Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
வலிப்பு நோய்
2 posters
Page 1 of 1
வலிப்பு நோய்
காக்கா வலிப்பு நோய் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. முன்பு இதற்கு திட்டவட்டமான மருந்தோ, சிகிச்சை முறையோ இல்லை. இதனால் வலிப்பு நோய் வந்தவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் வருந்துகின்றனர்.
எனவே வலிப்பு நோயை பற்றிய உண்மைகளை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். வலிப்பு நோயை பற்றிய சரியான உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது பயங்கர நோய் அல்ல. வலிப்பு நோயாளி எவரும் இந்த நோயை பற்றி வெட்கப்பட வேண்டியதில்லை.
அவர்கள் சரியான சிகிச்சை முறையினை மேற்கொண்டால் அதனை கட்டுப்படுத்த முடியும். அன்றாட வாழ்க்கையை தொடரவும் முடியும். காக்கா வலிப்பு நோயை பற்றி நினைக்கும்போது சராசரி மனிதனுக்கு ஆறுவகையான கேள்விகள் எழும்.
அந்த கேள்விகளையும் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் இப்போது பார்ப்போம்.
1. வலிப்பு நோய் என்றால் என்ன?
2. வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
3. வலிப்பு நோயாளி சராசரி மனிதனிடம் இருந்து வேறுபடுகிறானா?
4. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, பள்ளிக்கு போகலாமா?
5. வலிப்பு நோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா?
6. வலிப்பு நோயாளி, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?
1. வலிப்பு நோய் மூளையில் உண்டாகும் ஒருவகை எரிச்சலால் ஏற்படுகிறது. இந்த எரிச்சலுக்கு காரணம், பிறக்கும்போதோ, பிறந்த பின்னரோ, நிகழ்ந்த சம்பவங்களின் விளைவு ஆகும். அல்லது மூளையில் ஏற்பட்ட நோயின் விளைவு ஆகும். அல்லது ஒரு காயத்தின் விளைவு ஆகும். வலிப்பு நோயால் மூன்று வகைகள் இருக்கின்றன.
அவை: 1. பெருவலிப்பு, 2. சிறுவலிப்பு, 3. சைக்கோ-மோட்டார் வலிப்பு,
பெருவலிப்பின்போது மனிதன் தன் நினைவை இழந்து கீழே விழுகிறான். உடம்பும் கைகால் போன்ற மற்ற உறுப்புகளும் சுண்டிச் சுண்டிச் இழுத்து துடிக்கின்றன. சற்று நேரம் வரை, நினைவை இழந்த நிலைமையில் அவன் இருக்கலாம்.
வலிப்பு நோயாளியும் சராசரி மனிதனும் மூன்றாவது கேள்வி வலிப்பு நோயாளிக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறதா?
வலிப்பு நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் எந்த வகையிலும் வேற்றுமை இல்லை. வலிப்பு நோயாளிகளின் உடலும் உள்ளமும் மற்றவர்களைப் போலவே சுறுசுறுப்பாய் இருக்கின்றன. அவர்களால் நன்றாய்ப் படிக்க முடியும். அவர்கள் எதையும் செய்யும் திறன் பெற்றவர்கள்,
சமூக வாழ்க்கையில் கலந்து பழகத் தகுதியும் திறனும் அவர்களுக்கு மற்றவர்களைப் போலவே உண்டு. அவர்கள் சுறுசுறுப்புடன் தனக்குரிய செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
எத்தனை திறமைகளைப் பெற்றிருந்தாலும், ஈடுபடும் செயல்களில் பெருமையை வலிப்பு நோயாளிகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தான் செய்வதற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
அதன் மூலம் தான் செய்த பயனுள்ள காரியங்களை உணரலாம். வலிப்பு நோயும் மண வாழ்வும் வலிப்பு நோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா என்பது நமது சமூக அமைப்பில் முக்கியமான கேள்வியாகும்.
உடல் நடுக்கம் நன்றாகப் கட்டுப்படுத்தப்பட்டு, மருந்தும் ஒழுங்காய்ச் சாப்பிட்டு வந்தால் மணம் செய்து கொள்ளலாம். இதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பே, பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ உள்ள குறையைப் பற்றிச் சம்பந்தி வீட்டாருக்குத் தெரியும்படி செய்வதே நல்லது.
இதனால் குடும்பத்தில் ஏற்படும் மன வருத்தமும் சச்சரவும் தவிர்க்கப்படும். தாம்பத்ய வாழ்க்கை எந்த வகையிலும் வலிப்பு நோயை மோசமாக்காது. இருந்தாலும், முறையான தாம்பத்தியத்திற்கு வழியில்லாத போது, ஏமாற்றமும் பரபரப்பும் ஏற்படும். அவற்றால் வலிப்பு மேலும் மோசமாகும்.
கணவனும் மனைவியும் வலிப்பு நோயாளிகளாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வரப் பெரிதும் வாய்ப்புண்டு. அதனால், கணவனும் மனைவியும் வலிப்பு நோயாளிகளாக இருந்தால், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றும்படி பெரும்பாலான டாக்டர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
கவனத்தில் வைக்க வேண்டியவை:-
இறுதியாக வலிப்பு நோயாளி கவனத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள். வலிப்பு நோயாளி, தொடர்ந்து நரம்பியல் மருத்துவரிடம் (நரம்பியல் நிபுணரிடம்) ஆலோசனை பெற வேண்டும். நோயாளி தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும், போதுமான அளவு தூங்க வேண்டும், பட்டினி கிடக்கக்கூடாது, குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும், மதுபானம் குடிக்கக் கூடாது, சைக்கிள் ஓட்டுவதோ கார் ஓட்டுவதோ கூடாது.
சாதாரணமாக வேலை செய்ய முடியும். உணர்ச்சிவசப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் கூறும் விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வலிப்பு நோய்
@. :”@:ahmad78 wrote:மருத்துவத்தகவல்களுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வலிப்பு நோய்
» வலிப்பு நோய் (EPILEPSY)
» வலிப்பு நோய் - ஒரு விளக்கம்
» வலிப்பு நோய் என்றால் என்ன?
» திருமணத்துக்கு வலிப்பு தடையா?
» வலிப்பு நோய் (EPILEPSY)
» வலிப்பு நோய் - ஒரு விளக்கம்
» வலிப்பு நோய் என்றால் என்ன?
» திருமணத்துக்கு வலிப்பு தடையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|