சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

எதிர்காலமே படிப்பு தான்! Khan11

எதிர்காலமே படிப்பு தான்!

2 posters

Go down

எதிர்காலமே படிப்பு தான்! Empty எதிர்காலமே படிப்பு தான்!

Post by *சம்ஸ் Thu 10 Nov 2011 - 20:26

தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும். நாம் சொல்ல வருவது எப்படியும் படித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவர்களுக்கு. இவர்கள் தங்கள் எதிர்காலமே படிப்பு தான் என்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதே பலர் அதை ஒரளவு கிரகித்துக் கொள்வார்கள். வீட்டில் ஒரு முறை அதை ரிவைஸ் செய்யும்போது பாடம் எளிதாகி விடும். இப்படி வீட்டில் மாணவர்கள் படிக்க ஒதுக்கும் நேரத்தைப் பொறுத்துத்தான் அவர்கள் படிப்பில் எந்த அளவுக்கு மேம்பட முடியும் என்பதை தீர்மானிக்க முடியும்.

படிப்புக்குத் தக்கபடி தான் வாழ்க்கை என்றாலும் அதை வகுப்புக்குத் தக்கபடி, படிக்க வேண்டிய பாடங்களின் அளவுக்குத் தக்கபடி படிக்க முயற்சிப்பது தான் புத்திசாலித்தனம்.

நம் ஒரு நாள் பொழுதான 24 மணி நேரத்தில் 6 மணி நேரத்தை தூக்கம் எடுத்துக் கொள்கிறது. மீதி 18 மணி நேரத்தில் 8 மணி நேரத்தை பள்ளி எடுத்துக் கொள்கிறது. மீதமிருக்கும் 10 மணியில் 3 மணிநேரத்தை குளியல், சாப்பாடு, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற நிகழ்வுகள் எடுத்துக் கொள்கிறது.

இப்போது 7 மணி நேரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த 7 மணி நேரத்தை மாணவர்கள் நினைத்தால் பயனுள்ள படிப்புநேரமாக அதை எடுத்துக் கொள்ள முடியும்.

முதலில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் படிக்க வேண்டும். பிறகு அரை மணி நேரம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பிறகு 2 மணி நேரம் தொடர் படிப்பு. அடுத்த அரை மணி நேரம் ஏதேனும் விளையாட்டு. இப்படி இரண்டு இடைவெளிகளில் மொத்தம் 5 மணி நேரம் போய்விட, அடுத்த 2 மணி நேரத்தையும் முழு மூச்சாக படிப்பதற்கு பயன் படுத்திக்கொண்டால் கல்வி உங்கள் கைவசமாகி விடும்.

இப்படி தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி படிக்கும் நேரத்தை சரிவர அமைத்துக் கொண்டு விட்டீர்களாயின் படிப்பில் நாளடைவில் உங்களுக்கே ஆர்வம் தொற்றிக் கொள்ளும். எப்போது ஆர்வம் வந்து விடுகிறதோ அப்போதே நீங்கள் படிப்பில் முன்னேற்றம் காணும் மாணவன் என்ற பட்டியலுக்குள் வந்து விடுவீர்கள்.

இப்படி படிப்பவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவேண்டும். மனப்பாடம் செய்கிற படிப்பு சமயத்தில் காலைவாரி விட்டு விடும். புரிந்து கொண்டு படிக்கவேண்டுமானால் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதே எந்த விதமான சந்தேகம் ஏற்பட்டாலும் அதை நிவிர்த்தி செய்து கொண்டு படிக்கத்தொடங்க வேண்டும். இப்படிச் செய்யும் போது பாடம் எளிதாகி விடும். இந்த கிரகித்துப் படிக்கும் படிப்பு மனதில் சுலபமாகத் தங்கி விடும்.

படிப்பதோடு நிறுத்தி விடாமல் படித்ததை அப்போதே எழுதிப்பார்த்து விடுவது நல்லது. இப்படிச்செய்யும் போது தேர்வுக்கு முன்னரே எழுதிப் பழகுகிற அனுபவம் கிடைக்கும். இது தேர்வை எளிதாக்கிவிடும். ஒரு மணி நேரம் இடையில் கிடைத்தாலும் படிக்கவோ எழுதிப் பார்க்கவோ அதை பயன்படுத்தும்போது தான் உங்களுக்கு நீங்களே பட்டை தீட்டிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

கடவுள் நமக்கு அருளிய மிகப்பெரிய ஈவு, ஒரு நாள் பொழுதான 24 மணி நேரம். கடின உழைப்பாளிகள் இந்த 24 மணி நேரத்தில் 30 மணிக்குரிய வேலைகளை முடித்து விடுகிறார்கள் அந்த அளவுக்கு நேரம் உணர்ந்து சாதிக்கும் நோக்கில் வெளிப்படு கிறார்கள். இவர்கள் யார் என்று பார்த்தோமானால் படிக்கிற நாட்களில் இவர்கள் நேரம் வகுத்துக்கொண்டு படித்து முன்னேறியவர்களாகவே இருப்பார்கள்.

பரீட்சை நேரத்தில் விடிய விடிய படித்துக் கொள்கிறோம். அதற்குள் இப்போது என்னய்யா அவசரம் என்று உங்களில் சிலர் கேட்கக்கூடும். இந்த மொத்தப் படிப்பு தேவையில்லாமல் டென்ஷனைத் தானே ஏற்றி வைக்கிறது? ராத்திரி விழித்திருந்து படித்து விட்டு, காலையில் பரீட்சை ஹாலில் கண்ணைக் கட்டிக் கொண்டு வருவதையும் சமாளித்து எழுதும் பரீட்சைகளில் அப்படி என்ன பெரிதாக மதிப்பெண்களை எதிர்பார்த்து விட முடியும்? படிப்பில் சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பவர்கள் மட்டுமாவது இந்த தினம் 7 மணி நேர படிப்பு வளையத்திற்குள் தங்களை செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இந்த 7 மணி நேர கல்வி உழைப்பு நாளை உங்களை நல்லதொரு வேலையில் அமர்த்தும். அப்போது வேலையிலும் நீங்கள் உங்கள் உழைப்பால் நிமிர்ந்து நிற்பதோடு, திட்டமிட்ட படிப்புக்கான வெற்றி இது தான் என்பதையும் அப்போது நிரூபிப்பீர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எதிர்காலமே படிப்பு தான்! Empty Re: எதிர்காலமே படிப்பு தான்!

Post by முனாஸ் சுலைமான் Thu 10 Nov 2011 - 20:46

இப்போது 7 மணி நேரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த 7 மணி நேரத்தை மாணவர்கள் நினைத்தால் பயனுள்ள படிப்புநேரமாக அதை எடுத்துக் கொள்ள முடியும் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எதிர்காலமே படிப்பு தான்! Empty Re: எதிர்காலமே படிப்பு தான்!

Post by *சம்ஸ் Thu 10 Nov 2011 - 21:05

முனாஸ் சுலைமான் wrote:இப்போது 7 மணி நேரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த 7 மணி நேரத்தை மாணவர்கள் நினைத்தால் பயனுள்ள படிப்புநேரமாக அதை எடுத்துக் கொள்ள முடியும் :!@!:

அருமையான மறுமொழி சார் நன்றி உங்களின் கருதிற்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எதிர்காலமே படிப்பு தான்! Empty Re: எதிர்காலமே படிப்பு தான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum