Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
4 posters
Page 1 of 1
சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சமீப காலமாக சிறுவர் மீதான துஷ் பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் மற்றும் சிறுமியர்க ளென இருபாலாரும் வயது வந்தோரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத் தப்பட்டுள்ள ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன.
மாணவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஈடு பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகி றது. சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் இலங்கையில் நடைமுறையில் உள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட ஏராளமானோர் நீண்டகால சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இக் குற்றங்கள் எதிர்பார்த்தபடி குறைவடைந்ததாகத் தெரியவில்லை.
சிறுவர் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதாக சமூக நல அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. மாணவர் மீது ஆசிரியரே குற்றம் புரி ந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கையி லும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள சிறுவர் மீதான துஷ்பிரயோகங்களில் ஆசிரி யர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் தந்தையரே சம்பந்தப்பட்டுள்ள வக்கிரத்தனமான சில சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகத்தைப் பொறுத்தவரை கொடுமையின் உச்சமென்றே இதனைக் கூற வேண்டும்.
பராயமற்ற இள வயதினர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான எந்தவொரு துஷ்பிரயோகமும் மிகவும் பாரதூரமானதாகும். இள வயதினருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க உள ரீதியிலும் ஆழமான பாதிப்புகளையும் வடுக்களையும் இச்சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. எதுவுமறியாத சிறு வயதினர் தங் களையறியாமலேயே துர்நடத்தையில் நாட்டம் கொள்வதற்கும் இது போன்ற சம்ப வங்கள் காரணமாக அமைந்துவிடக்கூடும்.
சிறார்களின் வாழ்க்கையையே சிதைக்கும் பாரதூரமான செயலாகவே சிறுவர் பாலி யல் துஷ்பிரயோகம் கருதப்படுகிறது. எனவேதான் இக்குற்றங்களுக்கு எமது நாட் டின் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் புகுத்தப்பட்டுள்ளன.
மேற்படி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதுவித தயவு தாட்சண்யமும் காட்டப்பட லாகாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் எவரையும் சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு. ஆசிரியத் தொழில் புனிதமானதெனப் போற்றப்படுகிறது. எனினும் ஒருசில ஆசிரியர்களே மாணவர் மீதான துஷ்பிரயோகத்தில் சம்பந்தப்பட்டுள்ளனரென்பது ஆசிரிய சமூகத் துக்கே தலைகுனிவானதாகும்.
இது ஒரு புறமிருக்க இக்குற்றங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கும் காரணி களை இனங்காண்பது இங்கு அவசியம். பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் பாடசாலைகளில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்பும் போது பெற்றோர் விழிப்புடன் இருப்பது பிரதானம்.
இத்தகைய சூழ்நிலைகளில் குற்றங்கள் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள் ளன. மாலை நேர வகுப்புகளின் போது சிறுவர்கள் பலர் துஷ்பிரயோகத்துக்கு உள் ளான சம்பவங்கள் ஆங்காங்கே கிராமப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளதனால் இவ் விடயத்தில் பெற்றோர் விழிப்புடனிருப்பது அவசியமாகிறது.
மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்கள் மற்றும் உறவினர் போன்றோரால் சிறுவர், சிறு மியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றிருப்பதை கருத்தில் கொள்ளும் போது இந்த விழிப்புணர்வு மிகவும் அவ சியமாகிறது.
இதேசமயம் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதனால் அவர்களது சிறுபிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. தந் தைமாராலேயே இப்பிள்ளைகள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். குடும்பக் கட்ட மைப்பு சிதைவடைவதனாலேயே இது போன்ற அவலங்கள் ஏற்படுகின்றன.
சிறுவர் சிறுமியர் மீது இழைக்கப்படுகின்ற இத்தகைய கொடுமைகள் குறித்து கூடு தலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் தற்போது உணரப்பட் டுள்ளது. இவ்விடயத்தில் கூடுதல் விழிப்புணர்வு பெற வேண்டியோர் பெற்றோ ரேயாவர்.
அத்துடன் இவ்விடயத்தில் சமய, சமூகத் தலைவர்களது ஒத்துழைப்பும் அவசிய மாகும். இவர்கள் மக்களிடையே குறிப்பாக பெற்றோர் மத்தியில் விழிப்பை ஏற்படு த்த வேண்டும். குற்றம் புரிவோர் மீது தயவு தாட்சணியம் காட்டக்கூடாது. கடுமை யான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்குப் பொலிஸார் தமது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும்.
சில பொலிஸ் நிலையங்களில் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முறையிடச் செல்லும் பெண்கள் மீது கூட பொலிஸார் துஷ்பிரயோகம் மேற்கொள் ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகாமல் இல்லை. எனவே வேலிகளே பயிரை மேயாது எதிர்காலத்திலாவது காவலாக இருந்து கலாசார பண்பாட்டு ஒழுக்க விதிக ளுடன் வாழ வழிசமைப்போம்.
மாணவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஈடு பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகி றது. சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் இலங்கையில் நடைமுறையில் உள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட ஏராளமானோர் நீண்டகால சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இக் குற்றங்கள் எதிர்பார்த்தபடி குறைவடைந்ததாகத் தெரியவில்லை.
சிறுவர் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதாக சமூக நல அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. மாணவர் மீது ஆசிரியரே குற்றம் புரி ந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கையி லும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள சிறுவர் மீதான துஷ்பிரயோகங்களில் ஆசிரி யர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் தந்தையரே சம்பந்தப்பட்டுள்ள வக்கிரத்தனமான சில சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகத்தைப் பொறுத்தவரை கொடுமையின் உச்சமென்றே இதனைக் கூற வேண்டும்.
பராயமற்ற இள வயதினர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான எந்தவொரு துஷ்பிரயோகமும் மிகவும் பாரதூரமானதாகும். இள வயதினருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க உள ரீதியிலும் ஆழமான பாதிப்புகளையும் வடுக்களையும் இச்சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. எதுவுமறியாத சிறு வயதினர் தங் களையறியாமலேயே துர்நடத்தையில் நாட்டம் கொள்வதற்கும் இது போன்ற சம்ப வங்கள் காரணமாக அமைந்துவிடக்கூடும்.
சிறார்களின் வாழ்க்கையையே சிதைக்கும் பாரதூரமான செயலாகவே சிறுவர் பாலி யல் துஷ்பிரயோகம் கருதப்படுகிறது. எனவேதான் இக்குற்றங்களுக்கு எமது நாட் டின் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் புகுத்தப்பட்டுள்ளன.
மேற்படி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதுவித தயவு தாட்சண்யமும் காட்டப்பட லாகாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் எவரையும் சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு. ஆசிரியத் தொழில் புனிதமானதெனப் போற்றப்படுகிறது. எனினும் ஒருசில ஆசிரியர்களே மாணவர் மீதான துஷ்பிரயோகத்தில் சம்பந்தப்பட்டுள்ளனரென்பது ஆசிரிய சமூகத் துக்கே தலைகுனிவானதாகும்.
இது ஒரு புறமிருக்க இக்குற்றங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கும் காரணி களை இனங்காண்பது இங்கு அவசியம். பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் பாடசாலைகளில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்பும் போது பெற்றோர் விழிப்புடன் இருப்பது பிரதானம்.
இத்தகைய சூழ்நிலைகளில் குற்றங்கள் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள் ளன. மாலை நேர வகுப்புகளின் போது சிறுவர்கள் பலர் துஷ்பிரயோகத்துக்கு உள் ளான சம்பவங்கள் ஆங்காங்கே கிராமப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளதனால் இவ் விடயத்தில் பெற்றோர் விழிப்புடனிருப்பது அவசியமாகிறது.
மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்கள் மற்றும் உறவினர் போன்றோரால் சிறுவர், சிறு மியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றிருப்பதை கருத்தில் கொள்ளும் போது இந்த விழிப்புணர்வு மிகவும் அவ சியமாகிறது.
இதேசமயம் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதனால் அவர்களது சிறுபிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. தந் தைமாராலேயே இப்பிள்ளைகள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். குடும்பக் கட்ட மைப்பு சிதைவடைவதனாலேயே இது போன்ற அவலங்கள் ஏற்படுகின்றன.
சிறுவர் சிறுமியர் மீது இழைக்கப்படுகின்ற இத்தகைய கொடுமைகள் குறித்து கூடு தலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் தற்போது உணரப்பட் டுள்ளது. இவ்விடயத்தில் கூடுதல் விழிப்புணர்வு பெற வேண்டியோர் பெற்றோ ரேயாவர்.
அத்துடன் இவ்விடயத்தில் சமய, சமூகத் தலைவர்களது ஒத்துழைப்பும் அவசிய மாகும். இவர்கள் மக்களிடையே குறிப்பாக பெற்றோர் மத்தியில் விழிப்பை ஏற்படு த்த வேண்டும். குற்றம் புரிவோர் மீது தயவு தாட்சணியம் காட்டக்கூடாது. கடுமை யான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்குப் பொலிஸார் தமது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும்.
சில பொலிஸ் நிலையங்களில் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முறையிடச் செல்லும் பெண்கள் மீது கூட பொலிஸார் துஷ்பிரயோகம் மேற்கொள் ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகாமல் இல்லை. எனவே வேலிகளே பயிரை மேயாது எதிர்காலத்திலாவது காவலாக இருந்து கலாசார பண்பாட்டு ஒழுக்க விதிக ளுடன் வாழ வழிசமைப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
(*(: :% :%சில பொலிஸ் நிலையங்களில் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முறையிடச் செல்லும் பெண்கள் மீது கூட பொலிஸார் துஷ்பிரயோகம் மேற்கொள் ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகாமல் இல்லை. எனவே வேலிகளே பயிரை மேயாது எதிர்காலத்திலாவது காவலாக இருந்து கலாசார பண்பாட்டு ஒழுக்க விதிக ளுடன் வாழ வழிசமைப்போம்.
Re: சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
காலாச்சார சீரழைவால் ஏற்படும் இந்த வக்கிரங்களை கடினமான தண்டனைகள் மூலமே குறைக்க முடியும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
இதற்கு இஸ்லாமிய தண்டனைகளை செய்வது போல் பகிரங்கமாக மற்றவர்களின் பார்வைக்கு தெரிந்த வகையில் ஒரு இரு தண்டனை நிறைவேற்றினாலே போதுமானது அடங்கிடுவார்கள்
Similar topics
» சிறுவர் பிரச்சினைகளை ஆராய்தற்காக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள்!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» அமெரிக்காவில் எனக்கு மரண தண்டனையே? விக்கிலீக்ஸ் நிறுவனர்!
» பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் சலுகை 10% தான் -உச்ச நீதிமன்றம்
» அமெரிக்க பங்குச் சந்தை மோசடி : ராஜரத்னத்திற்கு அதிகபட்ச அபராதம்
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» அமெரிக்காவில் எனக்கு மரண தண்டனையே? விக்கிலீக்ஸ் நிறுவனர்!
» பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் சலுகை 10% தான் -உச்ச நீதிமன்றம்
» அமெரிக்க பங்குச் சந்தை மோசடி : ராஜரத்னத்திற்கு அதிகபட்ச அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|