Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
*** உயிர் வலி ***
3 posters
Page 1 of 1
*** உயிர் வலி ***
பொழுதுபுலர்ந்தது... பூக்கள்மலர்ந்தன!
காலைவேளை,
பலருக்கும் இன்பம் ததும்பி இருக்க " குரு" மட்டும் மனம் வெதும்பி துவண்டான் !
கண்கள்இருண்டனகாட்சிகள்சுருங்கின...
வெளிச்சம் விரிந்தும் ஒளிமட்டும்தெரியவில்லைஅவனுக்கு!
எல்லாம்இருந்தும்ஏதும்இல்லாதவண்ணம்இருந்தான்!
பெற்றோரும்தங்கையும்முன்வாழ்த்துக்கூறிதத்தம்வேலைகளுக்குசென்றிருந்தனர்!
வீடேமயானம்போல்தோன்றியதுஅவனுக்கு!
நிஜமாய்மயானபூமியாய்மாற்றிடஎண்ணினான்!
எவ்வாறு... ?
எதிலும் வலி இருக்கும் அதில்லாமல் வீழ்ந்திட நினைத்தான் ...
பலவாறு யோசித்து முடிவுடன் பால் குடித்து மீண்டும் படுக்கையில் படுத்தான் !
மாலைவேளை ,
பெற்றோர் மற்றும் தங்கை அவனுக்கு ஆச்சரியப் பரிசு ஒன்று வாங்கி வந்திருந்தனர் ...
அதனை அவனாக எழுந்து அதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்ளட்டும் என அவன் முன்னே வைத்து
அவன் படுக்கையறையில் இருந்து வெளி வந்தனர் .
பெற்றோருக்கு தங்கள் மகனை நினைத்துப் பெருமிதம் ... தங்கைக்கு பெருமை !
மூவரும் மிகுந்த மகிழ்வோடு குருவின் முழிப்பிற்காகக் காத்திருந்தனர்.
மாலைவேளை கடந்து இரவைத் தொட்டது ... இதற்கு மேலும் பொறுமை கொள்ள முடியாமல்
அண்ணனை எழுப்ப அவன் படுக்கையறைக்கு சென்றாள் ...
அண்ணா ... அண்ணா ... (சத்தமில்லை)
அண்ணா ... எழுந்திரு அண்ணா ! (அசைவில்லை)
அம்மா அண்ணா எழுந்திருக்க மாட்டேங்கிறான் ...
அம்மா உள்ளே வந்தாள் !
டேய் குரு, எழுந்திரிடா ... என்ன இவ்ளோ நேரம் தூங்கற ... ?
அவன் கைகளைத் தொட்டு எழுப்ப முயற்சித்தாள் ... அவனது கைகள் ஜில்லிட்டிருந்தன ...
பதில், உடல் அசைவு, எதுவும் இல்லை ... மூச்சும் வெளிப்படவில்லை !
பதறினாள் ... என்னங்க இங்க வந்து பாருங்க எனக் கதறினாள் ...
அம்மாவின் கதறல் தன்னையும் தாக்க தானும் சேர்ந்து அழுதாள் குருவின் தங்கையவள் ...
கணவன் அலறி அடித்து வந்து குருவை எழுப்ப முயல
எவ்வித உணர்ச்சியும் இல்லாத அவன் உடலைக் கண்டு ஆடிப்போனான் ...
குருவின் உடலைத் தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று
சோதித்துப் பார்க்கையில் தான் தெரிந்தது
குரு சில மணி நேரங்களுக்கு முன்பே இறந்து விட்டான் என்பது !!!
இறப்பு என்னவோ அவனுடையது தான்
ஆனால் ,
அந்த மரண வலி அவன் குடும்பத்தைத் தாக்கியது ... உருக்குலைந்துப் போயினர் !
மேலும் அதிர்ச்சித் தரும் விதமாக அந்தத் தகவலை மருத்துவர் சொன்னார் ...
உங்கள் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் !
அந்தத் தகவலால் மேலும் குடும்பத்தினருக்குத் தாங்க முடியாத வேதனை !
மனதில் குழப்பம் !
எதனால் குரு தற்கொலை செய்து கொண்டான் ... என்னக் காரணம் ... ?
ஒன்றுமே புலப்படவில்லை அவர்களுக்கு !
குருவின் இறுதிச்சடங்கு முடித்து வீட்டிற்கு வந்தனர் அவனது குடும்பத்தினர்.
வீட்டில் மயான அமைதி !
எல்லாம் முடிந்தாகி விட்டது இனி எதற்காக இந்த வாழ்க்கை எனப் பெற்றோர்கள்
வருந்திக் கொண்டிருந்தாலும் தங்கள் மகளுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று
மனதைத் தேற்றிக் கொண்டிருந்தனர் !
வீட்டின் இருக்கையில் அமர்ந்து வெறிச்சோடிக் கிடந்த அவனது படுக்கையைக் கண்ட
அப்பாவிற்கு அது புலப்பட்டது !
எடுத்துப் பார்த்தார் பிரித்துப் படித்தார் ...
காரணம் புரிந்தது ! கண்ணீர் மிகுந்தது ! அதனினும் மீறி ஆத்திரம் பீறிட்டது !
உடனே கிளம்பினார் செய்தித்தாள் அலுவலகத்திற்கு ...
அங்கு மேலாளரைக் கண்டு கொதித்து ஆத்திரத்தில்
அவர் முன் இருந்த நாற்காலியின் மீது வீசினார் இரண்டு
நாட்களுக்கு முன்பு வெளிவந்த அந்த செய்தித்தாளை !!!
மேலாளர் அதனைக் கண்டு ஒன்றும் நடவாதது போல்
எழுத்துப்பிழை இயந்திரக்கோளாறு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எளிதாகக் கூறினார் !
அவரது பதிலைக் கேட்டும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற குருவின் தந்தை
எவ்வளவு எளிதாக சொல்லறீங்க ... உங்களின் பிழையை இயந்திரப்பிழை என்று !
உங்களது கவனக்குறைவால் இன்று என் மகன் எங்களுடன் இல்லை
தற்கொலை செய்து கொண்டான் ... வாழ்க்கையில் உயரப் போக இருந்த அவனைக் கொன்ற
பாவிகள் நீங்கள் ... உங்களை விட மாட்டேன் ... சட்டம் உங்களை தண்டிக்கும் என்று சூளுரைத்து
நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார் !
(வழக்கின் சுருக்கம் :
அன்று வந்த செய்தித்தாளில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டிருந்தது ... அதில் குருவின் பரீட்சை எண் விடுபட்டிருந்தது ...
தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை என்று மனமுடைந்து தர்களை செய்து கொண்டான்
அந்த மாணவன் ! ஆனால்,
அன்று மாலையும் மறுநாளும் வந்த செய்தித்தாள்களில் விடுபட்ட எண்கள் என்று வெளியிடப்பட்டதில் அவனது எண்ணும் இடம் பெற்றிருந்தது !
அதனை காணும் முன்னரே அவசரமாய் தன் உயிரை மாய்த்துக் கொண்டான் மாணவன் !)
நீதிமன்றத்தில் தீர்ப்பு : இயந்திரக்கோளாறை மனிதனின் பிழை என்று சொல்ல முடியாது ...
எனவே இது ஒரு விபத்து எனக் கூறி வழக்கை முடித்தனர் !
தன் மகனை இழந்த அந்த தந்தை மனமுடைந்து நடைபிணமாய் எழுந்து நடந்தார் !
நீதி, நியாயம், தர்மம் ... நீதி தேவதை தராசில் தூக்கில் தொங்கியது !
வேண்டுகோள் :
பத்திரிக்கை நண்பர்களே !
இது போன்று தேர்வு முடிவுகளை வெளியிடும்பொழுது தயவுசெய்து பிழை இல்லாமல் வெளியிடவும் ... இல்லையெனில் பற்பல உயிரிழப்பு ஏற்படும் ...
மேலும் அம்மாணவரின் கனவு அவர்களது பெற்றோர்களின் கனவும் சிதைக்கப்படும் ...
அவற்றை எதைக் கொண்டும் ஈடுகட்ட இயலாது !
மாணவர்களே !
தேர்வு முடிவுகளில் உங்கள் பரீட்சை எண் விடுபட்டிருந்தால் பள்ளிக்குச் சென்று அது மெய்யா பொய்யா என முதலில் தெரிந்து கொள்ளுங்கள் !
அப்படியே தேர்ச்சிப் பெறவில்லை என்றாலும் மனமுடைந்து போகாதீர்கள் ... அதேத் தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சிப் பெறுங்கள் ! அதைத் தவிர்த்து அவசரத்தில் தவறான முடிவு எதையும் எடுத்து விடாதீர்கள் ... உங்களது உயிர் உங்களைக் காட்டிலும் உங்கள் பெற்றோருக்கு விலைமதிப்பில்லாதது என்பதனை மனதில் நிறுத்துங்கள் !
பெற்றோர்களே !
தேர்வு முடிவுகள் வெளிவருகையில் உங்கள் பிள்ளைகளுடனே இருங்கள் அவர்கள் அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெறாவிடில் அவர்களை வசை பாடாதீர்கள் ... மாறாக இந்த முறை இலையெனில் அடுத்த முறை நீ நிச்சயம் தேர்ச்சி பெறுவாய் என நம்பிக்கை ஊட்டுங்கள் !
காலைவேளை,
பலருக்கும் இன்பம் ததும்பி இருக்க " குரு" மட்டும் மனம் வெதும்பி துவண்டான் !
கண்கள்இருண்டனகாட்சிகள்சுருங்கின...
வெளிச்சம் விரிந்தும் ஒளிமட்டும்தெரியவில்லைஅவனுக்கு!
எல்லாம்இருந்தும்ஏதும்இல்லாதவண்ணம்இருந்தான்!
பெற்றோரும்தங்கையும்முன்வாழ்த்துக்கூறிதத்தம்வேலைகளுக்குசென்றிருந்தனர்!
வீடேமயானம்போல்தோன்றியதுஅவனுக்கு!
நிஜமாய்மயானபூமியாய்மாற்றிடஎண்ணினான்!
எவ்வாறு... ?
எதிலும் வலி இருக்கும் அதில்லாமல் வீழ்ந்திட நினைத்தான் ...
பலவாறு யோசித்து முடிவுடன் பால் குடித்து மீண்டும் படுக்கையில் படுத்தான் !
மாலைவேளை ,
பெற்றோர் மற்றும் தங்கை அவனுக்கு ஆச்சரியப் பரிசு ஒன்று வாங்கி வந்திருந்தனர் ...
அதனை அவனாக எழுந்து அதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்ளட்டும் என அவன் முன்னே வைத்து
அவன் படுக்கையறையில் இருந்து வெளி வந்தனர் .
பெற்றோருக்கு தங்கள் மகனை நினைத்துப் பெருமிதம் ... தங்கைக்கு பெருமை !
மூவரும் மிகுந்த மகிழ்வோடு குருவின் முழிப்பிற்காகக் காத்திருந்தனர்.
மாலைவேளை கடந்து இரவைத் தொட்டது ... இதற்கு மேலும் பொறுமை கொள்ள முடியாமல்
அண்ணனை எழுப்ப அவன் படுக்கையறைக்கு சென்றாள் ...
அண்ணா ... அண்ணா ... (சத்தமில்லை)
அண்ணா ... எழுந்திரு அண்ணா ! (அசைவில்லை)
அம்மா அண்ணா எழுந்திருக்க மாட்டேங்கிறான் ...
அம்மா உள்ளே வந்தாள் !
டேய் குரு, எழுந்திரிடா ... என்ன இவ்ளோ நேரம் தூங்கற ... ?
அவன் கைகளைத் தொட்டு எழுப்ப முயற்சித்தாள் ... அவனது கைகள் ஜில்லிட்டிருந்தன ...
பதில், உடல் அசைவு, எதுவும் இல்லை ... மூச்சும் வெளிப்படவில்லை !
பதறினாள் ... என்னங்க இங்க வந்து பாருங்க எனக் கதறினாள் ...
அம்மாவின் கதறல் தன்னையும் தாக்க தானும் சேர்ந்து அழுதாள் குருவின் தங்கையவள் ...
கணவன் அலறி அடித்து வந்து குருவை எழுப்ப முயல
எவ்வித உணர்ச்சியும் இல்லாத அவன் உடலைக் கண்டு ஆடிப்போனான் ...
குருவின் உடலைத் தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று
சோதித்துப் பார்க்கையில் தான் தெரிந்தது
குரு சில மணி நேரங்களுக்கு முன்பே இறந்து விட்டான் என்பது !!!
இறப்பு என்னவோ அவனுடையது தான்
ஆனால் ,
அந்த மரண வலி அவன் குடும்பத்தைத் தாக்கியது ... உருக்குலைந்துப் போயினர் !
மேலும் அதிர்ச்சித் தரும் விதமாக அந்தத் தகவலை மருத்துவர் சொன்னார் ...
உங்கள் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் !
அந்தத் தகவலால் மேலும் குடும்பத்தினருக்குத் தாங்க முடியாத வேதனை !
மனதில் குழப்பம் !
எதனால் குரு தற்கொலை செய்து கொண்டான் ... என்னக் காரணம் ... ?
ஒன்றுமே புலப்படவில்லை அவர்களுக்கு !
குருவின் இறுதிச்சடங்கு முடித்து வீட்டிற்கு வந்தனர் அவனது குடும்பத்தினர்.
வீட்டில் மயான அமைதி !
எல்லாம் முடிந்தாகி விட்டது இனி எதற்காக இந்த வாழ்க்கை எனப் பெற்றோர்கள்
வருந்திக் கொண்டிருந்தாலும் தங்கள் மகளுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று
மனதைத் தேற்றிக் கொண்டிருந்தனர் !
வீட்டின் இருக்கையில் அமர்ந்து வெறிச்சோடிக் கிடந்த அவனது படுக்கையைக் கண்ட
அப்பாவிற்கு அது புலப்பட்டது !
எடுத்துப் பார்த்தார் பிரித்துப் படித்தார் ...
காரணம் புரிந்தது ! கண்ணீர் மிகுந்தது ! அதனினும் மீறி ஆத்திரம் பீறிட்டது !
உடனே கிளம்பினார் செய்தித்தாள் அலுவலகத்திற்கு ...
அங்கு மேலாளரைக் கண்டு கொதித்து ஆத்திரத்தில்
அவர் முன் இருந்த நாற்காலியின் மீது வீசினார் இரண்டு
நாட்களுக்கு முன்பு வெளிவந்த அந்த செய்தித்தாளை !!!
மேலாளர் அதனைக் கண்டு ஒன்றும் நடவாதது போல்
எழுத்துப்பிழை இயந்திரக்கோளாறு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எளிதாகக் கூறினார் !
அவரது பதிலைக் கேட்டும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற குருவின் தந்தை
எவ்வளவு எளிதாக சொல்லறீங்க ... உங்களின் பிழையை இயந்திரப்பிழை என்று !
உங்களது கவனக்குறைவால் இன்று என் மகன் எங்களுடன் இல்லை
தற்கொலை செய்து கொண்டான் ... வாழ்க்கையில் உயரப் போக இருந்த அவனைக் கொன்ற
பாவிகள் நீங்கள் ... உங்களை விட மாட்டேன் ... சட்டம் உங்களை தண்டிக்கும் என்று சூளுரைத்து
நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார் !
(வழக்கின் சுருக்கம் :
அன்று வந்த செய்தித்தாளில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டிருந்தது ... அதில் குருவின் பரீட்சை எண் விடுபட்டிருந்தது ...
தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை என்று மனமுடைந்து தர்களை செய்து கொண்டான்
அந்த மாணவன் ! ஆனால்,
அன்று மாலையும் மறுநாளும் வந்த செய்தித்தாள்களில் விடுபட்ட எண்கள் என்று வெளியிடப்பட்டதில் அவனது எண்ணும் இடம் பெற்றிருந்தது !
அதனை காணும் முன்னரே அவசரமாய் தன் உயிரை மாய்த்துக் கொண்டான் மாணவன் !)
நீதிமன்றத்தில் தீர்ப்பு : இயந்திரக்கோளாறை மனிதனின் பிழை என்று சொல்ல முடியாது ...
எனவே இது ஒரு விபத்து எனக் கூறி வழக்கை முடித்தனர் !
தன் மகனை இழந்த அந்த தந்தை மனமுடைந்து நடைபிணமாய் எழுந்து நடந்தார் !
நீதி, நியாயம், தர்மம் ... நீதி தேவதை தராசில் தூக்கில் தொங்கியது !
வேண்டுகோள் :
பத்திரிக்கை நண்பர்களே !
இது போன்று தேர்வு முடிவுகளை வெளியிடும்பொழுது தயவுசெய்து பிழை இல்லாமல் வெளியிடவும் ... இல்லையெனில் பற்பல உயிரிழப்பு ஏற்படும் ...
மேலும் அம்மாணவரின் கனவு அவர்களது பெற்றோர்களின் கனவும் சிதைக்கப்படும் ...
அவற்றை எதைக் கொண்டும் ஈடுகட்ட இயலாது !
மாணவர்களே !
தேர்வு முடிவுகளில் உங்கள் பரீட்சை எண் விடுபட்டிருந்தால் பள்ளிக்குச் சென்று அது மெய்யா பொய்யா என முதலில் தெரிந்து கொள்ளுங்கள் !
அப்படியே தேர்ச்சிப் பெறவில்லை என்றாலும் மனமுடைந்து போகாதீர்கள் ... அதேத் தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சிப் பெறுங்கள் ! அதைத் தவிர்த்து அவசரத்தில் தவறான முடிவு எதையும் எடுத்து விடாதீர்கள் ... உங்களது உயிர் உங்களைக் காட்டிலும் உங்கள் பெற்றோருக்கு விலைமதிப்பில்லாதது என்பதனை மனதில் நிறுத்துங்கள் !
பெற்றோர்களே !
தேர்வு முடிவுகள் வெளிவருகையில் உங்கள் பிள்ளைகளுடனே இருங்கள் அவர்கள் அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெறாவிடில் அவர்களை வசை பாடாதீர்கள் ... மாறாக இந்த முறை இலையெனில் அடுத்த முறை நீ நிச்சயம் தேர்ச்சி பெறுவாய் என நம்பிக்கை ஊட்டுங்கள் !
Re: *** உயிர் வலி ***
விழிப்புணர்வு கதை நல்லாயிருக்கு
-
மதிப்பெண் குறைவால் தந்தை கண்டித்தார் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து சாவு
-
http://www.maalaimalar.com/2013/04/19163810/mark-decrease-father-condemn-p.html
-
மதிப்பெண் குறைவால் தந்தை கண்டித்தார் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து சாவு
-
http://www.maalaimalar.com/2013/04/19163810/mark-decrease-father-condemn-p.html
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: *** உயிர் வலி ***
மாணவர்கள் உண்மையில் தங்கள் பருட்ச்சை முடிவுகளை ஆராய்ந்து தெரிந்து கொள்ளல் வேண்டும்
எதற்க்கெடுத்தாலும் தற்கொலை முடிவாகாது
இது மற்றைய மாணவர்களுக்கும் ஒரு படிப்பினையை கொடுக்கும்
எதற்க்கெடுத்தாலும் தற்கொலை முடிவாகாது
இது மற்றைய மாணவர்களுக்கும் ஒரு படிப்பினையை கொடுக்கும்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|