சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Khan11

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

4 posters

Go down

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Empty மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 11:26

"நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்' என பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது.கடந்த 26ம் தேதி அதிகாலை, பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது, நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாக்., வீரர்கள் பலியாயினர்.இச்சம்பவம், ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா - பாக்., உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ மன்னிப்பு:நேட்டோ பொதுச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு எழுதிய கடிதத்தில், "எவ்வித உள்நோக்கமும் இன்றி எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்து விட்டது' என வருத்தம் தெரிவித்திருந்தார்.
ராணுவம் காட்டம்:ஆனால், நேட்டோவின் மன்னிப்பு மட்டும் போதாது என பாக்., ராணுவம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ் கூறியதாவது:
இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நடந்து விட்டன.
கடந்த மூன்றாண்டுகளில், நேட்டோ நடத்திய தாக்குதல்களில், 72 பாக்., வீரர்கள் பலியாகியுள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ நடத்திய தாக்குதல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாக்., அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அப்பாஸ் தெரிவித்தார்.

யார் முதலில் தாக்கியது?அதேநேரம், "வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கார்டியன்' போன்ற பத்திரிகைகளில், முதன் முதலில் பாக்., தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது தலிபான்களாக இருக்கலாம் எனக் கருதித் தான் நேட்டோ பதிலடி கொடுத்ததாகவும், தாக்குதல் குறித்து பாக்., ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆப்கன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏன் 2 மணி நேரத் தாக்குதல்?இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது அப்பாஸ் கூறியதாவது:"இது ஒரு சாக்கு போக்கு. அப்படி பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கு எத்தனை பேர் பலியாயினர், சேதம் என்ன என்பது பற்றி விவரங்களை அவர்களால் தரமுடியுமா? தாக்குதல் நடந்த நேரத்தில், சலாலா சாவடியில், வீரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேட்டோ தாக்குதல் துவங்கிய போதே, அதை நிறுத்தும்படி அவர்களுக்கு பாக்., ராணுவத் தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
அதையும் மீறித் தான் இரண்டு மணி நேரமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் எதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் ஜெட் ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன?இவ்வாறு அப்பாஸ் கேள்வி எழுப்பினார்.இதற்கிடையில், நேட்டோ தாக்குதல் குறித்து தனித்த விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மக்கள் கொந்தளிப்பு:நேட்டோ தாக்குதலை அடுத்து, பாக்.,ல் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இனி எக்காரணம் கொண்டும், நேட்டோவுக்கு எரிபொருள் வினியோகிக்கப் போவதில்லை என பாக்., எரிபொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.பாக்., முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சீனா அதிர்ச்சி:சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இச்சம்பவத்தால் சீனா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெரும் கவலை அடைந்துள்ளது. பாகிஸ்தானின் சுயேச்சையான, இறையாண்மை மிக்க எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். நடந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Empty Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 12:24

பாக்கிஸ்தான் இப்போது சுடுகாடாக மாறி வருகிறது யாரும் கண்டுகிறார்களே இல்லை அமெரிக்காவிற்கு சரியான பதிலடி பாக்கிஸ்தான் கொடுக்குமாயிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் செய் அல்லது செத்து மடி மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Empty Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by Atchaya Tue 29 Nov 2011 - 12:46

பாக்கிஸ்தான் இப்போது சுடுகாடாக மாறி வருகிறது யாரும் கண்டுகிறார்களே இல்லை அமெரிக்காவிற்கு சரியான பதிலடி பாக்கிஸ்தான் கொடுக்குமாயிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் செய் அல்லது செத்து மடி

நன்றாக சொன்னீங்க!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Empty Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by அப்புகுட்டி Tue 29 Nov 2011 - 14:01

Atchaya wrote:பாக்கிஸ்தான் இப்போது சுடுகாடாக மாறி வருகிறது யாரும் கண்டுகிறார்களே இல்லை அமெரிக்காவிற்கு சரியான பதிலடி பாக்கிஸ்தான் கொடுக்குமாயிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் செய் அல்லது செத்து மடி

நன்றாக சொன்னீங்க!
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Empty Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்பு, உள்ளத்தில் இருந்தால் மட்டும் போதாது.
» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
» 2020ல் நாடு வல்லரசாகும் கனவு மட்டும் போதாது
» அழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு ?
» மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum