Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Today at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Today at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Today at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Today at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Today at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Today at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Today at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Today at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Today at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Today at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Today at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Today at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Today at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Today at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Yesterday at 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Yesterday at 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Yesterday at 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Yesterday at 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
>>>>>> கடல் நீர் சுத்திகரிப்பு சில உண்மைகள்...........
4 posters
Page 1 of 1
>>>>>> கடல் நீர் சுத்திகரிப்பு சில உண்மைகள்...........
கடல் நீர் சுத்திகரிப்பு - சில உண்மைகள்
சென்னை அருகே திருவள்ளூர் - மீஞ்சூரில் செயல்படும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய நன்னீராக்கல் நிறுவனம் இது. அடுத்த பெரிய நிறுவனம், நெம்மேலியில் இயங்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம். தண்ணீர் பற்றாகுறையால் கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம்.
சரி, உண்மையிலேயே கடல் நீர் சுத்திகரிப்பு என்பது சரி தானா? அதனால் விளையும் தீமைகள் என்னென்ன? என்பது குறித்து இதுவரை பெரியதாக பேசப்படாத நிலையில் அதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் சூழலியாளர்கள்.
குப்பைத் தொட்டியல்ல கடல்
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான நித்தியானந்த் ஜெயராம் கூறுகையில், "நன்னீராக்கலுக்கு உலகு எங்கும் பரவலாக மாற்றுச் சவ்வூடு பரவல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறைகளே பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வரவு எட்டணா செலவு பத்தணா கதைதான். ஆனால், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கு கணக்கு பார்க்கக் கூடாது என்பதால் அந்த விமர்சனத்தைத் தவிர்த்துவிடலாம். கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அதில் மனிதனுக்கு நன்மை செய்யும் எந்தக் கனிமங்களும் நுண்ணுயிர்களும் இல்லை. எனவே, அந்தத் தண்ணீரை குடிப்பதால் பாதிப்பு ஏற்படுமா என்பது தெரியாவிட்டாலும் அதனால் உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.
அடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பு. பொதுவாக நம் அரசுகள் கடலை குப்பைத் தொட்டியாகவே கருதுகின்றன. கடல் என்பது ரசாயனக் கழிவுகளைக் கொட்டுவதற்கான களம்அல்ல. கடல் உலகின் வாழ்வாதாரம். திமிங்கலம் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வரை வாழும் உயிர்களின் வாழ்விடம். அந்த உயிர்கள் அத்தனையும் நமக்கு முக்கியம். அவை ஒவ்வொன்றும் உலகின் பல்லுயிர் சமநிலையைக் காக்கும், கோக்கும் கண்ணிகள். ஒன்று அறுந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.
நன்னீராக்கல் நிலையங்களை அமைக்கும்போது முறையான இடத்தை தேர்வு செய்வதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கடல் உயிரின பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என்கிறது கலிஃபோர்னியா கடலோரக் கமிஷன். கடலில் இருந்து நீரை குழாய்கள் மூலம் கடும் விசையுடன் உறிஞ்சும்போது அதில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இழுத்துச்செல்லப்பட்டு சிக்கி இறக்கின்றன. தவிர, ப்ளாங்க்டான், லார்வா, மீன் முட்டைகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் நீரின் விசை மற்றும் அழுத்தத்தால் கொல்லப்படுகின்றன.
தொழிற்சாலைகளின் குழாய்கள், சாதனங்களை சுத்தப்படுத்த குளோரின் அல்லது உயிரி பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்து கிறார்கள். முதல் சுத்திகரிப்பில் நீரை உறைய வைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குளோரைடு, குழாய்களில் படிந்திருக்கும் உப்புப் படிமங்களை அகற்ற பயன்படுத்தப்படும் பாலி அக்ரிலிக் அமிலம், தண்ணீர் வடிகட்டி சவ்வுகளை சுத்தப்படுத்த உபயோகிக்கும் நீர்த்த அல்கலைன் அமிலம் மற்றும் சோடியம் சல்பைடு போன்றவை கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அப்படி திட்டம் மிக அவசியம் என்றால் கடலில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சாமல் தீவுப் பகுதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சினால் நீரின் உப்புத் தன்மையும் குறையும். திட்ட செலவும் குறையும். ஆனால், கழிவுகளை அப்புறப்படுத்த பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும்" என்றார்.
கடலால் சுத்துதே சுத்துதே பூமி
ஒருங்கிணைந்த கடலியல் ஆய்வாளரான ஒரிசா பாலு கூறுகையில், "கடல் மட்டத்தில் இருந்து சூரியக் கதிர்கள் ஊடுருவும் 200 மீட்டர் ஆழம் வரையில் வசிக்கும் பெரிய உயிரினங்கள், முக்கிய மீன் வகைகள் எப்போதும் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப நகர்ந்துக்கொண்டே இருக்கும். நெம்மேலி, மிஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை மேல் மட்டத்திலேயே உறிஞ்சுகின்றனர். கழிவையும் அவ்வாறே விடுகின்றனர். இதனால் மேற்பகுதியில் 200 மீட்டர் வரையிலான ஆழத்தில் வசிக்கும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
தவிர, மிக முக்கியமாக கடலின் நீரோட்டம் இதனால் பாதிக்கப்படுகிறது. பூமி ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்து 300 கி.மீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது. அந்த வேகத்தை சீராக வைத்திருப்பவை கடலின் நீரோட்டங்களே. ஆனால், கடலில் நீரை அசுர வேகத்தில் உறிஞ்சுவதும் செலுத்துவதும் கடலின் நீரோட்டங்களை பாதிப்படைய வைத்துள்ளது. உப்புத் தன்மை அதிகமான கழிவை கடலில் கொட்டுவதால் உயிரினங்கள் முற்றிலும் அழியாது என்றாலும்கூட இடம் பெயர்ந்துவிடும் அல்லது அதன் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மீனின் உடல் அளவும் எடையும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. சென்னை கடல் பகுதிக்கு நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, பெரு, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய பகுதிகளில் இருந்து பங்குனி எனப்படும் ரெட்லி ஆமைகளும் பச்சை ஆமைகளும் இனப்பெருக்கத்துக்காக வரும். ஆனால், மேற்கண்ட பாதிப்புகளால் இந்த ஆண்டு ஆமைகள் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. வந்த ஆமைகளும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றன" என்றார்.
மழையே போதும்!
தமிழ்நாடு கடலோர மேலாண்மை குழுமம் உறுப்பினரான காளிதாசன் கூறுகையில், "முதலில் கடல் நீரை சுத்திகரிப்பது என்கிற கருத்துருவே தவறு. மழையை உள்வாங்கி ஆறுகளை உற்பத்தி செய்யும் சோலைக்காடுகளை சுற்றுலா என்னும் பெயரில் அழிக்கிறோம். அங்கிருந்து தரைப்பகுதிக்கு இறங்கி வரும் ஆற்றில் கழிவுகளையும் கொட்டி அழிக்கிறோம். கடலையும் விட்டு வைக்காமல் தீங்கு இழைக்கிறோம்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி யாக பொழியும் 900 மி.மீட்டர் மழையை முறையாக பாதுகாத்து, இருக்கும் நீர் நிலைகளைப் பராமரித்தாலே போதும்; குடிநீர் தேவைக்காக வேறு எதையும் நாட வேண்டாம். மொத்தத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வெற்றிகரமான, ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்தத் திட்டம் அல்ல" என்றார்.
நன்றி: தி ஹிந்து
சென்னை அருகே திருவள்ளூர் - மீஞ்சூரில் செயல்படும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய நன்னீராக்கல் நிறுவனம் இது. அடுத்த பெரிய நிறுவனம், நெம்மேலியில் இயங்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம். தண்ணீர் பற்றாகுறையால் கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம்.
சரி, உண்மையிலேயே கடல் நீர் சுத்திகரிப்பு என்பது சரி தானா? அதனால் விளையும் தீமைகள் என்னென்ன? என்பது குறித்து இதுவரை பெரியதாக பேசப்படாத நிலையில் அதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் சூழலியாளர்கள்.
குப்பைத் தொட்டியல்ல கடல்
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான நித்தியானந்த் ஜெயராம் கூறுகையில், "நன்னீராக்கலுக்கு உலகு எங்கும் பரவலாக மாற்றுச் சவ்வூடு பரவல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறைகளே பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வரவு எட்டணா செலவு பத்தணா கதைதான். ஆனால், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கு கணக்கு பார்க்கக் கூடாது என்பதால் அந்த விமர்சனத்தைத் தவிர்த்துவிடலாம். கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அதில் மனிதனுக்கு நன்மை செய்யும் எந்தக் கனிமங்களும் நுண்ணுயிர்களும் இல்லை. எனவே, அந்தத் தண்ணீரை குடிப்பதால் பாதிப்பு ஏற்படுமா என்பது தெரியாவிட்டாலும் அதனால் உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.
அடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பு. பொதுவாக நம் அரசுகள் கடலை குப்பைத் தொட்டியாகவே கருதுகின்றன. கடல் என்பது ரசாயனக் கழிவுகளைக் கொட்டுவதற்கான களம்அல்ல. கடல் உலகின் வாழ்வாதாரம். திமிங்கலம் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வரை வாழும் உயிர்களின் வாழ்விடம். அந்த உயிர்கள் அத்தனையும் நமக்கு முக்கியம். அவை ஒவ்வொன்றும் உலகின் பல்லுயிர் சமநிலையைக் காக்கும், கோக்கும் கண்ணிகள். ஒன்று அறுந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.
நன்னீராக்கல் நிலையங்களை அமைக்கும்போது முறையான இடத்தை தேர்வு செய்வதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கடல் உயிரின பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என்கிறது கலிஃபோர்னியா கடலோரக் கமிஷன். கடலில் இருந்து நீரை குழாய்கள் மூலம் கடும் விசையுடன் உறிஞ்சும்போது அதில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இழுத்துச்செல்லப்பட்டு சிக்கி இறக்கின்றன. தவிர, ப்ளாங்க்டான், லார்வா, மீன் முட்டைகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் நீரின் விசை மற்றும் அழுத்தத்தால் கொல்லப்படுகின்றன.
தொழிற்சாலைகளின் குழாய்கள், சாதனங்களை சுத்தப்படுத்த குளோரின் அல்லது உயிரி பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்து கிறார்கள். முதல் சுத்திகரிப்பில் நீரை உறைய வைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குளோரைடு, குழாய்களில் படிந்திருக்கும் உப்புப் படிமங்களை அகற்ற பயன்படுத்தப்படும் பாலி அக்ரிலிக் அமிலம், தண்ணீர் வடிகட்டி சவ்வுகளை சுத்தப்படுத்த உபயோகிக்கும் நீர்த்த அல்கலைன் அமிலம் மற்றும் சோடியம் சல்பைடு போன்றவை கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அப்படி திட்டம் மிக அவசியம் என்றால் கடலில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சாமல் தீவுப் பகுதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சினால் நீரின் உப்புத் தன்மையும் குறையும். திட்ட செலவும் குறையும். ஆனால், கழிவுகளை அப்புறப்படுத்த பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும்" என்றார்.
கடலால் சுத்துதே சுத்துதே பூமி
ஒருங்கிணைந்த கடலியல் ஆய்வாளரான ஒரிசா பாலு கூறுகையில், "கடல் மட்டத்தில் இருந்து சூரியக் கதிர்கள் ஊடுருவும் 200 மீட்டர் ஆழம் வரையில் வசிக்கும் பெரிய உயிரினங்கள், முக்கிய மீன் வகைகள் எப்போதும் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப நகர்ந்துக்கொண்டே இருக்கும். நெம்மேலி, மிஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை மேல் மட்டத்திலேயே உறிஞ்சுகின்றனர். கழிவையும் அவ்வாறே விடுகின்றனர். இதனால் மேற்பகுதியில் 200 மீட்டர் வரையிலான ஆழத்தில் வசிக்கும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
தவிர, மிக முக்கியமாக கடலின் நீரோட்டம் இதனால் பாதிக்கப்படுகிறது. பூமி ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்து 300 கி.மீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது. அந்த வேகத்தை சீராக வைத்திருப்பவை கடலின் நீரோட்டங்களே. ஆனால், கடலில் நீரை அசுர வேகத்தில் உறிஞ்சுவதும் செலுத்துவதும் கடலின் நீரோட்டங்களை பாதிப்படைய வைத்துள்ளது. உப்புத் தன்மை அதிகமான கழிவை கடலில் கொட்டுவதால் உயிரினங்கள் முற்றிலும் அழியாது என்றாலும்கூட இடம் பெயர்ந்துவிடும் அல்லது அதன் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மீனின் உடல் அளவும் எடையும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. சென்னை கடல் பகுதிக்கு நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, பெரு, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய பகுதிகளில் இருந்து பங்குனி எனப்படும் ரெட்லி ஆமைகளும் பச்சை ஆமைகளும் இனப்பெருக்கத்துக்காக வரும். ஆனால், மேற்கண்ட பாதிப்புகளால் இந்த ஆண்டு ஆமைகள் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. வந்த ஆமைகளும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றன" என்றார்.
மழையே போதும்!
தமிழ்நாடு கடலோர மேலாண்மை குழுமம் உறுப்பினரான காளிதாசன் கூறுகையில், "முதலில் கடல் நீரை சுத்திகரிப்பது என்கிற கருத்துருவே தவறு. மழையை உள்வாங்கி ஆறுகளை உற்பத்தி செய்யும் சோலைக்காடுகளை சுற்றுலா என்னும் பெயரில் அழிக்கிறோம். அங்கிருந்து தரைப்பகுதிக்கு இறங்கி வரும் ஆற்றில் கழிவுகளையும் கொட்டி அழிக்கிறோம். கடலையும் விட்டு வைக்காமல் தீங்கு இழைக்கிறோம்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி யாக பொழியும் 900 மி.மீட்டர் மழையை முறையாக பாதுகாத்து, இருக்கும் நீர் நிலைகளைப் பராமரித்தாலே போதும்; குடிநீர் தேவைக்காக வேறு எதையும் நாட வேண்டாம். மொத்தத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வெற்றிகரமான, ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்தத் திட்டம் அல்ல" என்றார்.
நன்றி: தி ஹிந்து
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: >>>>>> கடல் நீர் சுத்திகரிப்பு சில உண்மைகள்...........
அருமையான கருத்து ஏற்றுக்கொள்ளுமா அரசாங்கம் )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>>>> கடல் நீர் சுத்திகரிப்பு சில உண்மைகள்...........
!_ !_ !_நண்பன் wrote:அருமையான கருத்து ஏற்றுக்கொள்ளுமா அரசாங்கம் )( )(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: >>>>>> கடல் நீர் சுத்திகரிப்பு சில உண்மைகள்...........
#) #)பானுஷபானா wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடல் நீர் எப்படி உப்பானது ?
» புதுவை கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது புதுச்சேரி
» 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» சில உண்மைகள்
» புதுவை கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது புதுச்சேரி
» 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» சில உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|