சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது  Khan11

முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது

Go down

முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது  Empty முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது

Post by *சம்ஸ் Wed 4 Jan 2012 - 6:15

நீதிபதி ஆனந்த் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கை
முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது என்று நீதிபதி ஆனந்த் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.

தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது முல்லைப்பெரியாறு அணை.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணை வலுவிழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு மறுப்பு

கேரள அரசின் இந்த பொய் பிரசாரத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. ‘முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. கேரளா சொல்வது போல நில நடுக்கத்தால் பாதிக்கப்படாது. புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே அணையின் நீர் மட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும்’ என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக இரு மாநிலங்களும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஐவர் குழு

இதற்கிடையே இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் 5 பேர் குழு ஒன்றை நியமித்தது.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையிலான இந்த குழுவில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ. ஆர் இலட்சுமணன் இடம்பெற்று உள்ளார். இந்த குழு மார்ச் மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டது.

நிபுணர் குழு அறிக்கை

அணையை பார்வையிட்டு கேரளாவின் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை தரும்படி 2 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை ஐவர் குழு நியமித்தது. அந்த இரு நிபுணர்களும் அணையை பார்வையிட்டு ஐவர் குழுவிடம் இடைக்கால அறிக்கையை அளித்து உள்ளனர்.

நிபுணர் குழுவின் அறிக்கையில் கேரளாவின் புகார் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இலேசான நிலநடுக்கம் ஏற்பட கூடிய பகுதியில் முல்லைப்பெரியாறு அணைப் பகுதி இருப்பதால் எதிர்காலத்திலும் அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது.

கேரளா தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் வாதாடுகையில் கூறியதாவது : ‘அணையில் விரிசலோ, கீறலோ ஏற்படவில்லை. ஆனால் ரூர்க்கி ஐ. ஐ. டீ. நிபுணர்கள் அளித்த அறிக்கையை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இடுக்கி மாவட்டம் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதி. இடுக்கி மாவட்டத்தில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. ஆகவே நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணை உடையும் அச்சம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு புதிய அணை கட்டுவதுதான். அதுவரை அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி குருகிருஷ்ணா, ‘புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி ஆனந்த் குறுக்கிட்டு ‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டி பராமரிப்புக்கு கூட்டுக் குழுவை நியமிக்கலாமா? புதிய அணையில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்க நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளுமா’ என்று கேட்டார்.

இந்த யோசனையை ஏற்க தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. அதில் போதிய தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் நன்றாகவே உள்ளது. ஆகவே புதிய அணை கட்ட வேண்டும் என்று பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. புதிய அணை கட்டப்பட்டால், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நீர் பங்கீடு உள்ளிட்ட பல அம்சங்களில் பாதிப்பு ஏற்படும். அணைக்கு 100 ஆண்டு ஆகிவிட்டது. அது உடைந்து விடும் என்று கேரள அரசு மக்களிடம் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி அணையின் , நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட வேண்டும்’ என்று தமிழக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் குழு கிருஷ்ணா வலியுறுத்தி வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு புதிய அணை கட்டப்பட்டால் தண்ணீர் பங்கீடு பாதுகாப்பு ஏற்பாடு, அணை நிர்வாகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இரு மாநிலங்களும் தங்களது பதில்களை வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
» சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன இந்திய அணு உலைகளில் விபத்து ஏற்படாது
» கபினி அணை நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு
» உடற்பயிற்சி, யோகா செய்வோருக்கு சளி தொந்தரவுகள் ஏற்படாது
» இயல்புநிலை பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum