சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம் Khan11

நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம்

Go down

நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம் Empty நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம்

Post by *சம்ஸ் Tue 26 Feb 2013 - 16:48

நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம் 14809bd1-349a-4a39-814d-783013f5eaa0_S_secvpf
இப்போதுள்ள பெரும்பாலான இளைஞர்கள் புகைப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் தவறான உணவு முறையால் மனஅழுத்தம், உடல் உஷ்ணம், வாயுத்தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நரம்புத்தளர்ச்சி பாலியல் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள். கிராமவாசி, உழைப்பாளிகள் ஆகியோர் நிறைய குழந்தைகள் பெறுகிறார்கள்.

ஆனால் நகரவாசிகள் பலர் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறார் மகாலிங்கபுரம் ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஸ்வரராவ். புகைப்பழக்கமானது ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பாலியல் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. மதுப்பழக்கத்தால் பாலுணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் இளைஞர்களிடம் உள்ளது அது தவறு. மதுவால் வெறிதான் ஏற்படும்.

மதுப்பழக்கத்தால் மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்களுக்கு பாலியல் குறைபாடு உண்டாகும். உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் உண்டு. உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாகும்.

தவறான உணவு பழக்கத்தால் ஏற்படும் வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும். உடல் சூடு அதிகரிக்க காரணம் வாய்வுத் தொல்லை, வாய்வுத்தொல்லை அதிகரிக்க காரணம் அஜீரணம்.

எனவே ஜீரணக்கோளாறுகளை சரி செய்து கொள்வது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பருவகால மாற்றங்களால் ஏற்படும் உஷ்ணம் வேறு வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு, சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் குறைபாடுகள் ஏற்படும். உடல் உஷ்ணம் அதிகரித்தால், சில விநாடிகளே உடலுறவில் ஈடுபடமுடியும்.

இதைத்தான் ஆண்மைக்குறைவு என்கிறோம். விந்துவின் `பலமும்' குறையும், விந்துவின் உயரணுக்களின் எண்ணிக்கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்து விடும். இதனால் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும். பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சூழற்சியை பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும்.

தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும். இந்த உடல் உஷ்ண பாதிப்புகள் குறித்து ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது . நோயாளிகளில் பலருக்கு உடல் உஷ்ணம் குறைக்கும் மருந்துகளும், நோயாளிகளின் மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டன, இதனால் பாலியல் குறைபாடுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது.

நரம்பு தளர்ச்சி நோயாளிகளிடம் வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை நாம் பார்க்க முடியும். படபடப்புடன் காணப்படுவார்கள். உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளிவாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாகத் தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.

பாலுணர்வு பற்றி இளம் வயதில் தெரிந்து கொள்ளும் தவறான போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால்தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும் பாலியல் குறைபாடக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம் Empty Re: நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம்

Post by *சம்ஸ் Tue 26 Feb 2013 - 16:48

சிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வீடுகளில் ஏற்படும் சண்டைகள், பொற்றோர்கள், உடன் பிறந்தோர் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ்மனதை பாதித்துவிடுவதும் நரம்புத்தளர்ச்சிக்கான காரணமாகும். கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னை அறியாமல் குழப்பமடைவதாலும், பல்வேறு பரபரப்புகளும்- படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும், அசதியுடனும் காணப்படுவர்.

சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும். திருமணமான புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் அவர்களுக்கும் இத்தகைய குறைபாடுகள் தோன்றுகின்றன.

மேலும் உளவியல் பாதிப்பும் நரம்பு தளர்ச்சிக்கு காரணம். ஒரு சிலருக்கு மட்டுமே உண்மையான பாதிப்புகள் இருக்கின்றன. இவர்கள் எந்த மருந்து சாப்பிட்டாலும் பயம் காரணமாக குணமாவதில்லை. கவுன்சிலிங் மூலம்தான் இவர்களை குணப்படுத்த முடியும். நரம்பு தளர்ச்சிக்கு தவறான உணவு பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுவது, இரவில் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளுதல் போன்றவை காரணம். மனதில் அமைதி இன்மை, விஷக்காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடி நோய்களால் பாதிக்கப்பட்டு பக்க விளைவுகள் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி ஏற்படலாம்.

இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இது ஒரு குறைபாடுதான். நோய் அல்ல, ஆகவே இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே இருளாகிவிட்டது என்ற தவறாகப் புலம்பக்கூடாது.

குடிப்பழக்கம் இருந்தால் அதனை கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீரில் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை எனறு இருக்காமல் குடும்பத்தாருடன் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம் இந்த குறையை போக்க முடியும். தவறான சிகிச்சைகள், லேகியங்கள் ஆகியவை பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். நரம்பு தளர்ச்சி, பாலியல் குறைபாடை போக்க இயற்கையான மூலிகைகளை கொண்டு ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற்றால் புரண குணம் அடையலாம்.

ஆயுர்வேத சிகிச்சைக்கு பத்தியம் இல்லை. பக்க விளைவுகள் கிடையாது. ஒவ்வொருவரின் உடல் தன்மை, நோய் பாதிப்பு குறித்து முழு ஆய்வு செய்த பின்பே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நரம்பு தளர்ச்சி பாலியல் குறைபாடுகளை முற்றிலும் களையலாம் என்கிறார் மகாலிங்கபுரம் அப்பல்லோ ஆயுர்வேத மைய நிபுணர் டாக்டர் மகேஸ்வரராவ்.

ஜாதிக்காய்......

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து காலை மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சி குடிக்கலாம். இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

மாதுளம் பூ.......

* மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.

* தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

* மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

* மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

முருங்கையின் மகத்துவம்.......

* பாலியல் குறைபாடு தொடர்பான மருத்துவத்தில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

* முருங்கைப்பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை பூ சிறுநீர்ப் போக்கிகளை தூண்டு பவை, பித்த நீர் சுரப்பினை அதிகரிக்கும். முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நரம்புகள் பலப்படும். உடல் வலுப்பெறும் உடல் சூடு தணியும்.

இதை இயற்கையின் வயாகரா என்று கூறலாம். முருங்கை கீரை, முருங்கை பூ இரண்டையும் சம அளவில் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்கடலையை வறுத்துப் பொடி செய்து தூவி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை தன்மை அதிரிக்கும். கீரையும், பூவையும் சமஅளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இரத்த அழுத்தம்,.நரம்பு தளர்ச்சியை நீக்கி சக்தியை அளிக்கும் சௌ சௌ...!
» நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்
» நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற உண்ண வேண்டிய உணவுகள்
» நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!
» நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum