சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மறைந்து வரும் கோலி சோடா Khan11

மறைந்து வரும் கோலி சோடா

Go down

மறைந்து வரும் கோலி சோடா Empty மறைந்து வரும் கோலி சோடா

Post by ahmad78 Tue 1 Oct 2013 - 16:51

மறைந்து வரும் கோலி சோடா

மறைந்து வரும் கோலி சோடா 1631d1101559045-your-favorite-indian-soda-sod1
போச்சம்பள்ளி, :  வளர்ந்து வரும் நாகரீக மோகத்தால் சோடா கலர் பானத்திற்கான மவுசு மிகவும் டல்லடிப்பதால், அதன் தயாரிப்பும் வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்வரை பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை கலர் என்றாலே அது கோலி சோடா தான். மண் பானை, சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி அதனுள் சோடா பாட்டிலை போட்டு குளிர்ச்சியாக வைத்திருப்பார்கள். அந்த கோலி சோடாவை உடைத்து குடிப்பதற்கே தனி பயிற்சி வேண்டும். தாகத்துக்கு மட்டுமல்ல. சோர்வடைந்து, மயக்கமானவர்களுக்கும் இது உடனடியாக குளுகோஸ் மாதிரி கொடுக்கப்படும். மேலும், கோலி சோடாவில் ஒரு ஸ்பூன் உப்பையும் எலுமிச்சை சாறையும் கலந்து குடித்தால் எப்பேர்பட்ட வாய்வு பிடிப்பு, வயிற்று வலியும் ஓடிப்போகும் என்று கோலி சோடாவின் அருமை, பெருமைகளை நம் பாட்டன், பாட்டி முதல் தாய், தந்தையர் வரை சொல்லக் கேட்டிருக்கிறோம். நம்மில் பலர் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம் என்பது தான் உண்மை.
இப்படி பழம்பெருமை வாய்ந்த சோடாவை 1872ல் லண்டனை சேர்ந்த குளிர்பான நிறுவனம் ஒன்று தான் அறிமுகப்படுத்தியது. வெகு விரைவில் நம் நாட்டிலும் கோலி சோடா தயாரிப்பு குடிசை தொழிலாக அறிமுகமாகி பரவலான வரவேற்பை பெற்றது. கார்பன்டை ஆக்சைடை தண்ணீரில் கரைத்து அதை பாட்டிலில் அடைத்து விற்கும் எளிய வழி முறைகளை கொண்ட சோடா தயாரிப்பு மின்சார பயன்பாடு இல்லாத தொழிலாகும். கோலிசோடா, பன்னீர் சோடா, ஆரஞ்சு சோடா, கோலா சோடா, ஜிஞ்சர் சோடா, கலர் என்று பல விதங்களில், ஒரு சோடா கலர் முப்பது பைசாவுக்கு விற்கப்பட்டது.  இந்த தொழில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைத்தது.
இப்படி கொடி கட்டி பறந்த சோடா விற்பனை இன்று ஒரு நாளைக்கு பத்து பாட்டில் விற்றாலே அதிசயம் தான் என்ற நிலையில் உள்ளது. தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள் வாங்கி குடிப்பதை பெருமையாகவும், நாகரிகமாகவும் கருதும் மக்கள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பக்க விளைவுகளற்ற சோடா பானங்களை குடிப்பதை கவுரவ குறைச்சலாக எண்ணி தவிர்த்து வருகின்றனர்.
சோடா பான வகையை இரு மாதங்களுக்கு மேல் இருப்பு வைத்தாலும் அவை கெட்டுப் போகாது. ஆனால் இன்று உள்ளூரில் தயாரிக்கப்படும் சோடா குடிப்பதை தவிர்த்து உடலுக்கு ஒவ்வாத ரசாயனம் கலந்த வெளிநாட்டு குளிர் பானங்களை மக்கள் குடித்து வருகின்றனர்.
கோடை காலத்தில் மட்டுமின்றி குடும்ப விழாக்களிலும், பொதுக் கூட்டங்களிலும் கூட குளிர் பானங்கள் விநியோகிப்பது வழக்கமாகி விட்டது. அதை வாங்கி குடிப்பதை கிராமப்புற மக்களும் பெருமையாகவே கருதுகின்றனர். கிராமப் புறங்களிலும் சோடா பருகுவோரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விட்டதால் சோடா விற்பனையும் சரிந்து போனது. இதனால் தமிழகத்தில் பாரம்பரிய சோடா தயாரிப்பும் வெகுவாக குறைந்து போனது.
போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சோடா தயாரிப்பு கம்பெனிகள் நடத்தி வந்தனர். இதன் மூலம் பலர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது சோடா கலருக்கு மவுசு குறைந்து விட்டதால் பலர் மாற்றுத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
லாபம் கிடைக்கிறதோ, இல்லையோ நம் முன்னோர் கற்றுத் தந்த கைத்தொழிலை விடக்கூடாது என்று நடத்தி வருவதாக கூறுகின்றனர் அதன் உரிமையாளர்கள்.
இது குறித்து போச்சம்பள்ளி சோடா கடை உரிமையாளர் சண்முகம் (52) கூறியதாவது: நான் சிறு வயதில் இருந்தே சோடா கடை நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் நல்ல வருவாய் கிடைத்தது. தற்போது வெளிநாட்டு குளிர்பான மோகத்தால் மக்கள் சோடா கலரை மறந்து விட்டனர். இதனால் எங்கள் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சோடா தயாரிப்புக்கு மின்சாரம் தேவை இல்லை என்பதால் தான் இன்றும் என்னால் சோடா கலர் தொழில் செய்ய முடிகிறது. இவ்வாறு சண்முகம் கூறினார்.
இந்நிலை இப்படியே நீடித்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் கோலி சோடா பாட்டிலை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடியும் என்ற நிலை வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

http://kulasaisulthan.wordpress.com/2013/09/25/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE/#more-5304


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum