Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?
2 posters
Page 1 of 1
நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?
ஆசைப்படாதவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள்! அதிலும் கார் வாங்க வேண்டும்; மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரிலாக்ஸாக வெளியே சென்று வர வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்! குறிப்பாக இரண்டு சக்கர வாகனத்தில் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து திரிந்து கொண்டிருப்பவர்களுக்கு கார் வாங்குவது லட்சியக் கனவாகவே இருக்கிறது. கார் வாங்க ஆசைப்படுவது நியாயமான ஆசைதான் என்றாலும், பொருளாதார ரீதியாக அதற்கான நிதி வலுவுடன் இருக்கிறோமா என்பதை ஒருமுறைக்கு இருமுறை நம்மை நாமே செக் செய்து பார்த்துக் கொண்டு வாங்குவதுதான் நீடித்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். இல்லாவிட்டால், காரை வாங்கியும் கன்னத்தில் கைவைக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும்!
கார் வைத்துக் கொள்ள நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? கடன் வாங்கி கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகுறித்து நிதி ஆலோசகர் சுதா சூரியகுமாரிடம் கேட்டோம்...
''பெரிய செல்வந்தர்களாக இல்லாமல் மிடில் கிளாஸ் லெவலில் இருப்பவர்களுக்கு தான் இந்த ஆலோசனைகள் தேவை... அப்படிப்பட்டவர்கள் கார் வாங்க முடிவு செய்தால், முதலில் சுயமாக கார் ஓட்டக் கற்றுக் கொள்வது அவசியத்திலும் அவசியம். அப்படி இல்லாமல் டிரைவர் போட்டு ஓட்ட வேண்டும் என்றால் அதற்கே ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படும். இன்றைய நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏழாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒரு நல்ல டிரைவர் கிடைக்க வாய்ப்பில்லை.
அடுத்த முக்கிய செலவு, பெட்ரோல். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட மாதத்திற்கு 6,000 ரூபாய் வரை செலவாகும். கார் பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் உங்கள் வீட்டிலேயே காரை நிறுத்திக் கொண்டுவிடலாம். ஆனால், பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் அதற்கான இடத்தை வாடகைக்குத்தான் பிடிக்க வேண்டும். இப்போதெல்லாம் அதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். இது ஏரியாவுக்கு ஏரியா மாறவும் செய்கிறது. இதுபோக, பராமரிப்பு வகையில் சில ஆயிரங்கள் ஆக வாய்ப்புண்டு. இந்த செலவுகளுக்கு ஏற்ற வருமானம் இருக்கு; தவிர, காருக்கான தேவையும் இருக்கிறது என்பவர்கள் தைரியமாக கார் வாங்கலாம். ஆனால், அந்தளவுக்கு வருமானம் கிடைக்காது என்கிறவர்கள் தயவு செய்து கார் வாங்கும் முடிவை கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்.
முக்கியமாக வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது முக்கிய கடன் இருப்பவர்கள் கார் வாங்குவது குறித்து யோசித்துக் கொள்வதே நல்லது.
ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியையும் முதலையும் கஷ்டப்பட்டு கட்டிக் கொண்டிருக்கும்போது, காருக்கான கடனை சரிவரக் கட்ட முடியாமல் போய் பிரச்னையில் சிக்கிவிட வாய்ப்பிருக்கிறது' என்றவர், லோன் வாங்கி கார் வாங்க நினைக்கிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.
''கார் வாங்குபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், நாம் வாங்கும் காருக்கு ரீசேல் வேல்யூ இருக்கிறதா என்பதுதான். கடன் வாங்கி கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஏழு வருடம் வரை இ.எம்.ஐ. கட்டும் வசதியுடன் வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி, கார் கடனுக்கான வட்டி விகிதம் 12-14%. பொதுவாக மூன்றாண்டு கால அவகாசத் திற்குள் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இ.எம்.ஐ. சுமார் 9,700 ரூபாய் (வட்டி விகிதம் 12%) கட்ட வேண்டியிருக்கும். ஐந்தாண்டு கால அவகாசத்திற்குள் மூன்று லட்சம் கடன் என்கிற பட்சத்தில் மாத இ.எம்.ஐ. 6,600 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். அதே போல் ஏழு ஆண்டுகால அவகாசத்தில் மூன்று லட்சம் என்கிறபோது 5,400 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக கார் கடனை பொறுத்தவரை மூன்று வருடத்துக்குள் முடித்து விடுவதுதான் நல்லது. மாத இ.எம்.ஐ. குறைவாக இருக்குமே என்ற எண்ணத்தில் அதிக கால அவகாசத்தில் காரை வாங்கினால் கடன் முடியும் நேரத்தில் காரின் மதிப்பு பாதாளத்துக்குப் போயிருக்கும்! ரீசேல் வேல்யூ மிகவும் குறைவாகிவிடும்.
அடுத்த முக்கிய விஷயம், காருக்கான தேவை அதிகம் இருப்பவர்கள் டீசல் காரையும், காருக்கான தேவை குறைவாக இருப்பவர்கள் பெட்ரோல் காரையும் வாங்கிக் கொள்வது சிறந்தது. இதனால் செலவுகளும் குறைய வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
இனிமேற்கொண்டு கார் வாங்க நினைக்கிறவர்கள் மேற்சொன்ன விஷயங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப் பார்த்து முடிவு செய்வது நல்லது.
கார் வைத்துக் கொள்ள நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? கடன் வாங்கி கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகுறித்து நிதி ஆலோசகர் சுதா சூரியகுமாரிடம் கேட்டோம்...
''பெரிய செல்வந்தர்களாக இல்லாமல் மிடில் கிளாஸ் லெவலில் இருப்பவர்களுக்கு தான் இந்த ஆலோசனைகள் தேவை... அப்படிப்பட்டவர்கள் கார் வாங்க முடிவு செய்தால், முதலில் சுயமாக கார் ஓட்டக் கற்றுக் கொள்வது அவசியத்திலும் அவசியம். அப்படி இல்லாமல் டிரைவர் போட்டு ஓட்ட வேண்டும் என்றால் அதற்கே ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படும். இன்றைய நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏழாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒரு நல்ல டிரைவர் கிடைக்க வாய்ப்பில்லை.
அடுத்த முக்கிய செலவு, பெட்ரோல். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட மாதத்திற்கு 6,000 ரூபாய் வரை செலவாகும். கார் பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் உங்கள் வீட்டிலேயே காரை நிறுத்திக் கொண்டுவிடலாம். ஆனால், பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் அதற்கான இடத்தை வாடகைக்குத்தான் பிடிக்க வேண்டும். இப்போதெல்லாம் அதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். இது ஏரியாவுக்கு ஏரியா மாறவும் செய்கிறது. இதுபோக, பராமரிப்பு வகையில் சில ஆயிரங்கள் ஆக வாய்ப்புண்டு. இந்த செலவுகளுக்கு ஏற்ற வருமானம் இருக்கு; தவிர, காருக்கான தேவையும் இருக்கிறது என்பவர்கள் தைரியமாக கார் வாங்கலாம். ஆனால், அந்தளவுக்கு வருமானம் கிடைக்காது என்கிறவர்கள் தயவு செய்து கார் வாங்கும் முடிவை கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்.
முக்கியமாக வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது முக்கிய கடன் இருப்பவர்கள் கார் வாங்குவது குறித்து யோசித்துக் கொள்வதே நல்லது.
ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியையும் முதலையும் கஷ்டப்பட்டு கட்டிக் கொண்டிருக்கும்போது, காருக்கான கடனை சரிவரக் கட்ட முடியாமல் போய் பிரச்னையில் சிக்கிவிட வாய்ப்பிருக்கிறது' என்றவர், லோன் வாங்கி கார் வாங்க நினைக்கிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.
''கார் வாங்குபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், நாம் வாங்கும் காருக்கு ரீசேல் வேல்யூ இருக்கிறதா என்பதுதான். கடன் வாங்கி கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஏழு வருடம் வரை இ.எம்.ஐ. கட்டும் வசதியுடன் வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி, கார் கடனுக்கான வட்டி விகிதம் 12-14%. பொதுவாக மூன்றாண்டு கால அவகாசத் திற்குள் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இ.எம்.ஐ. சுமார் 9,700 ரூபாய் (வட்டி விகிதம் 12%) கட்ட வேண்டியிருக்கும். ஐந்தாண்டு கால அவகாசத்திற்குள் மூன்று லட்சம் கடன் என்கிற பட்சத்தில் மாத இ.எம்.ஐ. 6,600 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். அதே போல் ஏழு ஆண்டுகால அவகாசத்தில் மூன்று லட்சம் என்கிறபோது 5,400 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக கார் கடனை பொறுத்தவரை மூன்று வருடத்துக்குள் முடித்து விடுவதுதான் நல்லது. மாத இ.எம்.ஐ. குறைவாக இருக்குமே என்ற எண்ணத்தில் அதிக கால அவகாசத்தில் காரை வாங்கினால் கடன் முடியும் நேரத்தில் காரின் மதிப்பு பாதாளத்துக்குப் போயிருக்கும்! ரீசேல் வேல்யூ மிகவும் குறைவாகிவிடும்.
அடுத்த முக்கிய விஷயம், காருக்கான தேவை அதிகம் இருப்பவர்கள் டீசல் காரையும், காருக்கான தேவை குறைவாக இருப்பவர்கள் பெட்ரோல் காரையும் வாங்கிக் கொள்வது சிறந்தது. இதனால் செலவுகளும் குறைய வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
இனிமேற்கொண்டு கார் வாங்க நினைக்கிறவர்கள் மேற்சொன்ன விஷயங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப் பார்த்து முடிவு செய்வது நல்லது.
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?
என்னைப்போன்றோருக்கு அவசியமான தகவல் நன்றி பார்தீபன் சிறந்த தகவலுக்கு :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|