Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
+4
சக்தி
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
சர்ஹூன்
8 posters
Page 1 of 1
வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
அமீரக பிரம்மச்சாரியின் புலம்பல்கள்..
வேலை வேலை என அப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகில், தனிக்கட்டைகளுக்கான ( அதாங்க பிரம்ம்ச்சாரி) மரியாதை கொஞ்ச குறைவுதான்..
அதிலும் அமீரகத்தில்.. வெவ்வேறு வகையான பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்தே ஆகவேண்டும். அதில் பிரதானம் – வீடு/அறை. தங்குவதற்கான அறைகள் தேடுவதில் உள்ள சிரமங்களை இங்குள்ள நண்பர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்லுவார்கள். அந்தளவிற்கு கடினமான காரியம் அது. அதிலும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றெட்டு அனுசரிப்புக்கள் இருக்கும்.
பழைய அறை,சமைக்க அனுமதி இல்லை. விருந்தினருக்கு தடா, டீவி சத்தம் / பாத் ரூம் டைமிங்க், பின்னிரவு வருகை தடா………. என பல பல.. பட்டியலிட்டால் அது டெலிபோன் டிரக்ரி போல போய்விடும்.அதனால் இத்தோடு விட்டுவிடலாம்.
அதிலும் தற்போது, அமீரகத்தில் பிரம்மச்சாரிகளின் குடியிருப்புக்கள் மீது அந்நாட்டு அரசாங்கத்தின் வெம்பார்வையும் விழுந்துள்ளது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி.. நிறைய நிறைய கட்டுப்பாடுகள் அந்நாட்டு மாநகர சபைகளினால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கொஞ்சமாவது பொருளாதார ரீதியில் தம்மை முன்னிறுத்த முனையும் எம்மை போன்ற ஆசியர்கள் சிக்கனம் என்பதை எப்போதும் முன்னிலைப்படுத்தியே வாழ்வதற்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர். அதன்படி, போக்குவரத்து செலவு, ரூம் வாடகை என்பவற்றினை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவிற்கு குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவு, ஒரே அறையினை பலர் சேர்ந்து பயன்படுத்துதல். இதனால் கொடுக்கின்ற வாடகை தனிநபர் செலவில் குறைய வரும். ஆனால் தற்போது, அதில் அரசு கை வைத்துள்ளது. ஒரு அறையில் நான்கிற்கு மேற்பட்டோர் தங்க முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமும் நம்மவர்களே,
1. சுத்தம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் பாகிஸ்தானிகள் / பங்காளிகள்
2. ஒரே அறையில் 10 பேருக்கு மேற்கூட தங்கும் மலையாளிகள்.
பலவிதமான காரணங்களினால், தீ விபத்துக்கள், மற்றும் இட நெருக்கடி மூலம் ஏற்படும் இன்னொரன்ன அசௌகரியங்களினால் அரசு இந்த முடிவினை எடுத்திருக்கின்றது.
ஆனால், இதன் பிரதான காரணமாக இருப்பதென்னவோ, செயற்கைத்தனமாக அதிகரிக்கப்பட்டுள்ள வாடகைதான் என சொல்லலாம். குளியலறையுடன் கூடிய ஒரு அறை 3,500.00 திர்ஹம்களில் இருந்து 5,000.00 திர்ஹம்கள் வரை நான் வசிக்கும் அபுதாபி நகரில் வடகைக்கு விடப்படுகின்றது. இவ்வறைகள் அனேகமாக ப்ளாட்களின் பகுதிகளாகத்தான் இருக்கும். நான்கு பேருக்கு மேல் தங்க அனுமதி இல்லை. அதாவது வாடகையின் பகிரும் விகிதம் ¼ ஆக மட்டுறுத்தப்பட்டுள்ளது. இது ஓரளவு நல்ல நிலையில் உள்ள ப்ளாட்டுக்கள்.
ஆனால் இந்தளவு வாடகை கொடுத்து இருக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? இதே விலையில் கிடைக்கும் வசதி குறைச்சலான இடங்களில் குடியேறுகின்றனர் – ஆறுக்கு மேற்பட்டவர்களாக. இதன் போதுதான் மேற்சொன்ன விடயங்கள் நடந்தேறுகின்றன.
இருப்பிடம் என்பதன் அத்தியவசிய தேவையினை கருத்திற்கொண்டு செயற்கைத் தனமாக விலை ஏற்றப்படுவதை கட்டுப்படுத்தும் மார்க்கங்கள் எதனையும் இன்னும் இங்கு காணக்கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக பிழைக்க வந்த சாதாரணர்களின் மீதே மேலும் பிடிகள் இறுக்கப்படுகின்றன.
இதனால், பல பிரம்மச்சாரிகளின் இயல்பு வாழ்க்கை இப்போது அமீரகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிக இட நெருக்கடி, சீரின்மை மற்றும், ஒரு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட 4 பேரினை விட அதிகமான குடியிருப்பாளர்கள் என இனங்காணப்பட்டால், அந்த கட்டிட உரிமையாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது. அது புறக்கணிக்கப்படுகின்ற போது, மாநகர சபை அக்குடியிருப்புக்கான மின், நீர் வசதி என்பவற்றை முன்னறிவிப்பு எதுவும் இன்றி நிறுத்தி விடுகின்றது.
இனி என்ன?? வெளியேற வேண்டியதுதான்.. மீண்டும் ஓட்டம். உடைமைகளை அள்ளிக் கொண்டு மீண்டும் தேடல் படலம். நல்ல ஒரு இடம் குறைந்த விலையில் கிடைக்காதா என்ற அவாவுடன் தேடித் திரிய வேண்டியதுதான்.
வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்து கொண்டே இருக்கின்றது. ))
வேலை வேலை என அப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகில், தனிக்கட்டைகளுக்கான ( அதாங்க பிரம்ம்ச்சாரி) மரியாதை கொஞ்ச குறைவுதான்..
அதிலும் அமீரகத்தில்.. வெவ்வேறு வகையான பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்தே ஆகவேண்டும். அதில் பிரதானம் – வீடு/அறை. தங்குவதற்கான அறைகள் தேடுவதில் உள்ள சிரமங்களை இங்குள்ள நண்பர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்லுவார்கள். அந்தளவிற்கு கடினமான காரியம் அது. அதிலும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றெட்டு அனுசரிப்புக்கள் இருக்கும்.
பழைய அறை,சமைக்க அனுமதி இல்லை. விருந்தினருக்கு தடா, டீவி சத்தம் / பாத் ரூம் டைமிங்க், பின்னிரவு வருகை தடா………. என பல பல.. பட்டியலிட்டால் அது டெலிபோன் டிரக்ரி போல போய்விடும்.அதனால் இத்தோடு விட்டுவிடலாம்.
அதிலும் தற்போது, அமீரகத்தில் பிரம்மச்சாரிகளின் குடியிருப்புக்கள் மீது அந்நாட்டு அரசாங்கத்தின் வெம்பார்வையும் விழுந்துள்ளது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி.. நிறைய நிறைய கட்டுப்பாடுகள் அந்நாட்டு மாநகர சபைகளினால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கொஞ்சமாவது பொருளாதார ரீதியில் தம்மை முன்னிறுத்த முனையும் எம்மை போன்ற ஆசியர்கள் சிக்கனம் என்பதை எப்போதும் முன்னிலைப்படுத்தியே வாழ்வதற்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர். அதன்படி, போக்குவரத்து செலவு, ரூம் வாடகை என்பவற்றினை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவிற்கு குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவு, ஒரே அறையினை பலர் சேர்ந்து பயன்படுத்துதல். இதனால் கொடுக்கின்ற வாடகை தனிநபர் செலவில் குறைய வரும். ஆனால் தற்போது, அதில் அரசு கை வைத்துள்ளது. ஒரு அறையில் நான்கிற்கு மேற்பட்டோர் தங்க முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமும் நம்மவர்களே,
1. சுத்தம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் பாகிஸ்தானிகள் / பங்காளிகள்
2. ஒரே அறையில் 10 பேருக்கு மேற்கூட தங்கும் மலையாளிகள்.
பலவிதமான காரணங்களினால், தீ விபத்துக்கள், மற்றும் இட நெருக்கடி மூலம் ஏற்படும் இன்னொரன்ன அசௌகரியங்களினால் அரசு இந்த முடிவினை எடுத்திருக்கின்றது.
ஆனால், இதன் பிரதான காரணமாக இருப்பதென்னவோ, செயற்கைத்தனமாக அதிகரிக்கப்பட்டுள்ள வாடகைதான் என சொல்லலாம். குளியலறையுடன் கூடிய ஒரு அறை 3,500.00 திர்ஹம்களில் இருந்து 5,000.00 திர்ஹம்கள் வரை நான் வசிக்கும் அபுதாபி நகரில் வடகைக்கு விடப்படுகின்றது. இவ்வறைகள் அனேகமாக ப்ளாட்களின் பகுதிகளாகத்தான் இருக்கும். நான்கு பேருக்கு மேல் தங்க அனுமதி இல்லை. அதாவது வாடகையின் பகிரும் விகிதம் ¼ ஆக மட்டுறுத்தப்பட்டுள்ளது. இது ஓரளவு நல்ல நிலையில் உள்ள ப்ளாட்டுக்கள்.
ஆனால் இந்தளவு வாடகை கொடுத்து இருக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? இதே விலையில் கிடைக்கும் வசதி குறைச்சலான இடங்களில் குடியேறுகின்றனர் – ஆறுக்கு மேற்பட்டவர்களாக. இதன் போதுதான் மேற்சொன்ன விடயங்கள் நடந்தேறுகின்றன.
இருப்பிடம் என்பதன் அத்தியவசிய தேவையினை கருத்திற்கொண்டு செயற்கைத் தனமாக விலை ஏற்றப்படுவதை கட்டுப்படுத்தும் மார்க்கங்கள் எதனையும் இன்னும் இங்கு காணக்கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக பிழைக்க வந்த சாதாரணர்களின் மீதே மேலும் பிடிகள் இறுக்கப்படுகின்றன.
இதனால், பல பிரம்மச்சாரிகளின் இயல்பு வாழ்க்கை இப்போது அமீரகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிக இட நெருக்கடி, சீரின்மை மற்றும், ஒரு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட 4 பேரினை விட அதிகமான குடியிருப்பாளர்கள் என இனங்காணப்பட்டால், அந்த கட்டிட உரிமையாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது. அது புறக்கணிக்கப்படுகின்ற போது, மாநகர சபை அக்குடியிருப்புக்கான மின், நீர் வசதி என்பவற்றை முன்னறிவிப்பு எதுவும் இன்றி நிறுத்தி விடுகின்றது.
இனி என்ன?? வெளியேற வேண்டியதுதான்.. மீண்டும் ஓட்டம். உடைமைகளை அள்ளிக் கொண்டு மீண்டும் தேடல் படலம். நல்ல ஒரு இடம் குறைந்த விலையில் கிடைக்காதா என்ற அவாவுடன் தேடித் திரிய வேண்டியதுதான்.
வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்து கொண்டே இருக்கின்றது. ))
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
உண்மைதான் தோழா இன்று மட்டுமல்ல என்றும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இப்போதுதான் அரசு இதன்மீது கவனம் செலுத்துகிறது
கத்தாரிலும் இந்த நிலை உருவாகியிருக்கிறது ஒரு அறையில் நான்குபேருக்கு மேல் இடக் கூடாது எனும் கட்டுப்பாடு வந்திருக்கிறது பழைக கட்டிடங்கள் புதிதாக மாற்றுவதற்கு அரசு நடவெடிக்கை எடுத்து வருகின்றது
இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அனுபவிக்கின்ற இன்னல்களை வெளிப்படுத்த துணிந்தோமென்றால் எமது பணத்தில் நன்மையடைபவர்கள் நிறுத்திவிட்டு எம்மை அழைக்கத்துணிவார்கள் அத்தனை கொடுமைகள் இவ்வாள்வில் நிறைந்திருக்கிறது வெளிநாட்டு மோகம் இன்றய இளைஞர்களையும் பாழாய் படுத்துகின்றது அதற்கு எமது நாட்டின் சூழலும் முக்கிய காரணம் படித்துவிட்டு அதிகமானவர்கள் வேலைசெய்ய வசதியற்று வழியும் தெரியாது வெளிநாட்டு முகவர் நிலையங்களில் காவலிருக்கிறார்கள் இவர்களை வளப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்
எமது மூளையில் உருவான கட்டிடங்களும் லாபங்களும் அரபிகளின் உல்லாச வாழ்க்கையாகிக்கிடக்கிறது நாம் இங்கு செய்கின்ற வேலைகளை நாட்டில் செய்தோமானால் போதுமானது பல நூறுபேரை வாழவைக்கும் தொடரும் அனுபவங்களை பகிர்வதன் மூலமாகவாவது கண்திறக்குமா என்று பார்ப்போம்
கத்தாரிலும் இந்த நிலை உருவாகியிருக்கிறது ஒரு அறையில் நான்குபேருக்கு மேல் இடக் கூடாது எனும் கட்டுப்பாடு வந்திருக்கிறது பழைக கட்டிடங்கள் புதிதாக மாற்றுவதற்கு அரசு நடவெடிக்கை எடுத்து வருகின்றது
இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அனுபவிக்கின்ற இன்னல்களை வெளிப்படுத்த துணிந்தோமென்றால் எமது பணத்தில் நன்மையடைபவர்கள் நிறுத்திவிட்டு எம்மை அழைக்கத்துணிவார்கள் அத்தனை கொடுமைகள் இவ்வாள்வில் நிறைந்திருக்கிறது வெளிநாட்டு மோகம் இன்றய இளைஞர்களையும் பாழாய் படுத்துகின்றது அதற்கு எமது நாட்டின் சூழலும் முக்கிய காரணம் படித்துவிட்டு அதிகமானவர்கள் வேலைசெய்ய வசதியற்று வழியும் தெரியாது வெளிநாட்டு முகவர் நிலையங்களில் காவலிருக்கிறார்கள் இவர்களை வளப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்
எமது மூளையில் உருவான கட்டிடங்களும் லாபங்களும் அரபிகளின் உல்லாச வாழ்க்கையாகிக்கிடக்கிறது நாம் இங்கு செய்கின்ற வேலைகளை நாட்டில் செய்தோமானால் போதுமானது பல நூறுபேரை வாழவைக்கும் தொடரும் அனுபவங்களை பகிர்வதன் மூலமாகவாவது கண்திறக்குமா என்று பார்ப்போம்
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் தோழா இன்று மட்டுமல்ல என்றும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இப்போதுதான் அரசு இதன்மீது கவனம் செலுத்துகிறது
கத்தாரிலும் இந்த நிலை உருவாகியிருக்கிறது ஒரு அறையில் நான்குபேருக்கு மேல் இடக் கூடாது எனும் கட்டுப்பாடு வந்திருக்கிறது பழைக கட்டிடங்கள் புதிதாக மாற்றுவதற்கு அரசு நடவெடிக்கை எடுத்து வருகின்றது
இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அனுபவிக்கின்ற இன்னல்களை வெளிப்படுத்த துணிந்தோமென்றால் எமது பணத்தில் நன்மையடைபவர்கள் நிறுத்திவிட்டு எம்மை அழைக்கத்துணிவார்கள் அத்தனை கொடுமைகள் இவ்வாள்வில் நிறைந்திருக்கிறது வெளிநாட்டு மோகம் இன்றய இளைஞர்களையும் பாழாய் படுத்துகின்றது அதற்கு எமது நாட்டின் சூழலும் முக்கிய காரணம் படித்துவிட்டு அதிகமானவர்கள் வேலைசெய்ய வசதியற்று வழியும் தெரியாது வெளிநாட்டு முகவர் நிலையங்களில் காவலிருக்கிறார்கள் இவர்களை வளப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்
எமது மூளையில் உருவான கட்டிடங்களும் லாபங்களும் அரபிகளின் உல்லாச வாழ்க்கையாகிக்கிடக்கிறது நாம் இங்கு செய்கின்ற வேலைகளை நாட்டில் செய்தோமானால் போதுமானது பல நூறுபேரை வாழவைக்கும் தொடரும் அனுபவங்களை பகிர்வதன் மூலமாகவாவது கண்திறக்குமா என்று பார்ப்போம்
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
##* :”@:
சக்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
அப்ப வெளினாட்டுக் கனவக் கை விட்டு விட வேண்டியதுதானோ,,,
பயக்கரமா இருக்கே ,,,
பயக்கரமா இருக்கே ,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
இதென்ன .. இதை விட இருக்கு :!.:
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
நேற்றே இதைப் படித்து விட்டேன் சுகயீனம் காரணமாக பதிவிட முடியாமல் போனது சர்ஹுன் மிகவும் அருமையாகச்சொன்னீர்கள் அதற்கு முதல் நன்றி.
முடிவு வராதா முடிவு வராதா என்று வருடங்கள் கடந்து விட்டது இன்னும் எங்களுக்கு முடிவு வர வில்லை மீண்டும் நாடோடு சென்று நிலைத்திருக்க மீண்டும் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாது இந்தப் பக்கம். அந்த அளவுக்கு வெறுத்துப்போய் விட்டது வெளி நாட்டு வாழ்க்கை மனதிற்குள் போட்டு குளப்பிக்கொண்டு இன்னும் தீரா வலியுடன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்னைப்போல் பல உள்ளங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் இதையேதான்.
சிறிய முன்னேற்றத்துடன் நாடு சென்றால் அங்கு செட்டில் ஆகிடலாம் முன்னேற்றம் இன்னும் கிடைக்க வில்லை அதே நிலைதான் உள்ளது எல்லார் வாயிலும் புலம்பும் ஒரு வார்த்தை இதுதான்.
காலம் நேரம் சேர்ந்து நமது வாழ்க்கை ஒளி வீசும் அது வரை பொறுமையாக இருப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
முடிவு வராதா முடிவு வராதா என்று வருடங்கள் கடந்து விட்டது இன்னும் எங்களுக்கு முடிவு வர வில்லை மீண்டும் நாடோடு சென்று நிலைத்திருக்க மீண்டும் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாது இந்தப் பக்கம். அந்த அளவுக்கு வெறுத்துப்போய் விட்டது வெளி நாட்டு வாழ்க்கை மனதிற்குள் போட்டு குளப்பிக்கொண்டு இன்னும் தீரா வலியுடன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்னைப்போல் பல உள்ளங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் இதையேதான்.
சிறிய முன்னேற்றத்துடன் நாடு சென்றால் அங்கு செட்டில் ஆகிடலாம் முன்னேற்றம் இன்னும் கிடைக்க வில்லை அதே நிலைதான் உள்ளது எல்லார் வாயிலும் புலம்பும் ஒரு வார்த்தை இதுதான்.
காலம் நேரம் சேர்ந்து நமது வாழ்க்கை ஒளி வீசும் அது வரை பொறுமையாக இருப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
அந்தக்காலம் வருமென்று காத்திருப்பது தவறு என்பது எனது கருத்து அந்த காலத்தினை உருவாக்கினால் மாத்திரம்தான் வெற்றிபெற முடியும் நாட்டிலிருப்பவர்களும் சரி வெளிநாட்டில் இருப்பவர்களும் சரி எதிர்மறையாக சிந்திப்பதால் முன்னேற வழி பார்ப்பதில்லை இந்த அனுபவங்களை நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு பாடமாகவும் எமக்கு வழியாகவும் மாறும்
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
நாம் நாடோடிகள் என்பதில் சந்தேகமில்லை..
வெளிநாட்டு வாழ்க்கை நமக்கு கசந்தாலும், விடமுடியாமல் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. எம்மை நம்பி இருக்கும் உறவுகளுக்காக. ...
வெளிநாட்டு வாழ்க்கை நமக்கு கசந்தாலும், விடமுடியாமல் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. எம்மை நம்பி இருக்கும் உறவுகளுக்காக. ...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
kiwi boy wrote:நாம் நாடோடிகள் என்பதில் சந்தேகமில்லை..
வெளிநாட்டு வாழ்க்கை நமக்கு கசந்தாலும், விடமுடியாமல் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. எம்மை நம்பி இருக்கும் உறவுகளுக்காக. ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
@. @. @. @.நண்பன் wrote:kiwi boy wrote:நாம் நாடோடிகள் என்பதில் சந்தேகமில்லை..
வெளிநாட்டு வாழ்க்கை நமக்கு கசந்தாலும், விடமுடியாமல் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. எம்மை நம்பி இருக்கும் உறவுகளுக்காக. ...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» வெளிநாட்டு வாழ்க்கை (Gulf Life)
» படித்ததில் பிடித்தது!வெளிநாட்டு வாழ்க்கை !
» வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை.
» நானொரு நாடோடி....
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» படித்ததில் பிடித்தது!வெளிநாட்டு வாழ்க்கை !
» வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை.
» நானொரு நாடோடி....
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|