சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

ஏழ்மை இருந்த போது  Khan11

ஏழ்மை இருந்த போது

+2
பானுஷபானா
gud boy
6 posters

Go down

ஏழ்மை இருந்த போது  Empty ஏழ்மை இருந்த போது

Post by gud boy Fri 25 Oct 2013 - 9:40

ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது 
வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
-தென்றல் கமால்-
 
அது நான் கால்நடையாய்”  இருந்தக் காலம்
 
சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து சாந்தோம் லைட் ஹவுஸ் பின்னுள்ள குப்பம் வரை நடந்தே சென்று குறைந்த விலையில் மீன் வாங்கி பஸ் டிக்கட் காசை மிச்சம் பிடித்த காலங்கள்  அந்த ஒன்றிரண்டு ருபாய்கள் பெரிய விசயம் அப்போது. அதல்லாமல் நடைப் பயிற்சி கடல்காற்று பராக்கு பார்ப்பது என்று ஒரே கல்லில் பல மாங்காய்கள்
 
காலம் மாறியது
 
கால்நடையாய் இருந்தவன் கார்நடையாய் ஆனேன்
 
இப்போதெல்லாம் நடந்தால் கால்கள் கூட வர மறுக்கின்றன.
 
என் இறைவா! எப்படி நடந்தக் கால்கள் .......என்னமாய் குடைகிறது ....... போக்கி விடேன் மென்மையாய் முனகினேன்
 
முதுமை முதுகை உரச ஆரம்பித்திருக்கிறதோ !.
 
 
விண்ணில் மட்டுமா வெள்ளிகள் இதோ என்னிலும் தான்  என எண்ணுமளவு தலையின்
கரு முடிகளின் ஊடே களைகளென வெள்ளை முடிகள்
 
 
அன்றொரு நாள் அஸர் தொழ நேரமாகி விட்டது
 
மக்ரிபுக்கு முன் பிடித்திட வேண்டும் என்று பள்ளியினுள் வேகமாக நுழைகிறேன்.
 
பள்ளிவாசலின் முன்னால் உள்ள பரந்த நடைபாதையில் சிறுவர்கள் பலர் இரைச்சலோடு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்
 
வாசலில் வாட்டசாட்டமான ஒரு சிறுவன் ஊனமுற்றோருக்கான வண்டியில் அமர்ந்து விளையாடும் தன் தோழர்களை பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் விளையாடும் போது செய்யும லூட்டிகளைப்  பார்த்து சிரித்து கொண்டிருந்தான்
 
அவன் காலும் நன்றாகத் தான் இருந்தன தோற்றத்தில்
 
என்னைப் பார்த்து புன்முறுவலோடு  ஸலாம் சொன்னான்
 
நானும் வேகமாக பதில் சொல்லி விட்டு அஸரைத் தொழுதுவிட்டு வெளியேற எத்தனித்த போது மீண்டும் ஸலாம் சொன்னான்
 
அவன் மரியாதை கனிவு என்னை நெகிழச் செய்ததால்
 
நான் மீண்டும் பதில் சொல்லிவிட்டு அவனருகில் சென்று ஏனப்பா இந்த வண்டியில் அமர்ந்திருக்கிறாய் ....... எங்கேயாவது விழுந்து அடிபட்டு ட்ரீட்மெண்டில் இருக்கிறயா என்று கேட்டேன். ( அவன் கால்கள் சூம்பிப் போன மாதிரி இல்லாததால்)
 
இல்லை அங்கிள் என்னால் பிறந்ததிலிருந்தே நடக்க முடியாது
 
திடுக்குற்றேன்.  இறைவா ! தன்னுடைய நண்பர்கள் எல்லாம் சிரித்தபடி ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பாலகனுக்கு ஏன் இந்த நிலை
 
அவன் மனம் என்ன எண்ணும் !  அவனுடையப் பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளைக் காணும் போது ஓடியாடி விளையாட முடியாத தன் பிள்ளை நிலை அவர்களுக்கு எத்தகைய வேதனையை மனச் சோர்வை ஏற்படுத்தியிருக்கும். 
 
என்னுடைய  இறைவா! இத்தனை ஆண்டுக் காலங்கள் என்னை நல்லபடியாக நடக்க வைத்தாய் சிறுவனாய் இருக்கையில் ஓடியாடி விளையாட வைத்தாய்
 
என் கார் கூட பெட்ரோல் லுப்ரிகண்ட்ஸ் போட்டால் தான் ஓடும்
நீ தந்த இந்தக் கால்கள் பெட்ரோல் லுப்ரிகண்ட்ஸ் இல்லாமல் எத்தனை காலங்கள் ஓடியுள்ளன
 
என் கால்களில் வலி தானே உள்ளது
என் கால்கள் வலுவிழந்து இல்லையே !
 
என்னால் இன்றைக்கும் நடக்க முடியுமே !
அந்தச் சிறுவனால் என்றைக்கும் நடக்க முடியாதே !
 
வலியைத் தந்த இறைவா காலில் இன்னுமும் வலுவைத் தந்தாயே அது போதும்
 

அவனைக் கண்டபின்  கால்களில் இருந்த வலி மனதில் ஏறிக்கொண்டது

----------------- 
Parangi Pettai
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by பானுஷபானா Fri 25 Oct 2013 - 12:19

இருப்பதைக் கொண்டு திருப்தி பெறுவதே மேல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by ahmad78 Sun 27 Oct 2013 - 16:00

 
ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது 
வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
மிக மிக மிக உண்மையான வரிகள்.

இப்போது பணம் இருந்தும் நிம்மியைத் தேடவேண்டி உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by நண்பன் Mon 28 Oct 2013 - 16:09

ahmad78 wrote:
 
ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது 
வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
மிக மிக மிக உண்மையான வரிகள்.

இப்போது பணம் இருந்தும் நிம்மியைத் தேடவேண்டி உள்ளது.
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by *சம்ஸ் Wed 30 Oct 2013 - 15:15

நிதர்சனம் உள்ளது வரிகளில் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by rammalar Thu 31 Oct 2013 - 15:53

நமக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by நண்பன் Thu 31 Oct 2013 - 16:01

rammalar wrote:நமக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு..!
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum