்கப்பட இருக்கிறது. அதை நிறுவுவதற்காக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறான சந்தர்ப்பத்திலே நாம் கதைக்க முடியும்.
பாராளுமன்றத்திலே செனற் கமிட்டியொன்று தோற்றுவிக்கப்பட இருக்கிறது. அதை நிறுவுவதற்காக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறான சந்தர்ப்பத்திலே நாம் கதைக்க முடியும்.
Re: தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
பாராளுமன்றத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர அனைத்து தமிழ்த் தலைவர்களும் எமது அரசாங்கத்திலே இருக்கிறார்கள். கபீர் ஹாஸீமைத்தவிர அனைத்து முஸ்லிம் தலைவர்களும் எமது அரசாங்கத்திலே தான் இருக்கிறார்கள். அன்று முதல் தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி கதைத்த அனைத்து இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் எமது அரசாங்கத்திலே தான் இருக்கிறார்கள். அன்று விஜயகுமாரதுங்கவோடு ஒன்றிணைந்து வட கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்று பிரசாரங்களை மேற்கொண்ட என்னைப் போன்ற ஒரு டசினுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் அரசாங்கத்திலே இருக்கிறார்கள்.
இந்த அரசிலே இருக்கக்கூடிய சிலர் வேறு விடயம் பற்றி சிந்திக்கிறார்கள். எதிர்காலத்திலே பாராளுமன்றத்திலே கதைத்து இந்தப் பிரதேசத்திற்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்தப் பிரதேச தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவைப்படாது. முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸும் தேவைப்படாது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே ஒரு பிரதேசத்திற்குச் செல்லும் போது நான் தமிழன் நான் சிங்களவன் நான் முஸ்லிம் என்று கூற வேண்டிய நிலை ஏற்படாது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே நாம் கூறலாம் நான் இலங்கையனென்று.
எதிர்காலத்திலே ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து இந்நாட்டிலே எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறான ஒரு நிலை தோன்றாத வகையிலே இப்பிரச்சினை முற்று முழுதாக தீர்த்து வைக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்திலே ஜனாதிபதி பெற்றுக்கொடுத்திருக்கின்ற சுதந்திரத்தின் மூலமாக ஆசியாவிலே ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு நிலையேற்படும். அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்நாட்டிலேயுள்ள தமிழர், சிங்களவர் முஸ்லிம்கள், பறங்கியர் அனைவரும் ஒன்றிணைந்து எம் நாடு என்ற தேசப்பற்றோடு செயலாற்றக்கூடிய நிலை ஏற்படும். நாம் சாதி மொழி மதம் என்பவற்றிலிருந்து விடுபட்டு நாம் இலங்கையர், நாம் மனிதர் என சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இந்த அரசிலே இருக்கக்கூடிய சிலர் வேறு விடயம் பற்றி சிந்திக்கிறார்கள். எதிர்காலத்திலே பாராளுமன்றத்திலே கதைத்து இந்தப் பிரதேசத்திற்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்தப் பிரதேச தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவைப்படாது. முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸும் தேவைப்படாது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே ஒரு பிரதேசத்திற்குச் செல்லும் போது நான் தமிழன் நான் சிங்களவன் நான் முஸ்லிம் என்று கூற வேண்டிய நிலை ஏற்படாது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே நாம் கூறலாம் நான் இலங்கையனென்று.
எதிர்காலத்திலே ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து இந்நாட்டிலே எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறான ஒரு நிலை தோன்றாத வகையிலே இப்பிரச்சினை முற்று முழுதாக தீர்த்து வைக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்திலே ஜனாதிபதி பெற்றுக்கொடுத்திருக்கின்ற சுதந்திரத்தின் மூலமாக ஆசியாவிலே ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு நிலையேற்படும். அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்நாட்டிலேயுள்ள தமிழர், சிங்களவர் முஸ்லிம்கள், பறங்கியர் அனைவரும் ஒன்றிணைந்து எம் நாடு என்ற தேசப்பற்றோடு செயலாற்றக்கூடிய நிலை ஏற்படும். நாம் சாதி மொழி மதம் என்பவற்றிலிருந்து விடுபட்டு நாம் இலங்கையர், நாம் மனிதர் என சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும்.
Re: தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
எமது கருணா அம்மான் சிந்தித்ததுபோன்று பல தலைவர்கள் இன்னும் சிந்திக்க முயலவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. கருணா அம்மான் பிரதமர் ஆனால் கூட நாங்கள் சந்தோசமடைவோம். அவர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப்பிரதேசத்தை நாங்கள் மீட்டிருக்க முடியாது.
அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற 1800 போராளிகளை விடுவிக்கும் நிகழ்வில் நான் பங்குகொண்டேன்.
அவர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை காண்பித்தார்கள். அவ்வாறானவர்களை நாங்கள் இழந்திருந்தால் அது எமக்கு எவ்வளவு பெரிய இழப்பு.
ஆகவே ஆயுதத்தின் மூலமாக அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உலகளாவிய ரீதியில் முடிவுக்குவருகின்றது. பேச்சுவார்த்தைகள் மூலமாக கலந்துரையாடல்கள் மூலமாகத்தான் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கிடைக்கின்றது.
ஆகவே ஆயுதப் போராட்ட ரீதியில் சென்ற லெனின் உருவச்சிலையைக் கூட உடைத்தெறிந்துள்ளனர். அகிம்சை வழியில் சென்ற மார்ட்டின் லூதர், மகாத்மா காந்தி போன்றவர்கள் சிலைகள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.
எனவே சமாதான நோக்கோடு செயற்படும் விடயங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டதாக அமையும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த இந்த நாட்டை சுபிட்சமான நாடாக மாற்ற ஒன்று சேர வேண்டும்.
அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற 1800 போராளிகளை விடுவிக்கும் நிகழ்வில் நான் பங்குகொண்டேன்.
அவர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை காண்பித்தார்கள். அவ்வாறானவர்களை நாங்கள் இழந்திருந்தால் அது எமக்கு எவ்வளவு பெரிய இழப்பு.
ஆகவே ஆயுதத்தின் மூலமாக அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உலகளாவிய ரீதியில் முடிவுக்குவருகின்றது. பேச்சுவார்த்தைகள் மூலமாக கலந்துரையாடல்கள் மூலமாகத்தான் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கிடைக்கின்றது.
ஆகவே ஆயுதப் போராட்ட ரீதியில் சென்ற லெனின் உருவச்சிலையைக் கூட உடைத்தெறிந்துள்ளனர். அகிம்சை வழியில் சென்ற மார்ட்டின் லூதர், மகாத்மா காந்தி போன்றவர்கள் சிலைகள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.
எனவே சமாதான நோக்கோடு செயற்படும் விடயங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டதாக அமையும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த இந்த நாட்டை சுபிட்சமான நாடாக மாற்ற ஒன்று சேர வேண்டும்.
Re: தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு நடை முறையில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» தாழ்வு மனப்பான்மையை அகற்ற என்ன வழி..?
» அகற்ற இயலா சுமைகள் - கவிதை
» எலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை...
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» தாழ்வு மனப்பான்மையை அகற்ற என்ன வழி..?
» அகற்ற இயலா சுமைகள் - கவிதை
» எலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|