Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
ஏழ்மை இருந்த போது
+2
பானுஷபானா
gud boy
6 posters
Page 1 of 1
ஏழ்மை இருந்த போது
ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது –
வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
-தென்றல் கமால்-
அது நான் “கால்நடையாய்” இருந்தக் காலம்
சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து சாந்தோம் லைட் ஹவுஸ் பின்னுள்ள குப்பம் வரை நடந்தே சென்று குறைந்த விலையில் மீன் வாங்கி பஸ் டிக்கட் காசை மிச்சம் பிடித்த காலங்கள் அந்த ஒன்றிரண்டு ருபாய்கள் பெரிய விசயம் அப்போது. அதல்லாமல் நடைப் பயிற்சி கடல்காற்று பராக்கு பார்ப்பது என்று ஒரே கல்லில் பல மாங்காய்கள்
காலம் மாறியது
கால்நடையாய் இருந்தவன் கார்நடையாய் ஆனேன்
இப்போதெல்லாம் நடந்தால் கால்கள் கூட வர மறுக்கின்றன.
என் இறைவா! எப்படி நடந்தக் கால்கள் .......என்னமாய் குடைகிறது ....... போக்கி விடேன் மென்மையாய் முனகினேன்
முதுமை முதுகை உரச ஆரம்பித்திருக்கிறதோ !.
விண்ணில் மட்டுமா வெள்ளிகள் இதோ என்னிலும் தான் என எண்ணுமளவு தலையின்
கரு முடிகளின் ஊடே களைகளென வெள்ளை முடிகள்
அன்றொரு நாள் அஸர் தொழ நேரமாகி விட்டது
மக்ரிபுக்கு முன் பிடித்திட வேண்டும் என்று பள்ளியினுள் வேகமாக நுழைகிறேன்.
பள்ளிவாசலின் முன்னால் உள்ள பரந்த நடைபாதையில் சிறுவர்கள் பலர் இரைச்சலோடு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்
வாசலில் வாட்டசாட்டமான ஒரு சிறுவன் ஊனமுற்றோருக்கான வண்டியில் அமர்ந்து விளையாடும் தன் தோழர்களை பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் விளையாடும் போது செய்யும லூட்டிகளைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தான்
அவன் காலும் நன்றாகத் தான் இருந்தன தோற்றத்தில்
என்னைப் பார்த்து புன்முறுவலோடு ஸலாம் சொன்னான்
நானும் வேகமாக பதில் சொல்லி விட்டு அஸரைத் தொழுதுவிட்டு வெளியேற எத்தனித்த போது மீண்டும் ஸலாம் சொன்னான்
அவன் மரியாதை கனிவு என்னை நெகிழச் செய்ததால்
நான் மீண்டும் பதில் சொல்லிவிட்டு அவனருகில் சென்று ஏனப்பா இந்த வண்டியில் அமர்ந்திருக்கிறாய் ....... எங்கேயாவது விழுந்து அடிபட்டு ட்ரீட்மெண்டில் இருக்கிறயா என்று கேட்டேன். ( அவன் கால்கள் சூம்பிப் போன மாதிரி இல்லாததால்)
இல்லை அங்கிள் என்னால் பிறந்ததிலிருந்தே நடக்க முடியாது
திடுக்குற்றேன். இறைவா ! தன்னுடைய நண்பர்கள் எல்லாம் சிரித்தபடி ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பாலகனுக்கு ஏன் இந்த நிலை
அவன் மனம் என்ன எண்ணும் ! அவனுடையப் பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளைக் காணும் போது ஓடியாடி விளையாட முடியாத தன் பிள்ளை நிலை அவர்களுக்கு எத்தகைய வேதனையை மனச் சோர்வை ஏற்படுத்தியிருக்கும்.
என்னுடைய இறைவா! இத்தனை ஆண்டுக் காலங்கள் என்னை நல்லபடியாக நடக்க வைத்தாய் சிறுவனாய் இருக்கையில் ஓடியாடி விளையாட வைத்தாய்
என் கார் கூட பெட்ரோல் லுப்ரிகண்ட்ஸ் போட்டால் தான் ஓடும்
நீ தந்த இந்தக் கால்கள் பெட்ரோல் லுப்ரிகண்ட்ஸ் இல்லாமல் எத்தனை காலங்கள் ஓடியுள்ளன
என் கால்களில் வலி தானே உள்ளது
என் கால்கள் வலுவிழந்து இல்லையே !
என்னால் இன்றைக்கும் நடக்க முடியுமே !
அந்தச் சிறுவனால் என்றைக்கும் நடக்க முடியாதே !
வலியைத் தந்த இறைவா காலில் இன்னுமும் வலுவைத் தந்தாயே அது போதும்
அவனைக் கண்டபின் கால்களில் இருந்த வலி மனதில் ஏறிக்கொண்டது
-----------------
Parangi Pettai
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஏழ்மை இருந்த போது
இருப்பதைக் கொண்டு திருப்தி பெறுவதே மேல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏழ்மை இருந்த போது
மிக மிக மிக உண்மையான வரிகள்.ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது –வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
இப்போது பணம் இருந்தும் நிம்மியைத் தேடவேண்டி உள்ளது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஏழ்மை இருந்த போது
!_ !_ahmad78 wrote:மிக மிக மிக உண்மையான வரிகள்.ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது –வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
இப்போது பணம் இருந்தும் நிம்மியைத் தேடவேண்டி உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏழ்மை இருந்த போது
நிதர்சனம் உள்ளது வரிகளில் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஏழ்மை இருந்த போது
நமக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு..!
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: ஏழ்மை இருந்த போது
!_ !_rammalar wrote:நமக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
» நீ இருந்த இதயம்
» பலி கொடுக்கப்பட இருந்த ஆடு! - ஜென தத்துவ கதை
» எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்
» சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
» நீ இருந்த இதயம்
» பலி கொடுக்கப்பட இருந்த ஆடு! - ஜென தத்துவ கதை
» எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|