சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை Khan11

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை

2 posters

Go down

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை Empty இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 8:50

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை Cc83feec-b027-446c-bd83-be470c14ba7a_S_secvpf
சென்னை, மார்ச். 27-

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை சென்னை உள்பட இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 9 அணிகள் விளையாடுகின்றன. ஐ.பி.எல். போட்டியில் விளையாட இலங்கையைச் சேர்ந்த 13 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தவிர மற்ற 8 அணிகளிலும் இலங்கை வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

குலசேகரா, அகிலா தனஞ்செயா (சென்னை சூப்பர் கிங்ஸ்), சங்ககரா, திசரா பெரேரா (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), ஜெயவர்த்தனே, ஜீவன் மென்டீஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்), மேத்யூஸ், மெண்டீஸ் (புனே வாரியர்ஸ்), தில்சான், முரளீதரன் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), செனனாயகே (கொல்கத்தா நைட் டைரடர்ஸ்), மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்), குஷால் பெரைரா (ராஜஸ்தான் ராயல்ஸ்). ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 76 ஆட்டம் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 லீக் ஆட்டம் மற்றும் பிளேஆப் சுற்றின் 2 ஆட்டம் ஆக மொத்தம் 10 ஆட்டங்கள் நடக்கிறது.

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடினால் போட்டிகளுக்கு இடையூறு செய்வோம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்க கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதை ஐ.பி.எல். அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற விவகார துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா அறிவித்தார். இதற்கிடையே அனைத்து ஐ.பி.எல். அணிகளும், இலங்கை வீரர்களை நீக்க வேண்டும் என்று மாணவர் கூட்டமைப்பு புதிய நிபந்தனை விதித்து வலியுறுத்தி உள்ளது. இந்த சீசனில் இலங்கை வீரர்கள் இந்தியாவில் எந்த இடத்திலும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளது. இது குறித்து தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது:-

சென்னையில் மட்டும் இலங்கை வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும். இது தான் எங்களது முக்கியமான கோரிக்கையாகும். மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவத்தையொட்டி, பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட தடை செய்யப்பட்டது. அது போல தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இலங்கை வீரர்கள் இந்தியாவில் விளையாட தடை விதிக்க வேண்டும். ஐ.பி.எல்.லில் உள்ள சென்னை, ஐதராபாத் அணியின் உரிமையாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 2 அணிகளிலும் உள்ள இலங்கை வீரர்களை உடனடியாக நீக்க வேண்டும். இது தொடர்பாக இ.மெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறோம். நாளைக்குள் அவர்கள் இலங்கை வீரர்களை நீக்கா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

9 அணிகளில் இருந்தும் இலங்கை வீரர்களை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்புகிறோம். அரசியல் வேறு, கிரிக்கெட் வேறு. இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது. இலங்கை விவகாரத்தை பொறுத்த வரை மறைமுகமாக ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளது. அதனால் அரசியலையும் கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்க முடியாது. மற்ற நகரங்களில் நடை பெறும் ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் ஆடினால் அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவார்கள். மும்பை, ஐதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழீழ விடுதலை போராட்டக்குழுவைச் சேர்ந்த மாணவி திவ்யா கூறியதாவது:-

இந்தியாவின் எந்த பகுதியிலும் சிங்கள கிரிக்கெட் வீரர்கள் விளையாட அனு மதிக்க கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள். ஐ.பி.எல். கிரிக்கெட் அணியில் சிங்கள வீரர்களை அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை Empty Re: இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 11:16

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை 111433
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கிரிக்கெட் மைதானம்: ஐசிசி புதிய உத்தரவு
» வீரர்களை திரும்ப அழைக்க மாட்டோம்: இலங்கை கிரிக்கட் வாரியம்
» ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்
» ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு
» சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum